- வ.ந.கிரிதரன் -அண்மையில் திரு. அருணகிரி சங்கரன்கோவில் என்பவரிடமிருந்து கடிதமொன்று வந்தது. அதில் அவர் தனித்தமிழில் எழுதுவதன் அவசியம் பற்றி எழுதியிருந்தார். அவரது கடிதத்தையும் அதற்கான எனது பதிலையும் இங்கு நான் பதிவு செய்கின்றேன்,


On Mon, Aug 17, 2020 at 5:44 AM Arunagiri Sankarankovil <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.> wrote:

மதிப்பிற்கு உரிய நவரத்தினம் கிரிதரன் அவர்களுக்கு,

வணக்கம். இன்று காலை இந்திய நேரம் 5.30 மணி அளவில், பிரான்ஸ் நாட்டில் வசிக்கின்ற ஈழத்தமிழ் எழுத்தாளர் வி.ரி. இளங்கோவன் அவர்களுடன் நான் நிகழ்த்திய உரையாடலை, இத்துடன் தங்கள் பார்வைக்கு இணைத்து உள்ளேன்.
என்னுடைய முகநூல் பதிவு.....     இன்று காலையில் வாட்ஸ் அப்பில் ஒரு காணொளி பகிர்ந்தேன்.     உடனே, எழுத்தாளர் வி.ரி. இளங்கோவன், பதிவுகள்.காம் செய்திகளையும் பாருங்கள் என குறிப்பு அனுப்பினார்.
அவரை அழைத்தேன்.     இன்னமும் விழித்து இருக்கின்றீர்களா? இப்போது ஃபிரான்ஸ் நாட்டில் மணி என்ன ஆகின்றது? என்று கேட்டேன்.

இளங்கோவன்: இப்போது இங்கே மணி இரவு 1.50 என்றார்.
அருணகிரி: 11 மணிக்குள் உறங்குங்கள். அதுதான் நல்லது.
இளங்கோவன்: இல்லை. எனக்கு இரவில் நீண்ட நேரம் கண்விழித்துப் படிப்பது வழக்கமாக இருக்கின்றது.
அருணகிரி: நீங்கள் சொன்ன பதிவுகள்.காம் செய்திகளைப் பார்த்தேன். வடமொழிச் சொற்களின் கலப்பு நிறைய இருக்கின்றது என்றேன்.
இளங்கோவன்: இதுகுறித்து நீங்கள் நண்பர் கிரிதரன் அவர்களோடு பேசுங்கள். அவர்தான் கனடாவில் இருந்து பதிவுகள்.காம் எழுதுகின்றார். அவரும் ஒரு எழுத்தாளர். அரசியல், இலக்கியக் கருத்துகளை எழுதுகின்றார். அந்தத் தளத்தை, உலகம் முழுமையும் தமிழர்கள் பார்க்கின்றார்கள். தமிழ்நாட்டு எழுத்தாளர்களும் எழுதுகின்றார்கள்.
அருணகிரி:அவருடைய மின் அஞ்சல் முகவரி அனுப்புங்கள்.
இளங்கோவன்: அனுப்புகின்றேன். அவரது மின் அஞ்சல் முகவரி உங்களுக்கு அனுப்புகின்றேன்.
அருணகிரி: என்னுடைய பதிவுகளைப் பார்க்கின்றீர்களா? உங்கள் கருத்து என்ன?
இளங்கோவன்: ஆமாம். முழுமையும் வாசிக்கின்றேன். சிறப்பாக இருக்கின்றன.
அருணகிரி: ஈழத்தமிழ் எழுத்தாளர்களுடைய எழுத்துகளில் வடமொழிச் சொற்களின் கலப்பு பெருமளவில் உள்ளதே?
இளங்கோவன்: அதற்குக் காரணம், தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகள், சினிமாக்கள்தான்.
அருணகிரி:பதிவுகள்.காம் செய்திகளைப் பார்த்தேன். வடமொழிச் சொற்களின் கலப்பு நிறைய இருக்கின்றது. ஈழத்தமிழ் எழுத்தாளர்களுடைய எழுத்துகளில் வடமொழிச் சொற்களின் கலப்பு பெருமளவில் உள்ளதே? அதற்கு முன்பே, 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள் மொழிபெயர்ப்பு செய்த பைபிளில், வடமொழிச் சொற்கள் பாதிக்குப் பாதி இருக்கின்றனவே?  தமிழ்நாட்டில் மறைமலை அடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் போல, ஈழத்தில் யாரும் இயங்கவில்லையா?
இளங்கோவன்: ஆம். அந்தக் காலகட்டத்தில் மணிப்பிரவாள நடைதான் வழக்கத்தில் இருந்து. தமிழ்நாட்டில் இருந்து வந்த புத்தகங்கள் அந்த நடையில்தான் எழுதப்பட்டு இருந்தன.
அருணகிரி: தமிழ்நாட்டில் மறைமலை அடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் போல, ஈழத்தில் யாரும் இயங்கவில்லையா?
இளங்கோவன்: மறைமலை அடிகள் தொடங்கியதை, திராவிட இயக்கத்தார் பரவலாக்கினார்கள். குறிப்பாக, அண்ணா அவர்களுடைய எழுத்துகளும், பேச்சுகளும் தனித்தமிழை வளர்த்தன. ஆனால், அதே காலகட்டத்தில் தமிழில் வெளியான திரைப்படங்களில்,  கணவர், காதலரை, சுவாமி என்றுதான் பெண்கள் அழைத்தார்கள். அத்தகைய படங்கள்தான் ஈழத்திற்கு வந்தன. பொதுவாகவே, இன்றைக்கும் யாழ்ப்பாணத்தில் நல்ல தமிழில்தான் உரையாடுகின்றார்கள், எழுதுகின்றார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் இருந்து வந்த புத்தகங்கள், திரைப்படங்கள், இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.  இப்போது தமிழ்த் திரைப்படங்களில், கணவர், காதலரை சுவாமி என அழைப்பது மாறி, டேய், வாடா, போடா என்று பேசுகின்றார்கள். இது ஈழ சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றதோ? எனக் கவலையாக இருக்கின்றது என்றார்.

நன்றி,
தங்கள் அன்புள்ள,
அருணகிரி


இக்கடிதத்திற்கு நான் அனுப்பிய கடிதங்களில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்:

வணக்கம் திரு. அருணகிரி அவர்களுக்கு,

(பதிவுகள்.காம்) தனித்தமிழ், தமிழில் பிறமொழிச் சொற்கள் பற்றிய கடிதமும், அதற்கான என் பதிலும்!   அண்மையில் திரு. அருணகிரி சங்கரன்கோவில் என்பவரிடமிருந்து கடிதமொன்று வந்தது. அதில் அவர் தனித்தமிழில் எழுதுவதன் அவசியம் பற்றி எழுதியிருந்தார். அவரது அக்கடிதத்துக்கான எனது பதிலையும் இங்கு நான் பதிவு செய்கின்றேன்,   நான் தனித்தமிழ் ஆதரவாளனல்லன். இயலுமானவரையில் தமிழ்ச் சொற்களைப்பாவிப்பது நல்லது. ஆனால் நீண்ட காலமாக தமிழ் இலக்கியப்பரப்பில் நிலைத்து நிற்கும் பிறமொழிச் சொற்களை உள் வாங்குவதில் தவறேதுமில்லை என்பதென் கருத்து. ஆங்கிலம் ஏராளமான பிறமொழிச் சொற்களை உள்வாங்கி வளர்ந்திருக்கின்றது. அதுபோல்தான் தமிழும் ஏனைய மொழிச்சொற்களை உள்வாங்குவதால் அழிந்து விடாது. தமிழ் இலக்கணத்தில் பிறநாட்டு, மொழிச் சொற்களை உள்வாங்கும் மரபுமுண்டு.  தனித்தமிழ் என்பதில் பிடிவாதமாகவிருந்தால் என் அபிமானக் கவி மகாகவி பாரதியாரின் கவிதைகளையெல்லாம் தனித்தமிழில் திருத்தி எழுத வேண்டி வந்துவிடும்.  கவியரசர் கம்பர், கவிஞர் கவீந்திரன் (அறிஞர் அ.ந.கந்தசாமி)  இவர்கள்தம் எழுத்துகளையெல்லாம் தமிழ்ப்படுத்த வேண்டி வந்துவிடும்.  'வீர சுதந்திரம் வேண்டி நின்றார்' என்பதையெல்லாம் தமிழ்ப்படுத்த வேண்டி வரும். அதனை நான் ஆதரிக்கவில்லை.  நிச்சயம் நீங்கள் வேட்டி, சால்வையுடன் வாழுமொருவர் அல்லர் என்று நினைக்கின்றேன். மேனாட்டு ஆடைகளை, தொழில் நுட்பத்தையெல்லாம் உள்வாங்கி வாழுமொருவர் என்றும் கருதுகின்றேன். மொழியும் இதனைப்போன்றதுதான். பிறமொழிச் சொற்களை உள்வாங்கி வளர்கிறதென்பேன்.  மேலும் 'நாவல்களிலொன்றான.....நாவல்களுள் ஒன்றான' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இவ்விதம் எழுதுவது எழுத்தாளர்தம் உரிமை. வரும் படைப்புகளில் தட்டச்சுப்பிழைகள், இலக்கணப்பிழைகள் வருவதுண்டு. இயலுமானவரையில் அவற்றைத்திருத்தக் கவனமெடுக்கின்றேன். 'பதிவுகளுக்கு ஆக்கங்கள் அனுப்புபவர்கள் கவனத்துக்கு' என்னுமொரு கட்டுரை பதிவுகளிலுண்டு.அதில் இவை பற்றிக் குறிப்பிட்டுள்ளோம்.  பதிவுகள் இதழுக்குப் பல படைப்புகள் வருவதால் அவற்றை வெளியிடுவது மிகவும் நேரமெடுக்கும் செயல். இதனைத் தனியொருவனாகவே செய்து வருவது உண்மையில் மிகவும் சிரமமான செயல். முடிந்தவரையில் சிறப்பாகக்  கொண்டு வருவதே நோக்கம்.  நன்றி உங்கள் கருத்துகளுக்கு. உங்கள் கருத்துகளை வரவேற்கின்றேன்.  இன்னுமொரு விடயம். என் பெயர் கிரிதரன் கூடத் தமிழ்ச் சொல் அல்ல. ஆனால் நீண்ட காலமாக நாம் அப்பெயரைப் பாவிக்கின்றோம். அதனை மறைமலையடிகளைப்போல் மாற்ற வேண்டி வரும். ஆனால் அதில் எனக்குச் சம்மதமில்லை. என் அப்பா ,  அம்மா இருவரும் விரும்பி வைத்த பெயர்கள். எங்கள் குடும்பத்தில் ஐவர். ஐவரின் பெயர்களையும் அப்பா இராமாயணம், மகாபாரதத்திலிருந்து எடுத்தார். அது அவரது விருப்பம்.  கிரிதரன், பாலமுரளி, சசிரேகா, மைதிலி & தேவகி இவைதாம் அப்பெயர்கள். ஆனால் நான் அறிவியலை நம்புபவன். சமயத்தில் ஈடுபாடு கொண்டவனல்லன்.  அன்புடன், வ.ந.கிரிதரன்  இவற்றுடன் மேலும் சில வார்த்தைகளைச் சேர்க்க விரும்புகின்றேன். இன்று தமிழில் ஆயிரக்கணக்கில் வடசொற்கள், ஏனைய மொழிச்சொற்கள் கலந்து தமிழாகிவிட்டன. அச்சொற்களையெல்லாம் நாம் தமிழ்ச்சொற்களைப்பாவித்துத்தாம் எழுதுகின்றோம்.  அதனால் தமிழ் அழிந்து விடும் என்று பயம் கொள்ளத்தேவையில்லை. பிறமொழிச் சொற்களைப் பாவித்து எழுதுவதைத் தவிர்க்கலாம். நானும் சிலவேளைகளில் தமிழல்லாத வடமொழிச் சொற்களையும் பழக்கதோசத்தில் பாவிப்பதுண்டு. ஆனால் அவையும் நீண்ட காலமாகத் தமிழில் வழங்கி வருவதால் அவற்றை வழக்கிலுள்ளதை ஏற்றுக்கொள்ளல் என்னும் நோக்கில் ஏற்றுக்கொள்ளலாம் என்பதென் கருத்து. வந்தவற்றை, வழக்கில் நீண்ட காலமாகத் தமிழ் மொழியில் கலந்து தமிழாகிவிட்டவற்றை நீக்கவேண்டிய தேவையில்லை. ஆனால் அதே சமயம் பிறமொழிச் சொற்களைத் தமிழ் உள்வாங்குவதையும் தவிர்க்க முடியாதென்றே கருதுகின்றேன். பல ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தமிழ் இவ்விதமே பிறமொழிச்சொற்களை உள்வாங்கி நிலைத்து நிற்கின்றது. இனியும் நிலைத்து நிற்கும்,. தற்போதுள்ள தமிழ், நாம் அனைவரும் அறிந்த தமிழ் இத்தகைய பிறமொழிச் சொற்களை உள்வாங்கிய தமிழ்தான்.  இன்னுமொரு விடயம். மதிப்புக்குரிய அருணகிரி அவர்களது பெயர் கூடத் தமிழ்ப்பெயர் அல்ல. அருணன் அருணோதயம் என்னும் வடசொல்லிலிருந்து உருவான சொல். அருணோதயம் வைகறை என்பதற்கான வடசொல். அதுபோல் கிரி என்பதும் வடசொல்லே. மலை என்று அர்த்தப்படும் வடசொல். மறைமலையடிகள் போல் பெயர்களையெல்லாம் தனித்தமிழ்ப்பெயர்களாக மாற்ற வேண்டிய தேவையில்லை. மொழி என்பது மானுடர்களுக்கு ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்குரிய கருவி, சாதனம். அவ்வளவே.  "யாதும் ஊரே! யாவரும் கேளிர்" - கணியன் பூங்குன்றனார். நான் கணியன் பூங்குன்றனார் வழி வந்தவன். எனக்கு எல்லாமொழிகளும் உறவு மொழிகளே. அவற்றை உள்வாங்குவதால் என் மொழி சிறுப்பதில்லை; சிறப்புறவே செய்கின்றது என்பதில் நம்பிக்கையுள்ளவன்.   ************** முழுமையாக அருணகிரி சங்கரன்கோவில் அவர்களின் கடித்ததுடன் முழுமையாக வாசிக்க: https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6134:2020-08-17-23-50-05&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54நான் தனித்தமிழ் ஆதரவாளனல்லன். இயலுமானவரையில் தமிழ்ச் சொற்களைப்பாவிப்பது நல்லது. ஆனால் நீண்ட காலமாக தமிழ் இலக்கியப்பரப்பில் நிலைத்து நிற்கும் பிறமொழிச் சொற்களை உள் வாங்குவதில் தவறேதுமில்லை என்பதென் கருத்து. ஆங்கிலம் ஏராளமான பிறமொழிச் சொற்களை உள்வாங்கி வளர்ந்திருக்கின்றது. அதுபோல்தான் தமிழும் ஏனைய மொழிச்சொற்களை உள்வாங்குவதால் அழிந்து விடாது. தமிழ் இலக்கணத்தில் பிறநாட்டு, மொழிச் சொற்களை உள்வாங்கும் மரபுமுண்டு.

