நீலகிரி படகர்களின் மரபறிவில், மரபு மருத்துவத்தில் ‘காயிகல்லு’ - முனைவர்.கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -

- நீலகிரிப் படகர் -
வரலாற்றைவிட வழக்காறுகள் இன்றியமையானவை. ஒரு சமூகத்தின் நெடிய மரபும் பண்பாடும் வழக்காறுகளில் வாழ்கின்றன. மானுட சமூகத்தில் நடப்பிலுள்ள வழக்காறுகளில் உட்செறிந்துள்ள மரபறிவினைத் தேடிச்செல்வதும், உற்றுநோக்குவதும் இன்றைய தேவைகளுள் ஒன்று என்பதனைவிட காலத்தின் கட்டாயம் எனலாம். நிலவும் உடலியல், உளவியல் பிணிகட்கும், வாழ்வியல் பிணக்குகளுக்குமான தீர்விற்கு முன்னோக்கி ஆய்வதைவிடவும் பின்னோக்கி ஆய்வதே ஏற்புடையது என்பதில் மாற்றமில்லை. அவ்வகையில் நீலகிரியில் வாழ்கின்ற, யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக சான்றளிக்கப்பட்ட ‘படகர்’ இனமக்களிடையே வழக்கிலுள்ள ‘காயிகல்லு’ என்ற மருத்துவத் தன்மைமிக்க பொருளொன்றின் பன்முகப் பயனிலையையும் அதன் தொன்மையினையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.
நீலகிரியும் படகர்களும் -
ஆண்டில் ஒன்பது மாதங்கள் மழைபொழியும் இயல்புடையது நீலகிரி மலை. உலகின் மிக முக்கியமான பல்லுயிர்ச் சூழல் மண்டலமான இம்மலையின் முகடுகளிலும் அதற்கு சற்றுக்கீழும் படகர்கள் வசிக்கின்றனர். இவர்கள் பேசும் மொழி படுகு. இவர்களின் வாழ்வியல் ‘பண்டா – பதுக்கு’ என்ற இருநிலைகளில் அடங்கும். இவர்களின் மொழியில் ‘பண்டா’ என்றால் எருமை மந்தை என்றும், ‘பதுக்கு’ என்றால் வாழ்க்கை என்றும் பொருள். எருமை மந்தை பேணலையே ஆதி வாழ்வாகக் கொண்டிருந்த இம்மக்களின் பெயர்க்காரணம்கூட இதை அடியொற்றியதே. ‘பண்டுக’ (எருமை மந்தைகளை உடையவன்) என்ற சொல்லே ‘படுகா’ என்று மருவியதாகக் கருதலாம். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் ஆயர்களான பொதுவர்களுக்கும் படகர்களுக்கும்கூட எண்ணற்ற ஒப்புமையுண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.


போகும்போது, லைட்டையும் அணைத்துவிட்டு, காதுவரை போர்த்தி படுத்திருந்தார். போர்த்தியவாறே என்னை ஏறிட்டு பார்த்துவிட்டு… காய்ச்சல்… குளிர்காய்ச்சல்… என்று நடுநடுங்கிய குரலில் முனங்கினார். பதறி… என்ன இது என்று நினைத்து தலைக்கடியில் மடித்து வைத்திருந்த, போர்வையினூடு வெளியே நீட்டியப்படி, இருந்த முழங்கையின் பின்புறத்தை தொட்டு, சுடுகின்றதா என்று பார்த்தேன். அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருக்க வேண்டும்… சில் என்று இருந்தது.



அம்மாவுக்கு தூக்குத்தண்டனை உறுதியாகிவிட்டது.






தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வருகை தரும் பிரபல எழுத்தாளரும் பல இலக்கிய விருதுகளைப் பெற்றிருப்பவருமான திரு. பெருமாள் முருகன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி ( 10-03-2024 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 3-00 மணிக்கு மெல்பனில் Vermont South Learning Centre மண்டபத்தில் ( 1, Karobran Drive, Vermont South, Vic 3133 ) நடைபெறும்.
தீவிர இலக்கியவாதியும் மின்னிதழாளரும் இருபத்தைந்து நூல்களைத் (மின்னூல்களையும் உள்ளடக்கி) தந்தவருமான வ.ந.கிரிதரனின் அண்மைக்கால நூலான ' வ.ந.கிரிதரன் கட்டுரைகள் ' , அழகிய அச்சமைப்போடு 'ஜீவநதி' பிரசுரமாக வெளிவந்துள்ளது.இத்தொகுப்பில் பதிநான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.கவனிப்புக்குரிய படைப்பாளிகள் பற்றியதாகவும் சர்ச்சைக்குரிய தலைப்புக்களைக் கொண்டதாகவும் இருப்பதனால் நிச்சயமாக இலக்கிய வாசகர்களை ஈர்க்கும்.











பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









