முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்த சமயத்தில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள், காணாமால் ஆக்கப்பட்டார்கள் மற்றும் அங்களை இழந்தார்கள். இன்று வரை பாதிக்கப்பட்ட அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. இலங்கைப் படையினரால் புரியப்பட்ட யுத்தக்காணொளிகள் பற்றி ஆதாரங்களுடன் கூடிய காணொளிகளை 'சானல் 4' என்னும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது. ஆனால் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. இலங்கையில் சகல இன மக்களும் இணைந்து சமாதானமாக வாழ்வதற்கு நடந்த அநீதிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டியது அவசியம். அதற்குப் பெரும்பான்மையின மக்களும் தமிழ் மக்களுடன் இணைந்து குரல் கொடுப்பது அவசியம்.அதற்கான சூழல் நெருங்கி வருவதுபோல் தெரிகின்றது.
 ஆம்! இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களில் பெரும்பான்மையினச் சிங்கள மக்களும் இணைந்து நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் சகல இன மாணவர்களும் இணைந்து நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். முள்ளிவாய்க்காலில் எவ்விதத் தடைகளுமற்ற நிலையில் , இராணுவத்தலையீடுகளற்ற நிலையில் மக்கள் நினைவு கூர்ந்திருக்கின்றார்கள். இது முக்கியமான வரவேற்கத்தக்க, ஆரோக்கியமான விடயம்.
 
நல்லதோர் எதிர்காலத்துக்கு இவ்விதமான புரிதலும் , ஆதரவும் அவசியம். புரியப்பட்ட அநீதிகளுக்கு உரிய நீதி விரைவில் கிடைக்க இது நிச்சயம் வழி வகுக்கும்.
 
'ஈழநாடு' பத்திரிகைச் செய்தி

Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R