தனித்தமிழ் என்பதில் பிடிவாதமாகவிருந்தால் என் அபிமானக் கவி மகாகவி பாரதியாரின் கவிதைகளையெல்லாம் தனித்தமிழில் திருத்தி எழுத வேண்டி வந்துவிடும்.  கவியரசர் கம்பர், கவிஞர் கவீந்திரன் (அறிஞர் அ.ந.கந்தசாமி)  இவர்கள்தம் எழுத்துகளையெல்லாம் தமிழ்ப்படுத்த வேண்டி வந்துவிடும்.  'வீர சுதந்திரம் வேண்டி நின்றார்' என்பதையெல்லாம் தமிழ்ப்படுத்த வேண்டி வரும். அதனை நான் ஆதரிக்கவில்லை.

நிச்சயம் நீங்கள் வேட்டி, சால்வையுடன் வாழுமொருவர் அல்லர் என்று நினைக்கின்றேன். மேனாட்டு ஆடைகளை, தொழில் நுட்பத்தையெல்லாம் உள்வாங்கி வாழுமொருவர் என்றும் கருதுகின்றேன். மொழியும் இதனைப்போன்றதுதான். பிறமொழிச் சொற்களை உள்வாங்கி வளர்கிறதென்பேன்.

மேலும் 'நாவல்களிலொன்றான.....நாவல்களுள் ஒன்றான' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இவ்விதம் எழுதுவது எழுத்தாளர்தம் உரிமை. வரும் படைப்புகளில் தட்டச்சுப்பிழைகள், இலக்கணப்பிழைகள் வருவதுண்டு. இயலுமானவரையில் அவற்றைத்திருத்தக் கவனமெடுக்கின்றேன். 'பதிவுகளுக்கு ஆக்கங்கள் அனுப்புபவர்கள் கவனத்துக்கு' என்னுமொரு கட்டுரை பதிவுகளிலுண்டு.அதில் இவை பற்றிக் குறிப்பிட்டுள்ளோம்.

பதிவுகள் இதழுக்குப் பல படைப்புகள் வருவதால் அவற்றை வெளியிடுவது மிகவும் நேரமெடுக்கும் செயல். இதனைத் தனியொருவனாகவே செய்து வருவது உண்மையில் மிகவும் சிரமமான செயல். முடிந்தவரையில் சிறப்பாகக்  கொண்டு வருவதே நோக்கம்.

