கட்டுரைச் சுட்டு

சில மலையாள  திரைப்படப் பாடல்கள்

ஜெயமோகன்நாம் ரசிக்கும் எல்லா திரைப்படப்பாடல்களும் நம் வாழ்க்கையின் ஒரு காலகட்டத்துடன் இரண்டறக் கலந்து விடுகின்றன. ஆகவே காலம் செல்லுந்தோறும் பழைய நினைவுகளின் ஈரத்தால் அவை கனம் பெற்றபடியே வருகின்றன. திரைப்படப் பாடல்களை தவிர்த்து ஓர் இளமையை எவருமே கற்பனை செய்யமுடியாது .பாடல் கேட்டு நெகிழாத தளம் எவருக்குமே இல்லை ஆனால் மலையாளப் படப்பாடல்கள் மலையாளிகளுக்கு அளிக்கும் அனுபவம் மேலும் துக்கம் நிரம்பியது. பொதுவாகவே மலையாளப்பாடல்கள் துயரத்துக்கு அழுத்தம் தருபவை. மெலடியே அவற்றில் அதிகம். தாளக்கட்டுக்கு குறைவான இடமே அளிக்கப்படுகிறது. அப்பாடல்வரிகள் மிதமிஞ்சிய கற்பனாவாத சுவை கொண்டவை. நிலவு , மேகம், மழை , நதி , மலர்கள் என அவை கனவின் அழகுடன் உள்ளன. இயற்கை அழகு மண்டிய கேரளத்தில் பிறந்து அங்கே வாழமுடியாமல் பிழைப்புதேடி வேறு ஊர்களுக்கு சென்று வாழ்பவர்கள்தான் கேரள மக்களில் கணிசமானோர். ஆகவே அவர்களுக்கு இப்பாடல்கள் காதல் , இயற்கை, மண் என இழந்த மகத்துவங்களின் கண்ணீரால் அடையாளமிடப்பட்டிருக்கின்றன. பாடல்கேட்டு அழும் மலையாளி ஒரு சாதாரண சித்திரமே.

மலையாள திரைப்பாடல்களை வடிவமைத்தவர்கள் மூவர். வயலார் ராமவர்மா. பி.பாஸ்கரன், ஸ்ரீகுமாரன் தம்பி . முன்னவர் மிதமிஞ்சிய கற்பனாவாதத்தை அழகிய சொல்லாட்சிகளால் முன்வைத்தவர். இரண்டாமர் நாட்டார்கூறுகளை பாடலில் கொண்டுவந்தவர். மூன்றாமர் எளிய பதங்களை கவிதைக்கு பயன்படுத்தி வழிகாட்டியவர். இப்பாடல்கள் இலக்கியங்கள் காட்டும் மலையாள மனதுக்கு வெளியே உள்ள ஒரு மனதை காட்டுகின்றன. அவர்களுடைய பலவீனமான ஓர் இடத்தை என்று சொல்லலாம்.

வயலார் ராமவர்மா

படம்: ஆ·பிஜாத்யம் .பாடியவர் :யேசுதாஸ் ,பி. சுசீலா

விருச்சிக இரவின் அரண்மனை முற்றத்தில் ஒரு
பிச்சிப்பூப் பந்தல் எழுப்பிற்று -- வானம்
பிச்சிப்பூ பந்தல் எழுப்பிற்று 
[விருச்சிக இரவின்]

நாலைந்து தாரகைகள் திரைச்சீலைக்கு உள்ளே நின்று
நீலக் கண்முனைகளை எய்தபோது 
கோமள வதனத்தில் சந்தனதிலகமுமாய்
ஹேமந்த நிலவு இறங்கி வந்தது
[விருச்சிக இரவின்]

இந்த அழகிய கன்னியின் மணமகன் யாரென்று
பூமியும் வானமும் நோக்கி நின்றன
திருமணம் நடக்குமா என மலரின் இதழ்களால்
மென்காற்று கேட்கிறது
[விருச்சிகம் .மலையாள மாதம், ஹேமந்தம் ஒரு பருவம்] 

மூலம்:

விருச்சிக ராத்ரி தன் அரமன முற்றத்தொரு
பிச்சகப்பூ பந்தலொருக்கி -- வானம்
பிச்சகப்பூ பந்தலொருக்கி
[விருச்சிக ராத்ரி]

