அஞ்சலி: எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் மறைவு! - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் (குப்பிழான் ஐயாத்துரை சண்முகலிங்கம்) அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் தெரியப்படுத்தியது. எதிர்பாராத செய்தி. அவர் மறைவால் வாடும் குடும்பத்தவர், நண்பர்கள், எழுத்துலகைச் சேர்ந்தவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் 'பதிவுகள்' சார்பாகவும் , என் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல்.
நந்தினி சேவியர், கே.எஸ்.சிவகுமாரன் , குப்பிழான் ஐ.சண்முகன் இவர்கள் என் முகநூல் நண்பர்களாகவுமிருந்தவர்கள். நான் என் இளமைப்பருவத்தில் வியந்து நின்ற இவர்களைப்போன்ற இலக்கிய ஆளுமைகளுடன் நண்பர்களாகப் பழக, கருத்துகளைப் பரிமாற நவீன இணையத்தொழில் நுட்பம் வழி சமைத்துத் தந்தது நவீனத் தொழில் நுட்பத்தின் ஆரோக்கியமான அம்சங்களிலொன்று.
சிலரைப் பார்த்ததுமே பிடித்துப் போய்விடும். இவரை நான் ஒருபோதும் நேரில் பார்த்ததில்லை. ஆனால் இவரது மீசை, புன்னகையுடன் கூடிய முகத்தோற்றத்தைக் காட்டும் புகைப்படத்தை முதலில் பார்த்ததுமே இவரை எனக்குப் பிடித்துவிட்டதென்பேன். அமைதியான, எதிர்த்து ஓங்கிப் பேசாத ஒருவர் என்பதை அப்புகைப்படம் எடுத்துக்காட்டியது. அது போலவே இவர் இருப்பதை இவருடனான நேர்காணல்கள் எடுத்துக்காட்டின.


“கள்ளா! ஏய்… கள்ளா!
உள்ளார்ந்த கலை, இலக்கிய, ஊடக ஆற்றல் மிக்கவர்கள் தமது தாயகம்விட்டு உலகில் வேறு தேசங்களில் வாழ நேர்ந்தாலும், தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டேயிருப்பார்கள் என்பதற்கு மற்றுமோர் உதாரணமாகத்திகழ்பவர் ஆனந்தராணி பாலேந்திரா. இவரை 1970 களில் செல்வி ஆனந்தராணி இராஜரட்ணம் என்ற பெயருடன் முதல் முதலில் சந்தித்தது இலங்கை வானொலி கலையகத்தில்தான்.

சார்லிக்கு இன்று என் மீது கோபம். அவன் தட்டில் வைத்த எதையும் இன்று சாப்பிடவில்லை. தினமும் நான் கொடுக்கும் அந்த உலர்ந்த கொடிமுந்திரியைக்கூட தொடவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதுதான் அவன் 'பேஃவரிட்'.....அதைக்கூட..... காலையில் இருந்து "உர்ர்ர்.....உர்ர்ர்" என்று ஏதோ விசித்திர சத்தம் வேறு எழுப்பிக்கொண்டேயிருந்தான். 





ஒருமுறை நாரதர், 'கடவுள்' கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணர், "நான் உடன் இல்லாமல், வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தாராம். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றாராம்.


முன்பனி பின்பனி மாறிய பின்னே

நீங்கள் அதிசயமானவர்கள்


இன்று, ஏப்ரில் 10, சர்வதேச சகோதரர் நாள் ஆகும். எங்களுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சகோதரர்கள்தான் பங்கிட்டுக் கொள்கிறார்கள். நண்பர்களையோ, வேறெந்த உறவுகளையோ அறிவதற்கு முன் பெற்றோருக்கு அடுத்ததாக நாங்கள் பழகும் உறவும் அதுதான். எங்களின் ஆரம்பகால வருடங்களின் பெரும்நேரத்தைக் குடும்பமாக அவர்களுடன்தான் செலவிடுகிறோம். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் வளர்கிறோம். அந்தவகையில் சகோதரங்களுடான உறவு ஆரோக்கியமானதாக அமையவேண்டியது அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றெனலாம்.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









