படைப்பிலக்கியத்துறைக்கு வரும் பெரும்பாலானவர்கள் " தாங்கள் எழுத்தாளரானதே ஒரு விபத்து " என்றுதான் சொல்லிவருகிறார்கள். முதலில் வாசகர்களாக இருந்து, பின்னர் தாமும் எழுதிப்பார்ப்போம் என்று முனைந்தவர்கள், தமது படைப்புகளுக்கு கிட்டும் வாசகர் அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் தொடர்ந்து எழுதி பிரகாசிக்கிறார்கள். தமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்களும் வாசகர் மதிப்பீட்டை காலத்திற்குக்காலம் கணித்துவைத்துக்கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகருகிறார்கள். இந்தப்பின்னணியில்தான், அவுஸ்திரேலியா மெல்பனில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வதியும் விலங்கு மருத்துவர் நொயல் நடேசன் அவர்கள், இலக்கியப்பிரதிகள் எழுதத் தொடங்கி சுமார் இருபது வருட காலத்துள் கவிதை தவிர்ந்த இலக்கியத்தின் இதர துறைகளிலும் தன்னை தக்கவைத்துக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
இவர் இங்கு தொடங்கிய உதயம் (இருமொழிப்பத்திரிகை) மாத இதழில் தனது தொழில் சார்ந்த அனுபவமாக முதலில் எழுதிய பத்தி: நடுக்காட்டில் பிரேத பரிசோதனை. நடேசன் விலங்கு மருத்துவராக மதவாச்சி தொகுதிக்கு அருகில் பதவியா பிரதேசத்தில் பணியாற்றியபோது, தந்தங்களுக்காக ஒரு யானையை சிலர் வேட்டையாடிக் கொன்றுவிடுகிறார்கள். அவர்களை தேடிக்கைது செய்த பொலிஸார், அந்த யானையின் சடலத்தை பரிசோதனை செய்து மரணச்சான்றிதழ் பெறுவதற்காக நடேசனை அழைத்துக்கொண்டு அந்த நடுக்காட்டிற்குச்சென்றார்கள்.
அந்த அனுபவத்தையே தனது முதல் பத்தி எழுத்தாக எழுதியிருந்தார் நடேசன். அத்தகைய புதிய பாணி எழுத்து வாசகர்களை ஈர்த்ததையடுத்து, தொடர்ந்தும் தனது தொழில் சார் அனுபவங்களை எழுதிவரலானார். அவ்வாறு எழுதப்பட்ட பத்தி எழுத்துக்களின் தொகுப்பு: வாழும் சுவடுகள். இதனை சென்னையில் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ( அமரர்) எஸ். பொன்னுத்துரை நடத்திய மித்ர பதிப்பகம் வெளியிட்டது. பின்னர், வாழும் சுவடுகள் தமிழ்நாடு காலச்சுவடு பதிப்பகத்தினால் இரண்டாம் பதிப்பும் வெளியானது. அதனைத்தொடர்ந்து நடேசன் தனது பதவிய பிரதேச தொழில் சார் அனுபவங்களின் பின்னணியில் வண்ணாத்திக்குளம் என்ற நாவலையும் எழுதினார். இதனையும் மித்ரவே வெளியிட்டது. இதன் இரண்டாம் பதிப்பினை இலங்கையில் டொமினிக்ஜீவா அவர்களின் மல்லிகைப்பந்தல் வெளியிட்டது. வண்ணாத்திக்குளம் நாவலை மெல்பனில் வதியும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான திரு. நல்லைக்குமரன் குமாரசாமி ஆங்கிலத்திலும் (Butter fly Lake) , இலங்கையில் வதியும் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான மடுளுகிரயே விஜேரத்தின சிங்களத்திலும் (சமணளவெவ) மொழிபெயர்த்தனர்.
