சுய வாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை, தெளிந்த இலகுவான மொழிநடை மிக்க நுணாவிலூர் கா.விசயரத்தினத்தின் எழுத்தாற்றல்!- விரைவில் வெளிவரவிருக்கும் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் சங்கத்தமிழ் இலக்கியக் கட்டுரைத்தொகுப்பு நூலுக்கு எழுதிய  கட்டுரை இக்கட்டுரை. இத்தொகுப்பிலுள்ள பதினான்கு கட்டுரைகளில் எட்டு கட்டுரைகள் ஏறகனவே 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானவையென்பதும் குறிப்பிடத்தக்கது. - வ.ந.கி -


தொல்காப்பியம் என்றால் உடனே எனக்கு நினைவுக்கு வருபவர் நுணாவிலூர் கா.விசயரத்தினம். அதற்குக் காரணம் 'பதிவுகள்' இணைய இதழில் இவர் எழுதிய , எழுதிவரும் தொல்காப்பியம் பற்றிய, சங்கத்தமிழ் நூல்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளும், ஏற்கனவே நூலுருப்பெற்ற இவரது 'தொல்காப்பியத்தேன் துளிகள்..' என்னும் நூலும்தாம். ஆரம்பத்தில் இவர் 'பதிவுகள்' இணைய இதழுக்கு இலக்கியக்கட்டுரைகள் அனுப்பியபோது இவர் தமிழ்ப்பேராசிரியர்களுள் ஒருவராக இருக்கக்கூடுமென்று எண்ணியிருந்தேன். பின்னர்தான் தெரிந்தது இவர் தமிழ்ப்பேராசிரியரல்லர் ஆனால் ஓய்வு பெற்ற ஒரு கணக்கியல் பட்டதாரி; கணக்காய்வுத் திணைகளத்தில் (இலங்கை) கணக்காய்வு அத்தியட்சகராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவரென்பது.

கணக்கியல் பட்டதாரியான இவர் எவ்விதம் இவ்விதம் சங்கத்தமிழ் இலக்கிய நூல்கள் பற்றிய ஆய்வில் ஆர்வம் கொண்டார்? ஆனால் அந்த ஆர்வம் இவரது ஓய்வுக்காலத்தைப் பயனுள்ளதாக மாற்றித் தமிழ் இலக்கிய உலகுக்கு வளம் சேர்க்குமொன்றாக மாற்றி விட்டது. தமிழ்ப்பேராசிரியர்களே எழுதாத எண்ணிக்கையில் சங்கத்தமிழ் நூல்கள் பற்றியும், குறிப்பாகத் 'தொல்காப்பியம்' பற்றியும் இவர் எழுதி வருவது பாராட்டத்தக்கது. தன் பிறந்த மண்ணை நினைவுபடுத்தும் வகையில் 'நுணாவிலூர் கா.விசயரத்தினம்' என்னும் பெயரில் இலக்கியக் கட்டுரைகளை எழுதி வரும் நுணாவிலூராரின்  சுயவாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை மற்றும், சாதாரண வாசகர்களுக்கும் புரியக்கூடிய தெளிந்த இலகு நடை ஆகியவை அவரது எழுத்துகள் சிறப்புற்று விளங்குவதற்கு முக்கிய காரணங்கள். இத்தொகுதியிலுள்ள பதினான்கு கட்டுரைகளில் எட்டு கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளிவந்தவை என்பதும் மகிழ்ச்சிக்குரியது.

1. நுணாவிலூராரின் சுயவாசிப்புடன் கூடிய ஆய்வுப்புலமை!

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களின் இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள் அனைத்துமே அவரது சங்க நூல்கள் மீதான பன்முக, ஆழ்ந்த வாசிப்பினையும் அவற்றை ஆழமாக ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் திறமையினையும் வெளிப்படுத்துவை. உதாரணத்துக்கு இத்தொகுப்பிலுள்ள சில கட்டுரைகளை இந்த நோக்கில் ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

'சங்க இலக்கியக் களவியற் பாடல்கள் வெளிக்கொணரும் அம்பலும் அலரும்' என்னும் கட்டுரை சங்ககாலத்தமிழர்கள் வாழ்வில் காதலைச் சமூகம் அங்கீகரித்திருந்ததை இக்கட்டுரை விபரிக்கும். காதல் வயப்பட்டிருக்கும் தலைவனும், தலைவியும் களவாகச் சந்திப்பதையும் , அதற்காகச் சில கட்டுப்பாடுகளைச் சமூகம் விதித்திருந்ததையும் கட்டுரை மேலும் விபரிக்கும். இவ்விதம் காதலர்கள் பிறருக்குத்தெரியாதவாறு களவாகச் சந்திப்பதைக் 'களவு' என்று அழைத்தனர். பகலில் தலைவனும் , தலைவியும் சந்திக்குமிடத்தைப் 'பகற்குறி'யென்றும், இரவில் சந்திப்பதை 'இரவுக்குறி'யென்றும் அழைத்தனர். இவ்விதம் சந்திக்கும்போது எவ்விதம் எங்கு சந்திக்க வேண்டுமென்பதையும் , அவ்விதம் சந்திக்குமிடங்கள் எவ்விதம் அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதையும் அக்காலத்தமிழர்கள் சில நிபந்தனைக்களுக்குள்ளாக்கியிருந்தனர். அவற்றை மேற்படி கட்டுரையில் கட்டுரையாளர் பின்வருமாறு கூறுவார்:

"தலைவன் தலைவியர் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது குறியிடம் அமைத்துக் கூடுவர். பகலிற் கூடுமிடம் 'பகற்குறி' என்றும்,  இரவிற் கூடுமிடம் 'இரவுக்குறி' என்றும் கூறுவர்.  'குறியெனப் படுவது இரவினும் பகலினும், அறியக் கிளந்த ஆற்ற தென்ப.' –(பொருள். 128)

இரவுக்குறிக்குரிய இடமானது, இல்லத்துக்கு அண்மித்ததாகவும் அவர்கள் பேசுவதை வீட்டிலுள்ளோர் கேட்குமாறு அமைந்ததாகவும் இருக்க வேண்டுமென்று சூத்திரம் கூறும் 'இரவுக் குறியே இல்லகத் துள்ளும்
மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே
மனையகம் புகாஅக் காலை யான.' – (129)

, பகற்குறிக்குரிய இடமானது மதிலின் புறத்தே அமையுமென்றும், அவ்விடம் தலைவிக்கு நன்றாகத் தெரிந்த இடமாகவும் அமைய வேண்டுமென்றும் கூறுவர்.
'பகற்புணர் களனே புறனென மொழிப
, அவளறி வுணர வருவழி யான.' – (பொருள். 130)"

இவ்விதம் ஆரம்பிக்கும் கட்டுரை, அம்பல் பற்றிய அலர் பற்றிய வரைவிலக்கணங்களை எடுத்துக்கூறி, காதற் களவு பற்றிய , தொல்காப்பிய, அகநானூறு, நற்றிணை, ஐங்குறுநூறு, குறுந்தொகை, திருக்குறள், நாலடியார் என் பல நூல்களை ஆதாரங்களாக்கி ஆய்வுக்கண்ணோட்டத்துடன்  விபரிக்கிறது.

இது போல் பெண்களின் குணவியல்புகளைப்பற்றிய ஆசிரியரின் கருத்துகளும் அவரது ஆய்வுச்சிறப்பினை வெளிப்படுத்துகின்றன. உதாரணத்துக்கு பண்டைய தமிழரின் இலக்கிய நூல்கள் பெண்களின் நால்வகைப்பண்புகளாக அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்று வகைப்படுத்தியிருப்பதை அனைவரும் அறிவர். ஆனால் தொல்காப்பியர் காலத்தில் பெண்களின்  மூவகைப்பண்புகளாக அச்சம், மடம் , நாணம் ஆகியவையே குறிப்பிடப்படுகின்றன. நான்காவது குணமாகிய பயிர்ப்பு என்னும் குணம் பற்றி பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப்புலவரின் 'நளவெண்பா' நூலே முதன் முதலில் குறிப்பிடுகின்றது என்பதைச்சுட்டிக்காட்டுகின்றார் தனது 'மகளிர் மாண்பை மேம்படுத்திச்சூத்திரம் அமைத்தவர் தொல்காப்பியர்' என்னும் கட்டுரையில்.

