மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவாக... - ஊர்க்குருவி -

அமரர் எம்ஜிஆரின் நினைவு தினம் டிசம்பர் 24. அவரை நினைத்தால் முதலில் எனக்கு நினைவு வருவது 'நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார்' என்னும் பாடல்தான். காரணம்? 'எங்க வீட்டுப்பிள்ளை'தான் நான் ஓரளவு அறியும் பால்ய பருவத்தில் முதன் முதலில் பார்த்து இரசித்த முதலாவது திரைப்படம். வவுனியா 'நியூ இந்திரா டாக்கீஸ்' திரையரங்கில் பார்த்த திரைப்படம். முதற் படத்திலேயே இந்தப் பாடலும், இவரின் வசீகர ஆளுமையும் பிடித்து விட்டன.
இருந்தவரை கலையுலகிலும், அரசியல் உலகிலும் மக்கள் திலகமாக ஒளிர்ந்தார். வாழ்ந்திருந்த காலத்தில் எவ்விதம் மக்கள் மத்தியில் விளங்கினாரோ , இன்றும் , அமரராகி 35 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும் விளங்குகின்றார் என்பதை ஊடகங்களில், சமூக ஊடகங்களில், குறிப்பாக யு டியூப் சானல்களில் இவரைப்பற்றி வெளியாகும் காணொளிகள் வெளிப்படுத்துகின்றன. இவரால் பயனடைந்த பலர் அவ்விதம் அடைந்த பயன்களைப்பற்றி நன்றியுடன் நினைவு கூர்கின்றார்கள்.


தக்ஷிலா ஸ்வர்ணமாலி ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பின்மூலம் தமிழ் வாசகவுலகில் அறிமுகமானவர். இந் நாவலின் மொழிபெயர்ப்பாளர் ரிஷான் ஷெரிப் மொழிபெயர்ப்பாளராகவும் படைப்பாளியாகவும்கூட நன்கறியப்பட்டவர். இது, ஆதிரை வெளியீடாக ஜனவரி 2022இல் வெளிவந்த இந்த நாவலின் விமர்சனமல்ல. சில நாவல்களை அவ்வாறாக எடைபோடுவதும் எது காரணத்தாலோ சுலபத்தில் கூடிவருவதில்லை. முன்னோடிகளான நாவல்களுக்கு அவ்வாறான இடைஞ்சல்களை முன்பும் சிலவேளை சந்தித்திருக்கிறேன். இதனை சரியாகச் சொல்வதானால் விமர்சிப்புக்கான ஒரு பாதையை அமைத்தலெனக் கூறலாம். அண்மையில் நான் வாசித்த நல்ல நாவலாக ‘பீடி’ இருக்கிறவகையில், அவ்வாறான விருப்பம் எனக்கு ஏற்பட்ட காரணத்தை, எழுதுவதன் மூலம் எனக்காகவேயும் கண்டடையும் ஆர்வத்தில் இந்த முயற்சி. அதனால்தான் மேற்குலக நாவல் விதிகளின்படி அல்லாமல் அதை அதுவாகப் பார்க்கும் ஒரு ரசனைப் பாணியில் இந்த நாவலை நான் அணுகியிருக்கிறேன். என்றாலும் அதற்கு முன்பாக தெளிவுபடுத்தப்பட வேண்டிய சில விஷயங்கள், ‘பீடி’ நாவலைப் பொறுத்தமட்டிலன்றி பொதுவாகவே தற்கால நாவல்கள் குறித்து, உள.







பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









