பிரித்தானிய அரசகுடும்பத்தினர் இன்று வெளியிட்ட அறிக்கை,பிரித்தானியா மகாராணியின் மூத்த மகனின் இரண்டாவது மகனான இளவரசர் ஹரியும் அவரின் மனைவியான மேகனும் இன்றிலிருந்து பிரித்தானிய அரசகுடும்பத்துக் கடமைகளிலிருந்து வெளியேறிச் சாதாரண பிரஜைகளாக வாழ்க்கையை நடத்துவதை மகாராணியார் அங்கிகரிப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களாகப் பிரித்தானியப் பத்திரிகைகளிற்சில ஹரியின் மனைவிக்கு எதிராகத் தொடரும் இனவாதம் கலந்த பதிவுகள்தான் இளவரசர் ஹரி தனது மனைவியுடனும் குழந்தையுடனும் பிரித்தானிய அரச குடும்பத்திலிருந்து பிரிந்து போவதற்குக் காரணம் என்பதைப் பிரித்தானிய பத்திரிகைகளின் அரசகுடும்பம் பற்றிய தகவல்களை ஆழமுடன் அணுகும் அத்தனைபேரும் புரிந்து கொள்வார்கள்.
தனது பன்னிரண்டாவது வயதில் தனது அருமைத்தாயான இளவரசி டையானா அகாலமாக இறந்ததற்கு பத்திரிகை நிருபர்களின்; மனிதத் தன்மையற்ற செயற்பாடுகளே காரணம் என்பது இளவரசர் ஹரியின் ஆதங்கம் என்பது பலருக்குத் தெரியும்.
பிரித்தானிய அரசகுடும்பத்தின் வாழ்க்கைமுறையில் அதிருப்தி கொண்ட இளவரசி டையானா அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மிகவும் 'சுதந்திரமாக'நடந்து கொண்டார். இளவரசர் சார்ள்ஸை விவாகரத்துச் செய்து கொண்டபின் பிரித்தானிய அரசகுடும்பம் அதிருப்தி கொள்ளும் வகையில், பல 'ஆண்சினேகிதர்களை' வைத்திருந்தார், அவர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டார். இந்த பிரமாண்டான உலகத்தின் பெரும் பகுதியைத் தங்கள் பிடிக்குள் வைத்திருந்த பிரித்தானிய ஆதிக்க வர்க்கம் அதை விரும்பவில்லை. இளவரசர் ஹரியின் தாயான காலம் சென்ற இளவரசி டையானா பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சத்திரசிகிச்சை நிபுணரான டாக்டர் ஹசான் அஹமட் கான் என்பரை மிகவும் நேசித்தார் அதை மோப்பம் பிடித்த ஊடகவாதிகளின் தொல்லை தாங்காத டாக்டர் ஹசான் டையானாவுடனான தனது தொடர்பைத் துண்டித்துக் கொண்டார் அதைத் தொடர்ந்து, இளவரசி டையானா, எகிப்திய நாட்டைச் சேர்ந்தவரும் மிகவும் பிரமாண்டமான'ஹரட்' என்ற கடைச் சொந்தக்காரருமான அல்பாய்டின் மகன் டொடியுடன் சினேகிதமானார்.
பிரித்தானிய அரசபரம்பரைக்கே அவமானதாக நினைத்து,அந்த உறவைத் தாங்கிக்கொள்ளாத,-ஊடகவாதிகள் டையானாவையும் அவரின் சினேகிதர் டோடியையும் விலங்குகள்மாதிரி வேட்டையாடித் துரத்தினார்கள். அதனால் நடந்த கோர விபத்தில் சிக்கிய உலகப் என்ற பேரழகியும், ஹரி, வில்லியம் என்ற இரு இளவரசர்களின் தாயாருமான டையானா அகால மரணமடைந்தார்.
அந்த நிகழ்ச்சியால் மிகவும் பாதிக்கப் பட்டவர் இளவரசர் ஹரி. பிரித்தானிய அரச பரம்பரைக்கப்பாற்பட்ட அந்தஸ்துள்ள மேகன் மார்கிள் என்ற விவாகரத்துச் செய்து கொண்ட, அமெரிக்க நடிகையைத் திருமணம் செய்தபோது, தனது தாயைத் துரத்திக் கொலைசெய்ததுபோல், தன்மனைவியைத் தேவையற்ற விதத்தில் இனவாதம் பிடித்த சில ஊடகங்கள்; துரத்துவதைக் கண்டு ஆத்திரத்துடன்; குமுறிக் கொண்டிருந்தார்.இன்று தனது மனைவியிலுள்ள காதலால்,ஆடம்பரமான அரச வாழ்க்கையிலிருந்து விலகிப் போகிறார். உலகத்திலேயே மிகவும் பிரபலமான பிரித்தானிய அரச பரம்பரையின் கட்டுமானங்களையும் அதில் தனது சுதந்திரமற்ற வாழ்க்கையையும் அவர் என்றுமே விரும்பியதில்லை என்று அவரை நன்கு தெரிந்தவர்கள் பலர் கூறுகிறார்கள்.
