அண்மையில் முனைவர் செல்லத்துரை சுதர்சன் அவர்கள் யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயரான செல்லன் கந்தையா அவர்களுடன் நடாத்திய நேர்காணலிது. இது பற்றி முகநூலில் காரசாரமாக விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் வெளிவந்திருப்பதால் இதற்கொரு முக்கியத்துவமுண்டு. இந்த நேர்காணல் பல விடயங்களை வெளிக்காட்டியுள்ளது. அவை:
* யாழ் முன்னாள் மேயர் செல்லன் கந்தையன் அவர்களின் அரசியல் குருக்கள் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர்கள். உடுப்பிட்டி எம்.பி. சிவசிதம்பரம் பல வழிகளில் அவருக்கு உதவியுள்ளார். தனது பதவியைப்பாவித்து 3000 ரூபா கடனெடுத்துக் கொடுத்து உதவியுள்ளார். தமிழர் கூட்டணித் தலைவர்கள் பலர் தந்தை செல்வா, அமிர்தலிங்கமுட்படப் பலர் அவரது திருமணத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்கள். தந்தை செல்வாவின் கையாள் என்று சொல்லக்கூடிய ஒருவர்தான் இவரது அண்ணர் தேவராசன். ஆலாலசுந்தரம், ஆனந்தசங்கரி போன்றவர்கள் எல்லோரும் இவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். தந்தை செல்வாவின் ஈமக்கிரியைகளின்போது அவரது தலைமாட்டிலிருந்து விசிறிக்கொண்டிருந்தவர் இவரே. இவையெல்லாம் எவ்வளவுதூரம் அவர் கூட்டணியின் தீவிர ஆதரவாளராக இருந்திருக்கின்றார் என்பதைப் புலப்படுத்துகின்றன. அதுதான் கூட்டணித்தலைவர்கள் இவரிடம் காட்டிய நெருக்கத்துக்கு மிக முக்கிய காரணமாக எனக்குத்தோன்றுகின்றது.
* சிறுபான்மைதமிழ்ச் சமுதாயத்தின் அரசியல் கட்சித்தலைவர்கள், சமூக, அரசியற் செயற்பாட்டாளர்கள் பலரும் இவருக்குத் தெரிந்தவர்கள். ஆனால் அதிகம் பழகியதில்லை. அவ்வப்போது சந்தித்துள்ளார்கள். ஆனால் இவரது அரசியலில் அவர்களது பாதிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.
* மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த ஒருவர், பெரிதாக வாசிப்புப் பழக்கமற்ற ஒருவர் , தொழிலாளியாக யாழ் மாநகரசபையில் சேர்ந்து வளர்ந்திருக்கின்றார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு யாழ் மேயராகவும் உயர்ந்திருக்கின்றார். ஆனால் அவ்விதம்
மேயரான பின்னரும் கூட இவர் நடந்தும் , இளைஞர்களின் உந்துருளிகளிலும் வேலைக்குச் சென்றுள்ளார். பின்னர் மாநகரசபை உறுப்பினர்கள் இவருக்கு வாகனம் வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி ,இலங்கை அரசிடமிருந்து வாகனமொன்றினைப் பெற்றுக்கொடுத்துள்ளார்கள். அவ்வாகனத்தையும் இவரே நேரில் சென்று பெற்று யாழ்ப்பாணம் கொண்டு வந்திருக்கின்றார்.
* தான் அரசியலில் சேர்ந்ததுக்குக் காரணம் சிற்பான்மைத்தமிழர்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமென்றுதான். யாழ் நூலகத்திறப்பு விழா நின்று போனதற்குக் காரணம் தான் அந்நிகழ்வில் பங்கு பற்றக் கூடாது என்பதற்காகத்தான். தன் பெயர் கல்வெட்டில் வரக்கூடாதுதான் என்பதற்காகத்தான். ஆனந்தசங்கரி அங்கு வருகின்றார் என்பதற்காகவல்ல என்று திடமாக நம்புகின்றார். ஆனால் அதுதான் உண்மையா இல்லையா என்பது வேறு விடயம். அது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நின்று விடப்போவதில்லை. ஆனால் முன்னாள் மேயர் அவர்கள் அவ்விதமே நம்புகின்றார். அவரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இந்நேர்காணல் இன்னுமொன்றையும் எடுத்துக்காட்டுகின்றது. சிறுபான்மைத்தமிழர்கள் எல்லோருமே ஒட்டுமொத்தமாக சிறுபான்மைத்தமிழரைப்பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் அமைப்புகளுடனிணைந்து செயற்படவில்லை. அவர்களில் பலர்
கூட்டணியையே ஆதரித்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தும் ஒரு பானையின் பதத்தை வெளிப்படுத்தும் ஒரு சோறு இந்நேர்காணல்.
