ஈழத்துத்தமிழ் நாவல்களில் அனைத்துக்குழுக்களாலும் தவிர்க்க முடியாததொரு படைப்பாகக்கருதக்கூடிய படைப்பு அ.பாலமனோரகனின் 'நிலக்கிளி'. அந்த ஒரு படைப்பின் மூலம் ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் தனக்கென்றோரிடத்தைப்பிடித்துக்கொண்டவர் அவர். வன்னி மண்ணின் மணம் கமழும் நல்லதொரு நாவல்.

நிலக்கிளி நல்லதொரு படிமம். நிலத்தில் பொந்துகள் அமைத்து கூடுகட்டி வாழும் அழகிய பறவைகள் நிலக்கிளிகள். இவை தாம் வசிக்கும் வளைகளை விட்டு அதிக உயரம் பறப்பதில்லை. இவ்விதம் நிலக்கிளிகளைப்பற்றிக்குறிப்பிடும் ஆசிரியர் பதஞ்சலியையும் அவ்விதமானதொரு நிலக்கிளியாக நாவலில் உருவகித்திருக்கின்றார்.

இந்த நாவல் என்னைக்கவர்ந்ததற்கு முக்கிய காரணங்கள்: வன்னி மண் வாசனை தவழும் எழுத்து மற்றும்பாத்திரப்படைப்பு (நாவலின் பாத்திரங்கள் அனைத்துமே உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றன).

இந்த நிலக்கிளிகளைப்பற்றி நான் இந்நாவலைப்படிப்பதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. எனது பால்ய காலம் வன்னியின் ஒரு பகுதியாக வவுனியாவில் கழிந்திருந்தாலும் அங்கு நான் வாழ்ந்திருந்த காலத்தில் இவ்விதமானதொரு பறவையைப்பற்றிக்கேட்டதேயில்லை. நிலக்கிளி என்பது இன்னுமொரு பறவைக்கு பால மனோகரன் வைத்த பெயரா அல்லது உண்மையிலேயே அப்பெயரில் அழைக்கப்படுமொரு பறவை உள்ளதா? ஏனெனில் இன்று வரை எனக்கு 'நிலக்கிளி' என்னும் பறவை பற்றி 'நிலக்கிளி' நாவலில் வருவதை விட மேலதிகமான தகவல்களெதுவும் கிடைக்கவில்லை. 'நிலக்கிளி' பற்றி வன்னி நண்பர்கள் யாராவது மேலதிகத்தகவல்களிருப்பின் பகிர்ந்து கொள்ளவும்.

இந்த நாவலின் ஆரம்பம் முரலிப்பழம் பற்றிய வர்ணனையுடன் 'கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள்! அடிக்கடி பெய்த பெரு மழையில் குளித்த தண்ணிமுறிப்புக் காடுகள் பளிச்சென்றிருந்தன. ஈரலிப்பைச் சுமந்துவந்த காலையிளங் காற்றில் முரலிப் பழங்களின் இனிய மணம் தவழ்ந்து வந்தது' என்று ஆரம்பிக்கின்றது. நல்லதோர் ஆரம்பம். அந்த ஆரம்பமே நாவல் இயற்கை எழில் ததும்பும் வன்னி மண்ணின் மணம் கமழும் நாவலென்பதை எடுத்துக்காட்டி விடுகிறது. தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

