நவஜோதி ஜோகரட்னம்“கோயில்களில் பாட்டுக்கள் பாடி நாட்டியம் ஆடுகின்ற நாட்டியப் பெண்களைத் தவிர, மற்றையோரில் தமிழை எழுத வாசிக்கத் தெரிந்த இரு பெண்களை மாத்திரம் யாழ்ப்பாணத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்களுள் ஒருத்தி அளவெட்டியிலும் மற்றவள் உடுப்பிட்டியிலும் இருக்கிறாள். வேறும் ஒருத்தி இருப்பதாக கேள்விப்படுகிறேன். இன்னமும் அவளைச் சந்திக்கவில்லை” என்று 1816 ஆம்; ஆண்டில் அமெரிக்க சமயக் குழுவின் பாதிரியார் வண.மெயிக் எழுதிய குறிப்புகள் ( “யாழ்ப்பாணத்துச் சமூகத்தில் பெண்கல்வி, வள்ளிநாயகி இராமலிங்கம்”) யாழ்ப்பாணத்தில் நிலவிய பெண்கல்வி நிலைமையைச் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் உடுவில், வேம்படி, உடுப்பிட்டி, பருத்தித்துறை, சுண்டுக்குளி, இளவாலை ஆகிய இடங்களில் தோன்றிய பெண் பாடசாலைகள் யாழ்ப்பாணத்துப் பெண்களின் கல்வி வளாச்சியை மிக உன்னத நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றது. இன்று மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாவும், பொறியியலாளர்களாகவும், பல்கலைக்கழக உபவேந்தர்களாகவும், வங்கி அதிகாரிகளாகவும், வருமானவரி மதிப்பீட்டாளர்களாகவும் என்று சமூக வாழ்வின் எல்லாத் தளங்களிலும் பெண்கள் உயர்ந்த நிலையில் உள்ளனர். இந்த உயர்ந்த கல்வியின் ஒரு வெளிப்பாடாக வெளிநாடுகளுக்குச் சென்று தொழில்புரியும் சாத்தியங்களையும் யாழ்ப்பாணப் பெண்கள் கொண்டிருந்தனர். இங்கிலாந்திற்கும் இலங்கைக்குமான தொடர்பு ஒரு காலனித்துவ தொடர்பாக ஒரு நீண்ட சரித்திரத்தைக் கொண்டிருக்கிறது. உயர் கல்வி கற்ற ஈழத்துப் பெண்மணிகள் இங்கிலாந்திலேயே திருமண தொடர்புகள் மூலமாக புலம்பெயர ஆரம்பித்து இங்கிலாந்திலும் சிறந்த தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொண்டனர். அந்த வகையில் சுதந்திரத்திற்குப் பின்னர் இங்கிலாந்தை நோக்கிய ஈழத்தின் புலப்பெயர்வு எண்பதுகளை அடுத்த காலப்பகுதியில் மிக வேகமாக அதிகரிக்கலாயிற்று. இந்நிலையில் எழுத்து, இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட பெண்மணிகள் இங்கிலாந்தில் கணிசமான அளவில் சாதனைகள் புரிந்திருக்கிறார்கள்.

1923 இல் மங்களம்மாள் ஆரம்பித்த ‘தமிழ் மகள்’ என்ற பத்திரிகையில் இருந்து பெண்களின் அரசியல் குறித்த எழுத்துக்கள் அரும்பத் தொடங்கின. இதே போன்று மலையகத்திலும் மீனாட்சியம்மாள், கோகிலம் சுப்பையா ஆகியோர் மலையக மக்களின் அரசியல் குறித்துப் போராடிய பெண்மணிகளாவார். எனினும் எண்பதுகளுக்குப்; பிறகு ஈழத்துப் பெண்களின் எழுத்துக்கள் புதிய உத்வேகத்தோடு  இலக்கியப் பரப்பில் தடம் பதிக்கத் தொடங்கின.

இந்த ஆய்வு இங்கிலாந்தில் எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ள பெண் எழுத்தாளர்களைப் பற்றியதாகும். சில பெண் எழுத்தாளர்களைத் தொடர்பு கொள்வது சிரமமாக இருந்திருக்கிறது. மிகச் சில பெண் எழுத்தாளர்களே நான் தொடர்பு கொண்டபோது உற்சாகத்தோடு தமது விபரங்களைத் தந்துதவினார்கள். இதில் பெருமளவில் அனைத்துப் பெண் எழுத்தாளர்களையும் இக்கட்டுரையில் தர முயன்றிருக்கிறேன். என்னுடைய கவனிப்புக்குள் வராத எழுத்தாளர்கள் ஓரிருவர் தவற விடப்பட்டிருக்கக் கூடும் என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன். பவானி ஆழ்வாப்பிள்ளை முதல் மைத்ரேயி ராஜேஸ்குமார் வரை 31 பெண்மணிகள் இவ்வாய்வில்அடங்குகின்றனர்.

