தோழர் வேலு சிந்தனையும் செயலும் – ஒரு பார்வை! அண்மையில் இலண்டனில் மறைந்த தோழர் வேலு ‘’ஒடுக்கப்பட்ட மக்களின் உறுதியான குரல்’’! - மாதவி சிவலீலன் -

எம். பௌசரைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட 'தோழர் வேலு சிந்தனையும் செயலும்' எனும் இந்நூல் , எம்மிடையே வாழ்ந்த உன்னதமான மனிதனின் வாழ்நாட் போராட்டங்களையும், பல கருத்தியல்களையும் மையப்படுத்தி வெளி வந்திருக்கின்றது. ‘சமூகம் இயல்’ பதிப்பகத்தின் வெளியீடான இந்நூலில் பதினைந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திலும் மேற்குலக நாடுகளிலும் அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் அவர் பற்றிய அனுபவங்களையும் அவரது அரசியல் சமூகச் செயற்பாடுகளையும் எழுதியுள்ளனர்.
‘’இழப்பதற்கு என்னிடம் உயிரைத் தவிர ஒன்றுமில்லை. ஆனால் போராடுவதற்கு ஒரு இலட்சியம் இருக்கிறது.’’எனும் சேகுவரா கூற்றுக்கு அமைய வாழ் நாள் முழுவதும் மக்களுக்காகத் தன் சிந்தனையையும் செயலையும் அர்ப்பணித்தவர் வேலு. இலண்டனில் முன்னோடி முற்போக்கு வட்டத்தின் செயற்பாடுகளில் இடப் பெறுகின்ற அரசியல் கருத்துநிலைகள், இலக்கியப் போக்குகள், நூல் குறித்த உரையாடல்கள், ஒடுக்குமுறைக்கு எதிரான வெளிப்பாடுகள் என்பவற்றில் வேலுவின் பங்களிப்பு காத்திரமாக இருந்ததென பௌசர் தன் பதிப்புரையில் குறிப்பிடுகின்றார். வேலு இயல்பில் மார்க்சிய லெனினிய கொள்கையாளர்; பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளைத் தெளிவாக உள்வாங்கியவர்; மாவோயிஸ்ட் இயக்கத் தொடர்பும் இந்திய கம்யூனிஸ்ட் (மக்கள் யுத்தக் குழு) பின்புலமும் தொடர்ச்சியான வாசிப்பு அனுபவங்களும் சிந்தனை ஆளுமையும் இவருக்கு மேலும் வலுச் சேர்த்தன.
லண்ட ன் – தமிழ் மொழிச் செயற்பாட்டகம் அமைப்பின் ஆரம்ப ஸ்தாபக உறுப்பினராகிய இவர், அமைப்புத் தொடர்ச்சியாக இயங்குவதற்கு சிறந்த ஆலோசகராக விளங்கி வந்துள்ளார். வடிவேலு என்பது இயற்பெயர் எனினும் தோழர் என்றால் அது வேலு தானென இலண்டன் இலக்கியச் சமூகத்தால் அன்பாக அறியப்பட்டார். ஆனாலும் இந்திய அரச வன்முறையாளர்களின் சித்திரவதைகளினாலும் கொலைகளாலும் கொல்லப்பட்ட தன் தோழர்களான எல் அப்பு, பாலன், சீராளன் ஆகியோரின் பெயர்களில் உள்ள எழுத்துக்களை சேர்த்துத் தன் பெயரைப் பூபாளன் என மாற்றியிருந்தார். இது அவர், தன் தோழர்களுக்குக் கொடுத்த மதிப்பாகவும் அன்பாகவும் கருதப்படுகின்றது.




நெதர்லாந்து எந்த வகையான அரசாங்கத்தைக் கொண்டுள்ளது? நெதர்லாந்து அரசியலமைப்பு முடியாட்சியைக் கொண்ட ஒரு பரவலாக்கப்பட்ட அரசியலமைப்பைக் கொண்டது. முக்கியமான சட்டம் மத்திய அரசால் மேலோட்டமாக உருவாக்கப்படுகிறது,

