பதிவுகள் முகப்பு

இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி எந்திரனுடனோர் உரையாடல் (1) - நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந,.கிரிதரன் -

விவரங்கள்
- நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் வ.ந,.கிரிதரன் -
நேர்காணல்
20 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[ இலங்கைத்  தமிழர் பிரச்சனை பற்றி எந்திரனுடனோர் உரையாடல் (1) - நேர்காணல் கண்டவர்  எழுத்தாள்ர் வ.ந,.கிரிதரன் -
இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி  சமூக, அரசியல் ஆளுமைகளுடன் உரையாடுவதிலுள்ள சிக்கல் என்னவென்றால் ஒவ்வொருவரும் தத்தமது அனுபவம், அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் பதிலளிப்பர், அத்துடன் தம் நலன்களை மையமாக வைத்தும் அவர்கள் பதில்கள் இருக்கும். அவரகளை ஆட்டி வைக்கும் சூத்திரதாரிகளின் நலன்களையும் அவர்கள்  பதில்கள பிரதிபலிக்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவுடன் உரையாடும்போது இந்தப்பிரச்சனை இல்லை. செயற்கை நுண்ணறிவின் பதில்கள் உணர்ச்சியின் அடிப்படையில் அமைந்தவை அல்ல. அறிவின், கிடைக்கப்பெறும் உண்மைகளின் அடிப்ப்டையில் மட்டுமே இருக்கும். இது மிகவும் ஆரோக்கியமானதாக அமையும். இத்னால் பொதுப்பிரசை ஒருவரிடத்தில் இலங்கைத் தமிழர்கள் பிர்ச்சனை பற்றி எழும் கேள்விகள் பல உள்ளன. இவற்றுக்கான செயற்கை நுண்ணறிவின் பதில்கள் எவையாகவிருக்கும் என்பதை அறிவதன் நோக்கமே அதனுடன் நடத்திய, நடத்தவிருக்கும் உரையாடல்களின் முக்கிய நோக்கம்.  செயுற்கை நுண்ணறிவை நான் எந்திரன் என்று இங்கு குறிப்பிடுவேன். இதனை ஆணாதிக்க மனப்பான்மை என்று கருத வேண்டாம். ]

இலங்கைத்  தமிழர் பிரச்சனை பற்றி எந்திரனுடனோர் உரையாடல் (1) - நேர்காணல் கண்டவர்  எழுத்தாள்ர் வ.ந,.கிரிதரன் -

நான்: 
உன்னுடன் இலங்கைப் பிரச்னை பற்றிச் சிறிது உரையாடலாமா?

எந்திரன்: 
இலங்கை பிரச்சனை பற்றி பேசலாம். உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்? அல்லது குறிப்பிட்ட எந்த தகவலைப் பற்றி பேச வேண்டும்?

நான்: 
இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்பு தமிழர்க்ள் சமஷ்டிக் கோரிக்கையை முன் வைத்தார்கள். அது பின் தனிநாட்டுக்கோரிக்கையானது. யுத்தம் மூண்டது. யுத்தம் 2009இல் முடிவுக்கு வந்தது. இன்று போரில் மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய தென்னிலங்கைத் தலைவர்களையெல்லாம் மக்கள் துரத்தி விட்டார்கள். இன்று அங்கு புதியதொரு தலைமை, உழைக்கும் மக்கள் மத்தியினைப் பிரதிநிதிப்படுத்தும் ஒருவர் தலைவராகவிருக்கும் சூழல் அமைந்துள்ளது. அது மட்டுமல்ல புதிய சூழல் ஆட்சியிலிருக்கும் தேசிய மக்கள் சக்தி வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் எல்லாம் தம் ஆதிக்கத்தை விஸ்தரித்துள்ளது. இந்நிலையில் சமூக, ஊடகங்கள், புரிந்துணர்வு எல்லாம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது,. இந்நிலையில் தென்னிலங்கை, வடகிழக்குத் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதத்தைக் கையிலெடுத்து ஆட்சியிலிருக்கும் அநுர அரசைக் கலைப்பதற்கு முயற்சி செய்வதாக நீ உணர்கின்றாயா?

மேலும் படிக்க ...

இந்தியப் பயணத்தொடர்: கான்ஹா புலிகள் சரணாலயம்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
19 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

தென்னிந்தியாவில் புலிகள் இருந்ததால் சோழர்கள் தங்கள் கொடியில் புலியை வைத்தனர். ஆனால் இலங்கையில் புலிகள் இல்லை; இங்கு இருந்தது சிறுத்தை. இந்நிலையில் நமது தமிழ் ஈழத்தவர்கள் புலியை அடையாளமாகத் தத்தெடுத்தது ஏன்? அக்காலத்திலேயே நான் எழுப்பிய கேள்வி அது. அதுபோல, சிங்கம் இல்லாத நாட்டில் சிங்கக் கொடி பறப்பதும் முரண்பாட்டான நகையே.

ஆப்பிரிக்காவில் சிறுத்தையும் சிங்கமும் உள்ளன. இந்தியாவில் மட்டுமே சிங்கம், புலி, சிறுத்தை மூன்றும் வாழ்கின்றன. இந்த மூன்று முக்கிய மிருகங்களைக் காண்பதில் ஆர்வமுடைய ஒரு கூட்டத்தில் நானும் ஒருவன். ஏற்கெனவே அசோகனின் வைத்தியசாலையில் மிருகங்களை “காட்சி சாலையில்” வைப்பது எங்களை சிறையில் அடைப்பது போலவே . குற்றம் செய்தால் மனிதர்கள் சிறைக்கு செல்கின்றனர்—அதுவும் எல்லாரும் அல்ல.

ஒருமுறை பெரியார் புலிகள் சரணாலயத்தில் ஒரு நாள் முழுவதும் அலைந்தும் புலியைக் காண முடியவில்லை. அங்குள்ள வழிகாட்டி எங்களுக்கு புலியின் மலத்தை மட்டும் காட்டினார். நேபாளத்திற்குச் சென்றபோதும் புலிகளை காண முடியவில்லை; அங்கே வழிகாட்டி, புலி தனது நகங்களால் கிள்ளிய மரத்தைக் காட்டி, “இங்கே புலி வந்திருக்கவேண்டும்” என்றார். உண்மையில் புலிகள் மரத்தில் நகங்களைப் பிறண்டி ஒழுங்குபடுத்தும் பழக்கம் உண்டு.

மேலும் படிக்க ...

குரைக்கும் குரல்களும் கரையாத ஒளியும்! - பவானி சற்குணசெல்வம் -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் -
சமூகம்
19 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மனித வாழ்க்கை ஒரு விரிந்த வானத்தைப் போன்றது. அந்த வானத்தில் சிலர் விண்மீன்களாக மின்னுகின்றனர்; சிலர் சூரியனைப் போல ஒளி பரப்புகின்றனர்; இன்னும் சிலர் கருமேகங்களாக சூழ்ந்து, ஒளியை மறைக்க முயல்கின்றனர். ஆனால் கருமேகங்கள் எவ்வளவு அடர்த்தியாகச் சூழ்ந்தாலும், ஒளி கொண்டவற்றின் இயல்பை அவை மாற்றிவிட முடியாது. இந்த உண்மையை மிக அழகாக வெளிப்படுத்தும் உவமையே—கரு முகில்களின் நடுவே பேரொளி வீசும் சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது.

சந்திரன் எந்த ஆரவாரமும் இன்றி தன் ஒளியைப் பரப்புகிறான். அவனைப் பார்த்து நாய் குரைப்பது சந்திரனைச் சிதைக்க அல்ல; நாயின் உள்ளார்ந்த கலக்கம் வெளிப்படுவதற்கே. அதுபோலவே, சமூகத்தில் உயர்ந்து நிற்பவர்களைப் பார்த்து வரும் கேலிச்சொற்களும் இழிவுரைகளும், அவர்களின் மதிப்பைக் குறைப்பதற்கல்ல; விமர்சிப்பவர்களின் பொறாமை, தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றின் வெளிப்பாடாகவே இருக்கின்றன.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், இந்த உண்மை எங்கும் ஒலிக்கிறது. மகாத்மா காந்தி சத்தியாகிரகத்தைத் தொடங்கியபோது, பலர் அவரை “பலவீனர்”, “கனவு காண்பவர்” என்று இழிவுசெய்தனர். ஆனால் காலம் யாரை உயர்த்தியது? குரைத்த நாவுகள் மறைந்தன; அமைதியாக நடந்த பாதை உலகையே திருப்பியது. அதுபோலவே, திருவள்ளுவரின் குறள்கள் உருவான காலத்தில் அவர் பெரிதாகப் பேசப்படவில்லை; இன்று ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டியும் அவர் சொல்லிய சொற்கள் உலகம் முழுவதும் ஒலிக்கின்றன. குரைத்தவர்கள் யார் என்பதே வரலாற்றில் இல்லை.

இலக்கியமும் இதையே நமக்குக் கற்றுத்தருகிறது. கடலில் பயணிக்கும் பெரும் கப்பல்களைச் சிறு அலைகள் தடுக்க முடியாது. அவை கப்பலின் பயணத்தை அல்ல, அலைகளின் பலவீனத்தையே காட்டுகின்றன. மலை உச்சியில் எரியும் தீபத்தைப் பார்த்து பள்ளத்தாக்கில் இருக்கும் பூச்சி சத்தமிட்டால், தீபத்தின் ஒளி குறையுமா? இல்லை. அந்தச் சத்தம் பள்ளத்தாக்கிலேயே கரைந்துவிடும். உயர்வு என்றால் அமைதியும், நிலைத்தன்மையும்; இழிவு என்றால் ஆரவாரமும், தற்காலிகத்தன்மையும். இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் இந்த நாய் குரைப்பதைப் போலவே செயல்படுகின்றன.

மேலும் படிக்க ...

கலாமோகன் தோற்கும் இடங்கள் - கலாமோகன் படைப்புக்கள் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும்! (பகுதி 1) - வாசன் (ஐக்கிய இராச்சியம்) -

விவரங்கள்
- வாசன் (ஐக்கிய இராச்சியம்) -
இலக்கியம்
19 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[கலாமோகன் புகலிடத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை, குட்டிக்கதை, , நாடகம், மொழிபெயர்ப்பு என இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்து பட்டது. பிரெஞ்சு மொழியில் புலமை மிக்கவர். பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புகளைச் செய்தவர். கே.எல்.நேசமித்திரன், ஜெயந்தீசன் என்னும் புனைபெயர்களிலும் 'தாயகம் (கனடா) ' சஞ்சிகையில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. எக்ஸில் சஞ்சிகையில் இவரது சிறுகதைகள் பல வெளியாகியுள்ளன. இவரது படைப்புகளைப் பற்றிய எழுத்தாளர் வாசனின் கட்டுரையின் முதற் பகுதியிது. - பதிவுகள் -]


கலாமோகன் ஈழ-புகலிட இலக்கியத் தளத்தில் மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக இயங்கி வரும் ஒரு படைப்பாளி. கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு என்று பல்வேறு தளங்களிலும் பயணிப்பவர். இதுவரை எமது பார்வைக்கு 'நிஷ்டை' என்ற சிறுகதைத் தொகுப்பும் 'ஜெயந்தீசன் கதைகள்' என்ற குறுங்கதைகளின் தொகுப்பும் 'வீடும் வீதியும்' என்ற நாடக நூலும் மட்டுமே கிட்டியுள்ளன. இதனைத் தவிர வேறு ஏதாவது வெளி வந்துள்ளனவா என்று எமக்குத் தெரியவில்லை. அவ்வப்போது இணையத் தளங்களில் இவரது கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பும் கிட்டியிருந்தது. தொடர்ந்தும் பல இதழ்களிலும் இவர் தொடர்ச்சியாக எழுதி வருவதினையும் அவதானிக்க முடிகின்றது. தற்போது பிரான்சில் வசித்து வருகின்ற இவர் மொழிபெயர்ப்புச் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருவதாக எம்மால் அறிய முடிகின்றது. இப்படியாக இவர் தொடர்ச்சியாக எமது சூழலில் இயங்கி வருகின்ற போதிலும் நவீன தமிழ் இலக்கியத் தடத்தில் இவரது இடம் எதுவென நிர்ணயிப்பதில் எமக்கு இன்னமும் பல இடர்ப்பாடுகள் உண்டு. இவரது படைப்புக்கள் குறித்தும் எம்மிடையே பல நேர்மறையான எதிர்மறையான பார்வைகள் உண்டு.

மேலும் படிக்க ...

இருளை விரட்டும் ஒளிப்பொட்டுகள்: மு. அநாதரட்சகனின் "படைப்பியல் நோக்கில் பார்வையும் விமர்சனமும்" என்ற நூல் குறித்த பார்வை! - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
நூல் அறிமுகம்
17 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அநாதரட்சகன் தனது முற்போக்குச் சிந்தனையுடைய எழுத்துக்களால் நன்கு அறியப்பட்ட ஈழப்படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றை நூல்களாகத் தந்துள்ளார். இத்தொகுதியில் ஈழத்தில் இருந்து வெளிவந்த புனைவுகளிலிருந்து தனது கருத்தியலுக்கு மிக நெருக்கமாக வரக்கூடியவற்றையும் தேவையின் பொருட்டு எழுதியவற்றையும் தொகுப்பாக்கியிருக்கிறார்.

மக்கள் எழுத்தாளர் கே. டானியலில் இருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கின்ற சிவ ஆரூரன் வரை அவர்களின் படைப்புகள் குறித்த பார்வையை முன்வைத்திருக்கிறார். ஒவ்வொரு படைப்புகளிலும் தனது வாசிப்பனுபவத்தைச் சீர்தூக்கிப் பார்ப்பதோடு சமூக முன்னேற்றங் கருதியவற்றையும் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். படைப்புகளின் காலம், அவற்றின் உள்ளடக்கம், அவற்றின் சமூகப்பெறுமதி ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுவதோடல்லாமல் எதிர்காலத்தில் நிவர்த்திக்கவேண்டியவற்றையும் குறித்துரைக்கின்றார்.

இந்நூலில் அகில், மொழிவரதன், ஷெல்லிதாசன், க.நவம், க. சின்னராஜன், கே.ஆர் டேவிட், இ. இராஜேஸ்கண்ணன், மு. சிவலிங்கம், சிவ. ஆரூரன், மூதூர் மொகமட் ராபி, மலைமகள், நெல்லை க. பேரன், ச. முருகானந்தன் ஆகியோரின் சிறுகதைத் தொகுப்புகள் பற்றியும்; கே.டானியல், கோகிலா மகேந்திரன், எஸ். புஸ்பராஜன், நந்தி, ஐ. சாந்தன் ஆகியோரின் நாவல்கள் பற்றியும் எழுதப்பட்டுள்ளன.

சிறுகதைத்தொகுதிகள் பற்றிக் குறிப்பிடுகின்றபோது ஒரு சிறுகதையின் வெற்றி என்பது வாசக மனதில் நுட்பமான அதிர்வுகளை எழுப்பி அதன் அனுபவங்களை எல்லையற்று விரித்துச் செல்வது என்ற பொதுவான கருத்துக்கு ஏற்ப படைப்பாளிகளின் கதைத் தொகுதிகளில் தான் கண்டுகொண்ட நல்ல கதைகளைச் சுட்டிக் காட்டுவதோடு அவற்றின் இலக்கியப் பெறுமானங் குறித்தும் உரைத்துள்ளார்.

மேலும் படிக்க ...

சமகால இலங்கையின் கட்டட, நகர வடிவமைப்புக் கலையின் சிறந்ததோர் எடுத்துக்காட்டு மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையம் ( Makumbura Multimodal Transport Hub (MMC) - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
17 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நகர வடிவமைப்பில் முக்கியமானதோர் அம்சம் போக்குவரத்தால் திணறிக்கொண்டிருக்கும் பெரு நகரங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகும். அந்த வகையில்  Kottawa நகரில் அமைந்துள்ள  மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையம் ( Makumbura Multimodal Transport Hub (MMC) முக்கியமானதொரு சாதனை. இவ்வகையில் மேனாடுகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகக் கையாளப்படும் செயற்பாடுகளையெல்லாம் உள்வாங்கி (உதாரணத்துக்கு Park and Ride) , இலங்கையின் காலநிலைக்கேற்ப, மக்களின் பாவனையை மனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிறந்ததொரு கட்டடமாக இதனைக் கருதலாம். இதனை வடிவமைத்த  கட்டடக்கலை நிறுவனம் கட்டடக்கலைஞர் முடித ஜெயக்கொடியின் 'Muditha Jayakody Associates (MJA)' நிறுவனமாகும். 

ஶ்ரீலங்காவின் சமகாலக்கட்டடக்கலையில் முக்கியமானதொரு கட்டடமாக  மாகும்பர பல்திறன் போக்குவரத்து மையத்தை கட்டடக்கலைத் திறனாய்வாளார்கள் கருதுவர்.  MMC இன் வடிவமைப்பு  இயற்கையான ஒளி, காற்றோட்டம் மற்றும் சுற்றுச்சூழலுடனான  ஒருங்கிணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.  இது வெப்பமண்டல நவீனத்துவக் கட்டடக்கலைக் கோட்பாட்டினைப் பிரதிபலிப்பது. அவ்வகையில் MMC சமகால வெப்பமண்டலக் கட்டடக்கலைக்கு நல்லதோர் உதாரணமாக அமையும் கட்டடம். அத்துடன் முடித ஜெயக்கொடி கட்டடக்கலை நிறுவனத்தின், சமகாலக் கட்டட்டக்கலைக்கான  முக்கியமானதொரு பங்களிப்பாகவும் கருதப்படும்.

மேலும் படிக்க ...

இலங்கையின் முன்னோடிப் பெண் நிலவடிவமைப்புக் கலைஞர் ஹெஸ்டர் பஸ்நாயக்கவும் அவரது நிலவடிவமைப்புகலை (Landscaoe Architecture) பற்றிய சிந்தனைகளும்! - வ.ந.கிரிதரன்

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
17 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டடக்கலை பற்றி அறிந்த அளவு பொதுவாக நிலவடிமைப்புக் கலை (Landscaoe Architecture)  பற்றிப் பலர் அறிந்திருப்பதில்லை. உண்மையில் கட்டடக்கலை, நகர அமைப்புக் கலையுடன் பின்னிப் பிணைந்த இன்னுமொரு கலைதான் நிலவடிவமைப்புக் கலை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் சரித்திரச் சின்னங்கள் நிலவடிவமைப்புக் கலை எவ்வளவுதூரம் நகர அமைப்பில் முக்கிய இடத்தை வகித்தது என்பதை  உணர்த்தும் சான்றுகள். உதாரணத்துக்குச் சிகிரியா நகர அமைப்பில் நிலவடிவமைப்புக் கலையின் பங்களிப்பு வெளிப்படை. இது போல் பழமை வாய்ந்த விகாரைகள், அரச முக்கியத்துவம் மிக்க கட்டடங்கள், ஆலயங்கள் இவற்றிலெல்லாம் நிலவடிவமைப்புக் கலையின் தாக்கத்தைக் காணலாம். இன்று இத்துறை ஒரு பட்டப்படிப்பாக மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கபப்ட்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் நிலவடிவமைப்புக் கலையில் முன்னோடிகளில்  ஒருவரான திருமதி ஹெஸ்ட்ர பஸ்நாயக்க பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்வதே  இப்பதிவின் நோக்கம். 

மேலும் படிக்க ...

மனோ கணேசனின் 'குடியேற்றத்திட்டமும்' , 'துருவப்படுத்தும் அரசியலும்' பற்றிய நோக்கு! - எல். ஜோதிகுமார் -

விவரங்கள்
- எல். ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
16 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மையில், எமது மனோ கணேசன் அவர்கள், மலையக மக்களுக்கென ஒரு தீர்வு திட்டத்தை முன் வைத்திருந்தார்: “காணி வழங்கப்படாவிடின், மலையக மக்கள், வட-கிழக்கில் குடியேறுவது சிறந்தது”.

நடந்து முடிந்த இயற்கை சீற்றத்தை அடுத்து அன்னாரால் முன்வைக்கப்பட்டுள்ள இத்திட்டம் பலருக்கும் அதிர்ச்சியை உண்டுப் பண்ண கூடியதுதான். “புலம் பெயர் நண்பர்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை செயல்படுத்த, அவர் உத்தேசிருப்பதாயும் தெரிவித்துள்ளார்” (சூரியன் செய்தி சேவை: 09.12.2025).

இதனை ஆதரித்து, திரு.சுமந்திரன் அவர்களும் அறிக்கை விட்டிருப்பதாய் தெரிகின்றது. (தமிழ்வின்: 11.12.2025). இது, அண்மைக்காலமாய் வீசத் தொடங்கியுள்ள ஜேவிபியின் அலைகளில், வட-கிழக்கின் தேசியம் அள்ளுண்டு போகாமல் இருக்க தெரிவிக்கப்படும் ஒரு கூற்றாகவும் இருக்கலாம்.

இருப்பினும், இன்று உண்மையாகவே வற்ற தொடங்கிவிட்ட வடக்கின் ஜனத்தொகையை, இப்படி குடியேற்றுவதன் மூலம் பெருபிக்கும் செயல்திட்டமும் இதில், அடங்குவதாகவும் இருக்கலாம். ஆனால், மனோ கணேசனின் அறிக்கையில், இத்தகைய சமூக நலன்கள் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளனவா என்பது கேள்வியாகின்றது. காரணம், அன்னார் அவர்களின் கடந்த கால நிலைப்பாடுகள், பல சந்தர்ப்பங்களில் மிக மோசமான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளதை நாம் கண்ணார கண்டிருக்கின்றோம். (சென்ற கட்டுரையில் கூட, அன்னார் அவர்கள், மரண ஊசி விசாரணை என, ஐயா விக்னேஸவரன் அவர்களுடன், அமெரிக்க படையினருடன் இணைந்தபடி, விமானம் மூலமாக, வடக்குக்கு விரைந்து சென்றது தொடர்பில் சுட்டி காட்டியிருந்தோம்).

மேலும் படிக்க ...

புகலிடச் சிறுகதை: மான் ஹோல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
சிறுகதை
14 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


- இச்சிறுகதை முதலில் தேடல் (கனடா) சஞ்சிகையில் வெளியானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மற்றும் மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளியான 'அமெரிக்கா'த் தொகுப்பிலும் இச்சிறுகதை பிரசுரமாகியுள்ளது. -


ஜெயகாந்தனின் ரிஷிமூலத்தில் வரும் ராஜாராமனைப் போல்தாடி மீசை வளர்த்திருந்தான். கால்களில் ஒன்றினைச் சப்பணமிட்ட நிலையிலும் மற்றதை உயர்த்தி மடக்கி முழங்காலினை வலது கையினால் பற்றியிருந்தான். இடதுகையை பின்புறமாக நிலத்தில் ஊன்றியிருந்தான். முடிநீண்டு வளர்ந்து கிடந்தது, வாயினில் பாதித்துண்டு சிகரட் புகைந்த படியிருந்தது. கண்களில் மட்டும் ஒரு விதமான ஒளி வீச்சு விரவிக் கிடந்தது. மான் தோலில் அமர்ந்திருக்கும் சாமியாரைப் போல மான் ஹோலின் மேல் அமர்ந்திருந்தவனின் தோற்றமிருந்தது. இவன் நடைபாதை நாயகர்களிலொருவனென்றால் நான் ஒரு நடைபாதை வியாபாரி. "கொட் டோக்" (Hot Dog) விற்பது என் தொழில். வடக்கில்'தொலைவில் ஒண்டாரியோ பாராளுமன்றக் கட்டடம் தெரிந்தது. எமக்குப் பின்புறமாக புகழ்பெற்ற குழந்தைகளிற்கான வைத்தியநிலையம், 'சிக்கிட்ஸ்'ஹாஸ்பிடல் அமைந்து கிடந்தது சிறிது நேரம் சாமியார் ஒண்டாரியோ பாராளுமன்றத்தையே பார்த்தபடியிருந்தான். பிறகு சிரித்தான். 'ஏன் சிரிக்கிறாய்' என்றேன்.

'பார்த்தாயா காலத்தின் கூத்தை. '

'காலத்தின் கூத்தா...'

'காலத்தின் கூத்தில்லாமல் வேறென்ன'

சிறிது நேரம் ஆகாயத்தைப் பார்த்தான், அதில் முழுமதியை ரசித்தான்.

நேரத்துடனேயே இருட்டத் தொடங்கிவிட்டது. இன்னமும் மாநகரத்தின் பரபரப்பு குறையவில்லை. ஆளுக்கு ஆள் அரக்கப் பரக்க நடந்துகொண்டிருந்தார்கள். இதற்கிடையில், எனக்கும் ஒரு சில 'கஸ்டமர்'கள் வந்தார்கள். எனது வாடிக்கையாளர்களில் ஒருவனான நைஜீரியா டாக்ஸி டிரைவர் டாக்ஸியை வீதியோரம்நிறுத்திவிட்டு வந்தான்.

மேலும் படிக்க ...

சிறுகதை: யாதுமானவள்! - ஶ்ரீரஞ்சனி -

விவரங்கள்
- ஶ்ரீரஞ்சனி -
சிறுகதை
14 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

இதுதான் நான் தனித்துச் செல்லும் முதல் பயணம். விமானத்தின் பின்பகுதியில்தான் என் இருக்கை இருந்தது. சூட்கேசை என்னுடன் இழுத்துக்கொண்டு சென்ற நான் என் இருக்கையில் கைப்பையை வைத்துவிட்டு, சூட்கேசை மேல் இறாக்கையில் வைப்பதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். எட்டக்கூடிய உயரத்தில் அது இல்லையே என எனக்குக் கவலையாக இருந்தது. என் இருக்கையின் பக்கத்தில் இருந்த இளம் பெண் எழுந்து, உதவிவேண்டுமா என ஆங்கிலத்தில் கேட்டபடி உதவிசெய்ய முன்வந்தா. கேட்காமலேயே உதவிசெய்ய முன்வந்த அவவுக்கு வாயாராவும் மனதாரவும் நன்றிகூறியபடி ஆசுவாசத்துடன் அமர்ந்துகொண்டேன்.

சற்றுநேரத்தில், “நீங்க சுவிற்சிலாந்திலா இருக்கிறீங்க?” என அவவிடம் கேட்டேன்.

“ஓம், ஒரு medical conferenceக்காக ரொறன்ரோவுக்கு வந்தனான். நீங்க இங்கையா இருக்கிறீங்க?” அவவும் பேச்சைத் தொடர்ந்தா.


“ஓ, ரொறன்ரோ உங்களுக்குப் பிடிச்சிருந்ததா? 20 வருஷமா நான் இங்கைதான் இருக்கிறன். ஆனா, என்ர சொந்த நாடு, இலங்கை. அங்கை எனக்குப் படிப்பிச்ச ஒரு ரீச்சரின்ர 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக உங்கட நாட்டுக்கு வாறன்.”

“ரொறன்ரோவுக்கு ஒரு wow சொல்லலாமெண்டால், உங்களுக்கு மிகப் பெரிய wow சொல்லலாம். ஆசிரியர்களுடனான உறவை அவ்வளவு தூரத்துக்கு நீங்க பேணுவீங்களா?” முகத்தில் விழுந்த சுருட்டை மயிரைக் காதோரம் ஒதுக்கியவாறு புருவங்களை உயர்த்தினா அவ.

“மிசிஸ் பரம் வித்தியாசமான ஒரு ரீச்சர். அவ என்ர அபிமானத்துக்குரிய ரீச்சர் மட்டுமில்ல, அவ எனக்கொரு role model.”

“ஓ!”

“சின்ன வயசில இலங்கையின்ர தலைநகரான கொழும்பிலதான் நாங்க இருந்தனாங்க. அங்கை அப்பா ஒரு புடவைக் கடை வைச்சிருந்தவர். 77ம் ஆண்டு நடந்ததொரு கலவரத்தில அவர் கொலைசெய்யப்பட்டிட்டார். அதாலை பிறகு நாங்க யாழ்ப்பாணத்துக்குப் போகவேண்டியிருந்தது. அப்ப நான் ஏழாம் வகுப்பு....”

மேலும் படிக்க ...

பண்டையத் தமிழர் வாணிகத்தில் பூம்புகார்! - முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317 -

விவரங்கள்
- முனைவர் பீ. பெரியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக் கல்லூரி, ஆரணி, திருவண்ணாமலை- 632317 -
ஆய்வு
13 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ORCID - https://orcid.org/0000-0002-7395-9699

ஆய்வுச் சுருக்கம்

பூம்புகார் என்பது காவிரிப்பூம்பட்டினத்தின் மற்றொரு பெயர். இது சிறந்த வாணிகத் தலமாகவும், துறைமுகமாகவும் பண்டைய காலத்தில் விளங்கியுள்ளது. இத்துறைமுகத்தின் வழியே நாட்டின் பலபகுதிகளுக்கும் சென்று உள்நாட்டு வாணிகத்தில் வாணிகர்கள் ஈடுபட்டனர். அதுமட்டுமன்றி சீனா, இலங்கை, சாவகம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றும் வணிகம் செய்துள்ளனர். அதுமட்டுமன்றி அவர்கள் இத்துறைமுகப் பட்டினத்திற்கு வந்து தங்கியும் வாணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு பாய்மரக்கலங்களும், கப்பல்களும் பொருட்களை ஏற்றி வந்தவண்ணம் இருந்துள்ளன. அதுமட்டுமன்றி இந்நகரில் சிறந்த வாணிகர்களுக்கு எட்டி முதலான பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறான சிறப்புகளை உடையதாக விளங்கிய பூம்புகார் காப்பிய காலத்தில் கடல்சீற்றத்தால் அழிவுக்குள்ளானது. அதன் விளைவால் இன்று சிறிய கிராமமாக திகழ்கின்றது என்பதை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.

முக்கியச்சொற்கள்

வாணிகம், பூம்புகார், உள்நாட்டு வாணிகம், வெளிநாட்டு வாணிகம், காவிரிபூம்பட்டினம், துறைமுகம், கடல்வாணிகம்

முன்னுரை

பண்டைய தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்களின் கடற்கரை பட்டினமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம் எனும் பூம்புகார். இந்நகரில் பல்வேறு வாணிகங்கள் சிறப்பாக நடந்துள்ளன. அதிலும் குறிப்பாக பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்களும் இந்த பட்டினத்திற்கு வந்து தங்கி வாணிகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது. அதனை விரிவான இக்கட்டுரை ஆராய்கின்றது.

மேலும் படிக்க ...

தாத்தாவின் உலகம்! - கவிஞர் சாய்சக்தி சர்வி -

விவரங்கள்
- கவிஞர் சாய்சக்தி சர்வி -
கவிதை
13 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



அலமாரியில் ஓரமாக வைக்கப்பட்டிருந்த மூக்கு கண்ணாடியில்  

திட்டு திட்டாகப் படிந்திருந்தன 
ஞாபக மறதிகள்

இரவில் தவிர்த்த மாத்திரைகளாகவும் 
மளிகை கடையில் தவறவிட்ட பாக்கிகளாகவும் 
மேஜையில் விட்டுச்சென்ற சாவிகளாகவும் ஆங்காங்கே படிந்திருக்க
கோடுகளாகத் தென்பட்ட நிராகரிப்புகளுக்கும் மறதிகளுக்கும் இடையே

தெரிந்த பார்வையில் 
சுழன்று கொண்டிருந்தது 

தாத்தாவின் உலகம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

[டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banada) உதவி : VNG]

ஈழக்கவி கவிதைகள்: புலம்பெயர்வு!

விவரங்கள்
- ஈழக்கவி -
கவிதை
13 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



பாகம் 1: அடையாள இழப்பு

நான் இருந்த நாடு ஒரு புகைப்படமாக மட்டும் உள்ளது,
தலைகீழாக பிணையத்தில் மிதந்துவந்தது,
அதனுள் என் பாட்டியின் சீராடை,
ஒரு விழா மேடையில் மறைந்து போன என் நாமம்.
இப்போது என் பெயர் ஒத்த ஒலி,
புதுமொழிகளில் பிறரால் தவறாக உச்சரிக்கப்படும் நினைவுச்சின்னம்.

பாகம் 2: தொழிலின் வேதனை

இங்கே என் கை தொழிலாளியின் கை,
ஆனால் என் கனவுகள் கத்திக்கும் குரல்கள்.
சுத்திகரிக்க வேண்டிய வாடை,
பொதுமுடிச்சுகளுள் சிக்கிக்கொண்ட வரிகளாக.
அந்த நாடு எனக்கு வீடு தரவில்லை,
ஆனால் அந்த அறை எனக்கு அடிமைத்தனம் தந்தது.

மேலும் படிக்க ...

நெஞ்சைத்தொட்ட ஒரு பயண அனுபவம்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
12 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


படைப்பிலக்கியவாதி ஒருவர் எழுதும் பயண அனுபவங்களுக்கும், சாதாரணமான ஒருவர் எழுதும் பயண அனுபவங்களுக்குமிடையில் அதிக வித்தியாசம் இருக்கும். படைப்பிலக்கியவாதி எழுதும் அனுபவங்களில் இலக்கியச் சுவை இருக்கும். உணர்வுகளின் வெளிப்பாடு இருக்கும். அதனால் அவை இலக்கியத் தரம் மிக்கதாக அமைந்து விடுகின்றன. 

உதாரணத்துக்கு எழுத்தாளர் நடேசன் எழுதும் பயண அனுபவங்களைக் குறிப்பிடலாம். தற்போது  பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ள அவரது இந்தியப் பயணத்தொடரில் இம்முறை மத்திய பிரதேசத்திலுள்ள  பீம்பேத்கா (Rock Shelters of Bhimbetka) குகை ஓவியங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். ஆதி மனிதர்களால் பல்வேறு காலகட்டங்களில் வரையப்பட்ட ஓவியங்களை உள்ளடக்கிய குகைகள். 

இவ்வோவியங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவருக்கு ஆதி மனிதர்களின் அக்குகை ஓவியங்களைப் பார்ப்பதில் அவ்வளவு ஆர்வமில்லை. இஷ்ட்டமில்லை. ஆனாலும் மனைவிக்கு விருப்பமென்பதால் அவர் அவர் பின்னால் அவர் போன இடமெல்லாம் பின் தொடர்ந்து செல்கின்றார்.  அவ்விதம் செல்லும் அவரது அந்த நிலை அவருக்குச் சங்கப்பாடலொன்றின் வரிகளை நினைவூட்டுகின்றன.  

மேலும் படிக்க ...

இந்தியப் பயணத்தொடர்: ஆதிமனிதர்கள் குகைகள் – பீம்பேத்கா (Rock Shelters of Bhimbetka)! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
12 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மத்தியப் பிரதேசத்திற்கு போனால் பீம்பேத்கா (Bhimbetka) என்ற இடத்தை கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று நண்பர் கூறியபோது, அதன் முக்கியத்துவம் எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. என் பயண முகவர் கூட அதை முதலில் குறிப்பிடவில்லை. ஆனால் இறுதிநேரத்தில் கேட்டபோது, "நிச்சயமாக ஏற்பாடு செய்கிறோம்" என்றார்.

போபாலிலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில், விந்திய மலைத்தொடரின் தெற்கு பகுதியில், காடு சூழ்ந்த 15 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்த குகைகள் அமைந்துள்ளன.

என்ன விசேஷம்?

இந்தியாவில் கற்காலம், இடைக்காலம், பிற்காலம் என மனிதன் வாழ்ந்த பல்வேறு சமூகங்களின் ஆதாரங்கள் ஒரே இடத்தில் காணப்படும் அற்புதமான சான்றுகள்தான் இங்கு உள்ள குகை ஓவியங்கள். "பீமனின் ஓய்விடம்" அல்லது "பீமனது குன்று" என்ற பெயருடன் தொடர்புபடுத்தி அழைக்கப்படுகிறது.

உள்ளூர் மக்கள் இதனை மகாபாரதத்தின் பீமன் வாழ்ந்த இடமாக நம்பினாலும், இன்று இதன் வரலாற்றுப் பெருமைக்காக யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது.

எனது அனுபவம்

நாங்கள் சென்ற நாள் வெப்பம் 40 செ. அடித்தது. மத்தியப் பிரதேசத்தின் வழியாக கடகரேகை (Tropic of Cancer) செல்கிறதால், கோடைகால வெயில் நேரடியாகத் தலையில் தாக்குகிறது. அங்கு நான் சுமார் பத்து குகைகளைப் பார்த்தேன்.

மேலும் படிக்க ...

இலக்கியமும் விமர்சனமும்! - எஸ் அகஸதியர் -

விவரங்கள்
- எஸ் அகஸதியர் -
இலக்கியம்
12 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

-  எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம்  "இலங்கையின் பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ்.அகஸ்தியர்  எம்மை விட்டுப் பிரிந்த நினைவு தினம்  டிசம்பர் 8.  அவர் எழுதிய இக்கட்டுரை வாசகர்களுக்கு பயனளிக்கும் " என்று குறிப்பிட்டு,  எமக்குத் தம் தந்தையாரின் நினைவு தினத்தையொட்டி அனுப்பி வைத்த அமரர் அகஸ்தியரின் கட்டுரையிது. -


    சமூகவியற் படைப்பாளிகளும், விமர்சகர்களும், வாசகர்களும் எதிர்பார்த்தவாறு தமிழ் இலக்கியம் பற்றி ஐரோப்பாவிலும் தற்போது பேசப்படுவதற்கு இங்கு வெளிவரும் மாத, முத்திங்கள், வார இரு வாரப் பத்திரிகை சஞ்சிகைகள், சிறு நூல் வெளியீட்டுப் பதிப்பகங்கள், ஆண்டு மலர்கள், கலை இலக்கிய நிகழ்வுகள், நூல் விற்பனை நிலையங்கள் காரணமாக அமைந்தமை மனங் கொள்ளத்தக்கது. ‘ஐரோப்பாவில் தமிழ் இலக்கியம்’ என்ற கட்டுரையில் விரிவாக எழுதியதால் இதில் அவற்றைத் தவர்த்துள்ளேன்.

    ‘நடை பயில முன் படைப்புகள் பற்றி விமர்சனம் செய்வது இளம் படைப்பாளிகளைச் சோர்வடையச் செய்துவிடும்’ என்று சொல்லப்படுகிறது. இப்படிச் சொல்வதே படைப்பாளிகளை அவமதிப்பதாகும். படைப்பாளி மட்டுமன்றி, வாசகனும், விமர்சனத்திற்குள்ளாக்கப்படும் ஆரம்பப் படைப்பாளியும் இதனால் சிறந்த படைப்பாளர்களாகத் திகழ முடியும். படைப்பாளி படைப்புகள் பற்றி ஏதோ ஒரு வகையிலேனும் தன்னையே விமர்சிப்பதாலும் விமர்சிக்கப்படுவதாலும் படைப்புகள் பட்டை தீட்டப்படும் தங்கம் போலாகின்றன. எனவே, விமர்சனத்தைக் கண்டு, எந்தப்  படைப்பாளனும் தன் பேனாவைக் கீழே போடக்கூடாது. மனச்சோர்வு அடையவும் கூடாது. எனெனில், நேர்மையாக விமர்சிக்கின்றவன்தான் படைப்பாளியின் உண்மையான இலக்கிய நண்பனாகத் திகழ்கின்றான்.   உதாரணத்திற்கு  ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடல் பொருத்தம் என்று கருதுகின்றேன்.

மேலும் படிக்க ...

சூழலை மீறிய பெருங்கவிஞன் , விடுதலைக் கவிஞன் பாரதி! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
இலக்கியம்
11 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



டிசம்பர் 11, மகாகவி பாரதியாரின் பிறந்ததின நினைவு தினம்! 

"மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்.' - பாரதியார் -

என்னைக் கவர்ந்த, பாதித்த மகாகவிஞர் பாரதியார். தன் குறுகிய இருப்பில் இவர் சாதித்தவை அதிகம். ஆச்சரியமூட்டுபவை. தன் இருப்பைப்பற்றி, தன் பிறந்த மண்ணைப் பற்றி, தன் நாட்டைப்பற்றி,  தான் வாழ்ந்த சமுதாயச் சூழல் பற்றி, அதன் சீர்கேடுகள் பற்றி, பெண் விடுதலை பற்றி, தேசிய, வர்க்க, சமூக விடுதலை பற்றி, மானுட விடுதலை பற்றி, மார்க்சிய அரசியல் தத்துவங்கள் பற்றியென்று இவர் சிந்திக்காத விடயமெதுவுமில்லை. 

மேலும் படிக்க ...

எழுத்தாளர் சுகுணா திவாகரின் , எழுத்தாளர் இரா முருகவேளின் 'நக்சல்பாரி' நூல் பற்றிய முகநூற் குறிப்பு!

விவரங்கள்
- சுகுணா திவாகர் -
நூல் அறிமுகம்
11 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் இரா முருகவேளின் 'நக்சல்பாரி' இயக்கத்தைப்பற்றிய 'நக்சல்பாரி' நூல் பற்றிய நல்லதோர் அறிமுகத்தைத் தருகின்றது எழுத்தாளர் சுகுணா திவாகரின் இந்த முகநூற் பதிவு.  நக்சல்பாரி இயக்கத்தை  முன்னெடுத்தவர் சாரு மஜூம்தார் . நக்சல்பாரி என்பது மேற்கு வங்கக் கிராமம் ஒன்றின் பெயர். இப்பதிவை முழுமையாகக் கீழே தந்துள்ளோம் -


சுகுணா திவாகர் எழுதிய முகநூற் பதிவு:

2022ல் ஆனந்த விகடனில் சாரு மஜூம்தாரைப் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதினேன். சாரு கொல்லப்பட்ட 50வது ஆண்டு அது. மார்க்சிய-லெனினிய இயக்கத்தில் இருந்த, இருக்கும் பல தோழர்களுக்கு சாரு மஜும்தார் பற்றிய கட்டுரை ஆனந்த விகடன் போன்ற ஒரு வெகுஜன இதழில், அதுவும் நான்கு பக்கங்களுக்கு வெளியானது ஓர் இன்ப அதிர்ச்சி. பலரும் நெகிழ்ச்சியுடன் தொடர்புகொண்டு பாராட்டினர்.

மேலும் படிக்க ...

இளைஞர் குழுக்களும், வன்முறையும் தொலையப்போகும் எதிர்காலமும்! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
அரசியல்
10 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் குழுக்களின் வன்முறை பற்றிய செய்திகள் அதிகமாக ஊடகங்களில் வெளியாகின்றன.  இதை  ஒரு சமூக விரோதப்பிரச்னையாகக் கருதாமல் , சமூகப் பிரச்சனையாகக் கருத வேண்டும். இளைஞர் குழுக்களின் அட்டகாசம் என்பது மேற்கு நாடுகளின் பெரு நகரங்களில் காணப்படும் ஒன்று. இலங்கையில் முன்பும் சண்டியர்கள் இருந்தார்கள்.  ஆனால் அப்போது சண்டியர்கள் பொதுவாக ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து உருவானார்கள், சில சமயங்களில் ஆதிக்க சமூகங்களிலிருந்தும் உருவானார்கள்.  ஒடுக்கும் சமுதாயத்தினரின் கையாட்களாகப் பயன்படுத்தப்பட்டார்கள். ஒடுக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குள் முட்டி மோதிக்கொள்கையில் இக்கையாட்களைத் தம் சார்பில் பயன்படுத்திக்கொள்வார்கள்.

தற்போது இளைஞர்கள் குழுக்கள் அக்காலச் சண்டியர்களின் இடத்தைப் பிடித்துள்ளன.  இவர்ககள் ப்லவேறு சமூகப் பிரிவுகளிலிலிருந்தும் குழுக்களாக ஒன்றிணைபவர்கள். இவர்களை அரசியல்வாதிகள் , மேல் தட்டு வர்க்கத்தினர், புகலிடப் புதுப் பணக்காரர் எனப் பலரும் பயன்படுத்திக்கொள்கின்றார்கள்.

மேலும் படிக்க ...

சமூகத்தினை அலசிய மையங்கள்! எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் கதைகள் நூலை முன்வைத்து ஓர் ஆய்வு! - முத்தழகு கவியரசன் -

விவரங்கள்
- முத்தழகு கவியரசன் -
ஆய்வு
10 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மூகம் - சமுதாயம் என்ற இருநிலையை நாம் முதலில் புரிந்துகொள்ளுதல் அவசியம். ஒரு குறிப்பிட்ட இனக்குழுவில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள் எனத் தனிப்பண்பாட்டு அடையாளங்களின் நிலைப்பாடுகளை முன்நிறுத்துவதால், அவர்கள் ஒரு சமுதாயத்திற்கு உட்பட்ட மக்களாக மாறுகிறார்கள். ஒவ்வொரு சமுதாயத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் முறைகள் அவர்களின் பண்பாட்டுக் கூறுகளுக்கு ஏற்றார்போல் மாற்றமடைந்தும் காணப்படுகின்றது. ஆனால் சமூகம் என்பது இச்சமுதாயத்தை எல்லாம் உள்ளடக்கிக் கொள்வது. சமுதாயத்தில் ஏற்படக்கூடிய கலவரங்கள் அவை வெளியுலகிற்கு வரும்போது சமூகத்தின் நீட்சியாக உருவெடுக்கிறது. இந்நீட்சி எல்லைகளற்ற தீர்வாகவும், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளான சுவர், நசுக்கம், எதிர்ப்பதியம் போன்ற கதைகளிலிருக்கக்கூடிய சமூகச்சூழல் எவற்றை நோக்கி பயணிக்கிறது. அப்பயணிப்பில் மக்களின் பங்களிப்பு எவ்வகையில் உலவுகின்றது – அதற்கானக் காரணங்களும், சமூக மாற்றம் யாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற முனைப்பில் இக்கட்டுரை முன்னெடுக்கப் பட்டிருக்கிறது.

மேலும் படிக்க ...

சிறுகதை: நீர்க்குழி! - டீன் கபூர் -

விவரங்கள்
- டீன் கபூர் -
சிறுகதை
10 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பனித்துளி மேலிருந்த பசுமையான இலைக்கண் மீது பட்டு விழுந்த நீர்க்குழி, அசைவின்றி சில கசிவுகளுடன் நின்றது. அது போலத்தான் றஹீமின் உள்ளமும். அவன் மனசு எப்போதும் கேட்கும் ஒரு கேள்வி: "இந்த வாழ்க்கை நம்மிடம் என்ன கேட்கிறது?"

பள்ளத்தாக்கில் பெருகும் சின்னஞ்சிறு நதி வழியாக, இரவு மெல்ல முந்தைய இருளிலிருந்து விடியும் பொழுது காலத்தை நோக்கி நகர்ந்தது. அவன் மௌனத்தைத் தவிர்க்க முடியவில்லை. ஏற்கனவே பழைய நினைவுகளின் ஜாலம் அவனை பிழிந்து, கண்ணீர் போல மனசில் சின்னஞ்சிறு நிழல் கொண்ட ஒற்றைக் குழியாக மாறியது.

நீர்க்குழி போல இருந்த அவனுடைய எண்ணங்கள், ஒவ்வொரு தடவையும் மெல்ல நகர்ந்து நீரோட்டத்தில் கரைந்தது போல சிதறின. "சில விஷயங்கள் முழுமையாக புரியவில்லை" என்று நினைத்தான். அவன் எதுவும் முடிவாக இல்லாத மனசாட்சியை கவனித்துக்கொண்டிருந்தான்.

பகலின் ஒளியில் அழகாக விளங்கும் இந்த நீர்க்குழிகள், எப்போதும் மறைந்துவிடும், ஒழிந்துவிடும். ஆனால் அது எதற்காக வந்தது என்ற கேள்வி அவனை தொடர்ந்து துரத்தியது. ஏன் இந்த மனநிலை இப்படி ஒரு குழிக்குள் விழுந்தது என்று றஹீம் அறியவில்லை.

சூரியனின் கதிர்கள் விழுந்து நீர்க்குழி காய்ந்து போனது போல, றஹீமின் மனசு கூட வேறொரு பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஏன் இத்தனை காலமாக அவன் மனசு வெறுமையிலிருந்து விடுபடமுடியாமல், கேள்விகளின் நிழலில் சிக்கியிருந்தது? அவன் வாழ்க்கை முழுவதும் ஒரு நீர்க்குழி போல, மெல்லக் கசிந்து போவதுதானா?

மேலும் படிக்க ...

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கத்தின் வாசிப்பு அனுபவப் பகிர்வு! - தகவல்: நடேசன் -

விவரங்கள்
- தகவல்: நடேசன் -
நிகழ்வுகள்
10 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மேலும் படிக்க ...

'டொராண்டோ' தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலிருந்த (Toronto Tamil Book Fair 2025) 'நூலகம்' சாவடி! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நிகழ்வுகள்
10 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

'டொராண்டோ'  தமிழ்ப் புத்தகக் கண்காட்சியிலிருந்த 'நூலகம்' சாவடியில் நூலகம் நிறுவனத்தின் கனடாக் கிளையில் இயங்கும், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் மீரா பாரதி நிற்கும் காட்சி.  எண்ணிம நூலகமான 'நூலகம்'  நிறுவனம் மிகப்பெரிய பணியினைச் செய்து வருகின்றது. நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், நினைவு மலர்கள், பல்வகைச் சிறப்பு மலர்கள், புகைப்படங்கள், காணொளிகள், பல்வகையான குறுவட்டுகள், இறுவட்டுகள் எனப் பலவற்றைச் சேகரித்து வருகின்றது. நூலகமாகவும், ஆவணக்காப்பகமாகவும் நூலகம் ஆற்றிவரும் பணி தமிழர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது. 

ஏன் இவ்விதமான நிறுவனங்கள் தேவை?

ஒரு காலகட்டத்து வரலாற்று, கலை, இலக்கிய  ஆவணங்களைப் பாதுகாத்து எதிர்காலத்  தலைமுறையினருக்குக் கடத்துவதென்பது  ஓர்  இனத்தின் வரலாற்றை முறையாகப்பதிவு செய்யும் முக்கியமானதொரு செயற்பாடு. அரிய பணி.  அறிவினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் அரிய பணியினையும் இத்தகைய நிறுவனமொன்று செய்கின்றது.  பல்வகை ஆய்வுகளுக்கும் உசாத்துணைகளாக இவ்விதம் பேணப்படும் ஆவணங்கள் விளங்குகின்றன.  இனக்குழுக்களின் சமூக, தனிநபர் அடையாளங்களை இவை தலைமுறை கடந்து கடத்துகின்றன.  இவை முக்கியமான காரணங்கள்.  இதனால் தமிழர்களான எம்மைப் பொறுத்தவரையில் எம் மத்தியில் இவ்விதப் பணிகளைச்  செய்யும் நூலகம் நிறுவனத்தின் சேவை தொடர்வது அவசியமானது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் பூங்கோதை (கலா ஶ்ரீரஞ்சன் ) மறைந்தார! ஆழ்ந்த இரங்கல்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
இலக்கியம்
09 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 

எழுத்தாளர் பூங்கோதையை   முகநூல் வாயிலாகவே அறிவேன். ஆசிரியர்.  ஐக்கிய இராச்சியத்தில் வசித்து வந்தவர். என் நட்பு வட்டத்திலுள்ளவர். 'அபத்தம்' இணைய இதழில் தொடர்ச்சியாக எழுதியவர். கட்டுரைகள், சிறுகதைகள் என எழுதிக்கொண்டிருந்தவர் குழந்தைகள் இலக்கியத்திலும் தீவிரமாக இயங்கியவர்.  ஷோபா பீரிஸ் (Shobha Peries) சிங்கள மொழியில் எழுதிய குழந்தைக்கதை ஒன்றை 'ஒரு குட்டிக் குரங்கின் கதை' என்று தமிழுக்குக் கொண்டுவந்தவர்.

பதிவுகள் இணைய  இதழிலும் பூங்கோதை என்னும் பெயரில் 'நீர்கொழும்பு மான்மியம்- ஒரு சந்திப்பும் சில நினைவுகளும்!' என்னுமொரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அவர் தன் குடும்பத்தினரின் நீர்கொழும்பு அனுபவங்களுடன் , எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் பற்றியும் நினைவு கூர்ந்திருந்தார்.

'இடுக்கண் வருங்கால் நகுக'  என்றார் வள்ளுவர். 'துன்பம் நேர்கையில் யாழ் மீட்டி இன்பம் சேர்  ' என்றார் பாரதிதாசன். இவ்விதமே வாழ்ந்தவர் எழுத்தாளர் பூங்கோதை (இயற்பெயர் - கலா ஶ்ரீரஞ்சன்)

கடந்த சில வருடங்களாகத்  தன்னைப் பாதித்திருந்த நோயுடன் சிரித்த முகத்துடன் போராடி வந்தவர். அவரது ஆரோக்கியமான , நேர்மறை ஆளுமை அவரை மீட்குமென்று முகநூல் நண்பர்கள் பலரும் எண்ணியிருந்தோம். எம் நம்பிக்கை  பொய்த்துப்போனது. ஆனால் இறுதி வரை அவர் கலங்கி நின்றதில்லை. நம்பிக்கையுடன் எதிர்நீச்சலிட்டு வந்தார். அந்த நம்பிக்கையின் , எதிர்நீச்சலின் குறியீடாக அவர் விளங்குவார். 

மேலும் படிக்க ...

இந்தியப் பயணத்தொடர்: மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ (Khajuraho) ஆலயங்கள்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
07 டிசம்பர் 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மத்தியப் பிரதேசத்தில் நான் போனது இதுவே முதல் தடவை என்றாலும், இது முக்கிய வரலாற்றுச் சின்னங்கள் செறிந்த இடமாகத் தெரிந்தது.

மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோ ஆலயங்களைச் சுற்றிப் பார்க்கும்போது எனக்குள் ஏற்பட்ட உணர்வுகளை இங்கு குறிப்பிடவேண்டும். காதலர் தினம் கொண்டாட மறுக்கப்படுவதும், முத்தக் காட்சிகள் திரைப்படத்தில் வரும் போது முணுமுணுக்கும் இக்கால இந்தியாவில் உள்ள சுதந்திரத்துடன் ஒப்பிடும்போது, 1200 ஆண்டுகள் முன்பாக கற்சிற்பிகளுக்கு இப்படியான நிர்வாண பாலியல் உறுப்புகளை செதுக்க படைப்புச் சுதந்திரம் கொடுத்த சந்தேலா (Chandelas) அரசர்கள் உன்னத புருஷர்களாகத் தெரிந்தார்கள். இந்தியாவில் மட்டுமல்ல; தற்போதைய ஐரோப்பிய நாடுகளிலும் இப்படியான சுதந்திரம் கிடைக்காது.

எனக்குப் ஏற்பட்ட அடுத்த உணர்வு—இந்த கோவில்கள் இஸ்லாமிய அரசர்களிடமிருந்து எப்படித் தப்பின என்பதே. வாசித்தபோது சில கோயில்கள் சிக்கந்தர் லோதி (Sikander Lodi, 1495) மூலம் அழிக்கப்பட்டதாகவும், பின்னர் இது சிறிய கிராமமாகக் இருந்ததால் கவனிக்கப்படாமல் அழிந்து  போயிருந்ததாகவும் கூறப்பட்டது. அந்த நிலையே இன்று இதைக் காண நமக்கு வாய்ப்பளித்துள்ளது.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. 'சொல்லின் செல்வ'ரும் சொல்லிக்கொள்ளாமலே சென்று விட்டார். ஆழ்ந்த இரங்கல்! - வ.ந.கி -
  2. 'நந்தலாலா' ஜோதிகுமார் பார்வையில் இலங்கை அரசியல் நகர்வுகள்! (பகுதி 2) - எல். ஜோதிகுமார் -
  3. செ.கணேசலிங்கம் அவர்களின் முதல் மூன்று நாவல்கள் - காலமும் கருத்தும் - பேராசிரியர் வீ.அரசு --
  4. பாரிஸ் மாநகரில் இலக்கிய மாலை..! பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு..! மூத்த எழுத்தாளர்கள் வி. ரி. இளங்கோவன் பத்மா இளங்கோவன் நூல்கள் அறிமுகம்.! - இளநிலா -
  5. ஒடுக்குமுறை, பாகுபாடு, மனித உரிமை மீறல்கள் பற்றிய என் கருத்துகளும், என் கருத்துகள் பற்றிய செயற்கை நுண்ணறிவின் கருத்துகளும்... - வ.ந.கிரிதரன் -
  6. பாரதியின் கல்வி சிந்தனைகள்! - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை(சுழற்சி – 2), குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
  7. சினிமா: காற்றில் அசைந்தாடும் பார்லி கதிர்கள்! - வெங்கி -- (3)
  8. 'நந்தலாலா' ஜோதிகுமார் பார்வையில் இலங்கை அரசியல் நகர்வுகள்! (பகுதி 1) - ஜோதிகுமார் -
  9. கவிதை: நாளை நன்கு விடியும்! - வ.ந.கிரிதரன் -
  10. வ.ந.கிரிதரனின் குழந்தைகளுக்கான புனைகதை 'சாவித்திரியின் பெரு விருப்பம்'
  11. இலங்கை வானத்தில் உறைந்த மூச்சுகள்! - ம .ஆச்சின் -
  12. மெய்யியல், அழகியல் அடிப்படையில் எம்.ஏ.நுஃமான் கவிதைகள்! - ஈழக்கவி -
  13. பெருமழையும் பெருவெள்ளமும்! - வ.ந.கிரிதரன் -
  14. சிறுகதை; சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை! - வ.ந.கிரிதரன் -
பக்கம் 1 / 119
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி