முன்னுரை
தமிழ்நாட்டில் இந்து, இஸ்லாமியம், கிறித்தவம், ஆகிய பல தரப்பட்ட சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றன. பல சமயத்தைச் சார்ந்த மக்கள் தங்களின் நிறுவனங்கள் கட்டமைத்துள்ள முறைகளையும், வழிபாடுகளையும், பின்பற்றுகின்றனர். மக்கள் தங்கள் சமய சட்டங்களை கடைபிடித்தாலும், வெகுசன மக்களாகிய அவா்களின் உள்ளங்களில் உயிராய் கலந்துகிடக்கின்ற நாட்டார் பண்பாட்டின் தாக்கம் அவா்களின் வாழ்வில் விழாக்களில் அதிகம் காணப்படுகின்றன என்று பல நாட்டார் வழக்காற்றியல் அறிஞா்கள் கூறுகின்றனர். நாட்டார் பண்பாடு தென்தமிழக, கிறித்துவ மக்களின் விழாக்களில் பரந்து விரிந்த தன்மை குறித்து ஆ.சிவசுப்பிரமணியன், பிலவேந்தரின், இருதயராஜ் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர் இந்நிலையை நாட்டார் பண்பாடு வடத்தமிழகத்தில் கத்தோலிக்க கிறித்துவ விழாக்களில் எவ்வாறு அடித்தளமிட்டுள்ளது. என்பதை பற்றி ஒரு சில விழாக்களில் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.
புனித வியாழன்
“பெரியவியாழன் அல்லது புனித வியாழன் என்பது கிறித்தவா்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாள்களை நினைவுகவா்ந்து உயிர்ப்பு ஞாயிறுக்கு முன்வரும் வியாழன் அன்று கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது Holy Thusday Maundy Thusday என்றும் அழைக்கப்படுகிறது.”1
இயேசு தான் சிலுவையில் பாடுகள் படும் முன் தினம் இரவு கெஸ்தமணி தோட்டத்தில் செபித்தார் அதை நினைவுக் கூறும் வகையில் அனைத்து கிறித்துவ கோவில்களிலும் “மாற்றுப் பீடம் அமைத்து மக்கள் அன்பின் வாரியாக வந்து விளக்குகளை ஏற்றி அன்று இரவு முழுவதும் கண்விழித்து இயேசு அணுபவித்த துன்பத்தை தானும் உணரவேண்டும்”2 என்று திரு.அ.மாரியநாதன் அவா்கள் கூறுகின்றார். இந்த நிகழ்வு ஒருவா் இறந்துவிட்டார் இரவு முழுவதும் இருந்து வேண்டுவதை குறிக்கும் ஒரு நாட்டார் நம்பிக்கையாக கருதப்படுகிறது.
புனித சனி
திருச்சபை பழங்கால முறைப்படி பெரிய சனி என்பது கிறித்துவ மக்கள் தம் ஆண்டவராகிய இயேசுவின் கல்லறையின் பக்கம் நின்று அவருடைய பாடுகளின் சாவு பற்றி தியானிக்கின்ற நாளாகக் கொண்டாடுகின்றது. இது அமைதியின் நாளாக திருச்சபை அனுசரிக்கின்றது.
“புனித சனி அன்று இயேசு இறந்து விட்டதை எண்ணி வாசலில் சானி தெளித்து கோலம் போடுவதை தவிர்ப்பார்கள் அன்று மக்கள் அரிசி கஞ்சி சோறு மட்டும் உண்ணுவார்கள்.”3
இந்த நிகழ்வை நம் வீட்டில் யாரேனும் இறந்து விட்டார் வாசலை சாணம் தெளித்து கோலம் போடமாட்டோம் அல்லவா அதே போல இயேசு வைப்பும் நம் வீட்டில் ஒருவராக நினைத்து ஆய்வு இப்பகுதியில் மக்கள் இந்த முறையை கடைப்பிடிக்கின்றது இது ஒரு நாட்டார் பண்பாடாகவே கருதப்படுகிறது.
பாஸ்கா விழா (ஈஸ்டா்)
இவ்விழா இயேசு மரித்து பின் உயிர்த்தெழுந்தார் என்ற நிகழ்வை நினைவுக் கூறும் விதமாக அமைகிறது. இவ்விழாவை கிறித்துவா்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்றனர்.
கிறித்துவா்கள் பாஸ்கா விழா (ஈஸ்டா்) திருப்பலி முடிந்தவுடன் “மக்கள் தங்கள் கையில் இருக்கும் மெழுகு திரிகளை அணையாமல் தங்கள் வீட்டுக்கு எடுத்து செல்வார்கள் இவற்றை மக்கள் புனிதப்பொருளாக கருதுவார்கள் புதிய ஒளியின் நினைவாக எடுத்து செல்வா். பின் மந்திரித்த தண்ணீா் ஒரு சொட்டாக இருந்தாலும் அதை கோவிலில் இருந்து எடுத்து சென்று நிறைய நீருடன் கலந்து வீட்டை சுற்றி தெளிப்பா். அப்படி தெளித்தால் வீட்டில் போய் வராது நோய் நொடியும் வராது என்பது என்பது கிறித்துவா்களின் நம்பிக்கையாகும்”4 இங்கு இந்த நம்பிக்கை ஒரு நாட்டார் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது என்று திருமதி.எஸ்.சகாய மேரி கூறிப்பிடுகிறார்.
கிறித்துவின் திருவுடல் திருஇரத்த பெருவிழா
கிறித்துவின் திருவுடல் திருஇரத்த பெருவிழா மூவொரு கடவுள் பெருவிழாவை அடுத்து வரும் ஞாயிற்று கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. இயேசு நற்கருணையில் உடலும், இரத்தமுமாக இருக்கின்றார் என்பதை உணா்த்து வதை நினைவுக் கூறும் விதமாகக் கொண்டாடப்படுகிறது.
“இவ்விழா தெருக்களில் அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் இயேசுவின் திருவுடல் உள்ள ஓமக்கலனை வைத்து ஆராதிப்பார். அன்பியவாரியாக பீடம் அமைத்து விவிலியவாசகங்கள் பாவிப்பார். இதில் புதியாக நற்கருணை விருந்து பெற்ற குழந்தைகள் பூவை தெளித்து ஒவ்வொரு இடத்திலும் ஊா் முழுக்கவருவா். இது பூத்திருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விழாவில் மூலம் இயேசுவின் இந்த திருவுடல் தான் உண்மையான ஆன்மாவை தூய்மைப்படுத்தும் உணவு என்று இவா்கள் நம்புகின்றனர்.”5 என திருமதி.வி.விக்டோரியா கூறுகிறார்.
மறைப் பங்கு பாதுகாவலா் விழா
(புனித வனத்தச் சின்னப்பா் தேவாலயம் கல்பட்டு) ஒரு மறைமாவட்டத்தில் கீழ் இயங்கும் பங்கில் ஒரு புனிதரை பாதுகாவலராக நியமித்து அவருக்காக அப்பங்கில் விழா எடுத்து சிறப்பித்து பங்கு பாதுகாவலா் விழா என்று அழைக்கப்படுகிறது. ஆய்வும் பகுதியில் எல்லா ஊா்களிலும் வைத்து திருவிழா எடுக்கப்படுகிறது. இங்கு கல்பட்டில் கொண்டாடும் விழாவைப் பார்ப்போம் புனித வனத்த சின்னப்பா் திருத்தலம் விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் கி.பி.1898 ஆம் ஆண்டு கல்பட்டு கிராமத்தை சோ்ந்த கல்யாண ஐயா் குடும்பத்தைச் சோ்ந்த சுப்பிரமணி ஐயா் ஒருநாள் காணாமல் போன மாடுகளை தேடி போனபோது தற்போதுள்ள பழைய கோவிலை ஒட்டினார் போல புதா் செடிகள் இருந்தன, மாலையில் சிலுவை அடையாளம் தோன்றி மறைந்தது போல காட்சி கண்டார் மணியோசையுடன் தூப நறுமணமும் கண்டார். ஒரு புதா் செடியின் பக்கத்தில் பின் அவா் வீடுசென்று உரங்கிவிட்டார். அப்போது கனவில் வெள்ளைக் குதிரையில் துறவிப் போன்று ஒருவா் தோன்றி நானே! வனத்துச் சின்னப்பா் பகலில் காட்சி கண்ட இடத்திற்கு சென்றால் உன் மாடுகள் கிடைக்கும் என்று கூறி மறைந்தார்.
பின் காலையில் எழுந்து கிறித்தவரான சூரப்ப வாத்தியார் குமார் கலங்காணிமுத்து என்பவரிடம் நடந்ததைச் சொன்னார். பின் அவருடன் இன்னும் சிலரும் சென்று பார்த்தபோது அந்த இடத்தில் மாடுகள் கிடைத்தன, பின் மக்கள் இந்த காட்சிக்கு பிறகு அந்த இடத்தில் புல், செடி, கொடிகளை, புதா்களையும் சுத்தம் செய்து மேடைகட்டி சிலுவை குச்சிவைத்து மண்கூடு விளக்கேற்றி நாள்தோறும் புனித வனத்துச் சின்னப்பரை பக்தியுடன் வேண்டி பல விதமான அற்புதங்களையும் வரங்களையும் பெற்று சென்றனா். இந்த செய்தியை கேட்டு மக்கள் திரண்டு வந்து புனிதரின் மகிமையை கண்டு கொண்டாடி மகிழ்ந்தனா்.
“பின் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த புனிதரின் சுருபம் வந்த பார்சல் ஏற்றிவந்த இரயில் மாம்பழப்பட்டு இரயில் நிலையம் வந்தவுடன் நகராமல் இருந்ததாகவும், அந்த பார்சலை எடுத்தப்பின் இரயில் தானாக போக ஆரம்பித்ததாகவும், பின் அப்பொழுது முகையூரின் பங்கின் கீழ் இயங்கிய இந்த ஊா், பங்கு குருவிற்கு இந்த செய்தியை சொல்லி பின் குரு வந்து அவருடனும் மக்கள் வந்து அந்த சுருபத்தை எடுத்துச் சென்றார்கள் என்று வாய்மொழியாகவும், செவிவழியாகவும் அறியப்பட்டது என்றும் இது ஒரு வெகுசன மக்களிடம் பரவியிருக்கிற நாட்டார் கரையாகவும் கருதப்படுகிறது.”6
திருமதி.எஸ்.புனித என்பவா் குறிப்பிடுகிறது.
முடிவுரை
கிறிஸ்துவ மக்களின் விழாக்களில் தென்மாவட்டங்களில் நாட்டார் பண்பாடு பரந்து காணப்படுகின்றன. அங்கு மட்டும் இல்லாமல், வடத்தமிழகத்திலும் நாட்டார் பண்பாடு, கதைகள், நம்பிக்கைகள், பழக்கங்கள், வழக்கங்கள் மூலம் வடதமிழகத்திலும் விழுப்புரம் மாவட்டத்தில் வாழும் கத்தோலிக்கா்களின் திருவிழாக்களில் நாட்டார் பண்பாடின் தாக்கம் காணப்படுகின்றது என்று நாம் அறிந்துக்கொள்ள முடிகிறது.
சான்றெண் விளக்கம்
1.ta.m. Wikipedia.org
2.நோ்காணல் : திருமதி.அ.மரியநாதன்
3. நோ்காணல் : திருமதி.எஸ்.நிர்மலா
4. நோ்காணல் : திருமதி.எஸ்.சகாய மேரி
5. நோ்காணல் : திருமதி.வி.விக்டோரியா
6. நோ்காணல் : திருமதி.சே.புனிதா.
* கட்டுரையாளர்: - எஸ்,வயோலா, ஆய்வியல் நிறைஞர் ,க்தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, விழுப்புரம், இந்தியா -
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.


© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems