உலகத்தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை – 14 ஜனவரி 2012
இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையேயான ‘பேச்சுவார்த்தை’ பற்றி உலகத் தமிழர் பேரவை அரசியல் சமூகங்களின் வரலாற்றில் தனியார், குழுக்கள், அமைப்புக்கள் மற்றும் பொதுப்படையாக மக்கள் போன்றோர் தமது வாழவின் அடித்தளத்தையே அச்சுறுத்தும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து, சமுதாயத்தின் பொது நன்மையையை மேம்படுத்துவதற்காகத் தம்மிடையேயுள்ள வேறுபாடுகளைக் களைந்து ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டு ஒன்றாகச் செயற்பட வேண்டிய சந்தர்ப்பங்கள், மிக அரிதாகவெனினும், ஏற்படுவதுண்டு. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இப்படியான காலகட்டத்தில் உள்ளனர். வெற்றியீட்டிய இலங்கை அரசானது எம்மக்களின் நிலங்களை ஆக்கிரமித்தல், அவர்களின் விடுதலையுரிமையை மறுத்தல், உடைமைகளைப் பறித்தல், அவர்களை நிரந்தர அடிமைகளாக்குவதற்கான திட்டத்தைச் செயற்படுத்தல் ஆகிய அடாத்துக்களைத் தொடர்ச்சியாகக் குவித்து அவர்களை நிரந்தர அடிமை நிலைக்குத்தள்ள எத்தனிக்கின்றது. இவ்வாறான அரச அடக்குமுறைகளை எதிர்த்துத் தம் வருங்கால நலன்களையும் பாதுகாப்பையும் காப்பது ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையாகும். மேற்கூறிய அடக்குமுறைகளை எம்மக்கள் வேறு வழியின்றி அமைதியாகச் சகித்து வாழ்ந்து வரும் இவ்வேளையில் நாம் எம்மிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளைக் களைந்து தற்போதுள்ள அரசமுறையை மாற்றியமைப்பதற்கு எமது உறுதிப்பாட்டை வலிமைப்படுத்துதல் வேண்டும்.

As we approach the third anniversary of the Sri Lankan genocide, a report is released, signed by 71 Tamil elite intellectuals titled as “An appeal to the Tamil Community and its civil and political representatives”, appealing to Tamil community for the resettlement of Muslim communities that were evicted by the LTTE during the war.
About 200,000 displaced people are still living in refugee camps in northern Sri Lanka, even though southerners believe everything is back to normal. The government organises trips to the war zone only to show monuments that celebrate the army’s victory. Almost three years since the end of 30 years of ethnic conflict, Sri Lanka has not yet resolved its so-called ‘Tamil problem’. About 200,000 Tamil internally displaced people live in refugee camps in the northern part of the country under military control, unable to go home to their villages. Ethnic Sinhalese appear oblivious of what went on (bombardment and war crimes) and is going on trips to the former war zone. Here is a story of courage and hope of a priest who visited the refugee camps in Cheddikulam. Most Sinhalese in southern Sri Lanka do not believe a ‘Tamil problem’ exists.
[*பதிவுகள் இதழில் ஏற்கனவே பிரசுரமான குறிப்பு] மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், புரட்சி நடிகர் என்றெல்லாம் பல பட்டப்பெயர்களுக்குச் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். அவரது மறைவு தினம் டிசம்பர் 24. பல்வேறு பட்ட எதிர்ப்புகளையெல்லாம் துணிந்து எதிர்த்து நின்று வாழ்க்கையில் வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர். அவரது வாழ்க்கை நம்பிக்கையிழந்து, சோர்ந்து கிடக்கும் உள்ளங்களுக்கெல்லாம் உற்சாகத்தை, நம்பிக்கையினைக் கொடுக்குமொரு நூல். அவரது திரைப்படப் பாடல்களும், படங்களும் மீண்டும் மீண்டும் வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டக் கூடிய தத்துவங்களையே வலியுறுத்தின. அதனால்தான் அவை இன்றும் கேட்கும்பொழுது சோர்ந்து துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு ஒருவித உத்வேகத்தினை, உற்சாகத்தினைக் கொடுக்கின்றன. கூத்தாடியென்றார்கள். மலையாளியென்றார்கள் . ஆரம்பகாலத்தில் எத்தனையோ பல வருடங்கள் சென்னையில் அவரது கால்களே படாத இடமில்லை என்னுமளவுக்கு அலைந்து திரிய வைத்தது காலம். தயாரிப்பாளர்களெல்லாரும் அவரை ஆரம்பத்தில் பல்வேறு வழிகளில் ஏளனம் செய்து ஒதுக்கி வைத்தார்கள். துப்பாக்கிக் குண்டுகள் உடலைப் பதம் பார்த்தன. வாழ்வில் அவர் எதிர்கொண்ட சோதனைகள் கொஞ்சமல்ல. இளமையில் வறுமை அவரை வாட்டியது. துயரங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அவரை ஆட்கொண்டன. முதல் மனைவி வறுமை காரணமாகக் கேரளாவில் இறந்த பொழுது அவர் அங்கு செல்வதற்கு முன்னரே அங்குள்ள வழக்கப்படி மனைவியின் இறுதிக் கிரியைகள் முடிந்து விட்டன. வாழ்வில் அனைத்துச் சவால்களையும் உறுதியாக எதிர்கொண்டு வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர். இருந்தவரையில் சினிமா, அரசியல் இரண்டிலுமே தனிக்காட்டு இராஜாவாக இருந்து மறைந்தவர் எம்ஜிஆர். இறந்து இருபதாண்டுகளைக் கடந்த நிலையிலும் அவரது ஆளுமை தமிழ் சினிமா மற்றும் அரசியல் ஆகியவற்றைப் பாதிப்பது ஆச்சரியமானதொன்றல்ல.
தமிழக முதல்வரும் அ இஅதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, இதுவரை தனது உடன்பிறவா சகோதரி என அழைத்து வந்த சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். சசிகலாவின் கணவர் எம் நடராஜன், ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன் உள்ளிட்ட மேலும் 13 பேரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நீக்கப்படுவதாகவும், கட்சித் தொண்டர்கள் எவரும் அவர்களுடன் தொடர்புவைத்துக் கொள்ளவேண்டாமென்றும் ஜெயலலிதா பெயரில் வெளியாகியிருக்கும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. தொடர்புடைய விடயங்கள்ஜெயலலிதா, அதிமுக ஆனால் ஏனிந்த நடவடிக்கை என்பது பற்றி அவ்வறிக்கையில் விளக்கமில்லை. வழக்கமாக நீக்கப்படும்போது கட்சி விரோத நடவடிக்கையில் ஒருவர் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும். ஆனால் அது கூட இப்போது இல்லை.
December 16, 2011 - (New York) – The report of the Sri Lankan government’s Lessons Learnt and Reconciliation Commission (LLRC) disregards the worst abuses by government forces, rehashes longstanding recommendations, and fails to advance accountability for victims of Sri Lanka’s civil armed conflict, Human Rights Watch said today. The serious shortcomings of the 388-page report, which was posted on a government website on December 16, 2011, highlight the need for an international investigative mechanism into the conflict as recommended by the United Nations Secretary-General’s Panel of Experts in April. The LLRC report was long awaited, but provided little new information or recommendations on accountability that could not have already been put into effect by the government, Human Rights Watch said. While the UN Panel of Experts recommended the establishment of an independent international mechanism to conduct investigations into the alleged violations, the LLRC report provides no realistic pathway for holding accountable military and government officials implicated in serious abuses.
இந்த நாட்டின் வரலாற்றை நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். எல்லாள மன்னன் ஆட்சிசெய்த பொழுது அதற்கு எதிராக இந்த நாட்டில் போராட்டம் நடந்தது. துட்டகைமுனு மன்னன் எல்லாள மன்னனை போரில் தோற்கடிக்கபட்டதன் பின்னர் அந்த இடத்திலே ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டு அந்த வழியால்போகின்றவர்கள் அரசர்களாக இருந்தாலும் சரி அங்கே தங்களுடைய வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுத்தான் போவார்கள். ஆனால் இன்று இந்த நாட்டினுடைய நாகரிகம் என்னவென்று கேட்க விரும்புகிறேன். ஆயிரம் ஆயிரமாக ஓர் இனத்தின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்தோம் என்று செத்துப்போனவர்களின் அப்பாவிகளின் பெற்றோர்களும் சகோதரர்களும் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று கூடத் தெரியாமல் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிப்பதற்குக் கூட இந்த நாட்டிலே உங்களுடைய இராணுவம் அனுமதிப்பதாக இல்லை. அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் கிண்டி எறிந்து சீரழித்து விடுகின்றீர்கள். இதுவா இந்த நாட்டினுடைய பண்பாடு, நாகரீகம் என்று நான் உங்களை பார்த்து கேட்க விரும்புகின்றேன். கொல்லப்பட்ட எல்லாளனுக்குக்கூட உங்களுடைய மன்னன் அவனை வெற்றி பெற்றவன் அங்கே நினைவுச்சின்னம் வைத்து அவனை வணங்க முடியுமானால் மனித குலத்தின் உயிர்கள் அழிக்கப்பட்டபோது அவர்களுடைய புதைக்கப்பட்ட இடங்களை நீங்கள் மரியாதைக்காகக் காப்பாற்ற வேண்டாமா?

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









