- அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்' நாடகம் 'எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினால் நூலாக வெளியிடப்பட்டபோது அதற்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் எழுதிய சிறப்புரை இது -


மதமாற்றம் 'நாடக ஆசிரியரான அறிஞர் அ.ந.கந்தசாமிசெ.கணேசலிங்கன்விழாக்களிலும் சடங்குகளிலும் ஆடலும் பாடலும் இயல்பாக ஏற்பட்டன; பின்னர் மதச்சார்பான கதைகளும் கிராமியக் கதைகளும் ஆடியும் நடித்தும் காட்டப்பட்டன. இதுவே இந்திய நாடகத்தின் தோற்றவாயில் என ஆய்வாளர் கூறுவர். கூத்து என்ற கலைவடிவம் தமிழரிடை இதே தோற்றுவாயுடன் ஏற்பட்டது எனக் கூறின் தவறாகாது.. கூத்து, ஆடல் பாடல் சார்ந்தது; நீண்டகாலமாக நிலைபெற்று வந்துள்ளது. 'கூத்தாட்டவைக் குழாத்தற்றே" என்றார் வள்ளுவர்.

சிலப்பதிகாரமும் கிராமியக் கூத்து வடிவில் பிரபல்யமடைந்திருந்த கதையையே இளங்கோ காவியமாக்கினர் என்பர். "பாட்டிடையிட்ட உரைநடையாக" காவியம் அமைத்திருப்பதும் இக் கருத்தை நிரூபிக்கிறது. புலவர்களாலேயே நாடகம் போன்ற கலை வடிவங்களும் உலகெங்கும் எழுதப்பட்டன என்பர். இளங்கோ, காளிதாசன், சேக்ஸ்பியர் யாவரும் கவிஞர்களே.

இன்றைய நாடகம் என்ற கலைவடிவம் எமக்குப் புதிதே. கலைவடிவங்கள் நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி வேறுபடலாம், உற்பத்தி உறவுக்கேற்ப இவை மாற்றமடையும். உதாரணமாக நவீன காலத்தில் பிரபல்யமடைந்துள்ள நாவல், சிறுகதை என்ற கலை வடிவங்கள் முதலாளித்துவத்தில் - கூலி உழைப்பு உற்பத்தி உறவுக்காலத்தில் எழுந்தவையே. எமது சிறுகதை, நாவல் போன்று இன்றைய நாடகமும் மேல் நாட்டிலிருந்து நாம் பெற்ற கலைவடிவமே. ஆங்கிலத்தின் மூலம் இங்கு நாம் பெற்றபோதும் இன்றைய மேடை நாடகம் ஆங்கிலேயர் ஆரம்பித்ததல்ல. ஹென்றிக் இப்சன் (1826-1906) என்ற நோர்வே நாடகாசிரியர் ஐரோப்பாவிற்குத் தந்த வடிவமே இன்று உலகெங்கும் மேடை நாடக வடிவமாகப் பரவியது; பல்வேறு பரீட் சார்த்தங்களுடன் வளர்ச்சி பெற்று வருகிறது. இங்கிலாந்தில் இப்சனுக்கு முன்னர் நாடக மரபு இருக்கவில்லை என நான் கூறவரவில்லை. சேக்ஸ்பியர் (1564 - 1616) மார்லோ (1564-93) அன்றிருந்த நாடக மரபிற்கு வலுவூட்டியவரே. இன்று வரை நிலை பெற்றுள்ளனர்.

அன்றைய நாடக அமைப்பு முறையும் இப்சனின் பின் ஏற்பட்ட மாற்றமும் வேறு. மேடைக் காட்சிகள் தொடர்ந்து மாறும் முறை, நடைமுறைச் சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை கையாளும் போக்கு ஆகியவற்றையே குறிப்பிடுகிறேன். நாடகமாக எழுதப்படுவது, மேடையில் பேசுவதற்காக கூறப்படும் உரையாடல், காட்சி அமைப்புப் பற்றியவை முதலான விபரங்களே. இவற்றை நாம் மேடையில் பார்க்காது படிப்பதென்பது இரண்டாந்தரமானது. நாடகங்கள் நூல் வடிவில் தமிழில் வெளி யிடப்படுவதில்லை என்ற குறைபாடும் உள்ளது. அவர்கள், 'நாடகம் மேடைக்காக" என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும். சேக்ஸ்பியரின் நாடகங்கள் நூலுருப் பெற்று உலகெங்கும் படிக்கப்படுகிறது உண்மையே. நடிப்பதிலும் பார்க்க தாராளமாகப் படிக்கப்படுகிறது. அவை நாடகம் என்பதிலும் பார்க்க இலக்கிய நயம் செறிந்த எழுத்தாக இருப்பதுவே காரணம். இந்த அடிப்படை உண்மையை நாம் மறந்து விடப்படாது. தனிமனிதன் மேடையில் நின்று தன் துன்பங்களைக் கொட்டுவதை, நாம் தனிமையில் படித்துச் சுவைக்கலாம். அவை இன்றைய நாடக மரபுக்கு ஒவ்வாதவை. சேக்ஸ்பியரின் பல நாடகங்களில் தனிப்பேச்சு (Soliloquy) இடம் பெறுவதைக் காணலாம். சேக்ஸ்பியரின் சிறப்பிற்கும் அவை உதாரணமாகக் கூறப்படுவதைக் காணலாம். ( உதாரணம்: To be or not to be - ஹம்லெட்) பர்னட் ஷாவின் நாடகங்களும் படித்துச் சுவைக்கக் கூடியவையே. காரணம் கருத்துகள் செறிந்தவை. முரண்பாடுகளைச் சொற்களால் சாடுவார். அவர் ஆக்கிய பாத்திரங்கள் அனைவர் மூலமும் ஷாவே உரையாடுவார். இன்று பிரபலமாக அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவலாக ரசிக்கப்படும் டி. வி.தொடர் நாடகங்களிலும் நகைத்திறம் மிக்க உரையாடல்களே முதன்மை பெறுவதைக் காணலாம். டி. வி. என்ற கருவிக்குரிய வடிவம் இதுவாகலாம். இப்சனின் பின் நாடகத்திற்கு என்றோர் புதிய வடிவமும் கலை களுக்கெனத் தனிச் சித்தாந்தமும் தந்த பெருமை Bertolt Brecht - பெர்ரோல்ட் பிரெஸ்ட் (1898 - 1956) என்ற ஜெர்மன் நாடகாசிரியருக்கே உரியதாகும். அவர் ஒரு மார்க்சிய நாடகாசிரியராக இருந்தபோதும் முதலாளித்துவ நாடுகளிலும் அவர் போற்றப்பட்டார்.

அவரது நாடகங்கள் நடிக்கப்பட்டன. இவ்வாறு பரவலாக்கி அவரது புரட்சிக் கருத்துச்களை மழுப்பி விட்டனர் என்றே கூற வேண்டும். நாடகத்தின் கரு, உட்பொருள் மட்டுமல்ல அதன் அமைப்பு, வடிவத்திலும் அவர் புரட்சிகர மாற்றம் ஏற்படுத்தினர். அத்தோடு மேடை, நடிகர்கள் பற்றி மட்டுமல்ல பார்வையாளனைப் பற்றியும் அவர் சிரத்தை எடுத்தார்.

பார்வையாளனை கலை உணர்வுத் தூரத்தில் (Aesthetic Distance) வைக்க வேண்டும் எனவும் சொன்ஞர். பார்வையாளன், கலைகளே நுகர்வோன் கலை வடிவத்தினூடாக வாழ்க்கையின் முரண்பாடுகளை, சம்பவங்களை, கதா மாந்தர்களைக் காண்பதாக நினைவு பூர்வமாக எண்ணிக் கொள்ளவேண்டும். தவருக பாத்திரங்களுடன் ஐக்கியப் பட்டு ஒன்றிவிடப்படாது என எச்சரித்தார்.

சுருங்கக் கூறின் கலையை நுகர்வோர் அதனிலிருந்து அந்நியப் பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்றார்,

மக்களே வரலாற்றை ஆக்குபவர், வீரபுருஷர்களல்ல என்ற மார்க்சின் கோட்பாட்டை முன் வைத்து வீர புருஷர்களை நாடகததில் நுழைப்பதையும் தவிர்த்தார். கிராமியக் கதைகளை, நடை முறைச் சம்பவங்களை நாடகமாக்கினர். மேடையில் 'செட் டுகள், மின் ஒளி விளையாட்டுகள் மூலம் மக்களைக் கவர்வதையும் தவிர்த்தார். பார்வையாளரை மயக்க மூட்டி கனவு நிலைக்கு ஈர்த்துச் செல்லாது விழிப்பு நிலையில் வைக்க வேண்டும்; மேலும் சிந்தனையூட்ட வேண்டும் என்றார், தீவிர நடிப்புகளையும் தவிர்த்தார். அதாவது மேடையில் தோன்றி தமிழ் நாடகங்களில் நடிப்பது போல, மிகை உணர்ச்சிகளைக் காட்டி உரத்துக் கத்தும் போக்கையும் தடுத்தார்.

மேல்நாட்டு நாடக வடிவம் சிங்கள மேடையில் ஏற்படுத்திய மாற்றம் போல தமிழ் நாட்டில் ஆக்கவில்லை. சினிமா வின் தாக்கம் மேடை நாடகத்திலும் நாடக முறைகள் சினிமா விலும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளன. அதற்குக் காரணம் சினிமா வின் பரவலான அறிமுகமும் ஆதிக்கமும் ஒன்று. மற்றது சினிமா உலகிற்கு நுழைய நாடக மேடை முதல் வாய்ப்பாக அமைந்துள்ளதுமாகும். இன்றைய பிரபல இந்திய நடிகர், டைரக்டர்கள் நாடக மேடையிலிருந்து திரையுலகுக்கு வந்திருப்பதைக் காணலாம்.

அ. ந. கந்தசாமி ஈழத்து மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீளா நோய் வாய்ப்பட்டு இறந்தவேளை அன்னாரது ஆக்கங்கள் சிலவற்றையாவது வெளியிட வேண்டும் என முயன்றவர்களில் நானும் ஒருவன். அம்முயற்சிகள் யாவும் பல காரணங்களால் பயனற்றுப் போயின. 1, 16 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் அன்னுரை நினைவு கூரத் தக்கதாக நூல் வெளியிட வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டது. நாட்டில் கலை, இலக்கிய விழிப்பின் ஒர் அம்சம் என்றே கொள்ள வேண்டும்.

இச் சந்தர்ப்பத்தில் "மதமாற்றம்" என்ற இந் நாடகத்தை நானே முதலில் நினைவுபடுத்தினேன். அதற்குப் பல காரணங்கள்.

கந்தசாமியைப் பற்றி அறிந்திருந்து, ஒரு சிலவற்றை மட்டும் படித்த காலத்தில் இந்நாடகத்தை மேடையில் ஒரு தடவை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவ்வேளையே கந்தசாமியின் அறிவையும் திறமையையும் என்னால் காண முடிந்தது. ஆயினும் அன்னருடன் நெருங்கிப் பழகும் காலம் அவரது வாழ்வின் கடைசி இரண்டு ஆண்டுகளிலேயே எனக்கு ஏற்பட்டது.

அவரது அறிவும் திறமையும் பலதுறைகளில் ஈடுபட்டிருந்ததைக் கண்டேன். முதலாளித்துவ சமூக அமைப்பில் பேசுவது, பிறருடன் பழகி வெற்றி கொள்வது, பண்டங்களை விற்பனை செய்யும் விவேகம் ஆகியவை பற்றி மேல்நாடுகளில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அத்தகைய நூல் ஒன்றையும் கந்தசாமி எழுதி என்னிடம் தந்தார். அவரின் சிறப்பான வெளியீடாக ‘வெற்றியின் இரகசியங்கள்" என்ற அந்நூலை தமிழ் நாட்டில் வெளியிட்டேன். ஆயினும் விற்பனையில் வெற்றி கிட்டவில்லை. இன்னும் எமது சமூகம் முதலாளித்துவ நிலையை அடையவில்லை என ஆறுதலடைந்தேன். இலங்கையில் பல மேடை நாடகங்களைப் பார்த்துள்ளேன். ஆயி னும் "மத மாற்றம்" என்ற இந் நாடகம் என்னுள் ஏற்படுத்திய மதிப்பை வேறு எந்த நாடகமும் ஏற்படுத்தவில்லை. மேடை நாடகக் காட்சிகளை அமைக்கும் திறமையை அவர் எங்கு பெற்றார் என்று தெரியவில்லை. இம் முதல் நாடகத்திலேயே அச் சிறப்பைக் காணக் கூடியதாக இருந்தது.

உரையாடல்களையும் கதையையும் நகர்த்திச் செல்லும் முறையில் பார்வையாளரை ஈர்த்துச் செல்லக்கூடிய உத்தியைக் கையாண்டுள்ளார். அற்புதங்களை வைத்தே மதம் வலுப்பெற முயல்கிறது. எதிர் பாராத நிகழ்ச்சிகளையும் மதவாதிகள் அற்புதமாக்கிவிடுவர். கதாநாயகி தோழியிடம் செல்லும்வேளை பத்திரிகையில் தன் தோழி பற்றிய செய்தியைப் பார்த்துவிட்டு தோழியும் கணவரும் வழிபடுகின்றனர். அவ்வேளை தோழியைக் கண்டதும் 'தேவனின் அற்புதம்" எனக்கூறி அவளையும் நம்பவைக்கின்றனர்.

சைவ மதம், கிறிஸ்தவ மதம் பற்றிய அன்னரின் அறிவையும் இந் நாடகத்தில் காணலாம்.

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் மேலாதிக்கம் செலுத்தும் கருத் தியல் (Ideology) மதம் என்றும் முதலாளித்துவத்தில் கல்வி என்றும் நவ மார்க்சிய அறிஞர் அல்துரசர் கூறுவார். கலை, இலக்கியத்தில் கருத்தியல்கள் உடைக்கப்பட்டு விஞ்ஞான ரீதியான சிந்த னையைக் கொணர வேண்டும் என்பதும் அன்னாரின் கோட்பாடாகும். அத்தோடு இத்தகைய போக்கு பண்டைய நாடகங்கள், இலக்கியங் களில் காணமுடியாதது அவற்றின் பயனற்ற தன்மையைக் காட்டுகிறது என்பதும் அவரது கூற்றகும்.
கந்தசாமி மதம் என்ற கருத்தியலை இந் நாடகத்தில் சாடி இருப்பது இந் நாடகத்தின் தனிச் சிறப்பாகும். அதுவும் நேரடியாகத் தாக்கவில்லை.

பார்வையாளர் எம் மதத்தவராயினும் நகைச்சுவையுடன் நாடகத்தைப் பார்ப்பர். அதன் பின்புறத்தில் மதத்தின் பொய்மையை ஆசிரியர் உடைத்தெறிவதை சிந்தண்மூலம் அறிவர். இராமலிங்கம் என்றேர் பாத்திரத்தை ஆசிரியர் தன் பகுத்தறிவுக் கருத்துக்களையும் தருக்க நியாயங்களையும் கூறுவதற்காக நாடகத்தில் கொண்டு வந்துள்ளார். இராமலிங்கம் என்ற பாத்திரம் கந்தசாமியே. கதாநாயகன் அசல் கிறிஸ்தவன்; கதாநாயகி சைவப் பழம். காதலுக்காக இருவரும் மதம் மாறுகின்றனர். மாறிய மதத்தை இறுகத் தழுவி காதலைக் கைவிடுகின்றனர். இதுவே கதையின் கருவான போதும் "மதம், காதல்" என்ற பொய்மைகளை கந்தசாமி சாடும் திறமை அபாரம்.

'மதமே பொய். இருவரும் பொய்களை நம்புகிறர்கள். ஆனல் வெவ்வேறு பொய்கள் - கந்தசாமி இராமலிங்கம் என்ற பாத்திரம் மூலம் கூறுகிறார்,

நல்ல நாடகம் சமூக முரண்பாடுகளைக் கையாள வேண்டும். சிந்தனையில் மோதலை ஏற்படுத்துவதோடு தன்னை உணர்ந்து கொள்ள உதவ வேண்டும். நாடகம் பார்க்கும் வேளை நடிகனக இருந்தவன் நாடகம் முடிந்ததும் புது நடிகனாக வேண்டும், வாழ்க்கையில்.

இந் நாடகம் மேடையில் நடிப்பதற்காக எழுதப்பட்டபோதும் படித்துச் சுவைப்பதற்குமாக அமைந்திருப்பது அதன் தனிச் சிறப்பாகும். புதிதாக நாடகம் எழுதுவோருக்கும் காட்சி அமைப்பையும் கருத்தின் ஆழத்தைக் கையாளும் முறையையும் கற்பிக்கத் தக்கதாக இந் நாடகம் உள்ளது. இத்தகைய நாடகங்கள் அரிதே. அதனலேயே இந் நாடகத்தை வெளியிட வேண்டும் எனவும் நான் விரும்பினேன். இந் நாடகத்தை வெளியிட முன்வந்த எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், அதற்கு உதவியவர்களும் பாராட்டுக்குரியவர்.

 

 


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here