'டொராண்டோ' கலை, இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பாபு பரதராஜா இன்று (08-08-2017) மறைந்த செய்தியை முகநூல் தாங்கி வந்தது. பாபு பரதராஜாவின் பங்களிப்பு பற்றிய தேடகம் அமைப்பு வெளியிட்ட முகநூற் செய்தியினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். கனடாக் கலை, இலக்கிய வரலாற்றில் நடிகராக, அருவி நிறுவனம் மூலம் 'யுத்தத்தைத் தின்போம்' கவிதைத்தொகுப்பையும், 'காற்றோடு பேசு', மற்றும் 'புலரும் வேளையிலே' இசை இறுவட்டுகளையும் வெளியிட்டதன் மூலம் பதிப்பக நிறுவனராக, மனவெளி கலையாற்றுக் குழுவைத் தன் நண்பர்கள் துணையுடன் உருவாக்கியதன் மூலம் கனடாத் தமிழ் நாடக உலகை நவீனப்படுத்தியவர்களில் ஒருவராகக் காத்திரமாகத் தடம் பதித்துச் சென்றிருக்கின்றார் பாபு பரதராஜா. அவரது இழப்பால் துயருறும் அனைவர்தம் துயரையும் பகிர்ந்துகொள்கின்றோம்.அன்னாரின் உடல் இறுதி மரியாதைக்காக
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave.
Markham, On
L3R 5G1
வெள்ளி (11-08-17) மாலை 5:00-9:00 மணி வரை
ஞாயிறு (13-08-2017) காலை 10:00-11:00 மணி வரை
வைக்கப்பட்டு
தகனம்
ஞாயிறு (13-08-2017) மதியம் 12:00 மணி
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres ல் இடம்பெறும்
1591 Elgin Mills Road East
L4S 1M9



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