இவ்விதமே தொகுப்பிலுள்ள கட்டுரைகளொவ்வொன்றுமுள்ளதைக்காணலாம். ஓவ்வொரு கட்டுரையின் முடிவிலும் நிறைவுரை அல்லது முடிவுரை என்னும் பகுதியைக்காணலாம். இம்முடிவுரை அல்லது நிறைவுரை பகுதியில் கட்டுரையின் சாரம் சுருக்கமாகக்கூறப்படுகிறது. இவ்விதமாகக் கட்டுரைகளை ஆசிரியர் அமைத்திருப்பதன் முக்கியமான காரணம் ஆசிரியர் இவ்விதமான கட்டுரைகளை எழுதியதன் முக்கிய நோக்கங்களிலொன்றினால்தான். அந்த நோக்கம்  சாதாரண வாசகர்களையும் தொல்காப்பியம் முதலான சங்க இலக்கியங்கள் மிகவும் எளிய, இலகுவான நடையில் கூறப்படுவதன் மூலம் சென்றடைய வேண்டுமென்பதுதான்.

2. நுணாவிலூராரின் சாதாரண வாசகர்களுக்கும் புரியக்கூடிய தெளிந்த இலகு நடை!

தொல்காப்பியம் என்றாலே சாதாரண மக்களுக்கெல்லாம் புரியாததொரு இலக்கண நூலென்று பலர் நினைத்து விடுகின்றார்கள். ஆனால் அது தவறு. தொல்காப்பியம் மக்களுக்காக எழுதப்பட்ட நூல். அந்நூல் எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களுக்குப் புரியக்கூடிய வகையில் எழுதப்பட்ட நூல் தொல்காப்பியம். இன்று அக்காலகட்டத்து மொழி நடை கடினமானதாகவிருப்பினும், அக்காலகட்டத்தைப்பொறுத்தவரையில் எளிதான நடையிலேயே தொல்காப்பியம் எழுதப்பட்டுள்ளது என்பது ஆசிரியரின் எண்ணம். இதனை ஏற்கக்கூடியதாகவுள்ளது. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட நூல்களின் மொழி நடை இன்று வாசிக்கும்போது சிரமமாகவிருக்கிறதல்லவா. ஆனால் அன்று மக்களுக்குப் புரியக்கூடிய மொழியில் இருந்திருக்குமல்லவா.  ஆசிரியரின் இவ்வெண்ணத்தை அவரது 'தொல்காப்பியத்தேன் துளிகள்..' நூலின் அவரது 'நுழையுமுன் என் உரை' என்னும் குறிப்பின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

"தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல் என்று கூறப்பட்டாலும் அந்நூல் ஓர் இலக்கிய நூலுமாகும். அதில் நிறைந்த இலக்கியங்கள் பொதிந்துள்ளன. அதிலுள்ள சூத்திரங்கள் சாதாரண மக்களுக்குப் புரிவதில்லை என்றும் , அவை பண்டிதர் பரம்பரைக்குரியனவென்றும் கூறி எட்ட நிற்போர் பலர்.  ஆனால் தொல்காப்பியம் எழுந்த காலத்தை நாம் நோக்க வேண்டும். அன்று தமிழ்மொழி சிறப்புற்றிருந்தது. அக்கால மக்களுக்கு அன்று அவை புரிந்திருக்க வேண்டும். ஏனெனில் தொல்காப்பியம் மக்களுக்காக எழுதப்பட்ட நூல், ஆனால் இன்றுள்ளோருக்கு இச்சூத்திரங்கள் கடினமானவையே. சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் இலகு தமிழில் எழுதுவதே என் நூலின் நோக்காகும். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை மையப்படுத்தியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. "( நூல்: தொல்காப்பியத்துளிகள்..', பக்கம் xxi)

மேற்படி ஆசிரியரின் கூற்று ஏற்கனவே வெளியான அவரது நூலான 'தொல்காப்பியத்தேன் துளிகள்..' என்னும் நூலுக்கான ஆசிரியரின் கூற்றாகும். அது இந்நூலிலுள்ள கட்டுரைகளுக்கும் பொருந்தும்.

