ஆய்வுகட்டுரை வாசிப்போமா?மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை சடங்குகளும் வழிபாடுகளும் இரண்டறக் கலந்தவையாக இருக்கின்றன. இயற்கையைச் சரிவர உணராத தொன்மைச் சமுதாயத்தில் வழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் தனித்ததொரு இடமிருந்ததை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. சடங்குகள் சமுதாயத்தின் பழக்கவழக்கங்களை சமுதாயத்தைக்கட்டமைக்கும் உறுப்பினர்களின் கடமைகளை அவர்தம் நிலைப்பாட்டை உணர்த்துவனவாகவும் உள்ளன. ஆடை, அணிகள் குறித்து விவாதம் ஏற்படும் இன்றைய சூழலில் மனிதனை அடையாளப்படுத்தும் ஆடை அணிகலன் குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆணுக்குக் கழல் அணியப்பட்ட நிலையில் பெண்ணுக்குச் சிலம்பு ஏன்?  திருமணத்திற்கு முன் காலில் அணியப்பட்ட  சிலம்பு வதுவைச்சடங்குக்கு முன் கழியப்படுவது ஏன்? என்ற வினாக்களுக்கு விடைகாணும் முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.சிலம்பு குறித்த பதிவுகளை நோக்க அகநானூற்றுப்பாடல்கள் மூலமாக அமைகின்றன.

சிலம்பு ஒரு குறியீடு

கயமனாரின் செவிலித்தாய் தலைவனுடன் உடன்போக்கு மேற்கொண்ட தன் மகளைக் குறித்து, ‘ஏதிலாளனது நெஞ்சு தனக்கேயுரித்தாகப் பெற்ற எனது சிறிய மூதறிவுடையவளது சிலம்புபொருந்திய சிறிய அடிகள் மேகங்கள் பொருந்திய பெரியமலைகள் குறுக்கிட்டு நிற்கும் சுரநெறியில் செல்லுதற்கு வல்லுநவோ’ என்றுகூறி வருந்துகிறாள்1. வண்ணப்புறக்கந்தரத்தனாரின் பாடலிலும் செவிலி, ‘மானின் கூட்டம் வற்றிய மரச்செடியினைச் சுவைத்துப் பார்க்கும் காட்டில் வலிமைமிக்க பெருந்தகையாய தலைவன் இவளைப் பலபடியாகப் பாரட்டி உலர்ந்த நிழலிலே தங்கி இவளை உடன்கொண்டு கழிதலை அறியின் இவள் தந்தையது தங்கும் உணவுமிகுந்துள்ள காவல் பொருந்தியப் பெரியமனையில் செல்லும் இடம்தொறும் இடந்தொறும் உடம்பின் நிழலைப் போலச் சென்று கோதையையுடைய ஆயத்தாரொடு விளையாடும் விளையாட்டினை மேற்கொண்டு தொகுதிவாய்ந்த பரலினையுடைய சிலம்பு ஒலிக்க அவள் விளையாடும் இடந்தொறும் அகலாதிருப்பேன் அது கழிந்ததே என வருந்துகிறாள்2.

மற்றொரு பாடலில் பொற்றொடி ஒலிக்கக் கைகளை வீசியும் சிவந்த அடியில் சிலம்புகள் விளங்கவும் சென்ற தலைவியைக் காண முடிகிறது3. பரணர் தம் பாடலில் ‘பாதியிரவில் மழையில் மறைந்து மணம்கமழும் கூந்தலுடன் வில்லினைப் போலும் வகையமைந்த நன்மை பொருந்திய குடச்சூலாகிய அழகிய சிலம்பினை ஒலியாது அடக்கி அச்சத்துடன் வந்து ஊர்முழுதும் துயிலும் யாமத்தில் நம்மைத் தழுவி மீள்வோள் நிறைந்த கற்பினால் உயர்ந்த பெருமையுற்ற அழகிய மாமை நிறமுடைய பெண்ணோ அல்லள்; சுனையில் உறையும் சூரரமகளே அவள்’ என்று கூறும் தலைவனைப் பதிவுசெய்கிறார்4. உடன்போக்கு மேற்கொண்ட மகளைப் பற்றிய செவிலியின் கூற்றாக அமையும் கயமனாரின் பாடலும், ‘தாய் அறிதலை அஞ்சி ஆராய்ந்துகொண்ட சிலம்பினை நீக்கி மூங்கில் உயர்ந்த பக்கமலையைத் தன் தலைவனுடன் கடந்துசென்ற மகள்’ என்றே கூறுகிறது5.

எனவே சிலம்பைத் தலைவி திருமணத்திற்கு முன் அணிந்திருந்தாள் என்பதையே மேற்கண்ட பாடற்கருத்துகள் உணர்த்துகின்றன. சிலம்பின் பயனை நாம் உற்று நோக்குவோமாயின் அது தலைவியின் இயக்கத்தை உணர்த்தும் குறியாக அமைவதை உணரலாம். மேற்குறிப்பிட்ட உடன்போக்கு மேற்கொண்ட தலைவியின் செவிலி கூற்றாயமைந்த பாடலில் செவிலி, ’தலைவி உடன்போக்கு மேற்கொள்வாளென்று அறிந்திருப்பின் அவளது தந்தையின் செல்வம் மிகுந்த மனையில் அவள் ஆயத்தாருடன் சிலம்பு ஒலிக்கவிளையாடும் இடந்தொறும் அகலாதிருந்திருப்பேனே, அது கழிந்ததே’ என வருந்துகிறாள். செவிலியின் கூற்றில் சிலம்பொலியைக் கொண்டு தலைவியின் இயக்கத்தைக் கண்காணித்திருப்பேனே என்ற வருத்தமே மேலோங்கியிருக்கிறது. தலைவியின் இயக்கத்தைக் கண்காணித்து அறிந்து கொள்ளவே தலைவிக்குச் சிலம்பு அணிவித்திருக்கவேண்டும். இந்நிலையினைக் களவுவாழ்க்கை வழக்கிலிருந்த ஒரிசா திராவிடப்பழங்குடி மக்களிடையேயிருந்த ஒரு பழக்கத்துடன் பொருத்திப் பார்க்க முடியும். கந்தர் வேட்டைச் சமுதாய மக்கள் மஞ்சள் கிழங்கு பயிரிடத் தொடங்கியதன் பின்பு உடைமையைச் சேர்க்கத் தொடங்கினர். இதனால் அவர்களிடையே தகுதிவேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் மஞ்சள் விளைவிக்கும் குடும்பங்கள் தமது பெண்களைச் சமதகுதியுடையவர்களுக்கு மணம் செய்துகொடுக்க விரும்பினர். எனவே பெண் தான் விரும்பியவனுடன் சென்றுவிடாமலிருக்கக் காலில் இரும்பு வளையத்தைக் கட்டி இரவு நேரங்களில் வட்டமாகக் கும்மியடித்துக் காப்பாற்றி ஒத்த குடும்பத்தினருக்கு மணம் முடித்தனரென்று பக்தவத்சலபாரதி குறிப்பிடுகிறார்6.

தலைவனைச் சந்திக்க வரும் தலைவியும் கூடத் தன் இயக்கத்தைத் தெற்றென விளக்கும் சிலம்பின் ஒலியை அடக்கியே வருகிறாள். அவ்வாறு வரும் தலைவியைக் குறித்துத் தலைவன், ‘ஊர்முழுவதும் உறங்கும் யாமத்தில் நம்மைத் தழுவி மீள்வோள் நிறைந்த கற்பினால் உயர்ந்த பெருமையுற்ற பெண் அல்லள்; சுனையில் உறையும் சூரர மகளே’ என்று கூறுகிறான்7. இங்கே தலைவியின் செயல் சுனையில் இருக்கும் சூரரமகளின் இயல்புக்கு இணையாக்கப்படுகிறது. ஆகக் களவு வாழ்வுக்கு மறுப்பிருந்த சூழலில் பெண்ணின் இயக்கத்தைக் கண்காணிக்கும் குறியாக அவளின் கன்னிமையை உணர்த்தும் அடையாளமாக  அதாவது திருமணமாகாதவள் என்ற நிலையை உணர்த்தும் அடையாளமாக சிலம்பு அணிதல் விளங்குகிறது. திருமணமாகாத நிலையிலும்கூடத் தலைவியைக் குறிக்க கற்பு என்ற சொல்லாட்சியைத் தலைவன் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. ஆக சிலம்பு கன்னிமையின் குறியீடாவதை நாம் உணர முடிகிறது. இத்தகைய சிலம்பு தலைவியிடமிருந்து நீக்கப்படும் சூழல் அவளது வதுவைக் காலமேயாகும்.

சிலம்பு கழி நோன்பு
திருமணமாகிய வதுவைச்சடங்குக்கு முன் காலில்  அணியப்பட்ட தலைவியின் சிலம்பு நீக்கப்படுகிறது. இதை இலக்கியங்கள் சிலம்பு கழி நோன்பு என்று குறிப்பிடுகின்றன. இச்சிலம்புகழி நோன்பானது தலைவியின் வாழ்வை நிலைமாற்றும் சடங்காக அமைகின்றது. அதாவது அன்னை தந்தையுடனான வாழ்விலிருந்து தலைவியின் வாழ்வைத் தலைவனுடன் பிணைக்கும் நிலைமாற்றுச் சடங்காகிறது. தமர்சூழத் திருமணம் செய்யாத தலைவி உடன்போக்கு மேற்கொள்ளும் நிலையில் தலைவனின் இல்லத்திலேயே அல்லது அவள் சென்று சேருமிடத்திலேயே சிலம்புகழி நோன்பைச் செய்கிறாள். இதைக் குறித்து வருத்தம் தெரிவிக்கும் வகையில் பல அகநானூற்றுப் பாடல்கள் அமைகின்றன.

மகட்போக்கிய செவிலித்தாயின் கூற்றாயமையும்  குடவாயிற் கீரத்த னாரின் பாடலில் செவிலி, ‘மயில்போலும் சாயலையுடைய என்மகள் தன்னையொத்த தோழிமாரும் என்னையொத்த தாய்மாரும் கண்டு மகிழ செல்வம் மிக்க பெரிய மனையில் மேலோர் வதுவை செய்துவிக்க நல்ல சிறப்புற்ற மணவிழாவில் அவளுக்கு மயிர்ச்சாந்தினைப் பூசி பல சிறப்புகளையும் செய்துவிக்க மணந்து செல்லாளாய் அஞ்சாமையுடைய இளையள் அறியப்படாத தேயத்திலே சிலம்பு கழித்து வதுவை செய்திருத்தல் இன்னாமையுடையது’ என்கிறாள்8.

குடவாயிற்கீரத்தனாரின் மற்றொருபாடலும், ‘பாண்டியனது மதுரையையொத்த தனது அரிய காவல் பொருந்திய பெரிய மனையில் சிலம்புகழி நோன்பு செய்யப்பெறாளாய் நெடுந்தூரம் சென்று சீறூரில் தங்கியிருப்பாளோ என வருந்தும் தாயைக் காட்சிப்படுத்துகிறது9.எனவே சிலம்புகழிதல் நோன்பானது தலைவியின் வாழ்வை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது. சிலம்புகழிதல் என்ற செயல் தலைவியின் முழுமையான பொறுப்பையும் தலைவனுக்கு மாற்றுதல் என்பதை உணர்த்துவதாக அமைகிறது. சிலம்பு கழித்தபின் நிகழும்  வதுவைச்சடங்கு தலைவியை முழுமையாகத் தலைவனுக்குரியவளாக்குகிறது. குடும்ப அமைப்பினுள் நுழையும் பெண்ணுக்குப் பலவிதமான நோன்புகளும் சடங்குகளும் உரித்தாகிப் போவதைப் பல பாடல்கள் உணர்த்துகின்றன.

தொகுப்புரை:
பெண் அணியும் சிலம்பு என்ற அணிகலன் அவளது இயக்கத்தைக் கண்காணிக்க உதவியதையும் கன்னிமையைக் குறிக்கும் குறியீடாக விளங்கியதையும் பாடல்கள் புலப்படுத்துகின்றன. சிலம்புகழி நோன்பு தலைவியைப் பெற்றோரிடமிருந்து தலைவனுக்கு நிலைமாற்றுவதாகவும் குடும்பம் என்ற தளத்தில் நிலை நிறுத்துவதாகவும் அமைகின்றது.

 

1.அகநானூறு பா.எ.17.
2.மேலது பா.எ.49.
3.மேலது பா.எ.117.
4.மேலது பா.எ.198.
5.மேலது பா.321
6.தமிழர் மானிடவியல் - பக்தவத்சல பாரதி ப.177.
7.அகநானூறு பா.எ.86.
8.மேலது பா.எ.136.
9.மேலது பா.எ.397.

பார்வை நூல்கள் :
1.நா.மு.வேங்கடசாமி நாட்டார் (1962) (உ.ஆ) – அகநானூறு களிற்றியானை நிரை ரா.வேங்கடாசலம் பிள்ளை திருநெல்வேலிசைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்,  திருநெல்வேலி–6.
2.நா.மு.வேங்கடசாமி நாட்டார் (2007) (உ.ஆ) -  அகநானூறு மணிமிடை பவளம்
ரா.வேங்கடாசலம் பிள்ளை திருநெல்வேலிசைவசித்தாந்த  நூற்பதிப்புக்கழகம், சென்னை – 18.
3.நா.மு.வேங்கடசாமி நாட்டார் (2008)( உ.ஆ) - அகநானூறு நித்திலக்கோவை ரா.வேங்கடாசலம் பிள்ளை திருநெல்வேலிசைவசித்தாந்த
நூற்பதிப்புக்கழகம், சென்னை – 18.
4.பக்தவத்சல பாரதி (2008) தமிழர் மானிடவியல் அடையாளம் வெளியீடு, திருச்சி.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்