மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கத்துக்கேற்பட்ட மிரட்டல்களும், அவரது எதிர்வினையும் பற்றி...
கண்டாவளை மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கம் தனது முகநூற் பக்கத்தில் பதிவொன்றினை இட்டிருக்கின்றார். அவருக்கு ஏற்பட்ட மிரட்டல்கள் பற்றிய பதிவு. அவரது துணிச்சலை, சமுதாயப்பிரக்ஞையை வெளிப்படுத்தும் அதே சமயம் அதன் இறுதி வரிகள் கவலையையும் தரும் பதிவு.
"நிச்சயம் வெளியே கிளினக்கில் பேசன்ட் பார்க்கச்செல்கையில் என்னைக்கொல்வீர்கள். அன்றும் இதே சிரித்த முகத்துடன் வாழ்க்கையை முழுதுமாக அனுபவித்த திருப்தியுடன் அரசியல் கலப்படமற்ற வைத்தியராக இறப்பேன்."
என்னும் வரிகள் மருத்துவர் ராஜினி திரணகமாவை நினைவூட்டுகின்றன. ராஜினி திரணகமாவுக்கு ஏற்பட்ட நிலை மீண்டும் பெண்ணொருவருக்கு ஏற்படக் கூடாது. அதற்கு யாரும் இடம் கொடுக்கக் கூடாது.
இவருக்கு நான் கூறுவது இதனைத்தான்:
"உங்களைப்போன்ற துணிச்சலும், அறிவும், சமுதாயப்பிரக்ஞையும் மிக்க இளையவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது. அதே நேரத்தில் உங்கள் மருத்துவத் தொழிலையும் நீங்கள் தொடரலாம். அரசியலில் வருவதன் மூலம் உங்களுக்கும் ஒரு மேலதிகப் பாதுகாப்பு கிடைக்கும். தற்போதுள்ள சூழலில் உங்களைப்போன்ற துணிச்சலும், ஆற்றலும், மக்கள் சேவையில் நாட்டமும் உள்ள இளையவர்கள் குறைவு. உங்களுக்குள் மருத்துவருடன் கூட சமூக, அரசியற் செயற்பாட்டாளரும் இருக்கிறார்கள். அதனால்தான் ஊழல்களுக்கெதிராக உங்களால் இவ்வளவு தூரம் துணிச்சலுடன் செயற்பட முடிகின்றது. நீங்கள் புதியதொரு சமூக நலன் பேணும் அமைப்பொன்றைக்கூட உருவாக்கலாம். அதன் கீழ் ஆயிரக்கணக்கில் பலர் அணி திரளும் சாத்தியமுண்டு. அவ்விதம் செய்தால் யாரும் தனிப்பட்டரீதியில் உங்களுக்குத் தொல்லை கொடுக்க மாட்டார்கள். மக்கள் ஆதரவும் உங்களுக்கு பாதுகாப்பரணாக விளங்கும்."

தேனீ இணைய இதழ் ஆசிரியரும் , சமூக ,அரசியல் செயற்பாட்டாளருமான 'ஜெமினி கங்காதரன்' அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் நண்பர்கள் மூலம் அறிந்தேன். துயருற்றேன். தனி ஒருவராக, தன் உழைப்பை முழுமையாக வழங்கி இணைய இதழொன்றினை நடத்துவதிலுள்ள சிரமங்களையும், கடும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பினையும் நான் அறிவேன்.அதனால் அவர் மேல் வேறெந்த விடயத்தையும் விட மிகுந்த மதிப்புண்டு. அண்மையில் பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஜெமினி அவர்கள் பற்றி எழுதியபோதுதான் முதன் முதலில் அவர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்தேன். அக்கட்டுரையினை இங்கும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் சர்வதேச ரீதியாக மதிக்கப்படும் ''மாஓ பாதை” கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் பிறந்து நூறாண்டுகளாகின்றன. இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோதே பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் நா. சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்துடன் சமாந்தரமானது. கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஸ்ராலின் – ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்தபோதும் பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார். 1953 -ம் ஆண்டு ஆட்சியை ஆட்டங்காணவைத்த 'கர்த்தாலை' வெற்றிகரமாக நடாத்த முக்கிய பங்களித்தவர்.
'மீண்டுமொரு தலித் இனத்து பதின்ம வயதுப் பெண்ணொருத்தியை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நான்கு பேர் கூட்டாகப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி, முதுகெலும்பை உடைத்து, நாக்கை அறுத்து, கால்களை அடித்து , உடைத்துத் துன்புறுத்தியுள்ளனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப்பெண் இறந்திருக்கின்றார். பொலிசார் அப்பெண்ணின் குடும்பத்தவருக்குக் கூட அறிவிக்காமல் அப்பெண்ணின் உடலை எரித்து இறுதிச்சடங்கை முடித்துள்ளார்கள். '
இலங்கையில் நிலவும் அரசியற் சூழல் திருப்தி தருவதாகவில்லை. ஏற்கனவே நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. சத்தியாக்கிரகங்கள், ஹர்த்தால்கள் என்று ஆரம்பித்து , ஆயுதப்போராட்டத்தில் தொடர்ந்து பேரழிவுடன் முள்ளி வாய்க்காலில் முடிவடைந்த யுத்தம்தான் நினைவுக்கு வருகின்றது. இன்று யுத்தம் முடிந்து 11 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அனைவரும் கடந்த காலத்தை மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத்தோன்றுகின்றது. மீண்டும் அரசியல்வாதிகள் தம் இருப்பைத் தக்க வைப்பதற்காக உணர்ச்சி அரசியலில் இறங்கி விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. மீண்டும் நிலை பழைய யுத்தச்சூழலுக்குச் செல்லாமலிருக்க வேண்டுமென்றால் பின்வரும் விடயங்கள் நடைபெற வேண்டும்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் நாவிதன்வெளிப் பிரதேசசபைத் தவிசாளர் தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட்டது. இலங்கை அரசு வெளியிட்ட அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் கூட்டமைப்பின் நல்லதொரு முடிவு. தமிழ் உறுப்பினர்களற்ற அம்பாறைக்கு இதன் மூலம் தமிழ் உறுப்பினரொருவர் கிடைத்துள்ளார்.
"சத்தியத்தை நாடிச் செல்பவர் தூசிக்கும் தூசியாகப் பணிவு கொள்ள வேண்டும். உலகம் தூசியைக் காலின்கீழ் வைத்து நசுக்குகிறது. ஆனால் சத்தியத்தை நாடுகிறவரே அத்தூசியும் தம்மை நசுக்கும் அளவுக்குத் தம்மைப் பணிவுள்ளவராக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் - அதற்குமுன் அல்ல- ஒளியைக் கணப்பொழுதாவது காணமுடியும். கிறிஸ்தவமும், இஸ்லாமும் கூட இதை நன்கு எடுத்துக்காட்டுகின்றன" என்று மகாத்மா காந்தி தனது சத்திய சோதனையில் கூறியுள்ளார். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனின் சத்தியத்தேடலே சமயங்களாக வளர்ச்சிப் பெற்றன. ஒரு மனிதன் பிறக்கும் இடத்தின் காரணமாக ஒரு சமயத்தைச் சார்ந்தவனாக ஆகிறான். அவனது சத்தியத் தேடல் அச்சமயத்தோடு தொடர்புடைய நம்பிக்கைகள் சடங்குகள் சார்ந்து செயல்படுவதைக் காணலாம். காலப்போக்கில் நம்பிக்கைகள், சடங்குகள் பொருளற்றதாக மாறும் போது பகுத்தறிவு புதிய நம்பிக்கைகளையும், சடங்குகளையும் தருகிறது என்றாலும் இதன் அடிப்படை நோக்கம் சத்திய ஒளியை அடைவதேயாகும். இயற்கை வழிபாடு, உருவ வழிபாடு, சமய வழிபாடு, சமணம், பௌத்தம், சைவம், வைணவம், இஸ்லாமியம், கிறிஸ்துவம் என்று மனிதனின் சத்தியத் தேடலில் கண்டடைந்த வழிமுறைகள் ஏராளம் . இடைக்காலத்தில் ஏற்பட்ட சமயக் காழ்ப்புணர்ச்சி மனிதனைச் சற்று விலங்கு நிலைக்குத் தள்ளியது. சமயப் பற்று சமய வெறியாக உலகம் முழுவதும் அரசியலும் அதிகாரமும் செலுத்தத் தழைப்பட்டது. தற்காலத்தில் ஜனநாயகத்தின் மலர்ச்சியும் நவீன சிந்தனைகளும் தோற்றம் பெற்றப் பிறகும் இடைக்கால சிந்தனை மரபு ஆதிக்கம் செலுத்தி வருவதை எல்லா சமயங்களிலும் காணமுடி கிறது. என்றாலும் ஜனநாயகத்தின் சுதந்திர ஒளியில் சத்தியத்தைத் தேடும் நவீன சிந்தனை மாற்றத்தை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதன் அடிப்படையில் அயோத்தி ராமர் கோயில் சிந்தனையின் அடிப்படைகளை எண்ணி பார்க்க வேண்டும்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