மேலும் 2003 ஆம் ஆண்டு 'டெய்லி மிரரு'க்குக்கொடுத்த பேட்டியில் முன்னாள் மேயர் தங்களைத்திறக்க விடாமல் தடுத்ததற்கு தன் சமூகப் பின்னணிதான் காரணமென்று கூறியிருக்கின்றார். இதுவரையில் அவர் யாழ் நூலகத்துக்குள் காலடியெடுத்து வைக்கவில்லையென்றும் கூறுகின்றார். அதற்குக் காரணம் தன் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியென்று குறிப்பிடுகின்றார். தன் சமூகத்தைக் கேலி செய்யும் தினக்குரல் கேலிச்சித்திரத்துக்கும் காரணம் தான் பிறந்த சமூக அமைப்புதான் காரணமென்பதையும் ஏற்றுக்கொள்கின்றார். மேலும் தனக்குப்பின் பதவியேற்ற மாநகரசபை நிர்வாகம் தன் பெயர் அடங்கிய கல்வெட்டைப் அங்கு பதித்ததாகவும், தற்போதுள்ள மாநகரசபை அதனை நீக்கி விட்டதாகவும் குறிப்பிடுகின்றார். இதற்குத் தற்போதுள்ள மாநகரசபை நிர்வாகம் பதில் கூற வேண்டும். முன்னாள் மேயரின் மனத்தில் தன் காலத்தில் நூலகம் திறக்கப்படாதென்பதற்கான காரணம் தன் சமூகப் பின்னணிதான் என்பதுதான் உறுதியாகவுள்ளது. இல்லாவிட்டால் அவர் இப்போது நூலகத்துச் செல்லலாமே. என்னைப்பொறுத்தவரையில் அவரது பெயர் அடங்கிய கல்வெட்டைத் தற்போதுள்ள மாநகரசபை நிர்வாகம் நீக்கியதும் தவறானது. அரசியலுக்கு அப்பால் சிறுபான்மைத்தமிழ்ச் சமூகமொன்றினைச் சேர்ந்த மேயர் ஒருவர் என்னும் அடிப்படையில் அதனை நீக்காமல் விட்டிருக்கலாமென்றே தோன்றுகின்றது.
இந்நேர்காணலை எழுத்தாளர் பெளசரும் முகநூலில் பகிர்ந்திருந்தார். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் ப.ஶ்ரீரங்கன் "இதைக் கூர்மைபடுத்தி நம்மைப் பிளந்தவர்கள்,தற்போது தமிழ்பேசும் வட மாகாண மக்களைப் பிளந்து ,நம்மை மேலும்
சிதறடிக்க எடுக்கும் ஆயுதம் 'சாதியப்பாகுபாடு—சாதிய ஒடுக்குமுறை' என்ற மிகப் பயங்கரமான சூழ்ச்சிமிக்க ஆயுதமாகும்" என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே பிரதேச வேறுபாடுகளைக் காரணமாக வைத்து, வடக்கு,கிழக்காகப்பிளந்தவர்கள் இப்போது , வட மாகாணத்து மக்களைச் சாதி ரீதியாகப் பிளக்கப்போகின்றார்கள் என்று ஶ்ரீரங்கன் அச்சப்பட்டிருந்தார்.
இந்தியாவிலுள்ளதைப்போல் இலங்கையில் சிறுபான்மைத்தமிழரின் பிரச்சினைகள் கடுமையாக இல்லாவிட்டாலும் இன்னும் உள்ளது. அந்தப்பிளவுகள் அவ்வப்போது வெளியே தெரியத்தான் செய்கின்றன. அதன் ஒரு விளைவுதான் ஆலயத்தேரை இராணுவத்தினர் இழுத்தது.
இவ்வகையான தீண்டாமைப்பிளவுகளைக்காட்டி ஏனையோர் பிளவுபடுத்தாமலிருக்க வேண்டுமென்றால், இவ்விதமான பிரச்சினை நம்மவர் மத்தியிலிருந்து முற்றாகக் களையப்பட வேண்டும். அதற்கு ஒவ்வொரு முறையும் சிறுபான்மைத்தமிழருக்கு அநீதி இழைக்கப்படுவதற்கெதிராக அனைத்துத் தமிழ் மக்களும் குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும். அவ்விதம் செய்வதோடு நின்று விடாமல் தீண்டாமைக்கெதிராக அரசியல்ரீதியில் கடுமையான பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும். அவ்விதம்
செய்தால் அனைவரும் ஒன்று என்று எண்ணும் நிலை வரும். இல்லாவிட்டால் இருக்கும் பிளவுகளை மேலும் பிளவுபடுத்த எதிரான அரசியல் சக்திகள் நிச்சயம் முயற்சி செய்யும்.
இங்கு எதிர்வினையாற்றுபவர்கள் தர்க்கப்பண்புடன் அவற்றையாற்றுவார்கள் என்று நம்புகின்றேன். இப்பதிவு நண்பர்களுக்கிடையிலானது. எதிரிகளுக்கிடையானதல்ல.
முனைவர் செல்லத்துரை சுதர்சன் முன்னாள் மேயருடன் நடாத்திய நேர்காணல்: https://www.youtube.com/watch?v=qdHyALlJA2w&feature=youtu.be&fbclid=IwAR20p8OuVj8zJXZuHZlKZNAWKWaIw8TSzhEkEPdYNMgQtVOoyi53Vy2R0uQ
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems