தமிழகம்: அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணையம் (டி.ஆர்.பி)
அனைவருக்கும் வணக்கம், ஆசிரியர் தகுதித் துணைத்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 2012 ல் நடைபெற்றது. தேர்ச்சியடைந்த மாணவ மாணவியருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த நவம்பர் 10 2012 க்குள் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 'இளங்கலை ஆங்கில இலக்கியமும் இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலமும் சமம்' (B. A. Communicative English is equivalent to B. A. English) என்று தமிழக அரசு சார்பில் அரசாணை கடந்த நவம்பர் 27 ல் வெளியாகியுள்ளது. (Refer my attachment). ஆனால், இளங்கலை தகவல் தொடர்பு ஆங்கிலம் படித்து தகுதித் துனைத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளின் பெயர்கள், கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதியன்று ஆசிரியர் தேர்வு ஆணையம் வெளியிட்ட இறுதிப் பட்டியலில் இல்லை. என்ன காரணம் என்றும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் (அதிகபட்சமாக 100 பேர்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால், அரசாணையையே மதிக்காத ஆசிரியர் தேர்வு ஆணையத்தை இதுவரை தமிழக அரசு என்னவென்று கேட்டதில்லை. அரசாணைக்கு மதிப்பில்லை.


உண்ணா விரதம் என்பது இன்று அரசியல் ஆதாயத்திற்க்காக பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாக தான் பயன்படுகிறது என்பது கசப்பான ஒரு உண்மை, உலக அளவில் எங்கும் காணாத முன்று மணி நேர உண்ணா விரதம், அதுவும் சகல வசதிகளுடன்,....தினம் தினம் ஒரு உண்ணா விரதங்கள் ஆனால் இவை எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம்......! ஏழு நாள்கள் உண்ணாவிரதம், பன்னிரண்டு நாள்கள் உண்ணாவிரதம் என்று ஆரம்பிப்பதும் பின் காலபோக்கில் அவை மறைந்து போவதும் வாடிக்கையாகி விட்டன.......... ஒரு பக்கம் அண்ணா ஹசாரேயின் 12 நாள்கள் உண்ணா விரதத்திற்கு உலக அளவில் அதரவு தெரிவிப்பதும், மற்றொரு பக்கம் மணிப்பூர் மாநிலத்தில் இரோம் ஷர்மிளாவின் 12 வருட உண்ணா விரதத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாததும் வியப்பு அளிக்கிறது... யார் இந்த இரோம் ஷர்மிளா? எதற்காக இவர் 12 ஆண்டுகளாக போராடுகிறார்? இவர் அருணாச்சல் பிரதேஷம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் ,நாகலாந்து ,திரிபுரா ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் [Armed Forces (Special Powers Act 1958)] திரும்ப பெற வேண்டும் என்பது தான் இவரின் ஒரே கோரிக்கை.... 

