- பதிவுகள் இணைய இதழில் வெளியான 'எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய கருத்தரங்கும், மல்லிகை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -' என்னும் கட்டுரைக்கான எழுத்தாளர் முருகபூபதியின் எதிர்வினை - பதிவுகள் -


ஒரு நகரத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்றது. சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஓவியங்களை பரிசுக்குத் தெரிவுசெய்வதற்காக புள்ளிகள் இடும் நடுவர்களும் அங்கு குழுமியிருந்தார்கள். அந்த நடுவர்களில் நீதிபதிகள், கல்விமான்கள், அறிஞர்கள், ஓவியர்கள், கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர். ஒரு அழகிய பெண்ணின் ஓவியம் முதல்பரிசுக்குத் தெரிவாகியிருந்தது. அக்கண்காட்சி நடக்கும் வீதியில் செருப்பு தைக்கும் செங்கோடன் என்பவனும், அதனை பார்த்து ரசிக்க அங்கே வந்தான்.
முதல்பரிசுக்குத் தெரிவான பெண்ணின் ஓவியத்தை கூர்ந்து பார்த்தான். அந்தப்பெண்ணின் பாதத்திற்கு ஏற்ப அணியப்பட்ட செருப்பின் வடிவம் ஓவியத்திற்கு பொருத்தமில்லாமல் இருந்ததை கண்டான். தான் கண்டுபிடித்த தவறை அங்கிருந்த நடுவர்களிடம் சொல்லி, இந்த ஓவியம் பரிசுக்கு தகுதியானது அல்ல என்று சுட்டிக்காண்பித்தான்.

அனைத்து நடுவர்களும் மீண்டும் ஒன்றுகூடி, செருப்புத்தைக்கும் செங்கோடன் சுட்டிக்காண்பித்த தவறை ஏற்றுக்கொண்டு, அந்த ஓவியத்திற்கு முதலில் வழங்கிய புள்ளிகளை குறைத்து, அதனை இரண்டாவது பரிசுக்கு சிபாரிசு செய்தனர். தனது அறிவுரையை அந்த நடுவர்கள் மத்தியிலிருந்த புத்திஜீவிகள் ஏற்றுக்கொண்டதையடுத்து, செங்கோடனுக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சியும் தற்பெருமையும் வந்துவிட்டது. மீண்டும் அந்த ஓவியத்தை கூர்ந்து பார்த்துவிட்டு, அதில் மேலும் தவறுகள் கண்டான். முதலில் கண்ணில் என்றான், பிறகு உதட்டில், இடுப்பில், காலில்… என்று தனது மேதாவித்தனத்தை காண்பித்தான். அதாவது முட்டையில் மயிர் பிடுங்கும் விதமாக தவறுகளை புதிது புதிதாக கண்டுபிடித்தான். நடுவர்கள் தலையை பிய்த்துக்கொண்டனர். நடுவர்களில் ஒருவர் பொறுமையிழந்தார். செங்கோடா செருப்போடு நில் - என்றார். இந்தக்கதையை இப்போது நான் சொல்ல நேர்ந்தமைக்கு காரணம் இருக்கிறது. சமகாலத்தில் இலக்கிய உலகில் பலர் செங்கோடர்களாகிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையைச்சேர்ந்த எழுத்தாளர்கள். அவர்களது முதிர்ச்சியற்ற எழுத்துக்களுக்கு முகநூல் களம் அமைக்கிறது, பொறுப்பற்ற பேச்சுக்களுக்கு இணையவழி காணொளி அரங்குகள் சந்தர்ப்பம் வழங்குகின்றன. ஈழத்து இலக்கிய வரலாற்றை சரியாகத் தெரிந்துகொள்ளாமல், மூத்த படைப்பிலக்கிய ஆளுமைகள் கடந்து வந்த பாதைகளை அறியாமல், கேள்விச்செவியன் ஊரைக்கெடுத்தமைபோன்று தங்கள் பொச்சரிப்புகளை எழுதியும் பேசியும் வருகின்றனர்.

தமிழ் மொழிச் செயற்பாட்டகம், இலண்டனில் நடத்திய எழுத்தாளர் மு,தளையசிங்கம் பற்றிய  Zoom வழி இணையவெளிக்  கருத்தரங்கில் இளம் எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் கூறிய கருத்தொன்றினைப் பற்றி, கனடா பதிவுகள் இணைய

இதழில் கிரிதரன் சுட்டிக்காண்பித்திருந்தார். அது தொடர்பாகவே மேற்குறிப்பிட்ட செங்கோடா செருப்போடு நில் என்ற கதையை எழுதநேர்ந்தது. மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவை 1971 முதல் நன்கு அறிவேன். அவர்தான் என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியவர். இறுதியாக அவரை கடந்த 2019 ஆம் ஆண்டும் கொழும்பில் சந்தித்தேன். இறுதிவரையில் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான மல்லிகை ஜீவா பற்றி பல ஆக்கங்கள் எழுதியிருப்பதுடன், மல்லிகைஜீவா நினைவுகள் என்ற நூலையும் 2001 அக்டோபரில் எழுதி வெளியிட்டுள்ளேன். ஜீவா எவருக்கும் பயந்தவர் அல்ல. அவருடன் நெருங்கிப்பழகி உறவாடிய அனைவருக்கும் தெரியும். தனக்குச்சரியெனப்பட்டதை எந்தவிடத்திலும் துணிந்து சொல்லக்கூடிய மனத்தைரியம் கொண்டவர்.

கொழும்பு விவேகானந்தா வித்தியாலய மண்டபத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் தலைமையில் பூரணி காலாண்டிதழின் வெளியீட்டு அரங்கு 1972 ஆம் ஆண்டு நடந்தபோது, அதிலும் கலந்துகொண்டேன். அந்நிகழ்வில்தான் முதல்தடவையாக மு.

தளையசிங்கத்தையும் சந்தித்தேன். இதுபற்றி மு.த. பற்றிய எனது கட்டுரையிலும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அன்றைய பூரணி வெளியீட்டு அரங்கில் மு.த. வின் உரையினால், தர்மாவேசம்கொண்ட ஜீவா, அவர் பேசி முடித்ததும், அவரை ஒரு அறைக்கு அழைத்துவந்து அவரது கருத்து தொடர்பாக காரசாரமாக விவாதித்தார். நானும் எஸ்.பொன்னுத்துரையும் வேறு சில இலக்கியவாதிகளும் அருகில் நின்றோம். மு.த. அமைதியாக செவிமடுத்தார், ஆனால், ஜீவாவின் குரல் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த மண்டபம் வரையில் கேட்டது. எஸ்.பொ. கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டிருந்தார்.

மு.த – ஜீவாவுக்கு இடையில் இலக்கிய – சித்தாந்த ரீதியில் முரண்பாடுகள் இருந்தபோதிலும் ஒருவரை ஒருவர் மதித்தனர். ஜீவா, தளையசிங்கம் மீது அபிமானமும் கொண்டிருந்தார். தளையசிங்கம் 02-4-1973 இல் மறைந்தார்.” என்னால் தாங்கமுடியாத சோகம். அவரது மரணத்தின் பின்னணியை அறிந்தபோதுதான் தளையசிங்கமும் ஓர் Activist Writer என்ற உண்மையும் தெரிந்தது. எமது நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தினால் அவருக்கு, அவர் மறைந்து இருபது நாட்களிலேயே (22-4-1973) அஞ்சலிக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்த அமைப்பு நடத்திய முதலாவது நிகழ்ச்சியே தளையசிங்கத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் அஞ்சலிக் கூட்டமாக அமைந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது. இன்றும் என்னிடம் அந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழ் பத்திரமாக இருக்கிறது. இலங்கையில் மு.த.வுக்காக நடத்தப்பட்ட முதலாவது அஞ்சலிக்கூட்டம் அது. அக்கூட்டத்தில் பூரணி ஆசிரியர் என்.கே. மகாலிங்கம், பூரணி குழுவிலிருந்த இமையவன், தங்கவேல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அந்த ஆண்டு மேமாதம் ஜீவா என்னை நீர்கொழும்பு வந்து சந்தித்தபோது, தளையரின் இழப்பினால் மிகவும் வேதனையுற்றிருந்ததையும் அவதானித்தேன். அவர் அவ்வேளையில் மல்லிகையில் தளைகளை அறுக்க முயன்ற தளையர் என்ற கருத்துப்பட அஞ்சலிக்குறிப்பும் எழுதியிருந்தார். புங்குடுதீவில் தளையரின் இறுதி நிகழ்வில் உரையாற்றி ஜீவா, தளையரின் மரணம் இயற்கையானது அல்ல. அது கொலை என்று தர்மாவேசத்துடன் குரல் எழுப்பி பேசியதாகவும் பின்னர் அறிந்தேன். இவ்வளவும் அக்காலப்பகுதியில் நடந்திருக்கிறது. கிரிதரனும் அக்காலப்பகுதியில் வெளியான மல்லிகையில் இடம்பெற்ற மு. புஷ்பராஜன், கே. எஸ். சிவகுமாரன் ஆகியோரின் குறிப்புகளையும் ஆதாரத்துடன் பதிவுகளில் நினைவூட்டியுள்ளார்.

அனோஜன் பாலகிருஷ்ணன் என்பவர் 1992இல் பிறந்தவர் என்று அறியப்படுபவர். இதுவரையில் இவரை நான் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால், வளர்ந்துவரும் ஆற்றல் மிக்க எழுத்தாளர் என்பதை அவரது படைப்புகள் மூலம்

அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். ஜெயமோகனும் இவர் குறித்து சிறப்பாக நம்பிக்கையோடு எழுதிவருகிறார். அனோஜன் பிறப்பதற்கு இருபது வருடங்களுக்கு முன்னர் தளையசிங்கம் மறைந்துவிட்டார். ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு உரமிட்ட இரண்டு பெரும் ஆளுமைகள் குறித்து கருத்துச்சொல்வதற்கு முன்னர், அவர்கள் கடந்துவந்த பாதையையும் தெரிந்துகொள்ளவேண்டும். இலக்கிய ஆளுமைகளினால் இனம்காணப்பட்டு கவனிக்கப்படுகிறோம், இலக்கிய அங்கீகாரம் கிடைத்துவிட்டது, இனிமேல் நாம் எப்படிவேண்டுமானாலும் எழுதலாம் – பேசலாம் என்ற எண்ணத்தில் பிதற்றக்கூடாது. விதந்துபேசப்படும் இளம் தலைமுறை எழுத்தாளர்கள் ஓவியக்கண்காட்சிக்குச் சென்ற செங்கோடர்களாகிவிடுகிறார்களே என்ற ஆதங்கம்தான் எனக்கு மேலோங்குகிறது. தளையசிங்கம் சாதியொழிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் தாக்குதலுக்குள்ளாகிய செய்தியை, கைலாசபதி மீதிருந்த அச்சம் காரணமாகவே ஜீவா, மல்லிகை இதழில் வெளியிடவில்லை' - என்று அனோஜன் பாலகிருஷ்ணன் எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு சொல்கிறார். இப்படித்தான், முன்பும் கைலாசபதி பற்றிய ஒரு அவதூறை வெங்கட்சாமிநாதன் பரப்பினார். என்.கே. ரகுநாதனின் நிலவிலே பேசுவோம் கதையில் வரும் ஊர்பிரமுகர் கைலாசபதிதான் என்ற கற்பனையை அவர் அன்று அவிழ்த்துவிட்டார். அனோஜன் தற்போது ஜீவா, கைலாசபதிக்கு பயந்தார் என்று புதிய அவதூறை பரப்புகிறார்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here