இந்த முரலிப்பழங்கள் எனக்கு வவுனியாவில் கழிந்த மாணவப்பருவத்தினை ஞாபகத்தில் எழச்செய்வது வழக்கம். வவுனியா மகா வித்தியாலயத்தின் வாசலுக்கு முன்பாகவிருந்த மரமொன்றின் கீழ் ஆச்சிமார்கள் சிலர் கடலை, பல்வகைப்பழங்களென கடகங்களில் கொண்டுவந்து விற்றுக்கொண்டிருப்பார்கள். பருவ மாறுதல்களுக்கேற்ப அவர்கள் கொண்டுவரும் பழங்களின் தன்மையும் மாறுவது வழக்கம். சில சமயங்களில் அவர்கள் 'முதலி'ப்பழம்தான் கொண்டுவருவார்கள். நிலக்கிளி நாவலை வாசிக்கும்மட்டும் அந்த முரலிப்பழங்கள் எனக்கு முதலிப்பழங்கள்தாம். அவ்விதம்தான் நாங்கள் அந்தப்பழங்களை அக்காலகட்டத்தில் குறிப்பிட்டுக்கொண்டிருந்தோம். அக்காலகட்டத்தில் 'முதலி'ப்பழங்கள் கரடிகளுக்கு மிகவும் பிடித்த பழங்களென்று கூறக்கேட்டிருக்கின்றோம். கரடிகளுக்கு மட்டுமல்ல மாணவர்களாகிய எங்களுக்கும் மிகவும் பிடித்த பழங்களாக அவை விளங்கினவென்றே கூறலாம்.

'நிலக்கிளி' நாவலில் வாசிப்பவர்களின் மனதையள்ளும் இயற்கை வர்ணனைகள் நிறையவே உள்ளன. அவற்றிலொன்று மாதிரிக்காக: "பதஞ்சலிக்கு தண்ணிமுறிப்புக் கிராமத்தில் எல்லாமே மிகவும் பிடித்திருந்தன. அடர்ந்து கிடக்கும் இருண்ட காடுகள், அவற்றினூடாகச் சலசலத்தோடும் காட்டாறுகள், அவற்றின் கரையோரங்களில் கானமிசைக்கும் காட்டுப்பறவைகள் - இவையனைத்திலும் அவளுக்குக் கொள்ளை ஆசை! பருவத்தின் தலைவாசலில் அடியெடுத்து வைக்கத் தயாராய் இருக்கும் பதஞ்சலி, நடந்து திரிவது கிடையாது. சதா மான்குட்டியின் துள்ளலும் துடிப்புந்தான்! தண்ணிமுறிப்புக் காடுகளில் காணப்படும் மரைகள் நீலங்கலந்த கருநிறம் படைத்தவை. அழகிய கொம்புகளைத் தலையில் ஏந்தி, அவை கம்பீரமாக நடக்கையில் காண்பவர் நெஞ்சு ஒருதடவை நின்றுதான் பின் அடித்துக்கொள்ளும்! அத்தனை கம்பீரம்! "

எனக்கு அந்த நாவலில் பிடிக்காத முக்கியமானதொரு விடயம் நாவலின் நாயகியான பதஞ்சலி சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னை இழந்தத்தற்குக் காரணமாகத் தன் அறிவுக்கண்ணைத்திறந்து விட்ட புத்தக வாசிப்பே காரணமென்றெண்ணி அவற்றைத்தீயிட்டு எரித்து விடுகின்றாள். அதனை என்னால் ஒரு போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால் பதஞ்சலி நூல்களை எரிக்கும் காட்சியைப்பற்றி நூலாசிரியர் பின்வருமாறு விபரிப்பார்: " பிரசவப் படுக்கையால் எழுந்தவுடன் அவள் செய்த முதற்காரியம், தனக்கு உலகரீதியான நாகரீகம், பண்பாடு என்ற பலவற்றைக் கூறிப்பலவீனமடையச் செய்த கதைப் புத்தகங்களை அடுப்பில் போட்டுக் கொளுத்தியதுதான்! அவை கொழுந்து விட்டெரிந்து சாம்பராவதற்கு முன்பே, அவள் அவற்றையும், அவை தனக்குக் காட்டிய புதிய உலகத்தையும், அதன் புதிய வாசல்களையும் அறவே மறந்து போனாள்."

