கவிஞர் சுகாதாகுமாரி ஒரு சமூக, அரசியல் & சூழலியற் செயற்பாட்டாளர்! - சுப்ரபாரதிமணியன் -

- சுகாதாகுமாரி (22 சனவரி 1934 – 23 திசம்பர் 2020) கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். கவிஞர். சமூக, அரசியல் & சூழலிலற் செயற்பாட்டாளர். பெண்ணிய இயக்கம், அமைதி பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம், சூழலியல் போன்ற சமுக இயக்கங்களில் பணியாற்றியவர். இவர் கேரள மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராகவிருந்தவர். -
கேரளா அமைதி பள்ளத்தாக்கு 2022
கேரளா அமைதி பள்ளத்தாக்கு - கொரோனா காலத்திற்கு பின்னால் நவம்பர் இறுதியில் இந்த முறை போயிருந்தபோது .அந்த மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியிலும் சூட்டின் தன்மை அதிகமாக வெப்பநிலை அதிகமாக மாறி இருப்பதைச் சொன்னார்கள். உலகம் முழுக்க வெப்பம் அதிகமாகிக் கொண்டிருப்பது. குளோபல் வார்மிங் என்பதற்கு அமைதி பள்ளத்தாக்கும். இலக்காயி இருக்கிறது அதன் காரணமாக ஒரு சதுர கிலோமீட்டரில் 2000க்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் வாழக்கூடிய அந்த பகுதியில் சில மாறுபாடுகள் தென்படுகின்றன.
கேரளா அமைதி பள்ளத்தாக்கு பகுதியை சுற்றி பார்க்க நபர் ஒன்றுக்கு ரூபாய் 750 ரூபாய் வசூலிக்கிறார்கள் இப்போது. 300 ஏக்கர் பரப்பிலான விரிந்த அடர்ந்த காட்டுப்பகுதி .அபூர்வமான மரங்கள் செடி கொடிகள் பறவைகள் மிருகங்கள் இவற்றைக் காண வாய்ப்பு கிட்டும் போது இந்த தொகை பெரிதல்ல தான் .ஆனால் கேரளாவைச் சார்ந்த நிறைய பேர் தென்பட்டார்கள். தமிழகத்தினரைக் காண முடிவதில்லை அதிகம் . தமிழகத்திலிருந்து அதிக தூரம் இல்லை. கோவை, ஆன்கட்டி, அட்டப்பாடி.... அவ்வளவுதான்
கேரளா அட்டப்பாடி பகுதிகளில் உலக கால்பந்தாட்டம் போட்டியை ஒட்டி கேரளா ரசிகர்கள் வெவ்வேறு அணிகளாக, விசிறிகளாக, பிரிந்து தங்களுடைய ஆர்வத்தை காட்டியிருக்கும் பதாகைகள் . இதுபோல் தமிழகத்தில் சில சமயங்களில் காண முடிகிறது . ஆனால் உலக கோப்பை கிரிக்கெட்..உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளின் போது கேரள ரசிகர்கள் காட்டும் ஆர்வம் அவர் அபரிமிதமாக இருக்கிறது. இதை அவர்களுடைய படைப்புகளில் கூட சாதாரணமாக காணலாம். உதாரணத்திற்கு சுடானி பிரம் நைஜீரியா போன்ற படங்கள் கூட அமைந்துள்ளன. இது போன்ற நிறைய படங்கள் படைப்புகள்.
அமைதிப் பள்ளத்தாக்கில் அணையொன்றை 197இல் நிறுவுவதற்கு எதிராகத் தோன்றிய மக்கள் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக இருந்தவர் கவிஞர் சுகாதாகுமாரி.


சரளமான மொழிநடை என்பது ஒரு எழுத்தாளருக்கு வரமாக அமைவது. தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஊடகமாக எழுத்தைப் பயன்படுத்தும் வல்லமை பலரிடம் காணப்பட்டாலும், அகம் சார்ந்த உணர்வுகளை மென்மையுடனும், புறம் சார்ந்த தோற்றங்களை அழகியலுடனும், சமூகம் சார்ந்த அறங்களை ஓர்மத்துடனும் வெளிப்படுத்தும் திறன் சிலரிடம் அதீதமாகக் காணப்படும். அவர்களுள் ஒருவர் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி.

இன்று மனிதர்களின் மனநிலைகளும் வாழ்வுத்துயரங்களும்,, நெருக்கடிகளும், சிக்கல்களும் அவர்களின் அகவாழ்வும் அது சார்ந்தவையுங்கூட அவர்களின் வாழ்க்கைத் தொழில் முதலான வாழ்வாதாரங்களோடு கண்ணுக்குப் புலனாகாத அளவு இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அகவயமான கவிதைகள், புறவயமான கவிதைகள் என்றெல்லாம் திட்டவட்டமான வரையறைகள் சாத்தியமா, அவை தேவையா என்ற கேள்விகள் தவிர்க்கமுடியாமல் எழுகின்றன. கவி என்பவர் எத்தனைக்கெத்தனை தனி மனிதரோ அத்தனைக்கத்தனை சமூக மனிதரும் கூட. இவ்வகையில் ஒரு கவி தன் கவிதையில் முன்வைக்கும் அகச்சூழலும் புறச்சூழலும் இரட்டிப்பு கவனம் கோருபவை.

இலங்கையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிலரை மாண்பு மிகு ஜனாதிபதி திரு. ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் விடுவித்திருப்பதற்கு நன்றியும், தெரிவித்து, ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கு அவர் ஆவனசெய்யவேண்டும் எனக்கோரும் கடிதம் ஒன்றை அவுஸ்திரேலியா வாழ் மூவீனத்தையும் சேர்ந்த இலங்கையர்கள், தங்கள் இலங்கை நண்பர்கள் கழகத்தின் ஊடாக அனுப்பிவைத்துள்ளனர்.
ஆதிப் பொதுவுடமை, ஆண்டான் அடிமை, நிலப்பிரவுத்துவம், முதலாளித்துவம், கம்யூனிசம் என்று மனித குல வரலாற்றை பொருளாதாரக் கட்டுமானங்களின் அடிப்படையில் பிரிந்து ஆராய்ந்து உருவாக்கிய நூலின் இறுதி வடிவமாக மூலதனம் என்று புத்தகத் திரட்டு பொருளாதாரம் பற்றி ஒரு முழுமையான ஆய்வை எமக்கு கொடுத்திருக்கின்றது. இதுவரை கால மானுட வர்க்கத்தின் சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப் போக்கினை அவதானிப்போமாயின், ஆதி காலத்து மானுடர் அறியாமையில் வாழ்ந்த காலகட்டத்தில், அவரது மனம் பூரணமாகத் தொழிற்பட ஆரம்பிக்காதவொரு காலகட்டத்தில் நிலவிய தாய்வழி மரபினையொட்டிய பொதுவுடமைச் சமுதாய அமைப்பாக இருந்தது. பின்னர் அது உற்பத்திக் கருவிகளின் பரிணாம வளர்ச்சிப் போக்கிற்கேற்ப மாறுதலடைந்து வந்த ஆண்டான், அடிமை, அதாவது அடிமை - உடைமை சமுதாய அமைப்பாக மாற்றம் பெற்றது. பின்பு நிலப்பிரபு - பண்ணையடிமை அல்லது நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு பெரும் நிலப'பரப்புகளை வழங்களை தமக்கானது என்று ஒரு சிறு பகுதியினர் ஆக்கிரமித்து வைத்திருந்து சமூக அமைப்பாக ஆட்சியதிகாரமாக மாற்றம் பெற்றது. இதன் வளர்ச்சியில் மூலதனத் திரட்சி ஓரிடத்தில் குவிந்ததாக உருவான முதலாளித்துவ சமுதாய அமைப்பு, நவீன முதலாளித்துவ சமுதாய அமைப்பு இதில் தான் பாட்டாளி வர்க்கம் என்ற உழைக்கும் வர்க்கமும் அவர்களின் உழைப்பைச் சுரண்டி பெரும் மூலதனத்திற்கு அதிபதியான முதலாளி வர்க்கமும் பகை வர்க்கங்களாக பரிணாமம் பெற்ற சமுதாய் அமைப்பு உருவானது. இப்படியான ஒரு காலகட்டத்தில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம்.
ஒக்டோபர் 8 இல், கிரைமியா பாலத்தை, தனது குண்டுவெடிப்பால் உக்ரைன் தகர்த்தெரிந்த முயற்சியுடன், ‘ரஷ்யா–உக்ரைன் போர்’ ஒரு புது பரிணமிப்பை எட்டிப்பிடித்தது எனலாம். இதே நாளில், ரஷ்யா, தனது போர் முனைக்கான, புதிய எளபதியையும் நியமித்தது–– Sergei Surovikin . Surovikin னின் நியமிப்புடன், ரஷ்யாவின் ‘யுத்த அணுகுமுறை’, புதிய மாற்றங்களை கண்டது. இதுவரை பாவித்திராத ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் ரஷ்யா பெருமளவில் பாவிக்க தொடங்கியது என்பது இரண்டாம் பட்சமே. முக்கியமானது, தன் யுத்த ‘அணுகுமுறையை’ ரஷ்யா மாற்றிக் கொண்டது என்பதே இங்கு குறிப்பிடத்தக்கது.






