இசைக்கலைஞர் வர்ணவர்ணகுலசிங்கம் ராமேஸ்வரன் மறைவு! - வ.ந.கிரிதரன் -

வர்ணம் இசைக்கல்லூரியின் இயக்குநரும் இசைக்கலைஞருமான வர்ணகுலசிங்கம் ராமேஸ்வரன் கோவிட் காரணமாக மறைந்த செய்தியினை முகநூல் மூலம் அறிந்தேன். துயருற்றேன். இவரை நான் சந்தித்ததில்லை. ஆனால் இவரது இசை நிகழ்ச்சிகளை யு டியூப் காணொளிகள் மூலம் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன். தனது இசைக்கல்லூரி மூலம் இளங்கலைஞர்களை உருவாக்கி வந்துள்ளதை அறிந்திருக்கின்றேன். சந்திக்காமலேயே எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இவரது தோற்றம் ஊடகங்கள் வாயிலாக நினைவில் பதிந்துள்ளது. இவர் என் முகநூல் நண்பர்களிலொருவர்.


- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -
இருபது வயதுப் பெண்ணாக ஒரு ஊடகவியலாளராக பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் இன்று திரைப்பட இயக்குநராக உள்ள ஒருவரால் தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான அச்சுறுத்தல் குறித்து சக கவிஞர் லீனா மணி மேகலை மீ டூ இயக்கம் தந்த உலகளாவிய ஆதரவுக்கரங் களின் தோழமை அளித்த தெம்பில் பொதுவெளியில் பேசியதற்காக சம்பந்தப்பட்ட நபர் அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டிருக்கிறார்.
இம்முறையும் கனடா தேர்தல் முடிவுகள் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குச் சாதகமாக வந்திருக்கின்றன. இப்படித்தான் வரும் என்று முன்பு எழுதிய கட்டுரையிலும் குறிப்பிட்டது போலவே, நடந்திருக்கின்றது. 170 ஆசனங்கள் இருந்தால்தான் இங்கு தனியாக ஆட்சி அமைக்க முடியும். லிபரல் கட்சிக்கு 156 ஆசனங்களே கிடைத்திருக்கின்றன. ஏனைய எதிர்கட்சிகள் கொள்கையின் அடிப்படையில் ஒன்றுசேர வாய்ப்பில்லை என்பதால், லிபரல் கட்சிதான் இம்முறையும் கனடாவில் சிறுபான்மை ஆட்சி அமைக்க இருக்கின்றது.
முன்னுரை


இ
அஞ்சலிக் குறிப்பு






விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், விதை குழுமம் செப்ரம்பர் மாதத்தில் 12, 19, 26 ஆகிய திகதிகளில் தனது நிகழ்வுகளை ஒருங்கிணைக்க இருக்கின்றது. இந்நிகழ்வுகளில் நீங்களும் கலந்துகொள்வதோடு ஆர்வமுள்ளாவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.
சொன்னதெல்லாம் சொல்லாததையும் சுமந்ததாக
1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை அடுத்து, இலங்கைத் தமிழர்கள் பலர் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தபோது, அதிகமானவர்கள் கனடா நாட்டுக்குப் புலம் பெயர்ந்தார்கள். ஒன்ராறியோ மாகாணத்தில்தான் அதிக தமிழர்கள் வாழ்வதால், இவர்கள் முதலில் தங்கள் இருப்பை உறுதி செய்தபின், பல்வேறு சமூகச் செயற்பாடுகளிலும் தங்களை உட்படுத்திக் கொண்டனர். எந்த நாடாக இருந்தாலும், இறுதி முடிவு எடுக்கும் நிலை அந்த நாட்டு அரசைச் சார்ந்திருப்பதால், அரசியலில் ஈடுபாடு கொண்ட சிலர் தேர்தல் மூலம் பதவிகளுக்காகப் போட்டி போட முன்வந்தனர். பிறர் நலன் கருதிப் போட்டி போடுவதாகப் பிரச்சாரம் செய்தால்தான் ஜனநாயக நாட்டில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புண்டு. பதவிக்கு வந்தபின் அரசியல் வாதிகள் எப்படி மாறுவார்கள் என்பது சந்தர்ப்ப, சூழ்நிலையைப் பொறுத்தது. கனடாவில் கோவிட் பேரிடர் காரணமாக முக்கிய பிரச்சனைகளாக சுகாதாரவசதி, வாழ்க்கைச் செலவு, வருமானவரி, பொருளாதாரம், வீட்டுவசதி, முதியோர் பிரச்சனை, குடியேற்றம், கல்வி, வேலைவாய்ப்பின்மை, மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பொதுவான பிரச்சனைகளை மக்கள் இப்போது எதிர் கொள்கின்றார்கள்.
மகாகவி பாரதிக்கு கிடைத்த நண்பர்கள் பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். அவர்களில் சித்தர்கள், ஞானிகள், அறிஞர்கள், வக்கீல், வர்த்தகர், தீவிரவாதிகள், விடுதலை வேட்கை மிக்கவர்கள், பத்திரிகாசிரியர்கள், சாதாரண அடிநிலை மக்கள் , பாமரர்கள் என பலதரத்தவர்களும் இருந்தனர். அவர் சந்தித்த சித்தர்கள் அவருக்கு ஞானகுருவாகியுமிருக்கின்றனர்.
அக்டோபர் புரட்சியைப்பற்றிய பாடிய முதலாவது தமிழ்க் கவிஞனென்று பாரதியைப் போற்றுவர். அதற்கு அவரது 'ஆகாவென்றெழுந்தது பார் யுகப்பரட்சி' என்னும் அவரது 'புதிய ருஷியா' கவிதையின் வரியினை உதாரணம் காட்டுவர். இக்கவிதையை வாசித்தபோது குறிப்பாக மார்க்சிய நூல்களை வாசித்த பின்பு மீண்டும் வாசித்தபோது எனக்கொரு சந்தேகமேற்பட்டது. உண்மையிலேயே பாரதியார் மார்க்சியக் கோட்பாடுகளை அறிந்த பின்னர் இவ்விதம் எழுதினாரா அல்லது பொதுவாக அறிந்தவற்றின் அடிப்படையில் இவ்விதம் எழுதினாரா என்பதுதான் அச்சந்தேகம். 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