பொதுவாகவே ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதுபோல் 'தொல்காப்பியமா?' என்று தொலைவில் ஒதுங்குவோரே பலர். அவர்களைப்பொறுத்தவரையில் தொல்காப்பியம் கடின நடையிலமைந்த இலக்கணச்சூத்திரங்களை உள்ளடக்கிய நூல். ஆனால் தொல்காப்பியம் வெறும் இலக்கண நூல் மட்டுமல்ல இலக்கிய நூலும் கூட என்னும் தன் கருத்தினை தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை மையமாக வைத்து ஆசிரியர் படைத்திருக்கும் ஆய்வுக்கட்டுரைகள் நிரூபிக்கின்றன. இடைச்சங்க காலத்தைச்சேர்ந்த தொல்காப்பியத்தின் பொருளதிகாரமும் ஏனைய கடைச்சங்ககாலத்தமிழ் நூல்களும் அக்காலகட்டத்தமிழ் மக்களின் சமூக வாழ்வை , அவர்கள் கைப்பிடித்து ஒழுகிய சமூகப்பண்புகளை, அவர்களது காதல் வாழ்க்கையினை, பெண்களுக்குச் சமூகத்தில் ஒதுக்கப்பட்டிருந்த நிலையினை, எவ்விதம் அன்று தமிழ் மக்கள் நிலப்பிரிவுகளுக்கேற்ப வாழ்ந்தார்கள் என்பதை, அவர்களுக்கிடையில் நிலவிய பழக்க வழக்கங்களை, பொழுது போக்குகளை, அவர்கள் அணிந்த அணிகலன்களை, அவர்கள் உண்டு மகிழ்ந்த உணவு வகைகளை, விளையாடி இன்புற்ற விளையாட்டுகளை, நகர அமைப்பு முறையினை, வாழ்ந்த பல்வகை விலங்கினங்களை, பறவைகளை, விருட்சங்களை, பண்டைத்தமிழரின் திருமணச் செயற்பாடுகளை, வாழ்வின் வழிகாட்டலுக்காக அறிவுறுத்திய நல்வழிக்கூற்றுகளை, அவர்களது அறிவியற் சிறப்பினை, பெண்களின் குணநலன்களை என்று பல விடயங்களை வெளிப்படுத்துகின்றன. அவற்றை ஆசிரியரின் தொல்காப்பியம் உட்பட ஏனைய கடைச்சங்க நூல்கள் மீதான புலமை இந்நூலிலுள்ள கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்துகின்றது.

இந்நூலிலுள்ள கட்டுரைகள் ஆசிரியரின் இவ்வகைக்கட்டுரைகளைப் படைப்பதற்கான முக்கிய நோக்கங்களை நிறைவேற்றுகின்றன. மிகவும் கடினமானவையாக இன்று வாழும் மக்களுக்குத்தென்படும் சங்ககாலத்தமிழ் நூல்கள் கூறும் விடயங்கள் மூலம் அக்காலகட்டத்தமிழர்கள்தம் வாழ்வினை, பண்பாடுகளை, சமூக அமைப்பினை, நகர அமைப்பினை எனப்பல்வகை விடயங்களை சாதாரண மக்களும் அறிந்துகொள்ள வேண்டுமென்பது ஆசிரியரின் அவா. அந்த அவரது நோக்கம் நிறைவேறுவதற்கு அந்நூல்களையெல்லாம் நன்கு வாசித்து அவை கூறும் பொருளின் சாரத்தை அறிந்திருக்க வேண்டும். அதனை அவரது தொடர்ச்சியான சுயவாசிப்புடன் கூடிய சங்கத்தமிழ் இலக்கியங்கள் மீதான புலமை சாத்தியமாக்கியிருக்கின்றது. இவ்விதம் தான் அறிந்த விடயத்தை சாதாரண மக்களிடத்தே எடுத்துச்செல்வதற்கு அவரது தெளிந்த இலகுவான மொழி நடை உதவியிருக்கின்றது. தன் ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ளதாக்கித்தன் எழுத்துகள் மூலம் சாதனை படைக்கும் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்கள் தொடர்ந்தும் தான் சுவைத்த சங்கத்தமிழ் நூல்கள் கூறும் பொருளினை மையமாக வைத்து, கட்டுரைகள் பலவற்றைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் மொழி நடையில் எழுத வேண்டும்; எழுதுவார் என்றே நம்புகின்றோம். அவரது இலக்கியச்செயற்பாடுகள் சிறப்புடன் மேலும் தொடர்ந்திட வாழ்த்துகிறோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்