
'பாரதியார் சரித்திரம்' என்னும் இந்நூல் முக்கியமானதொரு நூல். வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லதோர் ஆவணம். இந்நூலைப் பாரதியாரின் மனைவி செல்லம்மா பாரதி கூறுவது போல் எழுதியிருப்பவர் அவரது மகள் தங்கம்மா பாரதி.
சக்தி காரியாலயத்தால் வெளியிடப்பட்டது. முதற் பதிப்பு வெளியான ஆண்டு 1941. இணையக் காப்பகத்தில் இந்நூல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான இணைப்பைத் முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் எழுத்தாளர் ஜவாத் மரைக்கார். அதற்காக அவருக்கு என் நன்றி.
நூலை வாசிப்பதற்கான இணைய இணைப்பு



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