அவளுக்கு அறிவுக்கண்ணைக்காட்டிய புத்தகங்கள் அவளைப்பலவீனமடையச் செய்து விட்டதாக ஆசிரியர் விபரிக்கின்றார். அவள் தன்னை மறந்து போனதற்குக் காரணம் புத்தகங்களல்ல. மானுடப்படைப்பின் பல பலவீனங்களே. அவள் புத்தகங்களைப்படித்திருக்காவிட்டாலும் அவள் அவ்விதம்தாம் அச்சூழலில் நடந்துகொண்டிருப்பாள். நாவலிலும் அதற்கான சூழலை ஆசிரியர் விரிவாகவே விபரித்திருப்பார். புயல் வீசுமிரவில் பதஞ்சலியும், ஆசிரியர் சுந்தரலிங்கமும் நிலை தடுமாறுவதை விரிவாகவே விபரித்திருப்பார். உண்மை இவ்விதமிருக்க எதற்காக எழுத்தாளரான ஆசிரியர் புத்தகங்கள் மீது இவ்வளவு வெறுப்பு கொண்டிருந்தாரோ தெரியவில்லை. புத்தகங்களைப்பற்றி வரும் அந்த வரிகளை நீக்கி விட்டாலும் அது நாவலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. எனவே எதிர்காலத்தில் வெளியாகும் 'நிலக்கிளி'யின் புதிய பதிப்புகளில் அவ்வரிகளை நீக்கி வெளியிட்டால் அது நாவலுக்கு இன்னும் வலுச்சேர்ப்பதாகவே அமையுமென்பதென் அபிப்பிராயம்.

'நிலக்கிளி'யுட்பட பல நாவல்கள் அக்காலகட்டத்தில் நூலுருப்பெற்றதற்கு முக்கிய காரணங்களிலொன்று வீரகேசரி பதிப்பகம். அவ்விதம் அவர்கள் வெளியிடுவதற்கு முக்கியமான காரணங்களிலொன்றாக இருந்தது அக்காலகட்டத்தில் இலங்கையை ஆண்டுகொண்டிருந்த சிறிமா அம்மையாரின் பொருளாதாரக்கொள்கை. இறக்குமதிகளைக்குறைத்து அனைத்துத்துறைகளிலும் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது அவரது பொருளாதாரக்கொள்கை. அதற்குக்காரணம் அவரது கட்சியினருடன் இலங்கையின் பிரபல இடதுசாரிக்கட்சிகளெல்லாம் கூட்டணி அமைத்திருந்ததுதான். விவசாயிகள் தொடக்கம், பதிப்பகங்கள், திரைப் படத்தயாரிப்பாளர்கள் எனப்பல்துறையினரும் இலாபம் அடைந்துகொண்டிருந்தார்கள். யாழ்ப்பாண விவசாயிகள் தொடக்கம், வன்னிக்குப்படையெடுத்து மிளகாய் வைத்து இலாபம் சம்பாதித்த விவசாயிகள் வரை விவசாயிகள் பலர் அக்காலகட்டத்தில் இலாபம் சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள். அது போல் அக்காலகட்டத்தில் இலங்கையில் பல தமிழ்த்திரைப்படங்கள் (கோமாளிகள், வாடைக்காற்று, நான் உங்கள் தோழன், புதிய காற்று என) வெளியாகி அவற்றில் சில (கோமாளிகள் போன்ற) நூறு நாள்களையும் கடந்து ஓடின. வீரகேசரி பதிப்பகமும் அக்காலகட்டத்தில்தான் ஐம்பது நாவல்களை மாதாமாதம் வெளியிட்டு இலாபம் சம்பாதித்ததுடன் , அதன் மூலம் ஈழத்துத்தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நூல்கள் வெளிவரவும் காரணமாக அமைந்தது. தமிழர்களுக்கெதிரான அரசியல் ரீதியான அடக்குமுறைகளைச் சிறிமா அரசாங்கம் கட்டவிழ்த்து விடாமலிருந்திருந்தால் உண்மையில் நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் மிகுந்த பயனுள்ளதொரு காலகட்டமாக அக்காலகட்டம் விளங்கியிருந்திருக்கும்.

'நிலக்கிளி' நாவலைக்கீழுள்ள 'நூலகம்' இணையத்தள இணைப்பினில் வாசிக்கலாம்: http://noolaham.net/project/01/93/93.htm

 



சிறிது இலக்கணம் படிப்போமா?


வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்தமிழாசிரியர் கண்ணன்  மாணவனொருவனின் விடைத்தாளைத்திருத்தும்போது அம்மாணவன் எழுதியிருந்த கட்டுரையினைப் படித்தார். படித்தவர் கீழுள்ள வசனங்களைப்பார்த்து ஆத்திரத்துடன் மாணவனைப்பார்த்து "என்ன தமிழ் எழுதியிருக்கிறாய்" என்று கத்தினார். அதற்கு அந்த மாணவன் கூறினான்: "சேர், இலக்கணத்தமிழில் தானே எழுதியிருக்கின்றேன்" என்று கூறிவிட்டு மேலும் சில விளக்கத்தை தன்னை நோக்கிக் கத்திய ஆசிரியருக்குக் கூறினான். அதனைக்கேட்டதும் ஆசிரியர் வெட்கத்தால் கூனிக்குறுகிப் போனார். இது கூடத்தெரியாத நான் எவ்விதம் தமிழாசிரியராக இருக்க முடியும் என்று கூறிவிட்டு மறுநாளே தன் தமிழாசிரியப் பணியைத்தலய் முழுகி விட்டார். ஏன்?

1. காவல்துறய் அதிகாரி திருடனய்க் கய்து செய்தார்.

2. பூனய் கண்ணய் மூடினால் உலகம் இருண்டு போகுமா?

3. தலய் கொடுத்தான் தம்பி.

4. பனய் மரத்தய்க் கற்பகதரு என்பார்கள்.

அந்த மாணவன் கூறிய விளக்கம் இதுதான்:

ஐ என்னும் எழுத்தினை அய் என்று எழுதலாம். அதன்படி

கைது - (க்+ஐ)து = (க்+அய்)து = கய்து.

இது போல் பூனை =  பூனய், காவல்துறை - காவல்துறய், கண்ணை = கண்ணய், தலை = தலய், பனை = பனய், மரத்தை = மரத்தய், திருடனை = திருடனய் என்றும் எழுதலாமே என்று.

ஐ எழுத்துக்குப் பதிலாக சிலர் அய் என்றும் , ஒள எழுத்துக்குப் பதிலாகச் சிலர் அவ் என்றும் எழுதுவதுண்டு. அவர்களது வாதம் ஐ, ஒள ஆகிய எழுத்துகளைத் தமிழிலிருந்து நீக்கி விட வேண்டுமென்பதுதான். இது எப்படி இருக்கு? :-)


The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora: A Reading of Selected Short Stories of V.N. Giridharan' By Gnanaseelan Jeyaseelan

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

தமிழகத்தில் ஆர்.ஶ்ரீனிவாசன் (R.Srinivasan) அவர்களால் வெளியிடப்படும் 'புதிய பனுவல் ( An International Journal Of Tamil Studies )' என்னும் ஆய்விதழில் (Vol 2, No 01 2010) எனது புகலிடப்புனைகதைகளை மையமாக வைத்து The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora: A Reading of Selected Short Stories of V.N. Giridharan' என்னும் ஆய்வுக்கட்டுரையொன்றினை யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஞானசீலன் ஜெயசீலன் அவர்கள் எழுதியிருந்தார். அதற்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. இதுவரை காலமும் வெளியான 'புதிய பனுவல்' ஆய்விதழ் பற்றிய தகவல்களை 'புதிய பனுவல்' இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். 'புதிய பனுவல்' இதழ்களை வாங்க விரும்பினால் திரு.R.Srinivasan அவர்களுடன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ளுங்கள். முகநூலில் அவரது அடையாளம் R.Srinivasan. முகநூலில் அவருடன் தொடர்புகொள்ளுவதன் மூலமும் 'புதிய பனுவல்' இதழ்களைப்பெற்றுக்கொள்ளலாம்.: http://www.indianfolklore.org/journals/index.php/Panu/article/view/776/1005


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here