ஒரு குழந்தை, ஓரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா இந்த உலகை மாற்ற முடியும்". மலாலா யூசுபுக்கு அமைதிக்கான நோபல்பரிசு
பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனர். குழந்தைகள் நல உரிமைகளுக்காக பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின் கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நார்வே நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. விருதுக்கான பரிசுத் தொகை 1.11 மில்லியன் டாலரை மலாலாவும், பச்பன் பச்சாவோ அந்தோலன் நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தியும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தியா - பாகிஸ்தா எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியர் ஒருவருக்கும், பாகிஸ்தானியர் ஒருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள் அமைதிக்கான நோபல் விருது, ஆசிய துணைக்கண்டத்தில் அமைதி ஏற்படுத்த முக்கிய பங்களிக்குமா என்ற கேள்விக்கு 'தி இந்து' (ஆங்கில) நாளிதழுக்கு பதிலளித்துள்ள நோபல் கமிட்டி தலைவரும், நார்வே பிரதமருமான தோர்ஜோர்ன் ஜக்லாண்ட் "சர்ச்சைக்குரிய பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்த விருது பங்களிக்கும் என்றால் அது வரவேற்கத்தக்கதே" என்றார்.



“Thank you Shelly, Governor General Johnston and Sharon Johnston, distinguished guests, ladies and gentlemen, boys and girls, Happy Canada Day! One hundred and fifty years ago, the Fathers of Confederation, our ancestors, met in Charlottetown, and Quebec. In 1864, our Fathers of Confederation dreamed a magnificent dream, a dream of a united Canada that would take its place among the countries of the world; prosperous, strong and free. 147 years later, this is their dream, Canada, a confident partner, a courageous warrior, a compassionate neighbour. Canada, the best country in the world!


மே 13, 2014 , ம 18, சிங்கள இராணுவம் தமிழ்மக்களை ஆண், பெண், குழந்தைகள் எனப் பாராது குண்டுகள் போட்டுக் கொன்றொழித்த நாள். இந்த ஆண்டு 5 ஆவது நினைவேந்தல் ஆண்டாகும். சிங்கள இராணுவம், பாதுகாப்பு இடத்தில் ஓடிப் பதிங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அந்த இடத்தைக் குறிவைத்து வானில் இருந்து குண்டுகளும் தரையில் இருந்து செல்தாக்குதல்களையும் மழை போல் பொழிந்து தமிழ்மக்களைச் சங்காரம் செய்த நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளைக் கூட கொடிய சிங்களப் படைகள் விட்டுவைக்கவில்லை. மருத்துவமனைகள் இராணுவ தாக்குதலுக்குரிய இலக்குத்தான் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்சே கொக்கரித்தான். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அய்நா அதிகாரிகள் வன்னிக் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களும் தப்பினோம் பிழைத்தோம் என கொழும்புக்கு ஓடித் தப்பினார்கள். உலக நாடுகள் கண்ணை மூடிக்கொண்டன. காதுகளைப் பொத்திக் கொண்டன. தமிழ்மக்களின் அழுகுரலைப் பார்க்கவும் கேட்கவும் இந்த நாடுகள் மறுத்தன.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









