அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களை தமிழ்மக்கள் உட்பட அனைத்து மக்களும் வலுப்படுத்த வேண்டும்!
- உலக தமிழர் பேரவையின் ஊடக அறிக்கையினை அனுப்பியவர் சுரேன் சுரேந்திரன், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர். -
உலகத் தமிழர் பேரவை இலங்கையில் வாழும் தமிழ்மக்களையும் ஏனைய குடிமக்களையும் எதிர்வரும் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் விழிப்புடன் வாக்களித்து தங்களது வரலாற்றுக் கடமையை செய்ய வேண்டும் என ஆணித்தரமாகக் கேட்டுக் கொள்கிறது. அப்படி வாக்களிப்பதன் மூலம் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முற்போக்கான மாற்றங்களையும் வெற்றிகளையும் வலுப்படுத்த முடியும்.
கடந்த சனவரி 8, 2015 இல் நடந்த சனாதிபதி தேர்தல் இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். வாக்காளர்கள், சனநாயக விரோத, ஊழல் நிறைந்த, சகிப்புத்தன்மையற்ற மற்றும் அப்போது நிலவிய வன்முறை அரசியல் கலாச்சாரத்தை மிகப் பெரியளவில் நிராகரித்தார்கள். அந்தத் தேர்தல் முடிவு, எந்த ஐயத்துக்கும் அப்பால் நாட்டில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவந்தது. முற்போக்கான பத்தொன்பதாவது அரசியல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் சனநாயகத்துக்கான இடைவெளியை விரிவாக்கியது. அதன் மூலம் பேச்சுச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மற்றும் சிறுபான்மை சமூகங்கள் ஓரளவாவது அச்சமின்றி வாழ வழி செய்தது. இந்த மாற்றங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டதோடு உலக நாடுகளால் வரவேற்கப்பட்டன. எனவே இந்த வலுக்குறைந்த தொடக்கங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டியது இலங்கையில் வாழும் எல்லாக் குடிமக்களது பொறுப்பான கடமையாகும். இந்த மாற்றங்கள் தலைகீழாகப் போவதற்கு துளியளவு வாய்ப்புக் கூட கொடுக்கக் கூடாது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் சாட்சிகளாகத்திகழும் காணொளிகளை, புகைப்படங்களை எடுத்து வெளியுலகுக்குத் தந்தவர்கள் சிறிலங்காப்படையிலிருந்த சிங்களவர்கள்தாம். அதுபோல் 1983 இல் நடைபெற்ற தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இனக்கலவரத்தை ஞாபகப்படுத்தும் குறியீடாக விளங்குவது பொரளையில் காடையர்கள் முன் நிர்வாணமாக்கப்பட்டுக்கொல்லப்பட்ட தமிழரின் புகைப்படம். ஆடிப்பாடிக்கொண்டிருக்கும் இரத்தவெறி பிடித்த காடையர்கள் முன் , நிர்வாணமாகக்கூனிக்குறுகி நிற்கும் அந்தத்தமிழரின் நிலை ஈழத்தமிழரின் நிலையை எடுத்தியம்பும் ஒரு குறியீடு. அந்தப் புகைப்படத்தினை எடுத்தவரும் ஒரு சிங்களவரே சந்திரகுப்த அமரசிங்க என்னும் பெயரினைக்கொண்ட அவர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'அத்த' நாளிதழில் பணியாற்றிய பத்திரிகையாளர்களில் ஒருவர். 24.07.1983 அதிகாலையில் பொரளை சந்திக்கண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.



‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்பது கனடிய தமிழர்களுக்காகத்தான் சொல்லப்பட்டதோ தெரியவில்லை. இந்த மண்ணில் மாரடைப்பு என்ற சொல்லைக் கேட்டாலே பயமூட்டுவாதாகவும், அதிர்ச்சி தருவதாகவும் இருக்கின்றது. கனடியத் தமிழர்களால் நன்கு அறியப்பட்ட நண்பர் பொன்னம்பலம் குகதாசனின் மறைவு இதைத்தான் இன்று எங்களுக்குச் சொல்லி நிற்கின்றது. நண்பர் பொன்னம்பலம் குகதாசன் பழகுவதற்கு இனிமையானவர். பூநகரான் என்ற பெயரில் ரி.வி.ஐ யின் செய்திக் கண்ணோட்டம் நிகழ்ச்சியில் பல தடவை அவரது பங்களிப்பைப் பார்த்திருக்கின்றேன். சி.எம். ஆர் வானொலியிலும் இவர் குரலைக் கேட்டிருக்கின்றேன். உதயன் பத்திரிகையில் இவரது கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன். இலக்கிய நிகழ்ச்சிகளிலும் சந்தித்திருக்கின்றேன். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவுடன் அவரது ‘வாலிவதை’ என்ற நூல் சமீபத்தில் கனடா கந்தசுவாமி கோயிலில் வெளியிடப்பட்டது. கலாநிதி எஸ். சிவநாயகமூர்த்தியின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பச்சையப்பன் கல்லூரி முன்னால் முதல்வர் பேராசிரியர் மு.பி. பாலசுப்ரமணியன் அவர்களும் விசேட அதிதியாக வந்திருந்து உரையாற்றினார். கனடா தமிழ் எழுதத்hளர் இணையத்தின் சார்பில் உபதலைவர் என்ற வகையில் நானும் உரையாற்றியிருந்தேன். அவருடன் உரையாட அப்போது சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவே அவருடனான கடைசி உரையாடலாகவும் இருந்துவிட்டது.
சர்வதேச அரங்கில் சிறீலங்கா அரசானது, மற்றைய அரசுகளோடு செய்யும் ஒப்பந்தங்களால் தமிழ்மொழி பேசும் மக்களின் தனி அதிகாரம் பற்றிய சமஷ்டி ஆட்சி அந்தஸ்தை கட்டுப்படுத்த முயல்கிறது. இத்தகைய ஒப்பந்தங்களால் சிறீலங்கா அரசு தன்னைச்சட்டபூர்வமாக கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமே தவிர, மனித உரிமை பற்றிய உலகப்பிரகடனத்தை கட்டுப்படுத்த முடியாது என்று வலியுறுத்தி கூறியுள்ள வடக்கு கிழக்கில் செயல்பாட்டு வலையமைப்பைக்கொண்டுள்ள மாற்று அரசியலுக்கான உந்துசக்தி இயக்கமாகிய ‘நாங்கள்’ இயக்கத்தினர்,

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