இளவரசர் ஹரி (16.9.84) அவரின் தாய்மாதிரி மற்றவர்களில் மிகவும் இரக்ககுணம் படைத்தவர்.சாதி மத.இன.நிறபேதம் பார்க்காதவர்.ஒன்றிரண்டு தடவைகள் காதலுக்குள் நுழைந்த அனுபவமுள்ளவர். ஆனால் கலப்பினப் பெண்ணான,மனித உரிமைவாதி,பெண்ணியவாதியான மேகன் என்ற அமெரிக்க நடிகையைக் கண்ட கணத்திலிருந்து ஆழ்ந்த காதல் வயப்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டவர்.
பிரித்தானிய அரச பாரம்பரியம் தங்கள் அந்தஸ்துக்கு அப்பால் திருமண உறவுகளை விரும்பாதவர்கள். அதைத் தாண்டிக் காதலில் மாட்டிக் கொண்ட இன்றைய மகாராணி இரண்டாவது எலிசபெத் அவர்களின்;,பெரியப்பாவும் எட்டாவது எட்வேர்ட் அரசருமானவர்,அமெரிக்காவைச் சேர்ந்த வலிஸ் சிம்ஸன் என்பவரும் மூன்று தரம் விவாகரத்துச் செய்தவருமான பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பியதால் அவரின் பதவியிலிருந்து விலக 1936ம் ஆண்டு தூண்டப்பட்டார்.
அதேமாதிரி இன்றைய மகாராணியாரின் தங்கை மார்க்கரெட், விவாகரத்துச் செய்து கொண்ட கப்டன் பீட்டர் டவுன்ஸென்ட் என்பரைக் காதலித்தபோது 1955ம் அந்த உறவை விடும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்.
மேலும், இன்றைய தம்பதிகளான சார்ல்சும் கமிலாவும் ஒரு காலத்தில் காதலார்களாகவிருந்தார்கள்.ஆனால் சார்ஸ்சுக்கு முன்னர் கமிலாவுக்கு வேறொரு காதல் இருந்த காரணத்தால்,கமிலா 'கன்னித்தன்மையற்றவராகக்' கருதப்பட்டு சார்ஸ்சிடமிருந்து பிரிக்கப்பட்டார். அதனால் சார்ள்ஸ் வேண்டா வெறுப்பாக,அவருக்கு 12 வயது இளமையான 'கன்னியான' டையானவைத் திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டார். அவர்கள் திருமணம் விவாகரத்தில் முடிந்த பின், இளவரசர் சார்ள்ஸ் தனது இளமைக் காதலியான கமிலா தனது கணவரை விவாகரத்துச் செய்து கொண்டபின் திருமணம் செய்துகொண்டார்.
இப்படிப் பல சோகக் கதைகளைத் தனது அனுபவத்தில் கண்ட எலிசபெத் மகாராணியார், தனது பேரன், கலப்பு நிற, அமெரிக்க.கத்தோலிக்க.விவாகரத்து செய்து கொண்ட நடிகையை விரும்பியபோது எந்தத் தடையும் சொல்லாமல் உலகமே வியக்கும்படி ஒரு அழகிய பிரமாண்டமான திருமணத்தை 2018ல் செய்து வைத்தார் அந்தத் தம்பதிகளுக்கு, 2019ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் இனவாதம் பிடித்த சில ஊடகங்கள் ஹரியின் மனைவியைத் தங்களால் முடிந்தவரை தாழ்த்தி எழுதத் தொடங்கினார்கள். அதற்குக் காரணங்கள் பல:
- இளவரசர் ஹரியின் மனைவி மேகன்(4.8.1981) அவரின் பதினோராவது வயதிலேயே பெண்களின் சமத்துவத்துக்காகக் குரல் கொடுத்துப் பிரபலம் பெற்றவர்.
-அடிமைகளாகக் கொண்டு வரப்பட்ட பரம்பரையிலிருந்து வந்த அவரின் தாயாரான டோரியாவுக்கும் ஐரோப்பிய பாரம்பரியத்தைச் சேர்ந்த தோமஸ் மார்கிள் என்பருக்கும் மகளாகப் பிறந்து, ஓரளவான மத்தியதர வாழ்க்கைமுறையில் வளர்ந்தவர்.
-விவாகரத்துச் செய்து கொண்டவர்.
-2016ம் ஆண்டு கனடாவின் அம்பாஸிடராக 'வேர்ல்ட் விஸனில்' பங்கு பற்றியவர்.
2016ம் ஆண்டு பெண்கள் விடயம் பற்றி இந்தியா சென்றவர்.
-ஐக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து பெண்கள் விடயமாக வேலை செய்பவர்.
-பிரித்தானிய 'பிரக்ஷிட்'டுக்கு எதிரானவர்.ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்க விரும்புவர்
-2016ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக ஹிலரி கிளிண்டனுக்கு வேலை செய்தவர்
-அமெரிக்க அதிபதியான டொனால்ட் ட்ரம்பின் பரம வைரியான ஓபாமா குடும்பத்தின் நெருங்கிய சினேகிதி.
-ஹரியின் தாயார் டையானா மாதிரி ஏழைகளின் நலங்களில் அக்கறை கொண்டவர்
-இன்றைய உலகப் பெண் ஆளுமைகளில் முக்கியமானவராகக் கருதப் படுபவர்
-சமுக வலைத்தளங்களிலுள்ள இளம் தலைமுறையினரால் மிகவும் விரும்பப் படுபவர்.
-பிரித்தானிய அரச குடும்பத்தில் மிக மிகப் பிரபலமானவர்கள் ஹரியும் மேகனும் என்ற அடையாளத்தைக் கொண்டவர்.
-பிரித்தானிய அரசபாரம்பரியத்தின் இறுக்கமான கட்டுமானங்களைத் தாண்டிச் சில பணிகளை மக்களுக்குச் செய்ய வேண்டும் என்ற ஆவலையுடையவர்.
இப்படிப் பல காரணங்களால் பழைவாதமும், இனவாதமும் கொண்ட ஊடகவாதிகள்; அவரின் வாழ்க்கைக்குப் பல தர்ம சங்கடங்களையுண்டாக்கத் தொடங்கினார்கள்.அப்பட்டமாகச் சில பொய்களை எழுதத் தொடங்கினார்கள்
தனது தாய்க்கு ஊடகங்களால் நடந்த கொடுமையால் பாதிக்கப் பட்ட ஹரி, தனது மனைவியும் குழந்தையும் அரச சுகபோகங்களுக்காக எந்தக் கொடுமையையும் தாங்கவேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்ப்பதை நிராகரித்து வெளியேறுகிறார்.
ஹரியின் வெளியேற்றம் பற்றிக் குறிப்பட்ட' கார்டியன்' பத்திரிகை,
"அவர்கள் அரச குடும்பத்துடன் இணைந்தவர்கள்,ஆனாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமையுண்டு. அரச குடும்பத்தைப் பற்றி எழுதினால் பத்திரிகைகள் நன்றாக விலைபோகும் அதற்காகச் ஊடகங்கள், சில விடயங்களை உண்மைகள்போல் சித்தரித்து எழுதித் தள்ளுகிறார்கள். (பொது மக்களின் வரிப் பணத்தில் வாழும் அரச குடும்பம் அதைச் சகித்துக் கொள்ளவேண்டும் என்று ஊடகவாதிகள் நினைக்கிறார்கள்.ஹரி அந்த அரசபோகத்தைத் தன் சொந்த வாழ்வின் நலம் கருதி உதறி விட்டுச் செல்கிறார். ஹரியும் மேகனும் உலகின் கண்களுக்குப் பிரபலமாக இருப்பதால் அவர்களைச் சுற்றிச் சில ஊடகங்கள் விடாமல் சுற்றித் திரிகின்றன" என்று குறிப்பிட்டிருக்கிறது.
ஹரி அரச குடும்பத்திலிருந்து ஒரேயடியாக வெளியேறி விட்டாரா அல்லது, மகாராணியின் வேண்டுகோளின்படி சில அரச கடமைகளை ஏற்றுக் கொள்வாரா என்பது கேள்விக் குறி. ஹரியின் தந்தை இளவரசர் சார்ள்ஸ 70 வயதானவர். மகாராணிக்குப் பின் அவர் அரசரானால் அவருக்குத் துணையாக அவரின் இருமகன்களும் அவருக்குத்; துணை செய்யவேண்டும். அப்படியான காலகட்டத்தில், நாட்டுக்காகத் தனது உயிரைப் பணயம் வைத்து இராணுவத்தில் 15 வருடங்கள் சேவை செய்த ஹரி தனது தந்தைக்காக எதையும் செய்வார் என்று எந்தத் தயக்கமுமமில்லாமல் சொல்லலாம்.
இன்று,அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய ஹரி தம்பதிகள் எப்படி வாழுப் போகிறார்கள்? என்ற கேள்விக்குப் பதில். ஹரி ஏற்கனவே அவரின் தாயாரான டையானா வழியாகவும், கொள்ளுப் பாட்டியாரான எலிசபெத் அவர்களாலும் நிறைய சொத்துக்களை வைத்திருப்பவர். மேகன் ஹரியைக் காணமுதலே பெரிய பணக்காரி. அத்தோடு அவர்கள் பல திறமைகளுள்ள இளம் தம்பதிகள்.
உலகத்திலேயே மிகவும் பிரபலமான பிரித்தானிய அரச குடும்பத்தின் பழைசார்ந்த இறுக்கமான கட்டுமானங்களால் தங்கள் சுயமையைப் பறி கொடுத்துவிட்டு வெற்றுப் பொம்மைகளாகக் காட்சி கொடுக்காமல் அவர்கள் தங்களுக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்வதில் எந்தக் குற்றமில்லை என்கிறார்கள் அரச குடும்பத்தில் ஆர்வமுள்ளவர்கள்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems