மகாத்மா காந்தியின் சத்திய சோதனை இன்றளவும் பேசப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் உண்மையும் நேர்மையும் சத்தியமும் நினைவாற்றலும் இழையோடியிருந்தன.  அரை நூற்றாண்டுக்கும் மேலாக வானொலி – தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் , தொகுப்பாளராகவும் பணியாற்றிவந்திருக்கும் பி. எச். அப்துல் ஹமீத், தன்னை ஒரு சிறந்த எழுத்தாளனாகவும் நிரூபித்திருக்கிறார். எனினும், அவரிடம் இயல்பாகவே குடியிருக்கும் தன்னடக்கம், தானும் ஒரு எழுத்தாளன்தான் எனச்சொல்வதற்கு தடுக்கிறது.

"கடந்து வந்த பாதையை மறப்போமேயானால், செல்லும் பாதையும் இருட்டாகவே இருக்கும். "  என்று நான் எனது பதிவுகளில் அவ்வப்போது சொல்லி வந்திருக்கின்றேன். கடந்துவந்த பாதையை மறக்காமல் இருப்பதற்கு நினைவாற்றல் மிகவும் முக்கியம். அந்தப்பாதையில் ஒரு வழிப்போக்கனாகவே நடமாடியிருக்கும் அப்துல் ஹமீத், காய்தல் உவத்தல் இன்றி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்து, பொது சன ஊடகத்தில் எதிர்நோக்கப்பட்ட சவால்களையெல்லாம் சமாளித்து முன்னோக்கி வந்திருக்கிறார் என்பதற்கு இந்த நூல் சான்று பகர்கிறது.

பொதுவெளியில் 'பேரும் புகழும்' பெற்றிருந்தாலும் தன்னடக்கத்தையே மூலதனமாகக் கொண்டிருப்பவர் பி. எச். அப்துல் ஹமீத். அதனால்தான் இன்றும் வானலைகளிலும் சில விமானங்களிலும், மேடைகளிலும் , தொலைக்காட்சிகளிலும் இணைய ஊடகங்களிலும், காணொளிகளிலும் தனது மதுரமான குரலுடன் வலம்வந்துகொண்டிருக்கும் அவரால், தன்னை ஒரு வழிப்போக்கனாக்கிக்கொண்டு, தன்னைப்பற்றியும் தனது வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பங்கேற்றவர்கள் பற்றியும், தனது வாழ்வின் முக்கிய தருணங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் தொகுத்து பதிவுசெய்யமுடிந்திருக்கிறது. இலங்கைத் தலைநகருக்குள் வரும் ஒரு புறநகர் பிரதேசத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து , இளமையில் வறுமையின் கொடுமைகளை அனுபவித்து, வேதனைகளையெல்லாம் சாதனைகளாக்கி நிமிர்ந்து நிற்கும் ஒரு ஆளுமையின் வாழ்வியலை இந்த நூலிலிருந்து தெரிந்துகொள்கின்றோம்.

கருவில் சுமந்து பெற்ற அன்னைக்கும், நெஞ்சில் சுமந்து வாழும் அன்னைக்கும் ( மனைவிக்கும் ) இந்த நூலை சமர்ப்பணம் ( படையல் ) செய்துள்ளார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று காலம் காலமாக சொல்லி வருகிறார்கள். அப்துல் ஹமீதை பொருத்தமட்டில், அவரது தாயும் தாரமும் அவ்வாறு இருந்திருக்கிறார்கள் என்பதை இந்த நூலை வாசிக்கும்போது புரிந்துகொள்கின்றோம்.

விசும்பு வெளியினூடே ஒலி ஊடகத்திற்கு வித்திட்ட முதல்வர் என போற்றப்படும் GUGLIELMO MARCONI ( 1874 – 1937 ) அவர்களையும் நினைவுகூர்ந்து, தான் கடந்து வந்த பாதையையும் அதில் சந்தித்தவர்களையும் முடிந்தவரையில் சான்றாதாரங்களுடன் பதிவுசெய்துள்ளார் அப்துல்ஹமீத்.

ஒலிபரப்புக்கலையில் படிப்படியாக தேர்ச்சிபெற்றிருக்கும் அவரிடம், பேச்சாற்றல் மட்டுமன்றி, மொழிபெயர்க்கும் ஆற்றலும், கூடவே எழுத்தாற்றலும் குடியிருந்திருக்கிறது என்பதை இந்த வழிப்போக்கனின் எழுத்துக்களில் இருந்து தெரிந்துகொள்கின்றோம். எனவே அவர் தொடர்ந்தும் தன்னை எழுத்தாளன் எனச்சொல்லிக்கொள்வதற்கு இனிமேலும் தயங்கக்கூடாது என்ற வேண்டுகோளுடன் இந்நூல் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை பதிவுசெய்கின்றேன்.

இந்நூல் பற்றிய ஆய்வுரையை பேராசிரியர் சபா. ஜெயராசாவும், நூல் நயவுரையை அ. முத்தலிங்கம் ஆகியோர் எழுதியுள்ளனர்.  இந்நூல் வெளிவருவதற்கு பிரதானமாக இருந்தவர்களில் ஒருவரான த. செ. ஞானவேல், மற்றும் ( அமரர் ) சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ( கவிதை ) ஆகியோரும் அப்துல்ஹமீதின் ஒலிபரப்புத்துறை மற்றும் எழுத்தாளுமையையும் விதந்து குறிப்பிட்டுள்ளனர்.

அப்துல்ஹமீத், இந்நூலில் தனது கனவுகளையும், அவற்றை நனவாக்க மேற்கொண்ட பிரயத்தனங்களையும் கால வரிசைப் பிரகாரம் எழுதியிருக்கிறார். இங்குதான் அவரது நினைவாற்றல் அவருக்கு கைகொடுத்து உதவியிருக்கிறது. அத்துடன் அவர் பயன்படுத்திவரும் நாட்குறிப்பு புத்தகமும் பக்கத்துணையாக இருந்திருக்கக்கூடும் எனவும் நம்புகின்றோம்.

கவியரசு கண்ணதாசன் தான் எழுதியிருக்கும் சுயசரிதையான வனவாசம் நூலில் தன்னை  'அவன்'  என்றே விளித்திருப்பார்.

'எங்கே வாழ்க்கை தொடங்கும் – அது எங்கே எப்படி முடியும் – இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் புரியாது'  என்ற கவியரசரின் பாடல் வரிகளுடன் ஆரம்பித்து, தனது கதையை எழுதியிருக்கும் இந்த வழிப்போக்கன், தன்னை ' இவன்'  என்றே தொடர்ந்தும் இந்த நூல் முழுவதும் விளித்துக்கொள்கின்றார்.

'காசிநகர்ப்புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்' என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்க உழைத்த விஞ்ஞானிகள் பற்றியெல்லாம் விரிவாகவும் விதந்தும் எழுதியிருக்கும் அப்துல்ஹமீத், வாசகர்களின் சிந்தனையில் ஊடுருவும் வகையில் தேவைப்பட்ட படங்களையும் தேடி எடுத்து பதிவுசெய்துள்ளமை இந்நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றது.

பிரித்தானியாவிலே வானொலி ஒலிபரப்பின் நதிமூலமாய் விளங்கும் கலையகம் பேணிப்பாதுகாக்கப்படும் அருங்காட்சியகத்தை பார்க்கச்சென்ற அனுபவத்தை கதைபோன்று சித்திரிக்கும் அப்துல் ஹமீத், பிரித்தானியாவைத் தொடர்ந்து மூன்றே மூன்று நாடுகளில்தான் வானொலி ஒலிபரப்பு ஆரம்பமானது என்ற செய்தியையும் கூறி, அதில் ஒன்று இலங்கை ( 1925 ) என்ற தகவலையும் குறிப்பிடுகிறார்.

இதுபோன்ற பல வரலாற்று உண்மைகளையும் இந்த நூல் பேசுகின்றமையால், இந்த நூல் வானலை வழிப்போக்கனின் சுயசரிதையாக மட்டுமன்றி, ஊடகத்துறையில் பயிலும் மாணாக்கர்களுக்கும் உசாத்துணையாக விளங்குகின்றது.

நூலின் தொடக்கத்திலேயே தனது ஆதங்கத்தையும் இவ்வாறு கூறிவிடுகிறார்.

'நாமெல்லோரும் காற்றில் கலை படைக்கும் துர்ப்பாக்கியசாலிகள். '  காரணம், இத்துறையில் அவர்கள் படைத்தவையும், அவர்களது பங்களிப்புகளும் காற்றலைகளில் கலந்து மறைந்தும் மறந்தும் போயின அல்லவா! மின்னிடும் நேரத்தில் மட்டுமே கண்ணுக்குப் புலப்படும் ஒரு மின்னலின் ஆயுளைப்போன்றது. ' இத்தனை மணிக்கு அப்படி ஒரு மின்னல் மின்னியது என அதன் பின் எவரும் நினைவில் வைத்துக்கொள்வதில்லையே ! ஆனால், ஒரு சாதாரண எழுத்தாளரது படைப்பு கூட, காலம் காலமாய் அவர் பெயர் சொல்ல நிலைத்திருக்கும்'  எனச்சொல்லி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நூலாசிரியர், பலரதும் நீண்ட கால வேண்டுகோளை ஏற்று எழுதுவதற்கு முன்வந்திருக்கிறார். அதனால் இந்த வழிப்போக்கரின் கதை எமக்கு வரவாகியிருக்கின்றது.

இலங்கை, இந்தியா , கனடா, சிங்கப்பூர், பிரித்தானியா, அமெரிக்கா , அவஸ்திரேலியா எங்கும் இந்த நூலுக்கான அறிமுகம் கிடைத்திருக்கிறது. அதன் மூலம் நூலாசிரியர் தனது ஆதங்கத்தை இனிமேல் தவிர்த்துக்கொள்ளமுடியும்.

தெமட்டகொடயில் தனது சிறிய வீட்டிலிருந்து சிறுவனாக அரைக்காற் சட்டையுடன் கால் நடையாகவே வெகு தொலைவில் அமைந்திருக்கும் இலங்கை வானொலி கலையகத்திற்கு நண்பன் ஒருவனுடன் சென்றிருக்கும் அப்துல்ஹமீத், இடைவழியில் பொரளையை கடக்கும்போது அன்றைய பிரதமர் டட்லிசேனா நாயக்கா, தனது Woodlands இல்லத்தின் முற்றத்தில் வளர்ந்திருக்கும் புல்லை ஒரு இயந்திரத்தினால் வெட்டிக்கொண்டிருக்கிறார். அவர்தான் நாட்டின் பிரதமர் என்ற உண்மையை அறிந்தோ, அறியாமலோ சிறுவன் அப்துல்ஹமீத் ஆங்கிலத்தில் அவருக்கு காலை வணக்கம் சொல்கிறான்.
பிரதமரும் பதிலுக்கு காலை வணக்கம் சொல்கிறார்.

அவ்வாறு துள்ளித்திரியும் பருவத்தில் அன்றைய பிரதமருக்கு காலை வணக்கம் சொன்னவர், மூன்று தசாப்த காலத்தில், நாட்டின் பிரதமராக வந்த ரணசிங்க பிரேமதாசவின் அருகாமையில் நின்று அவரின் உரையை உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அப்துல்ஹமீதின் வளர்ச்சிக்கு இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்று, இந்த நூலில் பல தருணங்களை நாம் உதாரணம் காண்பிக்க முடியும்.

ஒல்லாந்தில் ஒலிபரப்புக்கலை தொடர்பான பயிற்சியில் அப்துல்ஹமீத் சில மாதங்கள் ஈடுபட்டபோது, தான் கற்றதையும் பெற்றதையும் எளியமுறையில் இந்நூலில் விளக்கியிருக்கிறார். வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை, சரியாக புரிந்துகொண்டு பயிற்சிவழங்கியவரிடம் பாராட்டு பெறுகிறார் இந்த வழிபோக்கன். அந்த பயிலரங்கில் பேசும்போது , விமானத்திலிருந்து இறங்கியதும் நெதர்லாந்து பூமியில் தான் பார்த்த காட்சியை கவித்துவமாக இவ்வாறு சொல்லியிருக்கிறார். வெற்றுக்கண்களால் சூரியனைப்பார்க்க முடியாது. பனிப்புகாருக்கூடாக பார்த்தபோது சந்திரனைப்போலத் தெரிந்தது என்ற அப்துல்ஹமீதின் விபரிப்பு ஏனைய பயிற்சியாளர்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

ஒலிபரப்புத்துறையில் முழுநேரமாக ஈடுபடத்தொடங்கியது முதல் அவதானித்தல், கிரகித்தால், மனதில் பதிவுசெய்தல், பின்னர் நேயர்களுக்கு அழகான உச்சரிப்போடு தெரிவித்தல் என தனது வாழ்நாளில் தான் ஆழமாக நேசித்த தொழிலுக்கு விசுவாசமாக வாழ்ந்திருக்கிறார் இந்த வழிப்போக்கர்.

இரண்டு சந்தர்ப்பங்களில் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருக்கும் ஹமீதின் வாழ்க்கையில் உயிராக இருந்த பெற்றதாய் ஆசியா உம்மா உடல் நலம் குன்றியிருந்தபோது வானொலிக்கலையகத்தில் ஒரு நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் ஏற்றிருந்த பாத்திரத்தின் தாயின் மரணம் நிகழுகிறது. கதறிக்கதறி அழுது நடிக்கிறார். ஒலிப்பதிவு நடந்துகொண்டிருக்கும்போது, பெற்ற தாயின் உடல் நிலை மோசமாகிக்கொண்டிருக்கிறது என்ற தகவல் வானொலி நிலைய வாசலுக்கு வருகிறது. தகவல் சொல்ல வந்தவர்களுடன் ஓடுகிறார். அங்கே தாயின் உயிர் பிரிந்திருக்கிறது. இந்தக்காட்சியை விவரிக்கும்போது அவர் கண்கள் பனிக்கவே எழுதியிருப்பார். வாசகர்களது கண்களும் இந்தத் தருணத்தை வாசிக்கும்போது பனிக்கலாம்.

இலங்கை வானொலியில் ஈழத்துப்பாடல்கள், மெல்லிசைப்பாடல்கள், பொப்பிசைப்பாடல்கள் அறிமுகமாகி மக்கள் மத்தியில் அவை எவ்வாறு பிரபலமாகி, கடல் கடந்தும் ஒலித்தது, அதற்கு மூல காரணமாக விளங்கியவர்கள் யார்..? யார்.. ? முதலான தகவல் குறிப்புகளையும் தவறவிடாமல் பதிவுசெய்துள்ளார் இந்த வழிப்போக்கன்.

கனடாவில் வதியும் பிரபல எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் கூறியிருப்பதுபோன்று இந்த நூலை கையில் எடுத்தால் கீழே வைக்க மனமின்றி தொடர்ந்தும் வாசிக்கத்தூண்டும். அவ்வாறு இந்த நூலின் ஒவ்வொரு வரிகளையும் தவறவிடாமல், வாசித்தபோது, அந்த வரிகளுக்கிடையில் பொதிந்திருக்கும் செய்திகளையும் அதிர்வுகளையும் ஒரு கணம் நின்று உள்வாங்க நேர்ந்தது. இலங்கையில் சமகாலத்தில் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஊடகக் கற்கை நெறியும் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்தத்துறையில் பயிலும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த நூலை பரிந்துரை செய்யலாம். அறிவிப்பாளனாக வளர்ந்து, எழுத்தாளனாகியிருக்கும் பி. எச். அப்துல்ஹமீத் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here