எழுத்தாளர் டிலுக்ஸன் மோகனின் 'படுபட்சி' நூல் வெளியீடும் உரைகளும்!



கவிஞர் பாத்திமா நளீராவின் 'ஏழாம் வானத்தின் சிறகுகள்' கவிதைத்தொகுப்பு அண்மையில் வெளியானது. யாவரும் அறிந்ததே. இவர் ஊடகவியலாளரும் கவிஞருமான ஏ.எச்.சீத்திக் காரியப்பரின் மனைவி. எண்பதுகளிலிருந்து இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் மற்றும் வானொலியில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. இவரது முதற்கவிதையை வெளியிட்டது தினகரன் பத்திரிகை.
இத்தருணத்தில் இவரது கணவரான கவிஞர் ஏ.எச்.சித்திக் காரியப்பரை ஒரு கணம் நன்றியுடன் நினைவு கூர்ந்திட விழைகின்றேன். எண்பதுகளில் தினகரன் பத்திரிகையில் வெளியான 'கவிதைச் சோலை'ப் பகுதியை நடத்திக்கொண்டிருந்தவர் அவர். அப்போது என் கவிதைகளுடன் , என் புகைப்படத்தையும் பிரசுரித்து நல்லதோர் அறிமுகம் தந்தவர் அவர். எனது கவிதைகள் சில அவர் நடத்திய கவிதைச் சோலையில் வெளியாகியுள்ளன. என் எழுத்துலகின் ஆரம்பக் கட்டத்தில் அவர் தந்த ஊக்கத்தை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வேன்.

3.
.அதற்குப்பிறகு மாமாவில் நிறைய மாற்றங்கள் தென்பட்டன.அம்மா கவனித்தாளோ தெரியவில்லை.அவர் இப்போது நிர்வாணமாக குளிப்பதில்லை..
பூவரசம்பூக்களின் நிறத்தை ரசிப்பது போலிருக்கும்.
கிணற்றடி வாழைக்குத் தண்ணீர் போகட்டும் என்று மண்வெட்டியால் மண்ணைவெட்டி திருப்பிவிடுவார்.வீதியால் போகும் இளசுகள் பாட்டுப்பாடிக்கொண்டிருந்தார்கள்.
அறை ஜன்னலால் பார்க்கையில் அவரிடம் ஒரு வெட்கம் அதன் நிமித்தம் ஒரு நாகரீகம்,,,இங்கிதம்...உணரமுடிந்தது.மனிசனாக அவரை யாவரும் மதித்தாலே போதும்.துளசி இல்லையென்றானபின் வேறொரு மாலாவோ,சங்கரியோ கிடைக்கலாம்.ஒருத்திக்கு கணவன்..நாலு பேருக்கு ஒரு மனுசன்..மாமாவை விசரன்,,பைத்தியம் என்று சொல்லிவிடக்கூடாது...ஆனாலும் காரியக்காரன் என்று சொல்லிக்கொள்ளலாம்.அந்த நிகழ்விற்குப்பிறகு மாதம் ஒருக்கா சலூனுக்குப் போவார்..அடிக்கடி சேவ் பண்ணுவார். பெட்டியில் இருக்கும் சாரங்களை மாறி மாறி கட்டுவார். கிழிஞ்சதைக் கட்டியதை காணமுடியவில்லை.கள்ளன்..காமத்தை ஒழிச்சுவைச்சுக் கொண்டு...நான் மட்டும் என்னவாம்?....பயமும் கூடவே எழுந்தது... மாமா உளறிவிட்டால்..?
நினைவு அறுபட்டது..
மாலை ஆறுமணிக்கே தயாரானாள் சுகந்தி.அன்று ஞாயிற்றுக்கிழமை கடையில் கூட்டமில்லை.ஆதலினால் நேரத்திற்கே கடையை அடைத்துவிட்டு வீட்டிற்குப் போனார்கள்.


அரசியல் ஆய்வாளர் என்றறியப்பட்ட ஊடகவியலாளர் யதீந்திராவின் , இலக்கியா இணைய இதழில் வெளியான 'நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?' என்னும் கட்டுரையினை வாசித்தேன். இது ஓர் அரசியல் ஆய்வுக்கட்டுரை அல்ல. மேலோட்டமான சில உணர்வுகளை வெளிப்படுத்தும் பத்தி எழுத்து. இதில் இலங்கை ஒப்பந்தம் பற்றியும், 13ஆவது திருத்தச்சட்டம் பற்றியும் குறிப்பிடுகின்றார். இருந்தாலும் நாம் ஏன் தோற்றுக்கொண்டேயிருக்கிறோம் என்பதற்குரிய முக்கிய காரணங்களை இக்கட்டுரையில் காணவில்லை.
இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஏன் தோல்வியில் முடிந்தது?
முக்கிய காரணங்கள்:
1. சக அமைப்புகளுக்கிடையிலான மோதலக்ள்.
2. இயக்கங்களுக்கிடையில் நிகழ்ந்த உட்பகையும், மோதல்களும்.
3. அமைதிப்படையாக நுழைந்தபோது வரவேற்ற இந்தியப் படையினருடனான மோதல்கள். மோதல்களுக்கான அடிப்படைக்காரணங்கள் எவையாகவிருந்திருந்தாலும், அவை கண்டறியப்பட்டு , முளையிலெயே கிள்ளி எறியப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யப்பட்டிருந்தால் அம்மோதல் தவிர்க்கப்பட்டிருக்கும். இன்றுவரை மாகாணசபை இயங்கிக்கொண்டிருந்திருக்கும்.
4. ஜனதிபதி பிரேமதாசவுடன் இணைந்து, 'நாங்கள் அண்ணன் தம்பிகள். அன்னியருக்கு இங்கென்ன வேலை? எம் பிரச்சனையை நாமே தீர்த்துக்கொள்வோம்' என்று இயங்கியமை.
5. தேர்தலில் மீண்டும் இந்தியப்பிரதமராக ராஜிவ் காந்திவரவிருந்த நிலையில், இந்திய மக்களின் அமோக அவர் மீதான ஆதரவு உச்சத்திலிருந்த சமயத்தில் அவரைப் படுகொலை செய்தமை. இதற்குக் காரணங்கள் அக்கால உபகண்டச் சூழல், சர்வதேச சூழல், இவற்றின் விளைவாக சர்வதேச , உபகண்ட அரசியல் சக்திகள் தம் நலன்களுக்காக விடுதலைப்புலிகளைப் பாவித்ததானால் இக்கொலை நிகழ்ந்திருக்கலாம். அதே சமயம் புலிகளும் தம் நலன்களுக்காக இதைச் செய்திருக்கலாம். எது எப்படியோ? ராஜிவ் படுகொலை என்பது 2009இல் விடுதலைப்புலிகளை யுத்தத்தில் இலங்கை அரசு வெல்வதற்குரிய முக்கிய காரணமாக அமைந்து விட்டதை அரசியல் ஆய்வாளர்கள் எவரும் கவனிக்காமல் இருக்க முடியாது. இந்தப் படுகொலையைத் தொடர்ந்து இந்திய அரசின் இலங்கைத் தமிழர் மீதான அணுகுமுறை மாறியது. இந்தியாவின் கடற்படை புலிகளுக்கு வந்திறங்கும் ஆயுதக்கப்பல்களை இலங்கை அரசு தொடர்ச்சியாகத் தாக்கி அழிப்பதற்கு மிகவும் உதவியாகவிருந்தது.
Join Zoom Meeting: | Meeting ID: 389 072 9245 | Passcode: 12345


['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
மயிர்கள் கருகும் வாசம். தலைமயிர் தீப்பிடித்துக் கொண்டதோ.
தலையில் போட்டிருக்கும் கைக்குட்டையும் கருகி சாம்பலாகியிருக்கும். வேகாத வெயில். தலையை வேகவைத்து விட்டதோ.
கெடா கறிக்கான அலைச்சல். கெடா தலை கருகுவது போல் வாசனை மூக்கைத் துளைத்தது அவனுக்கு.
0
” அடுச்சாச்சா.. அடிக்கனுமா ”
”என்ன “
” கட்டிங் அடிச்சாச்சா . அடிக்கனுமா “
சுந்தரனை உலுக்கிவிட்டது அக்கேள்வி. சாதாரண விசயம்தான். ஆனால் கேள்வியாகக் கேட்கப்படும் போது புதிதாகி விட்டது. அவன் உடம்பை உலுக்கி விட்டக் கேள்விதான்.

1. பாட்டும் நானே பாவமும் நானே
கண்கள் தொலைதூரம் வெறித்திருக்க
ஒரு புருவம் மட்டும்ஏறியிறங்கியவாறிருக்க
அவ்வப்போது தலை யொரு ‘லெஃப்ட் ரைட் – லெஃப்ட் ரைட்
தாளகதிக்கதிக்கேற்ப இப்புறமும் அப்புறமும் திரும்பி
அரங்குளோரை விழிகள் துருவியவாறிருக்க
அழுந்த மூடிய உள்ளங்கைகள் இறுகிப் புடைத்திருக்க
அதியாபத்து அருகேகிக்கொண்டிருப்பதான பாவந்தாங்கிய
குரல் விட்டுவிட்டு சுதி உயர்ந்தும் தாழ்ந்துமோர் அபூர்வ தொனியில்
அதிரூபசுந்தரமென்று சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம்
அபத்தமென்று சொல்ல
அவருக்குத்தான் வாய் வருமா இவருக்குத்தான் மனசு வருமா
அல்லது எவருக்கும்தான் தைரியம் வருமா?
அட அப்படியே துணிச்சலாகச் சொல்பவரைப் பாராட்டலாமென்றால்
அவரோ முன்னவர் செய்ததையே வேறொரு வழியில்
ஆலாபித்துக்கொண்டிருக்கிறார்.
முடிவுறாக் கச்சேரி நடக்கும் அரங்கம் சில நேரம் நிரம்பியும்
சில நேரம் வெறுமையாகவும்.
அவ்வப்போது பாடகர்களும் பக்கவாத்தியக்காரர்களும்
ரசிகர்களும் மாறியவாறு.

-ஊர் களைகட்டும்.மண் வாசனை வாயூறும். அதுவே எங்களின் அன்றைய தீபாவளி! அம்மாவை இப்பவே அன்பாக நச்சரிக்கத் தொடங்கினால்தான் நான் விரும்பியது நடக்கும்."அம்மா இந்த முறைத் தீபாவளிக்கு
புதுசா 'ரௌச'ரும் 'சேட்டு'ம் வாங்கவேணும் எப்ப காசு தருவீங்கள்?'சேட்‘எப்பவும் வாங்கலாம்.ஆனால்,ரௌசருக்கு துணியை இப்பவே வாங்கிக் கொடுத்தால்தான் ரெயிலர் தச்சுத் தருவார் அம்மா ".
' அப்பா மத்தியானம் சாப்பாட்டுக்கு வாற நேரத்தில,அதுவும் ஈர அடுப்பில கறியை வைச்சிட்டு அவதிப்பட்டு ஓடிக்கொண்டு நான் இருக்கேக்க,இப்ப என்னால முடிவு சொல்லேலாது.கொஞ்சம் பொறு'.
" என்னம்மா,நான் என்ன கேட்டாலும், உங்களுக்கு எப்பவும் அவசரம்தான்!கடைசியில நான்தான் ரெயிலர் தச்சு முடிக்க மட்டும்,அங்கேயே இருந்து சண்டைபிடிச்சு,அவரும் தச்சு முடிக்க இரவாகிவிடும்.அதற்குப்பிறகு வீடுவந்து சேர இரவு பத்து மணியாகிவிடும்.இப்படித்தான் போனவருசமும் "செல்ரன்"கடத்தி,கடத்தி என்ர ரௌசர கடைசியில அவர் தைச்சு முடிக்க நல்லா இருண்டுட்டுது."
' சரிசரி.எனக்கு எல்லாம் விளங்குது.அந்த மனிசன் நல்ல பசியில வரும்.கொஞ்சம் பொறுத்துக்கொள்.அவர் வந்து போன பிறகு எல்லாருமா சாப்பிட்டிட்டு கதைப்பம்.இந்தா உனக்குப் பிடிக்குமெண்டு இப்ப வடிச்ச கஞ்சியிருக்கு.அந்தச் சிரட்டையை எடுத்து,தலைப்பாலும் பிளிஞ்சு வைச்சிருக்கிறன்.அதிலயும் கொஞ்சத்தை விட்டுக்குடி'.

நான் தொடர்ச்சியாகச் CMR 101.3 FM தமிழ் வானொலி நிகழ்ச்சியைக் கேட்பவன் அல்லன். ஆனால் ,அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது கேட்பதுண்டு. குறிப்பாகச் செந்தில்நாதனின் 'சொல்லாடல்' நிகழ்ச்சி என்னைக் கவர்ந்த ஒன்று. வெள்ளி இரவு 11 மணி தொடக்கம் நள்ளிரவு வரை நடக்கும் நிகழ்ச்சி. ஒரு சொல்லைப்பற்றிய பொதுவான விபரத்தைத் தந்து விட்டு , நேயர்களைக் இரண்டு கேள்வி கேட்க விடுவார்கள். நேயர்களின் கேள்விகள் மூலம் நிகழ்ச்சி முடியும் நேரத்தில் இறுதியாக வரும் நேயர்கள் பெரும்பாலும் விடையினை ஊகித்து விடுவார்கள்.
இந்நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் பல தடவைகள் வேறு முக்கிய வேலை ஏதாவது குறுக்கிடும்.அதை முடித்து விட்டு வருவதற்குள் நிகழ்ச்சி முடிவுக்கு வந்திருக்கும். விடை எதுவாகவிருக்கும் என்று சிறிது நேரம் விடையை அறிய வேண்டிய ஆவலில் மனத்தைத் தவிக்க வைக்கும் நிகழ்ச்சி.
இச்சொல்லாடல் நிகழ்ச்சியில் பல தடவைகள் அதிக பாவனையில் இல்லாத பழந்தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தும் வகையில் பல அரிய பாவனையில் இல்லாத சொற்களைத் தேர்ந்தெடுத்திருப்பார் வானொலிக் கலைஞர் செந்தில்நாதன்.

