'மக்கள் முதல்வரும்', ஶ்ரீரங்கத்தேர்தல் முடிவும்'

தமிழக முன்னாள் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கெதிராகச் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தபோது பின்வருமாறு என் முகநூல் குறிப்பொன்றில் குறிப்பிட்டிருந்தேன்:
"தமிழக முதல்வருக்கு ஏற்பட்ட இந்நிலையால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியிருப்பவர்கள் அவருக்கு வாக்களித்த தமிழகத்தின் பொதுமக்கள்தாம். ஜெயலலிதாவின் செல்வாக்கு உச்சத்திலிருக்கும் சமயத்தில் இந்தத்தீர்ப்பு வந்திருப்பதால், அவரைத் தெய்வமாக நினைக்கும், அவருக்காக அவரது கட்சிக்கு வாக்களித்தவர்கள் (பெரும்பாலானவர்கள் பாமர மக்கள்) இந்தத்தீர்ப்பினை அம்மாவுக்கெதிரான அரசியல் பழிவாங்கலாகவே கருதுவார்கள். இந்தத்தீர்ப்பும் ஒரு விதத்தில் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தல்தான். தமிழகத்தில் செல்வாக்கினை இழந்த தி.மு.க.வும் ஏனைய கட்சிகளும் தம் செல்வாக்கினைக் கட்டியெழுப்ப முனையும் அதே சமயம், ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற முயற்சி செய்யும். ஆனால் அவர்களின் திட்டங்கள் வெற்றியடையுமா என்பது கேள்விக்குறிதான். ஜெயலலிதா அரசியல்ரீதியில் செல்வாக்கினை இழந்திருக்கும் சந்தர்ப்பத்தில் இது போன்றதொரு தீர்ப்பு வந்திருந்தால் அது ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்திருக்கும். ஆனால் அவர் தமிழக மக்களிடத்தில் செல்வாக்குடனிருக்கும் சமயத்தில் இத்தீர்ப்பு வெளிவந்திருப்பதால், இத்தீர்ப்பானது அவர் மீது அனுதாபத்தினை ஏற்படுத்தப்போகின்றது. இதன் விளைவாக அ.தி.மு.கவின் வலிமை தமிழகத்தில் இன்னும் அதிகமாக வளரப்போகின்றது."

பிரித்தானிய தமிழர் பேரவையினால் தமிழ் மக்களுக்கான நீதி கேட்கும் பயணத்துக்கான சந்திப்பு ஒன்று கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 29) இடம்பெற்றது. இச் சந்திப்பில் உலக நாடுகளின் முக்கியஸ்தர்கள், பிரித்தானிய அமைச்சர்கள், 40க்கும் அதிகமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்கள், புலம்பெயர் அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த Bassetlaw Nottinghamshire . பகுதி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு.John Mann Labour MP . இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு ஐ.நாவின் உதவியுடன் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இரு பிசாசுகளில் அபாயம் குறைந்த பிசாசைத் தேர்ந்தெடுத்தல் பற்றி ஆங்கிலத்திலோர் வார்த்தைப்பிரயோகமுள்ளது. அது "Lesser of Two Evils". சர்வதேச அரசியலில் , உளநாட்டு அரசியலில் நாடுகள் இக்கொள்கையினைப் பயன்படுத்துவதொன்றும் அதிசயமானதொன்றல்ல. உலகம் கம்யூனிசம், முதலாளித்துவமென்று இரு கூடாரங்களாகப் பிளவுண்டிருந்த காலகட்டத்தில் ஜனநாயகத்தைக் கடைப்பிடிப்பதாகத் தம்பட்டமடிக்கும் மேற்கு நாடுகள் தாராளமாகவே சர்வாதிகாரிகளை, மன்னர்களை ஆதரித்தன தாம் ஆதரித்த நாடுகளில் அவர்கள் குறிப்பிடும் ஜனநாயகம் குழிதோண்டிப்புதைக்கப்பட்டிருந்தன என்பதை அறிந்திருந்த நிலையிலும் அவை ஆதரித்தன. . சீனாவும், ருஷ்யாவும் மார்க்சியத்தை நம்புமிரு நாடுகள். ஆனால் எழுபதுகளில் சீனாவோ தத்துவார்த்தரீதியில் எதிரான அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணத்தொடங்கியது. கலாச்சாரப்புரட்சியாலும், சோவியத்துடனான பிளவினாலும் தனது நலன்களுக்காக அது அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணத்தொடங்கியது. இதற்காக அவர்கள் மேற்படி இரு பிசாசுகளில் அபாயம் குறைந்த பிசாசுக் கொள்கையினையே கடைப்பிடித்தார்கள். இதுபோல்தான் அமெரிக்கா தன் நலன்களுக்காக, தத்துவார்த்தரீதியில் தனக்கு முரணாகத்திகழ்ந்த நாடுகளுடனெல்லாம் நட்பினைப் பாராட்டி வந்தது. உள்நாட்டு அரசியலைப்பொறுத்தவரையிலும் இதுதான் நிலை. தேர்தலில் இரு கட்சி வேட்பாளர்களுக்கிடையிலான தெரிவின்போதும் வாக்களிக்கப்போகும் மக்கள் இந்த Lesser of Two Evils என்னும் சிந்தனையின் அடிப்படையிலேயே வேட்பாளரைத்தெரிவு செய்வதொன்றும் புதியதல்ல. ஆயுதப்போராட்ட காலத்திலும் அமைப்புகள் இக்கொள்கையின் அடிப்படையில் இயங்கியதற்கு உதாரணமாக இந்திய அமைதிப்படையினருக்கெதிரான போரில் விடுதலைப்புலிகள் பிரேமதாச அரசுடன் இணைந்து செயற்பட்டதையும், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி இந்தியப் படையினருடன் இணைந்து செயற்பட்டதையும் குறிப்பிடலாம். இந்தியாவா இலங்கையா என்ற நிலையில் அன்றைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு பிரேமதாச அரசானது ஆபத்து குறைந்த பிசாசாகத் தென்பட்டது. அதுபோல் பிரேமதாசா அரசுக்கு இந்தியாவை விட விடுதலைப்புலிகள் அபாயம் குறைந்ததொன்றாகத் தென்பட்டது.. இந்த நிலைதான் இன்று இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலிலும் ஏற்பட்டுள்ளது.
பதுளை, கொஸ்லந்தை பிரதேசத்தில் புதையுண்ட தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதியில் மண்சரிவு அபாயம் இருந்ததை யாரும் தனது கவனத்திற்குக் கொண்டுவரவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளருமான ஆறுமுகம் தொண்டமான், அப்படியிருக்கும் போது நான் எவ்வாறு அறிவேன், ஜோதிடம் பார்த்தா அறிவது? எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள ஷோலே, கிசாசை (இரானிய தண்டனைச் சட்டம்) நான் சந்திக்க வேண்டிய நாள் இது தான் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன். என் வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசி தாளை நான் அடைந்ததை நீயே என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று எனக்கு வேதனையாக இருக்கிறது. எனக்கு தெரிய வேண்டும் என்று உனக்கு தோன்றவில்லையா? நீ சோகமாக இருப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது தெரியுமா? உன்னுடைய கையையும், அப்பாவின் கையையும் நான் முத்தமிடும் வாய்ப்பை ஏன் நீ பயன்படுத்திக் கொள்ளவில்லை? இந்த உலகம் என்னை 19 வருடம் வாழ அனுமதித்திருக்கிறது. அந்த துர் இரவில் நான் தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என் உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் எறியப்பட்டிருந்திருக்கும். சில நாட்கள் கழித்து என் உடலை அடையாளம் காண உன்னை கரோனரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். அப்போது தான் நான் பலாத்காரம் செய்யப்பட்டதையும் நீ அறிந்திருப்பாய். என்னைக் கொன்றவனை என்றைக்குமே கண்டுபிடித்திருக்க முடியாது. அவர்களிடம் உள்ளது போன்ற செல்வமும், அதிகாரமும் நமக்கில்லையே. அதன் பிறகு அவமானத்தோடும். வலியோடும் உன் வாழ்வை நீ தொடர்ந்திருப்பாய். அப்புறம் சில ஆண்டுகளில் இந்த வலியினால் நீ இறந்து போயிருந்திருப்பாய். அத்தோடு எல்லாம் முடிந்திருக்கும்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









