ஆய்வு: கோப்பாய்க் கோட்டை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -
'எழுநா' இணையத்தளத்தில் வெளியான கோப்பாய்க் கோட்டை பற்றிய எனது கட்டுரை. இதனை https://ezhunaonline.com/article/kopay-fort/ என்னும் இணைய இணைப்பில் வாசிக்கலாம். - வ.ந.கி -
தமிழர்களின் இராஜதானியாக நல்லூர் விளங்கிய பதினாறாம் நூற்றாண்டில், இராஜதானியில் அமைந்திருந்த பிரதான கோட்டைக்குப் பாதுகாப்பாக மூன்று சிறு கோட்டைகள் கொழும்புத்துறை, பண்ணைத்துறை மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களில் அமைந்திருந்தன. இவற்றைப் பிரதான கோட்டையுடன் இணைக்கும் பிரதான வீதிகளில் காவலரண்களும் அமைக்கப்பட்டிருந்தன. கொழும்புத்துறை, பண்ணைத்துறை ஆகியவை துறைமுகங்களாகவும் விளங்கின. இவற்றில் கோப்பாயில் அமைந்திருந்த கோட்டை பற்றி விபரிக்கின்றது இந்தக் கட்டுரை.
எண்பதுகளில் இக்கட்டுரையாசிரியர் தனது ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ பற்றிய ஆய்வின்பொருட்டுப் பேராசிரியர் கா. இந்திரபாலாவை யாழ். பல்கலைக்கழகத்தில் சந்தித்தபோது அவர் , ’சுவாமி ஞானப்பிரகாசர் பல வருடங்களுக்கு முன்னரே கோப்பாய்க் கோட்டை பற்றியும், அது இருந்ததாகக் கருதப்படும் இடம் பற்றியுமொரு கட்டுரையொன்றினை ஆய்விதழொன்றில் எழுதியிருப்பதாகவும், அது யாழ். பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் இருப்பதாகவும் ’ குறிப்பிட்டிருந்தார். அந்தக் கட்டுரை ஜனவரி 1917 இல் வெளியான Ceylon Antiquary and Literary Register என்னும் வரலாற்றிதழின் 194, 195ஆம் பக்கங்களில் ‘Sankily’s Fortress at Kopay’ (சங்கிலியின் கோப்பாய்க் கோட்டை) என்னும் தலைப்பில் வெளியாகியிருந்த கட்டுரை. கோப்பாய்க் கோட்டை பற்றிய ஆய்வுகள் செய்யும் எவரும் அந்தக்கட்டுரையினைத் தவறவிட முடியாது. அத்துணை முக்கியத்துவம் மிக்க கட்டுரை அது. அதிலவர் போர்த்துகேய வரலாற்றாசிரியரான தியாகோ தோ கூத்தோ (Diego do Couto) கொன்ஸ்தந்தீனு த பிறகன்சா என்னும் போர்த்துகேயத் தளபதிக்கும், யாழ்ப்பாண இராச்சியத்தின் அரசன் செகராசசேகரனுக்கும் (இவனே முதலாம் சங்கிலி என்பது வரலாற்றாய்வாளர் கருத்து) நல்லூரில் நடந்த போரின் போது சங்கிலி கோப்பாயில் அமைந்திருந்த கோட்டைக்கு ஓடியது பற்றியும், அந்தக் கோட்டை பற்றியும் குறிப்பிட்டிருந்ததைச் சுவாமி ஞானப்பிரகாசர் பின்வருமாறு சுட்டிக்காட்டுவார்:
“கோப்பாய்க் கோட்டையானது சுடாத செங்கற்களானது. அதன் கொத்தளங்கள் (Bastions), கூண்டுக் கோபுரங்களுடன் (Turrets) சிறப்பாகவும், உறுதியாகவும் கட்டப்பட்டிருந்தது” (கூத்தோ) (‘சங்கிலியின் கோப்பாய்க் கோட்டை’, ‘பக்கம் 194)



A Long Watch: War, Captivity and Return in Sri Lanka by Commodore Ajith Boyagoda, as told to Sunila Galappatti, is published by Hurst - தமிழ்பதிப்பு ( நீண்ட காத்திருப்பு ) - வடலி வெளியீட்டகம்- தமிழில் தந்தவர் - தோழர் தேவா - நேற்று அவரும் மரணித்தார். 
மொட்டெ அக்கா வீட்டின் முன்ஜன்னலை உடைத்தபோது முகத்தில் அறைந்த, குடலைப் பிரட்டும் பிணநாற்றம் செள்ளியைப் பீடித்திருந்தது. அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு முற்றத்தின் மூலையில் முழங்காலிட்டு வாந்தியெடுத்த நினைவு அவளின் தலைக்கேறியிருந்தது. வாயை அகலத்திறந்து, நாக்கை நீட்டி நீட்டி, காற்றை இழுத்து இழுத்து மேற்கொண்ட பகீரத முயற்சிக்கெல்லாம் சிக்காது, பிரட்டலாக அடிவயிற்றிலேயே நின்றெரிந்த அந்த நாளைவிட இந்தநாள் அதிகக் கனத்தது.



மாதுயர்ப்படு முஸ்லிம் 
நீங்கள் என்றவது உங்கள் மாணவப்பருவத்தில் வகுப்பிற்கு முன் முழுங்காலில் நின்றிருக்கிறீர்களா? அதுதான் முட்டுக்கால் போடுவது என்பார்களே.