நாலஞ்சு தாரகள் யவனிகய்க்கு உள்ளில் நிந்நும்
நீலச்ச கண்முனகள் எறிஞ்ஞப்போள்
கோமள வதனத்தில் சந்தனக் குறியுமாய்
ஹேமந்த கௌமுதி இறங்ஙி வந்நு
[விருச்சிக ராத்ரி]

ஈ முக்த வதுவின்றெ காமுகனாரெந்நு
பூமியும் வானமும் நோக்கி நிந்நு
பரிணயம் நடக்குமோ மலரின்றெ சொடிகளில்
பரிம்ருது பவனன் சோதிக்குந்நு
[விருச்சிக ராத்ரி]

வயலார் ராமவர்மா

படம்:  ஸ்த்ரீ , பாடியது எஸ் .ஜானகி

நேற்று நீ ஒரு அழகிய ராகமாய் என்
பொன்புல்லாங்குழலில் வந்து ஒளிந்திருந்தாய்
எனது நுனிவிரலும் முத்தமும் போதையேற்ற
காதல் சங்கீதமாய் நீ வந்தாய்
[நேற்று நீ ஒரு]

வானத்து மொட்டைமாடியில் நட்சத்திரப் பெண்கள் அந்த
கானத்தின் அலைகளை கேட்டு பிரமித்து நின்றனர்
நீல மாமரத்தில் சாய்ந்து நின்ற இளந்தென்றல்
தாளமிடவும் மறந்து போயிற்று
[நேற்று நீ ஒரு]

நேற்று நீ ஒரு புது வசந்தக் கனவாக 
என் மனமொட்டில் விருந்து வந்தாய்
சித்திரை நறுமணத்தின் நிழற்பந்தலின் கீழே
மதியமெனும் அழகி கண்ணயர்கையில்
முந்திரிக்குலைகளால் நூபுரம் அணிந்து வரும்
சுந்தர வசந்தமெனும் அழகியைப் போல
நிறைந்த காதலின் மதுக்குடம் நீட்டி
நடன மங்கை நீ அருகே வந்தாய்
[நேற்று நீ ஒரு]

மூலம்:
இந்நலே நீ ஒரு சுந்தர ராகமாய் என்
பொன் ஓடக்குழலில் வந்நு ஒளிச்சிருந்நு
மாமக அங்குலீ சும்பன லஹரியில்
ப்ரேம சங்கீதமாய் நீ வந்நு
[இந்நலே நீ ஒரு..]

மானத்தே மட்டுப்பாவில் தாரகா நாரிமார் ஆ
கான நிர்த்தரி கேட்டு தரிச்சு நிந்நூ
நீல மாமரங்ஙளில் சாரீ நிந்நு இளந்தென்னல்
தாளமடிக்கான் போலும் மறந்நு போயீ
[இந்நலே நீ ஒரு..]

இந்நலே நி ஒரு நவ வாஸ ஸ்வப்னமாய் நீ
என் மனோ முகுரத்தில் விருந்நு வந்நு
சைத்ர சுகந்தத்தின் தால வ்ருந்தத்திந் கீழில்
மத்யான்ன மனோஹரி மயங்ஙிடும்போள் 
முந்திரிக்குலகளால் நூபுரம் அணிஞ்ஞெத்தும் 
சுந்தர வாசந்த ஸ்ரீ எந்ந போலே
முக்த அனுராகத்தின்றெ பான ·பாஜனம் நீட்டி
ந்ருத்த விலாஸினீ நீ அருகில் வந்நூ
[இந்நலே நீ ஒரு..]
 

பி.பாஸ்கரன்

படம்: அனுபவம். பாடியது ஜேசுதாஸ்

வாகைப்பூமரம் சூடும் வாரிளம் பூங்குலைக்குள்ளே
வாடகைக்கு ஒரு அறையெடுத்தது வடக்குத் தென்றல் 
முன்பு ஒரு வடக்குத்தென்றல் 
[வாகைப்பூமரம் சூடும்...]

வாசலில் வந்து எட்டிப்பார்த்த 
வசந்த பஞ்சமி நிலாப்பெண்ணின்
வளையொலி கேட்டு சிலிர்த்து நின்றது
தென்றல் பிரமித்து நின்றது
[வாகைப்பூமரம் சூடும்...]

