பெண்களில் வெளிச்சமானவள்! - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
* டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி; VNG
பெண்களாகப் பிறந்த யாவருக்கும் - ஏதோ ஒரு விதத்தில் சாதனை என்ன என்று கூறி - சாதித்த பெண்களுக்கும் இக் கவிதை காணிக்கை.
அழகான உடை பெண்ணின்
ஆளுமையை மாற்றும் என்பார்
அழகான நடத்தைதான் பெண்ணே உன்
வாழ்க்கையையே மாற்றும்!
பெண்ணே!
புரிதல் இல்லாத இடத்தில் - நீ
பரிந்து பேசினாலும் - இல்லை
பாசத்தில் பேசினாலும் - அது
பலவந்தமாகத்தான் தோன்றும்
இசை மொழியான தமிழ் மொழியால்
இனிதே அழகாக்கி பண்படுத்திவிடு அதனை!
பெண்ணே!
கோபம் வந்தாலும் உன்
நிதானத்தை இழக்காதே!
கோபத்தின் பின்னால் உன் நியாயத்தைவிட
பெரிதாக நீ எறிந்த
வாத்தைதான் பேசப்படும்
கடைசித் துளியும் உதிர்ந்த பிறகும்
பொறுப்புடன் சித்திரமாக்கிவிடும்
உன் சிந்தனையை பேனாக்குச்சியால்
பொறித்துவிடு!
பெண்ணே உனக்குள்
வட்டமிட்டுக்கொண்;டிருக்கும்
வலிகள் தான் ஏளராளம்
சத்தம் போட்டுச் சொல்ல முடியாமல்
மனசுக்குள்ளே குமையும்
பேசாப் பொருளை என்னிடம் பேசு
துணிந்து பேசு
உன் பாதை
சரியானதாகவும் இருக்கலாம்.