நினைவு கூர்வோம்: கறுப்பு ஜூலை 83! - வ.ந.கி -
எம் தலைமுறையைப் பொறுத்தவரை 1983 முக்கியமானதோர் ஆண்டு. குறிப்பாக ஜூலையில் நடைபெற்ற தமிழர்களுக்கெதிரான கொடிய இனக் கலவரம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அழிக்க முடியாத களங்கம். இக்கலவரம் தமிழர்களை உலகின் நானா பக்கங்களுக்கும் அகதிகளாக ஓட வைத்தது. இக்கலவரம் தமிழர்களின் ஆயுதரீதியிலான விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியது. இக்கலவரம் ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களைக் குடித்தது. இக்கலவரம் தமிழர்களின் உடமைகளைச் சூறையாடியது. பல்வகை வன்முறைகளையும் தமிழர்கள் மேல் ஏவிவிட்டது.
இக்கலவரம் ஊதிப்பெருப்பிக்கப்பட்டதுக்கு முக்கிய காரணம் அன்று ஆட்சியிலிருந்த அரசியலில் குள்ளநரி என வர்ணிக்கப்படும் ஜே.ஆரின் அணுகுமுறை. முன்பு பண்டா& செல்வா ஒப்பந்தத்தைக் கிழிப்பதற்காகக் கண்டிக்குப் பாத யாத்திரை சென்றவர் சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட 'த(ர்)ம்மிஷ்ட்ட' ஜனாதிபதியாகியிருந்தார். அவரது அமைச்சர்களான சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க போன்றவர்கள் அவரது ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மீதான இனவாதச் செயற்பாடுகளை ஊக்குவித்தனர்.
யாழ் நூலகம் எரிக்கப்பட்டது ஜே.ஆரின் ஆட்சியில்தான். பயங்கரவாதத்தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழர்கள் மேல் பயங்கர வன்முறை ஏவிவிடப்பட்டது ஜே.ஆரின் ஆட்சியில்தான். 77, 81, 83 என்று தமிழர்கள் மீது இனக்கலவரங்கள் ஏவிவிடப்பட்டதும் ஜே.ஆரின் ஆட்சியில்தான். இவ்விதமான இனக்கலவரங்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவற்றை அடக்குவதற்குப் பதில் 'போரென்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்' என்று அவற்றை ஊதிப்பெரிதாக்கியவரும் ஜே.ஆர்.தான்.
தமிழர்கள் மேல் மட்டுமல்லாமல் தென்னிலங்கையிலும் தன் அரசியல் எதிரிகள் மீதும் தனது அடக்குமுறைகளை ஏவிவிட்டவர் ஜே.ஆர். சிறிமா அம்மையாரின் குடியுரிமையைப் பறித்தார். ஜே.வி.பி போன்ற இடதுசாரிக்கட்சிகளை 83 இனக்கலவரத்துக்குக் காரணமென்று பொய்க்காரணத்தை முன்வைத்துத் தடை செய்தார். ஜே.ஆரின் அணுகுமுறைதான் இந்தியாவையும் இலங்கை விவகாரத்தில் தலையிட வைத்து, உள்நாட்டுப் பிரச்சினையை உபகண்டப் பிரச்சினையாக, சர்வதேசப் பிரச்சினையாக உருவெடுக்க வைத்தது. இனக்கலவரக் காலத்தில் சிறைச்சாலையினுள் தமிழ் அரசியற் கைதிகளைக் கொன்று குவித்ததும் ஜே.ஆரின் அரசின் காலகட்டத்தில்தான். இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள நிலைமைக்கெல்லாம் அடிப்படை அன்று ஜே.ஆர் விதைத்த இனவாத விதைதான். அதுதான் வளர்ந்து , கிளைவிட்டு, நாட்டை வங்குறோத்தாக்கியுள்ளது.

ஐனநாயகம் என்பார்கள் இல்லை சர்வாதிகாரம் என்பார்கள். என்ன சக்திதாசன் ஐனநாயகச் சர்வாதிகாரம் என்கிறானே ! இவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ ? என்று நீங்கள் எண்ணத் தலைப்படுவது புரிகிறது. எனக்குத் தெரிந்த வரையில் புத்தி பேதலிக்கவில்லை என்றுதான் எண்ணுகிறேன். என்ன ! தற்போதைய உலக அரசியல் அரங்கில் நடைபெறும் காட்சிகள் அனைத்தையும் ஒருமுறை புரட்டிப் போட்டுச் சிந்திக்க வைக்கிறது. நான் வாழும், என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற அரசியல் அரங்கக் காட்சிகள் ஒருபுறம், நான் பிறந்த மண்ணான சிறீலங்காவில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் அல்லகல்லோலங்கள் ஒருபுறம் , உலக அளவிலே உக்கிரைன் நாட்டில்ஈடம்பெற்றுக் கொண்டிருக்கும் போரும் அதன் அவலங்களும் ஒருபுறம் என அனைத்து உலகிலும் அவசரம் அவசரமாக அரசியல் அரங்கங்களில் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இலங்கையிலே தற்போது நடந்தேறியிருக்கும் விடயங்கள் மக்களின் வாழ்வின் அடிப்படை ஆதரங்களையே பாதித்திருக்கின்றன. வசதியுள்ளோரும், வசதியற்றோரும் ஏதேவொரு வகையில் பாதிப்படைந்திருக்கிறார்கள். அம்மக்களில் ஒருவனாக வாழாமல் அம்மக்களைப் பாதிக்கும் விடயங்களைப் பற்றிய கருத்தைப் புலம்பெயர் தேசத்தில் இருந்து தெரிவிப்பது அம்மக்களுக்கு எந்தவிதத்திலும் நியாயமாக இருக்காது என்பது என் கருத்தாகையால் அதைப்பற்றிய அலசலைத் தவிர்த்துக் கொள்கிறேன். சரி இனி ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சதுரங்கப் பலகையைப் பார்ப்போம். எனது வாழ்வினை நேரடியாகப் பாதிக்கும் எனும் வகையில் இதைப் பற்றிய அலசலுக்குள் கொஞ்சம் புகுந்து கொள்கிறேன்.


'நற்றமிழுக்கு ஒரு நாவேந்தன்" எனப் புகழ்பெற்றவர் நாவேந்தன். ஈழத்து இலக்கியப் பரப்பில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தவர். சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், கட்டுரை, விமர்சனம் எனப் பல்துறைகளிலும் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். தமிழகத்திலும், ஈழத்திலும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றிலும் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவே நூலுருப்பெற்றன. நாவேந்தன் பன்முகத்தன்மை வாய்ந்தவர். நாடறிந்த நல்லதோர் பேச்சாளராகத் திகழ்ந்தவர். அற்புதமான எழுத்தாளர். சிறந்த தொழிற்சங்கவாதி. ஆளுமைமிக்க அதிபர். 'நாவேந்தன், தமிழகத்துத் தலைசிறந்த பேச்சாளர் வரிசையில் வந்த ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணாதுரை போன்றோரின் வழியில், இலங்கையில் அழகுதமிழில் எளிமையாகப் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் ஆற்றொழுக்காகப் பேசும்பாணியில் ஒரு முன்னோடியாக விளங்கியவர்.





பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