'நாம் விரும்புகின்றவையும் திட்டமிடுபவையும் எப்போதும் நடந்து விடுவதில்லை .விரும்பாதவையும் எதிர்பாராதவையும் நடந்து விடுகின்றன ' . யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அம்மையாரின் 'தாலி' சிறுகதைத் தொகுப்பில் படைப்பாளியின் உரை இவ்வாறுதான் ஆரம்பிக்கின்றது. தத்துவார்த்தமான வசனங்கள் மட்டுமல்ல, சிறுகதைத் தொகுப்பின் பெரும்பாலான கதைகளின் அடிநாதமாகவும் இதுவே அமைந்துள்ளது.



"பெண் அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட வரலாறு உண்டு. ஆனால் முழுமையாக அவள் மீளவில்லை. பெண்கள் வெளித்தோற்றத்தில் உயர்வு பெற்றதாக தெரிகிறது. பதவி உயர்வு பெற்றது, குடும்பத்தில் சில பொறுப்புகளை அடைந்தது, சமூகத்தில் சில நிலைகளை அடைவது வேறு வகையில் தோற்றம் கொள்கின்றன, ஆனால் பெண் அப்படியெல்லாம் பெரிதாக மாறுதலுக்குள் உட்படவில்லை குடும்பமே பெண்ணை மீட்டெடுக்க வேண்டு,ம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களுக்கு பதிலடிதான் பெண்கள் எழுத்து பெரியார் ஒவ்வொரு பெண்களும் இருக்கிறார் என்பதைத் தான் பெண்களிம் மறுமலர்ர்சி நடவடிக்கைகள் சொல்கின்றன. எதற்காக எழுத வேண்டும் என்றால் குடும்பத்தின் தளைகளில் இருந்து பெண்ணை விடுவிப்பதற்கும் அதை தீர்வை தன் அனுபவங்களில் மூலம் செல்வதற்கும் பெண்ணே எழுத வேண்டிருக்கிறது" என்று எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சக்தி விருது 2023 விழாவில் விருதைப் பெற்றுக் கொண்டு பேசும்போது தெரிவித்தார். விருது பெற்ற பிற எழுத்தாளர்கள் தங்களின் எழுத்து அனுபவங்களை விரிவாக எடுத்துரைத்தனர்.
திருச்சூர் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போது இளம் பெண் கவி அனிஷா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . அவருடன் கவிதை சார்ந்த ஒரு உரையாடல் :




கோபி பகலில் அந்த சாக்கு கட்டிலில் செம தூக்கம் போட்டிருந்தான் . காடு வெட்டி விவசாயம் செய்கிறவர்கள் பயன்படுத்துற மடிக்கிற மரக்கட்டில் அதிசயமாக அவன் வீட்டிலும் ஐயாவால் பயன்பாட்டில் இருக்கிறது . யாழ்ப்பாணத்தில் சுகமான தூக்கம் வருகிற ...இதை யார் பயன்படுத்துகிறார் ? . அவரை சுத்தத் தமிழர் என சமயத்தில் நினைப்பான் . ஐயாவிடம் அவன் விடுத்து விடுத்து கேள்விகள் கேட்க முடியாது . ஒருநாள் ரகுவிடம் கேள்விகளை எழுதிக் கொடுத்து அவன் மூலமாக பேட்டி எடுக்க வேண்டும் . தனக்குள் சிரித்துக் கொண்டு நெட்டி முறித்தான் . அம்மா காதலித்து ஐயாவை முடித்தேன் என்று சொல்வார் . அதுவும் நினைப்பில் வந்தது . அம்மாட வலது கை சின்ன மாமா தான் . அவருக்கும் தம்பிக்கும் இடையில் வயசு வித்தியாசம் நாலு, ஐந்து இருக்கும் . அது தான் ... அக்கா சொன்னால் கேட்பவராக இருந்தார் . அடுத்த ஆண்டில் பிறந்திருந்தால் வில்லனாக அல்லவா இருந்திருப்பார் . ஆனால் , அந்த காலம் இலக்கியக்காதலாக இருந்தது . இன்று இருப்பது போல இல்லை . அட அவனுக்கும் காதலுக்கும் வெகு தூரம் விடுங்கள் . ஐயாவை , அம்மா முதலில் விரும்பவில்லை . அம்மம்மா தான் , அயலுக்குள் இருந்த அவரை " " எடியே , இவன் பிரயாசைக்காரனாக இருக்கிறான், கட்டுவாயா ? " எனக் கேட்டார் . அம்மா " என்னாலே கறுப்பனைக் கட்ட முடியாது " என்று விட்டுப் போய் விட்டார் .
பெரும்பாலான எழுத்தாளர்கள் நவீன கணினி தொழில் நுட்பத்தையே பயன்படுத்தி எழுதி வருகிறார்கள். ஆனால், அந்தப்பக்கமே செல்லாமல், மின்னஞ்சல் பாவனையும் இல்லாமல், தொடர்ந்தும் கையால் எழுதி, தபாலில் அனுப்பிக்கொண்டிருக்கும் எண்பது வயதை நெருங்கும் ஒரு படைப்பாளியை இந்தப்பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்!

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