விரல் சொடுக்கி அழைத்தபோது
நகம் கடித்து அவள் அவள் அருகே வந்தாள்
குனிந்த முகத்துடன் தளர்வுடன் நெருங்கி நின்றாள்
நாணம் சுமந்து நின்றாள்
[வாகைப்பூமரம் சூடும்...]

பொங்கும் உணர்ச்சியுடன் தென்றல் அவளது
இதழருந்தியது 
குளிர்கால தளிர்களின் மெத்தையில் தளர்ந்து சரிந்தனர்
[வாகைப்பூமரம் சூடும்...]

புலரி வந்து அழைத்தபோது
அவன் விழித்து அவளைத் தேட
அவள் அங்கில்லை எங்கோ மறைந்தேபோனாள்
[வாகைப்பூமரம் சூடும்...]

மூலம்:
வாகப்பூமரம் சூடும் வாரிளம் பூங்குலைக்குள்ளில்
வாடகைக்கு ஒரு முறியெடுத்து வடக்கன் தென்னல்
பண்டு ஒரு வடக்கன் தென்றல்
[வாகைப்பூமரம் சூடும்...]

வாதிலில் வந்நெத்தி நோக்கிய 
வசந்த பஞ்சமி பெண்ணின்
வளகிலுக்கம் கேட்டு தரிச்சு நிந்நு
தென்னல் ·ப்ரமிச்சு நிந்நு
[வாகைப்பூமரம் சூடும்...]

விரல் ஞொடிச்சு விளிச்ச நேரம்
நகம் கடிச்சு அவள் அருகில் வந்நு
விது வதனயாய் விவசயாய் அவள் ஒருங்ஙி நிந்நு
நாணம் குணுங்ஙி நிந்நு
[வாகைப்பூமரம் சூடும்...]

தரள விகார லோலன் தென்னல் அவளுடெ சொடி நுகர்ந்நு
தனு அணி தளிர் ஸய்யயில் தளர்ந்நு வீணு
[வாகைப்பூமரம் சூடும்...]

புலரி வந்நு விளிச்ச நேரம் 
அவன் உணர்ந்நு அவளே நோக்கி
அவள் அடுத்து இல்ல எங்ஙோ மறஞ்š போயி
[வாகைப்பூமரம் சூடும்...]
 

ஸ்ரீ குமாரன் தம்பி

படம்: காவ்யமேள .பாடியது ஜேசுதாஸ் ,பி.லீலா

கனவுகளே கனவுகளே நீங்கள் விண்ணக தேவிகளல்லவா?
நீங்கள் இந்தபூமியில் இல்லாமலிருந்தால்
அசைவற்ற ஜடம் ,சூனியம் இந்த பூமி 
கனவுகளே கனவுகளே நீங்கள் விண்ணக தேவிகளல்லவா?

கடவுள்களில்லை மனிதர்களில்லை பிறகு
வாழ்க்கையில் இன்பமே இல்லை
அழகும் கற்பனைகளுமில்லை சௌகந்திகங்கள் மலர்வதில்லை 
கனவுகளே கனவுகளே நீங்கள் விண்ணக தேவிகளல்லவா?

இந்திர நீலத்தால் வானில் கட்டிய கந்தர்வ ராஜசபைக்கு
சந்திரப் பொற்கலசம் வைத்த கந்தர்வ ராஜசபைக்கு
சொர்க்கத்திருந்து விருந்து வரும் 
பட்டாம் பூச்சிகள் நீங்கள்
கனவுகளே கனவுகளே நீங்கள் விண்ணக தேவிகளல்லவா?

நான் அறியாமல் என் மனச் சாளர வாசல்
திறக்கிறீர்கள் நீங்கள்
சிற்பிகள் கட்டிய சுவர்களில்லாமலே
சித்திரங்கள் வரைகிறீர்கள்
கனவுகளே கனவுகளே நீங்கள் விண்ணக தேவிகளல்லவா?

ஏழல்ல எழுநூறு நிறங்கள் கொண்டு
எத்தனை வானவிற்கள் சமைக்கிறீர்கள்
கண்ணீரைக் கரைத்து எழுதியெழுதி அழிக்கிறீர்கள்
எத்தனை வண்ணப் பந்தல்களை நீங்கள்!
கனவுகளே கனவுகளே நீங்கள் விண்ணக தேவிகளல்லவா?