தமிழ்ச்சிறுகதைகள், நாவல்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி படமாக்கி இயக்கியிருக்கும் ( அமரர்) 'முள்ளும் மலரும்' மகேந்திரனின் கவனத்தையும் இந்த வண்ணாத்திக்குளம் ஈர்த்ததனால், அவரும் இதற்கு திரைக்கதை வசனம் எழுதி படமாக்குவதற்கு முயற்சித்தார். கதையின் பின்னணி இலங்கை என்பதனால், எங்கள் தேசத்தின் அரசியல் நெருக்கடி சூழ்நிலைகளினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
நடேசன் சிறுகதைகளும், நாவல்களும், அரசியல் மற்றும் இலக்கியம் சார்ந்த ( நூல் விமர்சனங்கள்) கட்டுரைகளும், பயண இலக்கியங்களும் தொடர்ந்து எழுதிவருகிறார். இதுவரையில், வாழும் சுவடுகள் ( இரண்டு பதிப்புகள்) - வண்ணாத்திக்குளம் ( இரண்டு பதிப்புகள்) - உனையே மயல்கொண்டு - அசோகனின் வைத்தியசாலை - கானல் தேசம் (நாவல்) - நைல்நதிக்கரையோரம் ( பயண இலக்கியம்) மலேசியன் ஏர்லைன் 370 - எக்ஸைல் ( சுயவரலாறு) ஆகியனவற்றை வரவாக்கியுள்ளார். இவற்றில் உனையே மயல்கொண்டு நாவல் (Lost in you) ஆங்கிலத்தில் தமிழ்நாட்டைச்சேர்ந்த பார்வதி வாசுதேவ் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அசோகனின் வைத்தியசாலை நாவலை தமிழ்நாட்டில் ( அமரர்) யுகமாயினி சித்தன் பிரசாத் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். சமீபத்தில் வெளியான நடேசனின் எக்ஸைல் நூலை இலங்கையில் பல்கலைக்கழக விரிவுரையாளர் விமல் சாமிநாதன் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இவ்வாறு இரண்டு தசாப்த காலத்துள் நடேசன் எழுதிய நூல்கள் குறித்து, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், வ.ந.கிரிதரன், சுமதி ரூபன், டீ.பி. எஸ். ஜெயராஜ்,... உட்பட பலர் தங்கள் வாசிப்பு அனுபவத்தை மதிப்பீடாக ஏற்கனவே எழுதியுள்ளனர். நடேசனின் நூல்கள், அவுஸ்திரேலியாவில் சில மாநில நகரங்களிலும் இலங்கையிலும் கனடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளன. இந்தப்பின்னணியில், அண்மையில் மெல்பனில் நடேசன் எழுதிய அனைத்து நூல்களுடன் சமீபத்தில் வெளியான கானல் தேசம் மற்றும் எக்ஸைல் ஆகிய நூல்கள் அறிமுகத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட்டன.
அறிமுகத்திற்கும் - விமர்சனத்திற்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த இரண்டு வகையான மதிப்பீடுகளும்தான் வாசகர்களுக்கும் படைப்பாளிக்கும் மத்தியில் உறவை பாலமாக உருவாக்குகின்றன. வாசகரிடம் பரவலாக சென்றடையாத ஒரு நூலை அரங்கேற்றும்போது அதனைப்படித்தவர் விமர்சன ரீதியாக அணுகும்போது, வாசிப்பு அனுபவத்தின் ருசிபேதம் வாசகரை மயக்கமடையச்செய்யலாம். புதிய நூலை அறிமுகப்படுத்துவதற்கும் ஏற்கனவே வெளியான நூலை விமர்சிப்பதற்கும் இடையே பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. இதனையும் கவனத்தில்கொண்டு அண்மையில் மெல்பனில் வேர்மன்ட் தெற்கு கல்வி நிலையத்தில் நடந்த நடேசனின் நூல்கள் பற்றிய மதிப்பீட்டு அரங்கில் பின்வருவோர் தத்தம் கருத்துக்களை முன்வைத்தனர்.
புதிய நூல்களான கானல் தேசம் (நாவல்) எக்ஸைல் சுயவரலாறு ஆகியனவற்றை மருத்துவர் நரேந்திரன், கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர் ஆகியோர் அறிமுகப்படுத்திப்பேசினர். வண்ணாத்திக்குளம் - உனையே மயல்கொண்டு - அசோகனின் வைத்தியசாலை ஆகிய நாவல்களை முறையே எழுத்தாளர் ஆவூரான் சந்திரன், வாசகிகள் கலாதேவி பாலசண்முகன், சாந்தி சிவக்குமார் ஆகியோரும், நைல்நதிக் கரையோரம் (பயண இலக்கியம்) வாழும் சுவடுகள் (தொழில் சார் அனுபவங்கள்) முதலானவற்றை எழுத்தாளர் சண்முகம் சபேசன், வாசகி விஜி இராமச்சந்திரன் ஆகியோரும் விமர்சித்துப்பேசினர். இந்நிகழ்ச்சிக்கு சிட்னியிலிருந்து வருகை தந்திருந்த இலக்கிய ஆர்வலர் திரு. செல்வராஜா தலைமை தாங்கினார். திரு. முருகபூபதி பேச்சாளர்களை அறிமுகப்படுத்தினார்.
வண்ணாத்திக்குளம் நாவல் இலங்கையின் வடமத்திய பிரதேசத்தில் ( மதவாச்சியா - பதவியா) காடும் காடு சார்ந்த பின்தங்கிய பகுதியில் வாழும் தமிழ் - சிங்கள ஆண் - பெண் காதல் உறவை சித்திரிக்கிறது. உனையே மயல்கொண்டு நாவல் இலங்கை யில் 1983 கலவரத்தின் பின்னணியில் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணின் பாலியல் சார்ந்த அகச்சிக்கல்களையும் அதனால் அவள் கணவனது மனப்பிரழ்வையும் சித்திரிக்கிறது. அசோகனின் வைத்தியசாலை முற்று முழுவதும் அவுஸ்திரேலியாவில் மெல்பனை பின்புலமாகக்கொண்டு எழுதப்பட்ட முழுமையான புகலிட இலக்கிய வரவு.
புதிய நாவல் கானல்தேசம், இலங்கையில் நீடித்த போரில் சம்பந்தப்பட்ட இயக்கங்கள், இலங்கை - வெளிநாட்டு புலனாய்வுப்பிரிவு தொடர்பான பின்னணியில் காதலையும் காமத்தையும் பாதிக்கப்பட்ட மக்களின் கனவுகளையும் பேசுகிறது.நைல் நதிக்கரையோரம் ( பயண இலக்கியம்) எகிப்தின் பிரமீட்களையும் பூத உடல்களை பதப்படுத்திய அக்கால மம்மிகளைப்பற்றியும் மத்திய கிழக்கின் முன்னைய அரசுகள் பற்றியும் பயணிகளுக்கு வழிகாட்டும் தகவல் களஞ்சியமாகி யிருக்கிறது.
வாழும் சுவடுகள் , விலங்கு மருத்துவத்தின் மகத்துவம் பற்றியும் ஜீவகாருண்யத்தையும் பற்றிய சுவாரசியமான கதைகளைச் சொல்கிறது.
புதிய நூல் எக்ஸைல், நடேசன் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலப்பகுதியில் தனது துணைவியார் மருத்துவர் சியாமளாவுடனும் ஆயுதம் ஏந்திய இயக்கங்களுடனும் இணைந்து போரினால் பாதிக்கப்பட்டு தாயகத்திலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்களுக்கு மேற்கொண்ட மருத்துவ உதவிகளைப்பற்றியும் அந்தப்பணியில் கிட்டிய அனுபவங்களையும் அங்கதச்சுவையுடன் பேசுகிறது.
மெல்பனில் நடந்த நிகழ்வில் உரையாற்றியவர்கள், நடேசனின் பன்முக அனுபவங்களை சிலாகித்துப்பேசினர். ஆரம்ப வகுப்பிலிருந்து உயர்தர வகுப்புக்குச்செல்லும் மாணவனின் கல்வி வளர்ச்சியின் படிமுறையை இனம்காண்பிப்பதுபோன்று எதிர்பாராமல் படைப்பிலக்கியவாதியான நடேசனின் இரண்டு தசாப்த கால எழுத்தூழியத்தை மதிப்பீடு செய்யும் வகையில் இந்த அரங்கு இடம்பெற்றது. நிகழ்ச்சியின் இறுதியில் நடேசன் தனது ஏற்புரையில், தனது வாழ்வின் அனுபவங்களையே ஏனைய எழுத்தாளர்கள் போன்று சித்திரிக்க முயன்றிருப்பதாகவும், வாசகர்களின் கணிப்புகளை கவனிப்பதன் ஊடாக தன்னை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளவும் முடியும் எனத் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவின் வெண்பனிக்கால பருவகாலத்தில் இதமாக நடந்த இந்த இலக்கிய ஒன்றுகூடல் பலதரப்பட்ட வாசிப்பு அனுபவங்களையும் சங்கமிக்கச்செய்தது.
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems