சிறுகதை: அவனும் அவளும் - முனைவா் சி. இரகு , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இலொயோலா கல்லூரி, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம். -
கத்தரி வெயில் கொளுத்தோ கொளுத்தென கொட்டிக் கொண்டிருக்க, ரகு சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ஒரு ஓரமாய் பேருந்திற்காகக் காத்துக்கொண்டிருந்தான். மூன்று புறங்களிலும் பேருந்து கிழக்கு, மேற்கு, தெற்காக முப்புறங்களிலும் சென்றுகொண்டிருந்தன. ரகு வடக்கிலிருந்து வருகின்ற ஒவ்வொரு பேருந்தை எல்லாம் உற்றுநோக்கிக்கொண்டிருந்தான். ஒரு புறம் வெயிலின் தாக்கம் அதிகமாய்கொண்டே போயிருக்க. அவன் உடல் முழுவதும் வியா்வைத் துளிகள் வெளிவரத் தொடங்கின. கதிரவனின் தாக்கம் அளவுக்கதிமாகவே போய்க்கொண்டிருந்தது.
சற்றுநேரம் கழித்து திருச்சியிலிருந்து கரூா் செல்லக்கூடிய PRT தனியார் பேருந்து ஒன்று வந்தது. அப்பேருந்து வருவதை அறிந்த ரகு பேருந்தினை உன்னிப்பாகக் கவனித்கொண்டே இருந்தான். பேருந்து முன்புறம் கண்ணாடியை ஒட்டியே ஒரு மங்கை ஒருத்தி உட்காந்திருந்தாள். அவளைக் கவனித்துக்கொண்டே முன்புறம் ஏறலாமா, பின்புறம் ஏறலாமா என்று எண்ண்ணிக்கொண்டே ஒரு வழியா பின்புற படிக்கட்டில் ஏறினான்.
பேருந்தில் ஏறிய பின்னா் கடைசி சீட்டுக்கு முன்னாடி சீட்டுல இடம் இருந்தும் உட்காராமல் நின்று கொண்டே இருக்கின்றான். ரகுவின் தோழா்கள் புதியதாய் ஆடை எடுத்து கொடுத்ததை உடலுக்கு ஏற்றவாறு நன்றாக தைத்து ஒரு புதுமையான தோற்றத்தில் இருந்தான். ஆள் பாதி ஆடை பாதி என்னும் பழமொழிக்கு ஏற்றவாறு பெண்களுக்கே பிடித்தமான பிங்க் கலா்ல சட்டைய உடுத்திக்கொண்டு, அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆபீசர் போல இருந்தான்.
பேருந்தில், கண்ணாடி முன்னாடி உட்கார்ந்திருந்த அவள் பேருந்து செல்லும் எதிர்திசையை நோக்கி பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த பெண்ணை ரகு முதலில் பார்த்தான், தலையை கீழேபோட்டான். அவளும் பார்த்து பார்க்காத மாதிரி இருந்தாள். மீண்டும் அவளை ரகு பார்க்கின்றான், பார்த்த மறுகணமே மீண்டும் தலையை கீழே போட்டுவிடுகின்றான். பிறகு மனதை தைரியமாக வைத்துக்கொண்டு பார்க்கின்றான்.
அப்பொழுது ரகுவிற்கு ஓா் எண்ணம் உதயமானது. என்னவென்றால் வகுப்புத் தோழி வினோத்தீ ரகுவிடம் ஒரு பெண்ணை வச்சக்கண்ணு வைக்காம தொடா்ந்து பார்த்துகிட்டே இருந்தா எந்த பெண்ணாக இருந்தாலும் மடக்கிடலாம்னு சொன்னது நினைவுக்கு வந்தது. அதனால் ரகுவும் தொடா்ந்து இரண்டு முறை மூன்று முறை பார்த்துக்கிட்டே இருந்தான். அவளும் பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்தவள் அவனை தொடா்ந்து பார்க்கத் தொடங்குகின்றாள்.


எதிர்ப்பார்க்கப்பட்டது போல், ஜெய்சங்கரின் வருகையின் பின், பல்வேறு சக்திகள், பேச்சுவார்த்தையின் தாக்கத்தை முற்றாக இல்லாதொழிக்கவோ என்னவோ, கங்கணம் பூண்டாற் போல், வரிந்து கட்டி களத்தில் இறங்கியுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. இதில், முதலாவது வெடி ஓசை, ஜனாதிபதி அவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டது. அதாவது, ஜெய்சங்கர், பேச்சுவார்த்தை முடித்து நாட்டை விட்டு கிளம்பிய கையோடு, அன்னார், தமிழ் தலைவர்களை பேச அழைத்துள்ளார். ஜனாதிபதியின், பேச்சுக்கான இவ் அழைப்பை பலர் நிராகரித்துள்ள வேளை, சம்பந்தனும் சுமந்திரனும், கிளம்பி ஜனாதிபதி அவர்களை சந்தித்துள்ளனர். இதற்காரன காரணம், சுமந்திரன், ஜெய்சங்கரிடமே தெரிவித்துள்ளது போல், பேச்சுவார்த்தைக்கு இந்நாட்டின் உயர்பீடம் அழைக்கும் போது, அப்பேச்சுவார்த்தைகள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், நாங்கள் அதில் பங்குபற்றாவிட்டால், பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாரில்லாதவர்கள் - அதுவும் அழைத்த போதும் கூட, என்ற அவபழிக்கு ஆளாகும் சூழ்நிலையிலேயே, இவ்வாறு கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தங்கள் எழுகின்றன என்று கூறப்பட்டாற் போலும் இருக்கலாம். இருந்தும், இது, தமிழ் தலைவர்களிடையே பிளவுகளை உருவாக்க கூடியது என்பதில் ஐயமில்லை. 

கலாநிதி செல்லத்துரை சுதர்சன் கடந்த சுமார் இருபது ஆண்டுகளாக ஈழத்து இலக்கிய உலகில் தீவிரமாகச் செயற்பட்டுவரும் இளந் தலைமுறையைச் சேர்ந்த ஒரு முக்கியமான ஆளுமையாக அறியப்படுபவர். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில்; சிறப்புப் பட்டம் பெற்று, அங்கேயே சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றிவருகிறார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழ்நாட்டின் முக்கியமான எழுத்தாளர்கள், விமர்சகர்கள், அறிஞர்களுடன் நெருக்கமான உறவு உடையவர். ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் என்றவகையில் தமிழியல் ஆய்வில் ஆழமாகத் தடம்பதித்துவருபவர். முக்கியமான ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். ஆசிரியர், பதிப்பாசிரியர் என்றவகையில் இதுவரை சுமார் இருபது நூல்கள் வெளியிட்டுள்ளார். இளந் தலைமுறையைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களுள் இவரளவு தீவிரமாகச் செயற்படுபவர்கள் மிகச் சிலர் என்றே சொல்லவேண்டும்.
ஆறுமுகத்தாற்றை முகம் பெருத்த யோசனையில் ஆழ்ந்திருந்தது. தலையை பக்கவாட்டில் குலுக்கிக் கொண்டார். எதுவும் தோன்றவில்லை. மேலும் கீழுமாகப் பார்த்து யோசித்தார். அதுவும் சரிவரவில்லை.ஒழுகும் மூக்கைப் துடைப்பதற்கு என்று கைகாவலாக வாயில் கவ்வும் கை லேஞ்சியையும் வழமை போல கவ்விக் கொண்டார். அவனிட்டையாவது கேட்டுப் பாப்பம். 






இந்திய தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் 55% முதல் 60% வரை தமிழ் மொழியில் உள்ளன. இந்திய தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட 100,000 கல்வெட்டுகளில் சுமார் 60,000 கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் இருந்ததையும் , கல்வெட்டும் பட்டியலில் தமிழ் மொழியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் தான் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. சில தமிழ் கல்வெட்டுகள் இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும், இலங்கை, தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல பர்மாவில் காணப்படும் அயல் மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகளின் பட்டியலில் தமிழும் ஒன்று. 

வ.ந கிரிதரன் கனடாவில் வாழ்ந்து வருகிறார். புலம்பெயர்ந்த ஈழப்படைப்பாளிகளில் ஒருவர். இலக்கியத்துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். பதிவுகள் இணைய இதழின் ஊடாக உலகில் வாழும் தமிழ்ப்படைப்பாளர்களின் படைப்புக்களை குவிமையப்படுத்தி வருகிறார். அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ பற்றி இக்கட்டுரை நோக்குகின்றது.
அமரர் பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்கள் இறுதிவரை, தன் உடல் நிலை இடம் கொடுக்கும் வரை எழுதிக்கொண்டிருந்தார். இங்கு அவர் நினைவாக அவர் என் முகநூல் பதிவுகளுக்கு எழுதிய எதிர்வினைகள், முகநூல் உரையாடலில் பகிர்ந்த கருத்துகள், அனுப்பிய மின்னஞ்சல்கள் ஆகியவற்றில் முக்கியமானவற்றைப் பகிர்ந்துகொள்கின்றேன். இவை ஒருவகையில் ஆவணங்களாகவும் இருக்குமென்பதால் இவ்விதம் பகிர்ந்துகொள்வது நல்லதேயென்றும் தோன்றுகின்றது.
தை பிறக்கப் போகுதடி தங்கமே தங்கம்




அவுஸ்திரேலியாவின் நியுவ் சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கிராவின் புறநகரின் ’புனித அந்தோனியார்’ ஆரம்பப்பள்ளிக்குள் நுழைந்த பிரியா, தன் மகள் கீர்த்தியின் முதலாம் வகுப்பை அடைந்ததும், “வாடா குஞ்சு, வீட்டைப் போகலாம்,” எனக் கீர்த்தியை அன்போடு தூக்கிக் கொஞ்சிய பிரியாவை உற்று நோக்கி புதிதாக பார்ப்பது போல் பார்த்தாள் கீர்த்தி. திரும்பி நன்சிக்கு பக்கத்தில் நின்ற அவளது தாயாரையும் பார்த்தாள். ”இன்றைக்கு என்ன செய்தீங்கள்? கைவேலை செய்தீங்களா?” எனக் கேட்டபடி நன்சியைத் தூக்கிக் கொண்டுபோன அவளது தாயையும். பிரியாவையும், மாறி மாறிப் பார்த்தாள். அவளது சின்ன மூளைக்கு எதுவுமே புரியாது குழம்பியது. அந்தச் சின்ன மூளைக்கு எதோ புரிகிற மாதிரி இருந்தது ஆனால் புரியாத மாதிரியும் இருந்தது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









