காலச்சுவடு.காம் - பயனுள்ள மீள்பிரசுரம் - குழந்தைகள் மீதான வன்முறை: கல்வி நிலையங்களில் கயமை இருள்
-2003 ஜூலை 8 அன்று செய்தித்தாள்களில் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளிவந்திருந்தது. சென்னைப் புறநகர் தனியார் (சுயநிதி) மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் ஒன்பது வயதான நான்காம் வகுப்பு மாணவி மாதவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடற்கல்வி ஆசிரியரால் பள்ளி நேரத்திலேயே கழிப்பறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். நான் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் இருந்த காலம். உடனே உண்மையறியும் குழு - சிறந்த குழந்தை மருத்துவ வல்லுநர், குழந்தை உரிமை ஆர்வலர், வழக்கறிஞர், ஆணையச் செயலர் ஆகியோர் கொண்ட என் தலைமையிலான குழு - ஒன்றினை நியமித்து, கள ஆய்வுக்குச் சென்றோம். அதற்குள் சென்னை மனித உரிமை நிறுவனம் (Human Rights Foundation) செய்தி சேகரித்து, ஆணையத்தின் தலையீட்டை வேண்டிற்று; ஆய்வில் பெரிதும் துணை நின்றது. நடுத்தர வர்க்க வீடுகள் கொண்ட தெருவில் எதிரெதிரான இரு கட்டடங்கள்தான் பள்ளி. சுற்றிலுமுள்ள வீடுகளிலிருந்து வேறுபடுத்த முடியாத கட்டடங்கள். மூன்று கட்டடங்களுக்கு அப்பால் குற்றம் நடந்த விளையாட்டுத் திடல். திடலின் ஒரு பக்கம் பின்புறச் சுவரையொட்டி வரிசையாக அமைந்த கழிப் பறைகள். பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கும் அனைத்து ஆண் மாணவர்களுக்கும் ஐந்தாம் வகுப்புவரையான பெண் குழந்தைகளுக்கும் ஒரே கழிப்பறைகள்தான்.

காலத்துக்குக் காலம் ‘வரலாற்று நாயகர்கள்’எனத்தகும் பெரியோர்கள் அவதரித்து தமது அரும்பெரும் சாதனைகளாலும், தன்னலமற்ற சேவைகளாலும் வறுமையில் தாழ்வுற்று, அடக்கி ஒடுக்கப்பட்டு, விடுதலையின்றிப் பாழ்பட்டுக்கிடந்த மனித குலத்தை ஏற்றம் பெறச் செய்துள்ளதையும், வாழ்க்கையின் நெறிகளை சுட்டிக்காட்டிச் சென்றுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. இத்தகைய பெரியோர்களின் அரும் பெரும் சாதனைகளையும், தன்னலமற்ற சேவைகளை உணரவும், பிறருக்கு அவற்றை உணர்த்தவும் இப்படியான விழாக்கள் அவசியம் என்பது மிகவும் மனங்கொள்ளத்தக்கது. அந்தவகையில் பல்துறைச் சேவையாளர் ஐ.தி.சம்பந்தன் அவர்களுக்கு பவள விழா எடுக்க நினைத்த கலாநிதி பொன். பாலசுந்தரம் அவர்களையும் விழாக் குழுவினரையும் பாராட்டுகின்றது என் மனம். பழகுவதற்கு இனிமையானவர். அன்பானவர். பண்பானவர். தனக்காகவும் பிறருக்காகவும் வாழும் சிறந்த ஒரு சேவையாளர்தான் ஐ.தி.சம்பந்தன். அவரின் பல்வேறுபட்ட சேவைகளை நோக்கும்போது ‘பிறந்த நாட்டிற்குச் சேவை செய்வது கற்றறிவாளரின் கட்டாய கடமை’ என்ற கருத்துக்களின் தந்தையாக விளங்கிய கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ என் நினைவில் வந்து போகின்றார்.
96வது பிறந்தநாளை கொண்டாடிய பிற்பாடு அதாவது 2022ஆம் ஆண்டு, தன்னுடைய ஆன்மா கடைசி யாத்திரைக்கு தயாராகிக் கொண்டிருக்குமென்று சொன்ன
எதியோப்பிய நாகரிகம் சூடான்-எதியோபியாவின் வட பகுதியில் நைல் ஆற்றுக் கரை ஓரம் தோன்றி வளர்ந்தது. இந் நாகரிகம் எகிப்து நாகரிகத்தினும் பழமை மிக்கது எனறும் உண்மையில் எதியோப்பிய நாகரிகரே எகிப்து நாகரிகத்தையும் அமைத்ததாக சொல்லப்படுகிறது. ஆயினும் மேலையர் எகிப்தையே பெருமைப்பட பேசுகின்றனர். உலகில் பலருக்கு எதியோப்பியாவில் பழம் நாகரிகம் இருந்ததே அறியாமல் உள்ளனர். எதியோப்பிய நாகரிகம் காலத்தால் எகிபதினும் முற்பட்டது, இதாவது, 9,500 ஆண்டுகள் பழமையுடையதாய் சொல்லப்படுகிறது. இங்கு சிந்து எழுத்துகளை ஒத்த எழுத்துகள் மண்டி எனும் ஊரில் கண்டெடுக்கப் பட்டன. இதற்கு பிற்பட்டதே எகிபதின் எழுத்துகள். நாகரிகத்தில் எதியோப்பியா எகிப்துக்கு சற்றும் குறைவில்லாதது.. எதியோப்பிய நாகரிக மன்னர் பெயர்களைக் காணும் போது இவர்களுடைய முன்னோர் தமிழராய் இருத்தல் வேண்டும் என்ற கருத்தை தோற்றுவிக்கிறது. இந்நாகரிக மன்னர் பெயர்களில் சேரர் பெயர்கள் இடம்பெறுவது சேரம் ஆட்சி ஒர் காலத்தே இங்கு வழங்கி இருக்க வேண்டும் எனபதை உணர்த்துகிறது

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