அமரர் எம்ஜிஆர் மறைந்து 25 வருடங்கள் (நினைவு தினம்: டிசம்பர் 24) விரைந்தோடி விட்டன. இன்றும் அவரது புகழ் வற்றி வரண்டுவிடவில்லை. இன்றைய தலைமுறைகூட அவரை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றது. இன, மத, மொழி மற்றும் வர்க்க வேறுபாடுகளற்று, மக்கள் அவர்மேல் அன்பு வைத்திருந்தார்கள்; வைத்திருக்கின்றார்கள். அவரைப் போலவே அவரது திரைப்படப் பாடல்களும் மிகவும் பிரபல்யமானவை. இம்முறை அவர் நினைவாக அவர் நடித்து வெளிவந்த திரைப்படப்பாடல்களில் சிலவற்றை உங்களுக்கு வழங்குகின்றோம். கருத்தாழமிக்க அவரது திரைப்படப்பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் நெஞ்சினில் புத்துணர்ச்சியினை, வாழ்வு மீதான நம்பிக்கையினை ஊட்டும் வல்லமை மிக்கவை. சிந்திக்கத் தூண்டுவன. கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி ஆகியோர் அவருக்காக எழுதிய பல பாடல்கள் அமோக வரவேற்பைப் பெற்றன. அவற்றில் சில கீழே:
பயித்தியமாகவும் கேடுகெட்டும் போன அரசு (Government Gone Mad And Bad) என்ற தலைப்பு எஸ்.எல். குணசேகரா சிறீலங்கா சட்டத்தரணிகள் சங்கத்துக்கு (BASL) 28 - 11 - 2012 அன்று அனுப்பிய கடிதத்தின் ஊக்குவிப்பாகும். குணசேகரா பசில் க்கு அனுப்பிய கடிதத்தில் "இப்போது பதவியிலுள்ள பயித்தியக்கார அரசு உச்ச நீதிமன்ற நீதியரசருக்கு எதிராக முன்னெடுத்துள்ள அரசியல் குற்றச்சாட்டை" எதிர்க்குமாறு கேட்டிருந்தார். அண்மையில் வெளிவந்த பெட்றீ (Petrie) அறிக்கை 70,000 தமிழர்கள் அரசினால் கொல்லப்பட்டதாகக் கூறியது. ஆனால் அதையிட்டு ஒட்டுமொத்தச் சிங்களவர்களும் பாராமுகமாக இருந்துவிட்டார்கள். கடந்த வாரம் பசில் அமைப்பு புதிய தலைமை நீதியரசரை ஆதரிப்பதில்லை என எடுத்த முடிவு பாராட்டத்தக்கது. ஆனால் நாட்டிலும் பசில் அமைப்பிலும் அதிகளவு பிழைகள் இருக்கின்றன. தலைமை நீதியரசர் விவகாரம் வெறுமனே நோயின் அறிகுறிதான். எடுத்துக்காட்டாக டொலர் 100 மில்லியன் பெறுமதியான ஓட்டப்பந்தயக் கார்களை அரசு எந்த வரியும் கட்டாமல் இறக்குமதி செய்தது என செய்திகள் தெரிவிக்கின்றன. அதைவிட மற்றவர்கள் கூற்றுப்படி எப்படி அரச சம்பளத்தில் வாழ்க்கையை நடத்துபவர் (அவரது தந்தையாரும் அரச சம்பளத்தில் இருப்பவர்தான்) டொலர் 100 மில்லியனை கட்ட முடியும்? சண்டே லீடர் என்ற செய்தியேடு (06-03-2011) பிரபா கணேசன் சொன்னதாக ஒரு செய்தி வெளியிட்டது. பசில் இராசபக்சே கட்சி மாறினால் உருபா 20 மில்லியன் தனக்கும் இன்னொரு அய்க்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பி.ஏகாம்பரம் அவர்களுக்கும் தருவதாக வாக்களித்தார். அது அபிவிருத்திக்கு என்று சொல்லப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி. 
NEWS RELEASE: Ottawa, December 21, 2012 — The Come to Canada Wizard, which helps people determine if they are eligible to live, work or study in Canada, has now been visited by well over 2 million users since its launch in August 2011. “We want the world’s best and brightest to come to Canada and to help grow our economy,” said Citizenship, Immigration and Multiculturalism Minister Jason Kenney. “The award-winning Wizard is one way that we are creating a more responsive, user-friendly and efficient immigration process that benefits applicants, immigrants and Canadians alike. The Wizard saves prospective immigrants to Canada time and money by helping them determine if they are able to immigrate to Canada, and the most appropriate immigration program for them.”
தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பை வழங்கியவர். மூத்த இடதுசாரி தோழர்களான மு கார்த்திகேசு, ந. சண்முகதாசன் என்ற வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவர். ஒருவகையில் முன்னவர்களின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த கட்ட பரிமாணமாகவும் திகழ்ந்தவர் கே.ஏ. சுப்பிரமணியம். ஆதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக ஓர் ஆர்ப்பரிப்பில் உண்மையின்-உழைக்கும் மக்களின் பக்கத்தில் நின்று போராடிய இத்தோழரின் கருத்துக்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் என்பன இன்று வரை பல விதங்களில் தாக்கம் செலுத்தி வருகின்றன. இருப்பினும் இவர் பற்றி வெளிவந்த நினைவு மலரைத் தவிர அவர் பற்றி காத்திரமான ஆய்வுகள் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அத் தோழரோடு நேரடியாக பழக கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் கிடைக்காத போதினும் அவரால் எழுதப்பட்டு ,செம்மைப்படுத்தப்பட்ட "தாயகம்"",செம்பதாகை", புதியபூமி" போன்றவற்றின் ஆசிரிய தலையங்கங்களும் ,சில கடிதங்களும் பார்வைக்கு கிட்டின. மேலும் அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆளுமையின் செல்வாக்குட்பட்டவர்கள் என்போரின் கருத்துக்களைக் கொண்டு அவரை அறிய முடிந்தது.
Ottawa, December 19, 2012 –The new selection system for the Federal Skilled Worker Program (FSWP) will take effect on May 4, 2013 at which time the program will re-open for applications, Citizenship, Immigration, and Multiculturalism Minister Jason Kenney announced today. “The government’s number one priority remains jobs, economic growth, and long-term prosperity,” said Minister Kenney. “The new Federal Skilled Worker Program criteria will ensure Canada is selecting the skilled immigrants our economy needs, who are the most likely to succeed and fully realize their potential in Canada.” The improvements to the FSWP points grid are based on a large body of research which has consistently shown that language proficiency and youth are two of the most important factors in the economic success of immigrants. Ottawa, December 19, 2012 –The new selection system for the Federal Skilled Worker Program (FSWP) will take effect on May 4, 2013 at which time the program will re-open for applications, Citizenship, Immigration, and Multiculturalism Minister Jason Kenney announced today. “The government’s number one priority remains jobs, economic growth, and long-term prosperity,” said Minister Kenney. “The new Federal Skilled Worker Program criteria will ensure Canada is selecting the skilled immigrants our economy needs, who are the most likely to succeed and fully realize their potential in Canada.”The final changes to the FSWP selection criteria include:

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









