மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகள் பற்றி.. - வ.ந.கி -

மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனாவின் சாவகச்சேரி மருத்துவ நிலையக் குறைபாடுகள் ,மற்றும் யாழ்ப்பாணத்தில் மருத்துவர்கள் சிலரின் நடவடிக்கைகள் பற்றிய காணொளிகளைப் பார்த்தேன். இவர் கூறும் மருத்துவச் சீர்கேடுகள் முக்கியமானவை. தீர்க்கப்பட வேண்டியவை. இவற்றைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்ததற்காக இவரைப் பாராட்டலாம்.
அதே சமயம் பொதுவெளியில் நடந்து கொள்ளும் இவரது ஆளுமை அம்சங்கள் விடயத்தில் இவர் சிறிது கவனம் எடுக்க வேண்டும். தனக்குச் சார்ப்பான விடயம் நிரூபிக்கப்படும் சந்தர்ப்பங்களில் இவர் குழந்தையைப் போல் துள்ளிக் குதிக்கின்றார். ஊடகவியலாளர் ஒருவருடன் இன்னுமொரு மருத்துவர் பற்றி உரையாடும் சமயத்தில் , அவ்வூடகவியலாளர் இவர் குற்றஞ் சுமத்தும் மருத்துவரை வானலைக்கு அழைக்கையில் அம்மருத்துவர் இணைப்பைத் துண்டித்து விடுகின்றார். அம்மருத்துவர் செய்தது சரியான செயல். உடனே இவர் துள்ளிக் குதித்து 'நான் சொன்னேன் பார்த்தியா' என்பதுபோல் ஏதோ கூறுகின்றார்.
இவர் இன்னுமொரு மருத்துவருடன் அவருக்குத் தெரியாமல் தொலைபேசியில் உரையாடிக்கொண்டே , அம்மருத்துவரின் உரையாடலை ஒலிப்பதிவு செய்கின்றார். அம்மருத்துவரோ ஆளுமை விடயத்தில் இன்னும் கீழ்த்தரமாக நடந்துகொள்கின்றார். பரதேசி என்று வார்த்தைப் பிரயோகமும் செய்கின்றார்.


( அ ) 1948ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பிரஜா உரிமை பறிப்பு சட்டம் ஒன்றை கொண்டுவந்து பிரஜா உரிமையையும் வாக்கு உரிமையையும் பறித்து அவர்களை நாடற்றவர் ஆக்கி அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கே போய்விடவேண்டும் என்று கோஷமிட்டார்கள். இந்திய வம்சாவழி மக்கள் இடதுசாரிகளுடன் சேர்ந்து இந்த நாட்டின் அரசாட்சியை கைப்பற்றி விட கூடும் என்று அச்சம் அப்போது எழுந்தது.




தற்போதுள்ள அரசியல்வாதிகளில் மிகுந்த அரசியல் ஞானம் மிக்கவராக (கல்வி, அரசியல்) இவரை என்னால் அடையாளம் காண முடியும். இவர் மார்க்சிய அறிஞர்களில் ஒருவர். எண்பதுகளில் இவரது மார்க்சியக் கட்டுரைகளை 'குமரன் ' சஞ்சிகையில் வாசித்திருக்கின்றேன். ஆனால் இவர் தற்போது இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியமானவர்களில் ஒருவர் அல்லர். இவர் தற்போது தனது அனுபவங்களைக் கடைந்தெடுத்து உருவான ஞானத்தை வெளிப்படுத்தும் எண்ணங்களை வெளிப்படுததி வருகின்றார்.
“ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா " எனும் இந்த வாசகம் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்கள் ஒரு திரைப்படத்தில் பேசி எமையெல்லாம் சிரிக்க வைத்தார். எதற்காக இந்நேரத்தில் நான் இதைக் கூறுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். இன்றைய இங்கிலாந்தின் அரசியல் அரங்கத்தில் மேடையேறும் காட்சிகளுக்கும் இவ்வாசகத்துக்கும் பொருத்தமிருக்கும் எனும் எனது பிரதிபலிப்பே அதற்குக் காரணமாகும். ப்ரெக்ஸிட் எனும் படகில் ஏறி தனது அரசியல் பயணத்தின் இலட்சியமான பிரதமர் எனும் பதவியைத் தனதாக்கிக் கொண்டார் எமது பிரதமர் பொரிஸ் ஜோன்சன். மிகவும் உற்சாகத்துடன் ப்ரெக்ஸிட் எனும் சிக்கலுக்குத் தீர்வு கண்டு விட்டேன் என்ற கோஷத்துடன் ஓரளவு மக்கள் ஆதரவுடன் இடைத்தேர்தலைச் சந்தித்த அவர் 80 பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைத்துக் கொண்டார்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