நன்றி உங்கள் கருத்துகளுக்கு. உங்கள் கருத்துகளை வரவேற்கின்றேன்.

இன்னுமொரு விடயம். என் பெயர் கிரிதரன் கூடத் தமிழ்ச் சொல் அல்ல. ஆனால் நீண்ட காலமாக நாம் அப்பெயரைப் பாவிக்கின்றோம். அதனை மறைமலையடிகளைப்போல் மாற்ற வேண்டி வரும். ஆனால் அதில் எனக்குச் சம்மதமில்லை. என் அப்பா ,  அம்மா இருவரும் விரும்பி வைத்த பெயர்கள். எங்கள் குடும்பத்தில் ஐவர். ஐவரின் பெயர்களையும் அப்பா இராமாயணம், மகாபாரதத்திலிருந்து எடுத்தார். அது அவரது விருப்பம்.  கிரிதரன், பாலமுரளி, சசிரேகா, மைதிலி & தேவகி இவைதாம் அப்பெயர்கள். ஆனால் நான் அறிவியலை நம்புபவன். சமயத்தில் ஈடுபாடு கொண்டவனல்லன்.

அன்புடன்,
வ.ந.கிரிதரன்


இவற்றுடன் மேலும் சில வார்த்தைகளைச் சேர்க்க விரும்புகின்றேன். இன்று தமிழில் ஆயிரக்கணக்கில் வடசொற்கள், ஏனைய மொழிச்சொற்கள் கலந்து தமிழாகிவிட்டன. அச்சொற்களையெல்லாம் நாம் தமிழ்ச்சொற்களைப்பாவித்துத்தாம் எழுதுகின்றோம்.  அதனால் தமிழ் அழிந்து விடும் என்று பயம் கொள்ளத்தேவையில்லை. பிறமொழிச் சொற்களைப் பாவித்து எழுதுவதைத் தவிர்க்கலாம். நானும் சிலவேளைகளில் தமிழல்லாத வடமொழிச் சொற்களையும் பழக்கதோசத்தில் பாவிப்பதுண்டு. ஆனால் அவையும் நீண்ட காலமாகத் தமிழில் வழங்கி வருவதால் அவற்றை வழக்கிலுள்ளதை ஏற்றுக்கொள்ளல் என்னும் நோக்கில் ஏற்றுக்கொள்ளலாம் என்பதென் கருத்து. வந்தவற்றை, வழக்கில் நீண்ட காலமாகத் தமிழ் மொழியில் கலந்து தமிழாகிவிட்டவற்றை நீக்கவேண்டிய தேவையில்லை. ஆனால் அதே சமயம் பிறமொழிச் சொற்களைத் தமிழ் உள்வாங்குவதையும் தவிர்க்க முடியாதென்றே கருதுகின்றேன். பல ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தமிழ் இவ்விதமே பிறமொழிச்சொற்களை உள்வாங்கி நிலைத்து நிற்கின்றது. இனியும் நிலைத்து நிற்கும்,. தற்போதுள்ள தமிழ், நாம் அனைவரும் அறிந்த தமிழ் இத்தகைய பிறமொழிச் சொற்களை உள்வாங்கிய தமிழ்தான்.

இன்னுமொரு விடயம். மதிப்புக்குரிய அருணகிரி அவர்களது பெயர் கூடத் தமிழ்ப்பெயர் அல்ல. அருணன் அருணோதயம் என்னும் வடசொல்லிலிருந்து உருவான சொல். அருணோதயம் வைகறை என்பதற்கான வடசொல். அதுபோல் கிரி என்பதும் வடசொல்லே. மலை என்று அர்த்தப்படும் வடசொல். மறைமலையடிகள் போல் பெயர்களையெல்லாம் தனித்தமிழ்ப்பெயர்களாக மாற்ற வேண்டிய தேவையில்லை. மொழி என்பது மானுடர்களுக்கு ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்குரிய கருவி, சாதனம். அவ்வளவே.

"யாதும் ஊரே! யாவரும் கேளிர்" - கணியன் பூங்குன்றனார். நான் கணியன் பூங்குன்றனார் வழி வந்தவன். எனக்கு எல்லாமொழிகளும் உறவு மொழிகளே. அவற்றை உள்வாங்குவதால் என் மொழி சிறுப்பதில்லை; சிறப்புறவே செய்கின்றது என்பதில் நம்பிக்கையுள்ளவன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here