அமெரிக்காவின் போர்களை ஈரான் கடந்த இருபது ஆண்டுகளாக உன்னிப்பாகக் கவனித்து, ஆய்வு செய்து வந்துள்ளது என்பதே அதன் வெற்றிக்கான முதல் காரணம். ஈரான் வெறுமனே பார்வையாளராக மட்டும் இருக்கவில்லை; அது ஒரு மாணவனைப் போல, அமெரிக்க இராணுவ வியூகங்களின் பலம் மற்றும் பலவீனங்களை நுட்பமாகப் பகுப்பாய்வு செய்தது.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகை நிறுவனமொன்றினை நடத்தும் குடும்பம் கொடுக்கும் விருது ஞானபீட விருது. இது இந்திய அரசின் சாகித்திய அமைப்பு கொடுக்கும் விருதினைப் போன்றது அல்ல. ஆனால் மதிப்புக்குரிய விருதாகக் கருதப்படும் விருது. இதற்கு இம்முறை எழுத்தாளர் வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. அவரது திரைப்பாடல்கள் மூலம் கவிஞர் வைரமுத்துவாக மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் அவர். அவரது இதுவரை கால கலை, இலக்கியப் பங்களிப்புக்காகக் கொடுத்திருக்கின்றார்கள். தனிப்பட்ட அவரது படைப்பு ஒன்றுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட வில்லை. 
தாகூரின் செல்வாக்கில் இருந்து, கழன்ற சி.வி.வேலுப்பிள்ளையின், நெடுங்கவிதையின் மூன்றாம் பகுதி இங்கே காணக்கிட்டுகின்றது. தமது காலத்தைய, அழுத்தமான மக்கள் குரலை வேலுப்பிள்ளை ஒலித்ததை போன்று, அவருக்கு பின்னால் வந்த எந்த ஒரு கவிஞனும் மலையக சமூகம் பொறுத்து ஒலித்தது கிடையாது எனலாம். ஆழ்ந்த சமூக பற்றுடன் இவரது குரல் ஒலித்தமைக்கான விலையை இவர் தம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கொடுத்திருக்க கூடும். இவரது அக்காலத்தைய எழுத்துக்கள், அக்காலத்தைய மலையக அரசியல் சார்ந்த சிந்தனைக்கு மாத்திரமல்ல, பொதுவில் உழைக்கும் மக்களின் சிந்தனைக்குள்ளும் வலை விரிக்க கூடியதே. இனி மீண்டும் கவிதைக்குள் செல்லலாம்:
இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் முன்னாள் செயலாளருமான இரா. நல்லகண்ணு அவர்கள் பெப்ருவரி 25, 2026 அன்று, தனது நூறாவது வயதில் மறைந்தார். தனது பதினெட்டாவது வயதிலிரிந்து கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டவர். இந்தியாவில் ஆங்கிலேயருக்கெதிராகப் போராடிய சுதந்திர வீரர். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது நெல்லை சதி வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுச் சிறை வாசம் அனுபவித்தவர். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீங்கியபோது விடுதலை செய்யப்பட்டார். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றியவர்.
'காந்தளகம்' மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களை இ துவரை பதிப்பாளராக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச் சபையில் பணி புரிந்தவராக, எழுத்தாளராக, சூழலியலில் ஆர்வமுள்ளவராக , அண்மைக்காலமாக ஹிந்துத்துவா நோக்கில் செயற்படுவராக அறிந்திருக்கின்றேன். அண்மையில் இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்துக்காகக் குரல் கொடுத்துவரும் அருண் சித்தார்த் தனது முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்த காணொளியொன்றில் தென்பட்ட மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் நேர்காணலொன்று என் கவனத்தை ஈர்த்தது.
பெப்ருவரி 5 அன்று இலங்கைப் பாராளுமன்றத்தில் 'பொதுஜனபெரமுன' கட்சியின் முக்கிய ஆளுமையான நாமல் ராஜபக்ச இனவாதத்தைக் கக்கத் தொடங்கியபோது தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான லக்மாலி ஹேமச்சந்திரா உடனடியாகவே அதற்கெதிராகக் கடுமையான பதிலடி கொடுத்திருக்கின்றார். சுதந்திரதின நிகழ்வில் யுத்தத்தை வென்ற இராணுவத்திற்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லையென்று நாமல் ராஜபக்ச இனவாதத்தைக் கையிலெடுத்தபோதுதான் லக்மாலி ஹேமச்சந்திரா இவ்விதம் பதிலடி கொடுத்தார். 1989இல் பிறந்த லக்மாலில் ஹேமச்சந்திராவின் இவ்வுரை வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. சிங்கள இளந்தலைமுறையினர் எவ்வளவுதூரம் காலத்துடன் மாறி வந்திருக்கின்றார்கள் என்பது நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையினைத் தருகின்றது. தமிழ் , முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினரும் லக்மாலி ஹேமரத்தின போன்று தம் இன அரசியல்வாதிகள் இனவாத்த்தைக் கையில் எடுக்கும் சமயங்களில் அவர்களைத் தட்டி வழி நடத்த வேண்டும். நெறிப்படுத்த வேண்டும். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதில் இனவாதத்தை எந்நேரமும் கையிலெடுப்பதைக் கண்டிக்க வேண்டும்.
கனடியப் பிரதமர் மார்க் கார்னியின் இந்த உரை வரலாற்றில் நிலைத்து நிற்கபோகும் உரை! தற்போதுள்ள சூழலில் , டொனால்ட் ட்ரம் அமெரிக்க அதிபராக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்த 


இலங்கையில் இருந்த காலத்தில் எஸ்கிமோ, நீக்ரோ, செவ்விந்தியர் போன்ற சொற்பதங்களால் அவை குறிப்பிடும் இன மக்களை நாமெல்லாரும் அழைத்து வந்தோம். இங்கு வந்தபின்பும் ஆரம்பத்தில் அவ்விதமே அழைத்து வந்தோம்,. ஆனால் காலப்போக்கில் அப்பெயர்கள் அம்மக்களை இழிவு படுத்தும் , இனத்துவேசம் மிக்க பெயர்கள் என்பதை அறிந்து அவற்றைப் பாவிப்பதை நிறுத்தி விட்டோம். 









பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