முன்னுரை
இராவணன், குபேரனுடன் போரிட்டு இலங்கை மற்றும் அவனுடைய புட்பகவிமானத்தையும் கைப்பற்றிக் கொண்டு அந்த விமானத்தில் ஏறி வெற்றிக் களிப்புடன் பறந்து வந்து கொண்டிருந்தான். அப்போது கயிலாயமலைக்கு அருகில் வரும்போது, நந்தியம்பெருமான் இராவணனிடம் இது சிவன் வாழும்பகுதி இங்கே பறக்கக்கூடாது என்று கூறினார். கோபம் கொண்ட இராவணன் சிவன்மேல் அதிக அளவு பக்தி கொண்டவன் என்றாலும், ஆணவத்தினால் அந்தக் கயிலாயமலை தனக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று எண்ணி, அதைப் பெயர்த்தெடுக்க முயன்றான். அதை அறிந்த சிவபெருமான் தன் கால் கட்டை விரலால் லேசாக அழுத்த, கைகளுடன் அவன் மலையின் கீழ் மாட்டிக் கொண்டான்.தன் தவறுஉணர்ந்த இராவணன் சாமகானம் பாட, அதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு சந்திரகாசம் என்ற வாளும், ஆத்மலிங்கமும் பரிசளித்தார். சிவபெருமான் இருந்த மலையைப் பெயர்க்க எண்ணியதே தவறு. அந்த முயற்சியால் அவன் பல்லாண்டு காலமாகத் துன்பப்பட்டான். இறைவனின் பெருங் கருணையால் உயிரும் வாளும், ஆத்மலிங்கமும் பெற்றான் என்றாலும், ஊருக்குள் வந்து தான் கயிலாயமலையைப் பெயர்த்தேன் அதனை மெச்சியே சிவபெருமான் வாளும், ஆத்மலிங்கமும் தந்தார் என்று கூறி அனைவரையும் நம்ப வைத்தான்.என்ன நடந்தாலும் அதனை மறைத்து இது தான் நடந்தது என்றே சொன்னால் மக்கள் நம்புவர் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.கம்பராமாயணத்தில் இராவணனும் கயிலாயமலையும் என்பதைக் குறித்து ஆராய்வோம்.
கலித்தொகை
இமயத்தை வில்லாக வளைத்த பரமசிவன் உமையாளுடன் கயிலையிலே வீற்றிருந்தான். அப்பொழுது 10 தலைகளை உடையவனான அரக்கர்களின் தலைவரான இராவணன் காப்புப் பொழியும் தன் வலிமையான கைகளை மலையின் கீழே புகுத்தி அதை எடுக்க முயன்றான். எடுக்க முடியவில்லை மலையின் கீழ் மாட்டிக் கொண்டு வருந்தினார்.

முன்னுரை
திருப்பரங்குன்ற திருமுருகத் திருத்தல வரலாறும் அதன் சிறப்பும் குறித்து இக்கட்டுரை விரிவாக ஆராயவுள்ளது. இதில் சங்க இலக்கியங்களில் திருபரங்குன்ற முருகன் திருத்தல வரலாற்று ஆதாரங்கள், கல்வெட்டுகளின் வழியான ஆதாரங்கள், வரலாற்று ஆய்வாளர்கள் முன் வைக்கும் தொல்லியல் ஆதாரங்கள் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்ற வரலாறு
திருப்பரங்குன்றம் சங்க இலக்கியங்களுள் ஒன்றான மதுரைக்காஞ்சியில், தளிமழை பொழியும் தண் பரங்குன்றில்(மதுரை.263) தண்பரங்குன்று என்று சுட்டப்படுகிறது . இக்குன்றம் முருகன் குடியிருந்த இடமாக அகநானூறு,
சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து (அகம்.59)
எனும் அகப்பாடல்கள் மருதன் இளநாகனாரின் பாடல் சூரபன்மனையும் அவன் சுற்றத்தையும் தொலைத்த ஒளி பொருத்திய வேலை உடைய முருகன் தண்பரங்குன்றில் உறைவதாகவும் சந்தன மரங்கள் மிக்க அந்தக் குன்றை நல்லந்துவனார் பாடியுள்ளதாகவும் கூறகின்றது. எருக்காட்டூர் தாயங்கண்ணனாரால் பாடப்பட்டுள்ள,
பல்பொறி மஞ்சை வெல்கொடி உயரிய
ஒடியாவிழவின் நெடியோன் குன்றத்து (அகம்.149)
எனும் பாடலில் மதுரைக்கு மேற்கிலுள்ள பரங்குன்று மயில் கொடியினை உயர்த்திய நெடியோனான முருகப் பெருமானின் இடமென்றும் அங்கு விழாக்கள் நிறைந்திருந்தன என்றும் தெரிவிக்கிறது.
பரிபாடலில் இடம்பெற்றுள்ள செவ்வேளைப் பற்றிய எட்டுப் பாடல்களில் ஏழு பாடல்கள் பரங்குன்றை முருகனின் உறை விடமாகக் எடுத்துரைப்பதுடன் அவர் கோயில் மலைமேல் இருந்ததையும் அதற்கு மதுரையிலிருந்து மன்னரின் பரிவாரங்களுடன் மக்கள் வந்ததையும் மலையின்மீது இருந்த முருகக் கோயில் வளாகத்தில் காமவேள் படைக் கொட்டில் ஒத்த எழுதெழில் அம்பலம் இருந்ததை,
எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின் (பரி.28)
என்று உரைக்கின்றது. மேலும், குன்றத்துக் காட்சிகளையும் (பரி. செவ்வேள் 30-39), குன்றத்தின் சிறப்பியல்புகளையும் (40-50) விரிவாகப் பேசுகின்றது. திருப்பரங்குன்றத்தில் மக்கள் நிகழ்த்திய முருக வழிபாட்டு முறைகள் ஆகியனவும் சொல்லப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்புக் கவிதை: நிறைத்திடு! எனக்காக விளிம்புவரை கிண்ணத்தை 9Fill For Me a Brimming Bowl)
ஆங்கிலத்தில் - ஜான் கீற்ஸ் (John Keats) | தமிழாக்கம் - நாங்குநேரி வாசஸ்ரீ்
நிரப்பிடு! விளிம்புவரை நன்கு கிண்ணத்தை
நிறைந்த அதனுள்ளே நுழைந்தமிழ எனதுயிர்
கலந்திடு! மருந்தைக் கட்டமைத்து முறையாய்
விலக்கிட விரட்டிட வென்மனம் பெண்ணவளை
வேட்கையைத் தூண்டும் வேண்டாத காமத்தை
ஊட்டிடு ஓடைநீரின் ஊக்கமதாய் வேண்டாம்
ஆழுலகில் லீத்நீரை அருந்திடு அமரர்தம்
பாழுலக எண்ணம் பறந்தழிதல்போல் வேண்டும்

தீயவை அகன்றால் நல்லவை மலரும்.
தீபா வளியின் தத்துவம் ஆகும்.
ஆணவ அரக்கன் அழிந்த நன்னாளே.
ஆனந்தத் தீபா வளியாய் ஆனது.
அதிகாலை அனைவரும் எழுந்துமே விடுவார்.
அக மகிழ்வுடனே நீராடி மகிழ்வார்.
புத்தாடை அணிந்து புத்துணர் வடைவார்.
அத்தனை மகிழ்ச்சியும் வந்ததாய் நினைப்பார்.
தீபா வளியில் தித்திப்பு நிறையும்.
திரும்பிய திசையெலாம் மத்தாப்புச் சிதறும்.
பட்டாசு சத்தம் பரவியே நிற்கும்.
குடும்பங்கள் எல்லாம் குதூகலம் கொள்ளும்.
தீபாவளித் திருநாள் சிறப்புடை நாளே.
இருப்பாரும் மகிழ்வர் இல்லாரும் மகிழ்வர்.
அவரவர் ஆனந்தம் அவரவர்க்கு உரியதே.
அகமகிழ் வுறுவுதே அனைவர்க்கும் பொதுவே.

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
தமிழினி ஜெயக்குமாரனின் நினைவு தினம் அக்டோபர் 18. அதனையொட்டி முகநூலில் முன்பு எழுதிய பதிவொன்றினையும், அதற்கு எழுதப்பட்ட எதிர்வினைகள் சிலவற்றையும் அவர் நினைவாக இங்கு பதிவு செய்கின்றேன்.
தமிழினிக்கும் எனக்குமிடையிலான தொடர்பு அரசியல்ரீதியிலானதல்ல. சக எழுத்தாளர்களுக்கிடையிலான தொடர்பு, இணைய இதழ் ஆசிரியருக்கும், எழுத்தாளருக்குமிடையிலான தொடர்பு. உண்மையில் அவருடன் தொடர்பு ஏற்பட்டதற்குக் காரணம் இணையம் மற்றும் முகநூலே. அவரது கணவர் ஜெயக்குமாரன் ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழுக்கு அறிமுகமானவர். அவரது ஆக்கங்கள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியிருக்கின்றன. முகநூலிலும் என் நண்பராக இருப்பவர். அவர்தான் தமிழினியின் கணவர் என்னும் விடயமே தமிழினியின் மறைவுக்குப் பின்னர்தான் தெரிய வந்தது.
தமிழினி ரொமிலா ஜெயன் என்னும் பெயரிலும் முகநூலில் கணக்கு வைத்திருந்தார். ஆனால் அது எனக்குத் தெரியாது. எனக்கும் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அந்தபெயர் எனக்கு அறிமுகமில்லாததால் நீண்ட காலமாக அந்த நட்பு அழைப்பினை ஏற்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. பின்னர் அந்தப்பெயரில் சிறுகதையொன்று 'அம்ருதா' (தமிழகம்) சஞ்சிகையில் வெளியான பின்னர்தான் அந்தப்பெயரில் கவனம் செலுத்தினேன். ரொமிலா ஜெயன் சக எழுத்தாளர்களிலொருவர் என்பது விளங்கியதால், அவரது நட்புக்கான அழைப்பினை ஏற்றுக்கொண்டேன். அதன்பின்னர் தமிழினி தனது சொந்தப்பெயரிலேயே முகநூலில் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அப்பொழுதும் ரொமிலா ஜெயனும், தமிழினியும் ஒருவரே என்பது தெரிந்திருக்கவில்லை. அவரது மறைவுக்குப் பின்னரே இருவரும் ஒருவரே என்பதும் புரிந்தது.

* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி : VNG
2.
அவளின் நினைவுமரம் துளிர்த்தது.
'சனியன்..சனியன்..' அம்மா புறுபுறுத்துக்கொண்டிருந்தாள்.
வழமையான நிகழ்வுதான்.
.மாமாவிற்குத் தான் பேச்சு விழுகுதுபோல..இண்டைக்கும் ஏதாவது சில்மிசம் செய்திருப்பார்..
மாமா பாவம்..அம்மாவின் கூடப்பிறந்த தம்பி.
பெயர் பாலசுப்பிரமணியம். பாலு என்றே யாவரும் அழைப்பார்கள்.
அவ்வளவாகப் படிக்கவில்லை.
எனினும் அவர் ஒரு தலையாகக் காதலித்த துளசி என்கிற பெண் தன்னை ஏமாற்றிவிட்டாள் என்று நினைத்தபடி குடித்துவிட்டு அவளின் வீட்டுக்கு முன் போய் நின்று சத்தமிட்டிருக்கிறார்.அவளால்தான் எல்லாம் என்று துளசியும் அவளது பெற்றோரால் தாக்கப்பட்டிருந்தாள்.
அவமானத்தால் அவளால் வெளியே வரவும் இல்லை..ஊர் கூடிய அவமானத்தில் துளசியின் பெற்றோர் ஊரை விட்டே போய்விடத் தீர்மானித்தார்கள்.எனினும் பாலு மாமாவின் மீதான கோபம் அதிகரிக்க ஒருநாள் இரவு தனியே குடித்துவிட்டு வரும் போது இரும்புக்கம்பியால் தாக்கியிருக்கிறார்கள்.