மூலம்:
ஸ்வப்னங்ஙளே ஸ்வப்னங்ஙளே நிங்ஙள் ஸ்வற்க குமாரிகளல்லோ 
நிங்ஙள் ஈ லோகத்து இல்லயிருந்நெங்கில் 
நிஸ்சலம் சூன்யம் ஈ லோகம்
ஸ்வப்னங்ஙளே ஸ்வப்னங்ஙளே நிங்ஙள் ஸ்வற்க குமாரிகளல்லோ

தெவங்ஙளில்ல மனுஷ்யரில்ல பின்னே
ஜீவித சைதன்யமில்ல
சௌந்தரிய சங்கல்பங்ஙளில்ல சௌகந்திகங்ஙளில்ல
ஸ்வப்னங்ஙளே ஸ்வப்னங்ஙளே நிங்ஙள் ஸ்வற்க குமாரிகளல்லோ

இந்த்ர நீலம் கொண்டு மானத்து தீர்த்தொரு
கந்தர்வ ராஜாங்கணத்தில்
சந்திரிக பொன் தாழிகக் குடம் சார்த்துந்ந 
கந்தர்வ ராஜாங்கணத்தில்
ஸ்வற்கத்தில் நிந்நு விருந்நு வராறுள்ள
சித்ர சல·பங்ஙள் நிங்ஙள்
ஸ்வப்னங்ஙளே ஸ்வப்னங்ஙளே நிங்ஙள் ஸ்வற்க குமாரிகளல்லோ 

ஞான் அறியாதே என் மானச ஜாலக வாதில்
துறக்குந்நு நிங்ஙள்
சிபிகள் தீர்த்த சுமருகள் இல்லாதே
சித்ரம் எழுதுந்நு நிங்ஙள் 
ஸ்வப்னங்ஙளே ஸ்வப்னங்ஙளே நிங்ஙள் ஸ்வற்க குமாரிகளல்லோ 

ஏழல்ல எழுநூறு வர்ணங்ஙளால் எத்ர வார்மழவில்லுகள் தீர்த்து
கண்ணுநீர் சாலிச்சு எழுதுந்நு மாய்க்குந்நூ
வர்ண விதானங்ஙள் நிங்ஙள்
 

வயலார் ராமவர்மா

படம்: மிடுமிடுக்கி பாடியது ஜேசுதாஸ் எஸ் ஜானகி

தொலைவில் வெகு தொலைவில் நீலவானம்
அலையடிக்கும் மேகக்கடல்
அருகில் என் இதயவானம்
அலையடிக்கும் காதல் கடல்
[தொலைவில்...]

பாடிவரும் நதியின் குளிரும்
பாரிஜாத மலரின் மணமும்
ஒன்றுள் ஒன்று கலப்பது போல
நாம் ஒன்றாய் கரைகிறோமல்லவா?
[தொலைவில்...] 

நித்ய சுந்தர பரவசமாய் நீ
நிற்கிறாய் என் ஆத்மாவில்
நீயில்லையேல் இவ்வுலகமேயில்லை
நான் விழுந்து மட்குவேன் இம்மண்ணில்
[தொலைவில்]

மூலம்:
அகலே அகலே நீலாகாசம்
அல தல்லும் மேக தீர்த்தம்
அருகிலென்றே ஹ்ருதயாகாசம்
அல தல்லும் ராக தீர்த்தம்
[அகலே ]

பாடிவரும் நதியின் குளிரும் 
பாரிஜாத மலரின் மணமும்
ஒந்நில் ஒந்நாய் கலரும்போலே
நம்மல் ஒந்நாய் அலியுகயல்லே?
[அகலே ]

நித்ய சுந்தர நிர்விருதியாய் நீ
நில்குகயாணு என் ஆத்மாவில் 
விஸ்வம் இல்லா நியில்லெங்கில்
வீணடியும் ஞான் ஈ மண்ணில்
[அகலே ]
 

பி பாஸ்கரன்

படம்: இது ஞங்ஙளுடெ கத பாடியது எஸ் ஜானகி

பொன்மேகமே பொன்மேகமே
கனவு காண்பதுண்டா நீயும் ?
கனவு காண்பதுண்டா?
[பொன்மேகமே]

கண்ணீர்குடம் தலையில் ஏந்தி
விண்வீதியில் நடக்கும்போது
வண்ண சிறகுகள் சீவி ஒதுக்கி
வசந்த இரவில் கண்ணயரும்போது
[பொன்மேகமே]

மழைக்கால அந்திகள் வானவில்லால் உனக்கு 
மணமாலை செய்யும்போது
மௌன வேதனையை ஏன் நீயும்
மறைத்து வைக்கிறாய் உயிருக்குள்?
[பொன்மேகமே]

மூலம்:
ஸ்வற்ண முகிலே ஸ்வர்ண முகிலே
ஸ்வப்னம் காணாறுண்டோ ?
நீயும் ஸ்வப்னம் காணாறுண்டோ ?
[ஸ்வற்ண முகிலே]

கண்ணீர்குடம் தலையில் ஏற்றி
விண்ணின் வீதியில் நடக்கும்போள்
வர்ண சிறகுகள் சீகி ஒதுக்கி
வசந்த ராத்ரியில் மயங்ஙும்போள்
[ஸ்வற்ண முகிலே]

வர்ஷ ஸந்தியா மாரிவில்லின் வரண மால்யம் தீர்க்கும்போள்
மூக வேதன எந்தினாய் நீ மூடிவெப்பூ ஜீவனில்?
[ஸ்வற்ண முகிலே]
 

வயலார் ராமவர்மா

படம்: அச்சாணி பாடியது ஜேசுதாஸ்

என் கனவின் தாமரைப் பொய்கையில்
வந்திறங்கிய ரூபவதி
நீலத்தாமரை விழிகள் திறந்து உன்னைப் பார்த்து நின்றது
சித்திரை உன் நீராடலைக் கண்டு நின்றது 
[என் கனவின்..]

எனது கற்பனையின் சாலமரக் காட்டில்
வந்து சேர்ந்த வனமோகினி
வண்ணப் பூ தட்டங்களேந்தி
வனபுஷ்ப மரங்கள் வரிசையாக நின்றன
உன்னை வரவேற்க குலுங்கி நின்றன
[என் கனவின்..]

காதல் நினைவுகளின் தேவ வனத்தின்
பூமரங்கள் பூத்த இரவில்
உனது நடனம் காணவந்து
உன்னைக்காத்து நின்றனர் 
நீல வானமும் விண்மீன்களும்
[என் கனவின்..]

மூலம்:
என்றெ ஸ்வப்னத்தின் தாமரப்பொய்கையில் 
வந்நிறங்ஙிய ரூபவதி
நீலத்தாமர மிழிகள் துறந்நு
நீனே நோக்கி நிந்நூ
சைத்ரம் நின்றே நீராட்டு கண்டு நிந்நூ
[என்றெ ஸ்வப்னத்தின்..]

என்றெ ·பாவன ஸால வனத்தில்
வந்நு சேர்ந்நொரு வன மோஹினி
வர்ண சுந்தரமாம் தாலங்ஙளேந்தி
வன்ய புஷ்பஜாலம் நிரயாய் நிந்நூ
வரவேல்பினாய் ஒருங்ஙி நிந்நூ
[என்றெ ஸ்வப்னத்தின்..]

ப்ரேம சிந்த தன் தேவ நந்தனத்திலே
பூமரங்ஙள் பூத்த ராவில்
நின்றெ நர்த்தனம் காணானெத்தி
நின்னே காத்து நிந்நு சாரே
நீலாகாசவும் தாரகளும்
[என்றெ ஸ்வப்னத்தின்..]
 

வயலார் ராமவர்மா

படம்: நதி பாடியது ஜேசுதாஸ்

கழிநீலம் கண்ணில் விரியும் 
தாமரைகள் கன்னங்களில் மலரும்
காதல் கொண்டவளே உன் உதடுகளில் இருந்து
ஆலங்கட்டி மழை பொழியும்
[கழிநீலம் கண்ணில் விரியும் ..]

பொன் ஒட்டியாணத்தை பூமிக்கு போடும்
நதியின் ஏகாந்த அலைகளில் 
உன் மென் புன்னகையின் இந்திரஜாலம் கண்டு
தீரா வியப்புடன் நான் இறங்கி சென்றேன்
தோழி இறங்கி சென்றேன்
[கழிநீலம் கண்ணில் விரியும் ..]

உன்னைப்பற்றி நான் பாடிய பாடலுக்கு
எண்ணற்ற அலைகள் சுதிமீட்டின
உன் பகற்கனவின் நீலக்கடம்ப மரத்தில் நீ
என் விளையாட்டுத்தோணியை கட்டிப்போட்டாய்
தோழி கட்டிப்போட்டாய்
[கழிநீலம் கண்ணில் விரியும் ..]

மூலம்:
காயாம்பூ கண்ணில் விரியும் 
கமலதளம் கவிளில் விரியும்
அனுராகவதீ நின் சொடிகளில் நிந்நு
ஆலிப்பழம் பொழியும்
[காயாம்பூ...]

பொன் அரஞ்ஞாணம் பூமிக்கு சார்த்தும்
புழயுடே ஏகாந்த புளினத்தில்
நின் ம்ருது ஸ்மேரத்தின்றெ இந்த்ர ஜாலம் கண்டு
நித்ய விஸ்மயமுமாய் ஞானிறங்ஙீ
[காயாம்பூ...]

நீன்னே குறிச்சு ஞான் பாடிய பாட்டினு
நிரவதி ஓளங்ஙள் ஸ்ருதி மீட்டீ
நின் மனோ ராஜ்யத்தின் நீல கடம்பில் நீ
என்றே ஈ களித்தோணி கெட்டியிட்டூ
சகீ கெட்டியிட்டூ
[காயாம்பூ...]
 

வயலார் ராமவர்மா

படம்: ராஜ ஹம்சம் பாடியது ஜேசுதாஸ்

சன்யாசினி உன் புண்ணிய ஆசிரமத்தில் நான்
மாலை மலர்களுடன் வந்தேன்
யாரும் திறக்காத முகப்புவாசலில்
அன்னியனைப்போல நின்றேன்
[சன்யாசினி..]

உன் துயரம் தேங்கிய மௌனக் கண்ணீர் தாரையில்
என் கனவுகள் கரைந்தன
அழுதபடி என் மோகங்கள் இறந்தன
உன் மனதின் கனல் விழுந்து என்
மலர்களெல்லாம் கருகின
இரவு பகலிடம் போல
விடைகேட்கிறேன் நான்
[சன்யாசினி..]

உன் ஏகாந்த நினைவுகளின் பாதையில்
என்னை என்றாவது நீ நினைப்பாய்
ஒருதடவையாவது என் காலடிசுவடுகளை அறிவாய்
அன்று என் ஆத்மா உன்னிடம் சொல்லும்
உன்னை நான் காதலித்திருந்தேன்
இரவு பகலிடம் போல
விடைகேட்கிறேன் நான்
[சன்யாசினீ£..]

மூலம்:
ஸன்யாசினீ நி புண்யாசிரமத்தில் ஞான்
சந்தியா புஷ்பவுமாய் வந்நு
ஆரும் துறக்காத்த பூமுக வாதிலில் 
அன்யனெ போலெ ஞான் நிந்நு
[ஸன்யாசினீ£...]

நின்றெ துக்கார்த்ரமாம் மூக அஸ்ரு தாரயில்
என்றெ ஸ்வப்னங்ஙள் அலிஞ்š
சகத்கதம் என்றெ மோகங்ஙள் மரிச்சு
நின்றெ மனஸின்றெ தீக்கனல் கண்ணில் வீணு என்றெ ஈ
பூக்கள் கரிஞ்š
ராத்ரி பகலினோடெந்ந போலே
யாத்ர சோதிபூ ஞான்
ராத்ரி பகலினோடெந்ந போலே
யாத்ர சோதிபூ ஞான்
[ஸன்யாசினீ£...] 

நின்றெ ஏகாந்தமாம் ஓர்ம தன் வீதியில்
என்னெ ஏந்நெங்கிலும் ஓர்க்கும்
ஒரிக்கல் நீ என்றெ கால்பாடுகள் காணும்
அந்நு என்றெ ஆத்மாவு நின்னோடு மந்ரிக்கும்
நின்னெ ஞான் ஸ்னேகிச்சிருந்நூ
ராத்ரி பகலினோடெந்ந போலே
யாத்ர சோதிபூ ஞான்
[ஸன்யாசினீ£...]
 
- பதிவுகள் செப்டம்பர் 2003; இதழ் 45 -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R