இன்று என் தந்தையார் (நடராஜா நவரத்தினம்) மறைந்த நாள். நேற்றுத்தான் போலிருக்கின்றது. அப்பொழுது எனக்குப் பத்தொன்பது வயது. யாழ் ஶ்ரீதரில் 'மாட்னி ஷோ' (Matinee Show) பார்த்து விட்டு வீடு திரும்பியபோது , அப்பொழுது அராலி வடக்கில் வசித்து வந்தோம், சத்தியமூர்த்தி 'மாஸ்டர்' எனக்காக பஸ் வரும் வரை காத்திருந்து , அப்பா மறைந்த செய்தியினைக் கூறி , அரவணைத்து , ஆறுதல் கூறிச் சென்றது இன்னும் நினைவில் நேற்றுத்தான் நடந்தது போல் நிழலாடுகின்றது.

தக்ஷிலா ஸ்வர்ணமாலி ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பின்மூலம் தமிழ் வாசகவுலகில் அறிமுகமானவர். இந் நாவலின் மொழிபெயர்ப்பாளர் ரிஷான் ஷெரிப் மொழிபெயர்ப்பாளராகவும் படைப்பாளியாகவும்கூட நன்கறியப்பட்டவர். இது, ஆதிரை வெளியீடாக ஜனவரி 2022இல் வெளிவந்த இந்த நாவலின் விமர்சனமல்ல. சில நாவல்களை அவ்வாறாக எடைபோடுவதும் எது காரணத்தாலோ சுலபத்தில் கூடிவருவதில்லை. முன்னோடிகளான நாவல்களுக்கு அவ்வாறான இடைஞ்சல்களை முன்பும் சிலவேளை சந்தித்திருக்கிறேன். இதனை சரியாகச் சொல்வதானால் விமர்சிப்புக்கான ஒரு பாதையை அமைத்தலெனக் கூறலாம். அண்மையில் நான் வாசித்த நல்ல நாவலாக ‘பீடி’ இருக்கிறவகையில், அவ்வாறான விருப்பம் எனக்கு ஏற்பட்ட காரணத்தை, எழுதுவதன் மூலம் எனக்காகவேயும் கண்டடையும் ஆர்வத்தில் இந்த முயற்சி. அதனால்தான் மேற்குலக நாவல் விதிகளின்படி அல்லாமல் அதை அதுவாகப் பார்க்கும் ஒரு ரசனைப் பாணியில் இந்த நாவலை நான் அணுகியிருக்கிறேன். என்றாலும் அதற்கு முன்பாக தெளிவுபடுத்தப்பட வேண்டிய சில விஷயங்கள், ‘பீடி’ நாவலைப் பொறுத்தமட்டிலன்றி பொதுவாகவே தற்கால நாவல்கள் குறித்து, உள.
மாதிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. பளபளவென ஒளிரும் வெண்ணிற ஹெவெல்ஸ் வெர்ஷ்டன் டைப் கழிப்பானைக் கண்டு கண்டுச் சிரித்தாள்.
பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்று, கிறித்துவம் நமக்கு போதிக்கிறது. இங்கே, பரிசுத்த ஆவி என்பது, இறைத்தன்மை கொண்ட, ஒற்றை ஆத்துமாவைக் குறிக்கிறது. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றுதான் என்று, இந்துமதத்தின் அத்வைதம், நமக்கு போதிக்கிறது. இந்துமதத்தின் இன்னொரு நிலையான, த்வைதம், பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு என்று நமக்கு போதிக்கிறது. ஆக, இந்து மதம் சொல்லும் மனிதனின் ஜீவாத்மாவும், ஒரு ஒற்றை ஆத்துமாவையே குறிக்கிறது. மனிதனின் படைப்பைக் களிமண்ணில் துவக்கிய இறைவன், பின்னர், அவனது சந்ததிகளை, நீரின் சத்திலிருந்து உருவாக்கி, பின்னர் அவனைச் சீரமைத்து, தனது உயிரை அவனிடம் ஊதினான் என்று, இசுலாம் நமக்கு போதிக்கிறது. இங்கே, இசுலாம் சொல்லும் உயிர் என்ற வார்த்தை, ஆத்துமாவைக் குறிக்கிறது. ஆக, இந்த மதத்தில் சொல்லப்படும் ஆத்துமாவும், ஒற்றை ஆத்துமாவையே குறிக்கிறது. இப்படி, இன்று உலகில், பெரு விருட்சமாய் வளர்ந்து நிற்கும் மதங்கள், ஆத்துமாவைப் பற்றி, இரண்டு விசயங்களை, நமக்குப் பொதுவாய்ச் சொல்லுகின்றன.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