முன்னுரை
காலத்தைக் காட்டும் கண்ணாடியாகத் திகழ்வது இலக்கியங்கள் ஆகும். மனித வாழ்வியலுக்குத் தேவையான நல்லறங்களை இலக்கியங்கள் காட்டக் கூடியதாக அமைந்துள்ளது. வாழ்க்கை நெறிமுறைகளை விளக்கினால் தான் அவ்விலக்கியம் வாழும் இலக்கியமாகக் காலத்தையும் வென்று நிலைத்து நிற்கும். இத்தகைய காப்பியப் படைப்பே பாஞ்சாலி சபதம், பாரதியாரின் முப்பெருங் கவிதைகளில் ஒன்றான பாஞ்சாலி சபதம் வாயிலாக வாழ்வியல் நெறிகளாகப் பாரதியார் குறிப்பிடுவனவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு இம்மூன்றும் முப்பெரும் கவிதைகள் என போற்றப்படுகின்றன.
மகாகவி
பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய நாட்டின் அரசியல், சமுதாயப் பொருளாதார சமயச்சூழலில் அந்நியரின் வருகையாலும், ஆட்சி அதிகாரத்தாலும் கட்டுண்டு இருக்க வேண்டிய கட்டாயம் உருவானது என்பது வரலாறு. இக்காலச்சூழலில் உலகம் அதிரப்பாட வந்த பாவலன். புதிய அறத்தையும், வடிவத்தையும் இலக்கிய உலகிற்கு வழங்க வந்த அக்னிக் குஞ்சாய் எட்டயபுரத்தில் 'சுப்பையா' தோன்றினார். பாரதியார் பன்முக ஆளுமை புதிய யுகம் கண்ட புதுமை கவிஞன். பாரதியார் தேசவிடுதலை, சமூகம், தத்துவம், பக்தி என அனைத்து நிலைகளையும் பாடியுள்ளார்.
பாஞ்சாலி சபதம்
திருநெல்வேலியில் பாரதியும் அவரது நண்பர்களும், "துரோபதை துகிலுரிதல்" என்ற நாடகத்தைக் காணச் சென்றனர். துரோபதையாக வேடம் தரித்தவர் திரு. கவியாணராமன் அவர்கள். அவர் மிகவும் சாமர்த்தியம் வாய்த்தனர். கலியாண ராமனின் வாக்குச் சாதுரியம் துரோபதை பாத்திரத்தின் அழுத்தத்துக்கு மேலும் ஒரு சக்தி அளிக்கிறது. அண்ணனுக்காகத் தம்பியர் செய்யும் தியாகமும். பெண்மையின் சிறப்பை வெளியிடும் துரோபதையும் பாரதியாரின் நெஞ்சிலே ஆழப்பதித்தன. பிற்காலத்திலே உலகப்புகழ் பெற்ற பாஞ்சாலி சபதம் எழுதுவதற்கான வித்தாக அமைந்தது.

['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
அண்மையில் நூல் பற்றிய விமர்சனமொன்றில் பாவிக்கப்பட்டிருந்த 'கூற்றை' என்னும் சொல் பற்றி எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி பின்வருமாறு தன் எதிர்வினையில் பதிவு செய்திருந்தார் "மனித வாழ்வின் ஒரு கூற்றை - என உள்ளது. மனித வாழ்வின் கூறு ஒன்றை எனச் சொல்லியிருக்கலாம்." என்று.
அதற்கு நான் "கூறு என்பதுடன் ஐ உருபினைச் சேர்த்து எழுதும்போது கூற்றை என்று எழுதலாம். இதுபோல் ஆறு + ஐ = ஆற்றை என்றுதானே எழுதுகின்றோம். ஆறு என்னும் எண் பெயருடன் மட்டும் ஆறை என்று எழுதுவதுண்டு. கூற்று என்னும் சொல்லையும் கூற்றை (நேற்று, நேற்றைப் போல) , கூற்றினை என்று எழுதுவதால் பொருள் மயக்கமுண்டுதான். இருந்தாலும் 'மனித வாழ்வின் ஒரு கூற்றை' என்பதில் எந்தக் கூற்றை அச்சொல் குறிக்கின்றது என்பதில் பொருள் மயக்கமில்லை." என்று எதிர்வினையாற்றியிருந்தேன்.
அதற்குப் பதிலளித்த ஶ்ரீரஞ்சனி "உருபன் இணைப்புச் சூழல் – ஆற்றை (ஆறு + ற்+ ஐ) ஆறை (ஆறு+ஐ) மேல் கூறப்பட்டதில் முதலாவது ஆறு ஆற்றினையும் இரண்டாவது ஆறு இலக்கத்தையும் குறிக்கின்றன. 'இதேபோல் கூறு வரின் 'கூறு' என்பது 'கூற்றை' அல்லது 'கூறை' என வருவது சரிதான். ஆனால் 'கூறு' என்பது ஒரு பொருளின்/விடயத்தின் ஒரு பகுதி அல்லது அம்சம், அதே சமயம் 'கூற்றை' என்பது ஒரு கூற்றின் செயப்படுபொருள் வடிவம். அவை வெவ்வேறு சொற்கள். அதுதான் குழப்பமாக இருந்தது. தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் கூறட்டும். கற்றுக்கொள்வோம்." என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் கூறியதுபோல் 'அடிப்படைத் தமிழ் இலக்கணம்' நூல் எழுதிய பேராசிரியர் எம்.ஏ நுஃமானுடன் இது பற்றி மெசஞ்சர் மூலம் உரையாடினேன்.அது வருமாறு:
நான்: "பேராசியருக்கு வணக்கம். பின் வரும் விடயம் பற்றிய உங்கள் கருத்தை அறிய ஆவலாகவுள்ளேன்.

முன்னுரை
மேலைநாட்டறிஞர்கள் இலக்கியக் கோட்பாடு என்பது மேலைநாடுகளில் தோன்றிய இலக்கிய ஆய்வுக் கோட்பாடுகளைக் குறிக்கும் பதம் ஆகும். இது இலக்கியத்தை பல்வேறு அணுகுமுறையில் பார்ப்பதற்கு வழிவகுக்கிறது. கோட்பாடுகள் இலக்கியப்படைப்புகளின் அமைப்பு, உணர்வுகள், சமூகப்பின்னணி, மற்றும் வரலாற்றுக் காவகட்டத்தின் செல்வாக்கு எனப் பல பரிமாணங்களை ஆராய்வதாக அமைகின்றனது. மேலைநாட்டு இலக்கியக்கோட்பாடுகள் பல அணுகுமுறைகளின் தொகுப்பு எனப்படுகிறது. இலக்கியத்தின் சமூகப்பின்னணி, இலக்கியத்தின் அமைப்பு போன்ற தன்மைகளை ஆயும் போக்கில் பல வகைகள் உள்ளன. இக்கோட்பாடுகள் தமிழ் இலக்கியச்சூழலில் புதிய அணுகுமுறைகளை அறிமுகம் செய்வதற்கும், உலக இலக்கியக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன. இலக்கியத்தின் கலைநுட்பம், படைப்பாளரின் படைப்பாற்றல் போன்றவற்றை எடுத்தியம்பும் வழியாக அமைகின்றது.
இவ்வகையில் கையொப்பக்கோட்பாடு பற்றி இங்கே காண்போம்.
கையொப்பக் கோட்பாடு
கையொப்பக்கோட்பாடு என்பது பண்டைய தத்துவமாகும். இது மனித உடலுறுப்புகளைப் பிரதிபலிக்கும் மூலிகைகளைக் குறிக்கும் தத்துவமாகும். அத்தாவரங்கள் மனித உறுப்பு போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பது, கடவுள் அந்த உறுப்புக்கான மருந்தாக அத்தாவரத்தை வடிவமைத்துள்ளார் என்று நம்பப்படுகிறது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை 5-10-2025 அன்று கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பினரால் நவராத்திரி விழா திஸ்ரில் நகர ஒன்றுகூடல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிராமத்துவதன நிர்வாகக் குழவினரால் வாசலில் விளக்கேற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேடையில் செந்தமிழ்பேரொளி பேராசிரியர் திரு. இ. பாலசுந்தரம், வதனம் முதன்மை ஆசிரியர் குரு அரவிந்தன், கவிஞர் அகணி சுரேஸ், செற்கோ திரு. வி. என். மதியழகன், விரிவுரையாளர் ஸ்ரீகுமரகுரு நாகேஸ்வரி, அம்மன் கோயில் முகாமையாளர் நவா கருணரட்ணராசா, திருமதி பத்மா கரு, திருமதி இராசம்மா இராசதுரை, பொறியியலாளர் திருமதி கேதா கிருபராஜன், திரு ஸ்ரீகுமரகுரு மகாதேவன், நிறுவுனர் கமலவதனா சுந்தா மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தனர்.

‘அறிந்திரன்’ என்றொரு சிறுவர் சஞ்சிகை இலங்கையில் வெளிவருகின்றது என அறிந்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அறிந்திரன், எனச் சொல்லும் அந்தத் தலையங்கமும், சிறுவர்களுக்கு அறிவை ஊட்டவேண்டுமென்ற எழுத்தாளரின் தாகமும் என்னைக் கவர்ந்திருந்தன. ஏதாவதொன்று சிறப்பாக இருக்கின்றதெனக் கருதும்போது, அதை நேரடியாகப் பாராட்டும் என் இயல்பு, கணபதி சர்வானந்தா அவர்களை FB messenger ஊடாக அணுக வைத்திருந்தது. முகம்தெரியாத அவருடனான பழக்கம் அவ்வகையில்தான் எனக்கு ஆரம்பமாகியிருந்தது. ஒரு சில மாதங்களின் பின்னர், இலங்கைக்குச் சென்றிருந்த நண்பர் ஒருவருக்கூடாக 12 அறிந்திரன் சஞ்சிகைகள் என்னை வந்தடைந்திருந்தன. அதன் பெறுமதிக்கான பணத்தைக்கூட அவர் வாங்க மறுத்துவிட்டார். பொருளின் பெறுமதியை உணர்ந்தவர்களுடன் அதனைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பாக அது இருந்திருக்கலாம். நானும் அதை உணர்ந்திருக்கிறேன் என்பதால் சந்தோஷமாக இருந்தது.
அந்தக் கட்டத்தில், கொரோனாவின் பரம்பல் கட்டுப்பாட்டுக்குள் இருக்காததால், தமிழ் வகுப்புகள் (2021) மெய்நிகர் வழியில்தான் நிகழ்ந்து கொண்டிருந்தன. அது, மாணவர்களின் மொழி ஆற்றலுக்கேற்ப அவர்களைக் குழுக்களாகப் பிரித்துச் சுழற்சி முறையில் குறித்த குழுவினருக்கு மட்டும் எவ்வித கவனச் சிதறலுமின்றிக் கற்பிக்கும் வாய்ப்பினைத் தந்திருந்தது. அதனால், தமிழ் மொழி ஆற்றல் மிக்க மாணவர்களுக்கு அறிந்திரன் சஞ்சிகையையும் அறிமுகம் செய்யக்கூடியதாக இருந்தது. கணபதி சர்வானந்தா அவர்களுடன் அதனை நான் பகிர்ந்துகொண்டபோது, அறிந்திரனில் பிரசுரிப்பதற்கு என் மாணவர்களின் ஆக்கங்களையும் அனுப்பும்படி கேட்டிருந்தார். அப்படியே அறிந்திரனில், அவர்களின் படங்களுடன் அவர்களில் சிலரின் ஆக்கங்கள் பிரசுரமாகியிருந்தபோது, அவர்களுக்கு அது ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருந்தது.

மனித வாழ்வின் ஒரு கூற்றை, யாரேனும் ஒருவரின் பண்பை அல்லது செயலை, ஏதேனும் ஒன்றன் இயக்கத்தை அல்லது செயற்பாட்டை எங்கோ ஒரு மூலையில் மறைந்து கிடக்கும் ஒரு இரகசியத்தைக் கலைச்சுவை சிறிதும் குன்றா வண்ணம் வெளிப்படுத்துவதே சிறுகதையின் நோக்கம் எனலாம். இந்தச்சிறுகதைத் தொகுப்பின் சிறப்பம்சம் என்னவெனில்; இதில் இடம்பெற்ற பல கதைகள் மனிதவாழ்வில் நம்பிக்கை ஔி ஏற்றுவனவாக அமைந்துள்ளன. கதாபாத்திரங்கள் வாழ்க்கை எனும் பாதையில் செல்லும் வழியில் எதிர்ப்படும் தடைகளான பூட்டிய கதவு, எழும்பி நிற்கும் சுவர், தடுக்கி விட காத்திருக்கும் கல், திறந்திருக்கும் சாளரத்தையும் சாத்திவிடும் உள்நுழையும் பெருங்காற்று, இன்னும் இன்னும் இதுபோன்ற எத்தனையோ தடைகளை, அவற்றின் தன்மைக்கு ஏற்ப, இலகுவாக அல்லது தன் முழு வலிமையினால் திறந்தோ, உடைத்தோ, நகர்த்தியோ, தள்ளியோ, சுற்றிக்கொண்டோ, ஏறிநின்றோ கடந்து செல்வதாக பல கதைகள் முடிவு பெறுகின்றன.
அடுத்தது, இக்கதைகளின் ஓட்டம் எந்த இடத்திலும் தங்கு தடையின்றி போகிறது. இக்கதைகள் முறையாக எடுத்துத் தொடுத்து முடிக்கப்பட்டுள்ளன. அதற்குப் பக்கபலமாக அவருடைய எளிய சொல்லாடல்கள் வசன அமைப்புகள் அமைந்தமை சிறப்பு; வாசகன் எந்தச் சிரமமும் இன்றி கதாசிரியர் சொல்ல வந்ததைக் கிரகித்துக்கொள்ள முடிகிறது.
இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற பல கதைகள் "நம்பிக்கைதான் வாழ்க்கை" என்பதை வலியுறுத்தி நிற்கின்றன. இந்த நம்பிக்கை வாழ்வில் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் மற்றும் துயரங்களை கடந்து செல்ல உதவுவதுடன் எதிர்காலத்தில் நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும், வாழ்க்கையை முன்னேற்றிச் செல்ல தேவையான நம்பிக்கையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. இந்த நம்பிக்கை, ஒரு நபரை செயலில் இறங்கவும், சவால்களை எதிர்கொள்ளவும், இறுதியில் வெற்றியை அடையவும் தூண்டுகிறது. இது ஒரு சக்திவாய்ந்த உந்துதல் சக்தியாக இங்கு வெளிப்படுகிறது.