பவானி ஆழ்வாப்பிள்ளை

‘பவானியின் சிறுகதைகளைத் தொகுத்துக் கணித்தால் அவற்றில் இழையோடும் முக்கியமான கருத்தோட்டம் சமுதாய அவலங்களும், அர்த்தமற்ற சில பண்பாட்டுக் கொள்கைகளும் எப்படி ஆணையும் பெண்ணையும் அலைக்கழிக்கின்றன, அவர்கள் எப்படி அவற்றில் பாரிய தாக்கத்திற்கு உட்படுகிறார்கள் என்பதே! அவர் கதைகூறும் பாணியும், கதை முடிக்கும் பாணியும் கதாபாத்திரங்களை பரிதாபத்திற்கு ஆளாக்கவில்லை. அவர்கள் பண்பாட்டில் இருந்து இறங்கிய நிலையிலும் தங்கள் உரிமைகளைப் பேசுவதுபோலவே அக்கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. முடிவுகள் வாசகர்களைச் சிந்திக்க வைக்கின்றன’ என்று கலாநிதி செல்வி திருச்சந்திரன் ‘கடவுளரும் மனிதரும்’ என்ற நூலின் இரண்டாவது பதிப்புரையின் முன்னுரையில் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கதாகும்.
      
பிரித்தானியாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் பவானி அழ்வாப்பிள்ளை 1960 களிலேயே ஈழத்து வரலாற்றில் பெண்ணியக் கருத்துக்களை துணிச்சலோடு முன்வைத்த முதல் பெண் எழுத்தாளர் ஆவார். கற்பு. ஒழுக்கம் போன்ற கருத்தியல்களை புரட்சிகரமாக அணுகிய பவானி ஆழ்வாப்பிள்ளையின் சிறுகதைகள் ‘கடவுளரும் மனிதரும்’ என்ற சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. பேராதனைப் பல்கலைக் கழகப் பட்டதாரியான பவானி ஆழ்வாப்பிள்ளை, தனது எழுத்துக்களை தன்னை அறிதலான சுயநிர்ணயம் என்று கூறுகின்றார். கலைச்செல்வியில் அவர் எழுதிய ‘மன்னிப்பாரா ; என்ற சிறுகதை சர்ச்சைக்குள்ளான பெண்ணியல்வாதக் கதையாகும்.
     
‘மன்னிப்பாரா’ என்ற சிறுகதையில் மூர்த்தி, சுசீலா ஆகியோருக்கிடையிலான காதல் சாதிய ஏற்றத்தாழ்வினால் நிறைவேறாமல் போய்விடுகிறது. பேற்றோரின் ஆதங்கத்தை மீற முடியாதவராகின்றார் மூர்த்தி. இதற்கிடையில் சுசீலாவிற்கு வேறொரு இடத்தில் திருமணம் முற்றாகிவிடுகிறது. தனது திருமணத்திற்கு முதல்நாள் சுசீலா மூர்த்தியைத் தேடி அவரது வீட்டிற்குச் செல்கிறார். ‘காதலித்தவனையே கணவனாகக் கொள்வதுதான் கற்பெனில் இந்த என் முடிவு என் கற்பு நெறிக்குச் சிறிதும் புறம்பானது அல்ல. உங்கள் உரிமையை இப்பொழுதே எற்றுக் கொள்ளுங்கள். நமது வாழ்வை இக்கணமே வாழ்ந்து முடித்துவிடுவோம்’ என்கிறாள் சுசீலா. பழைமைவாதம் வேருன்றிய அக்கால கட்டத்தில் சுசீலாவின் இந்த முடிவு ஈழத்து இலக்கிய உலகில் பெரும் கண்டனத்துக்கு இலக்காகியது. இந்தக் கதாநாயகியின் முடிவை எதிர்த்து கதையை வேறு விதமாக மாற்றி கவிஞர் எஸ்.எம். சவுந்தரநாயகம் எழுதிய கதையும், அவளுடைய முடிவை ஆதரித்து அவளைப் புரட்சிப் பெண்ணாகக் கொண்டு செந்தாரகை எழுதிய கதையும் ‘மன்னிப்பாரா’ என்ற அதே தலைப்பிலேயே கலைச்செல்வியின் அடுத்த இதழ்களில் வெளியாகின என்று கலாநிதி குணராசா ‘ஈழத்துச் சிறுகதை வரலாறு’ என்ற நூலிலே குறிப்பிடுகின்றார்.

திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம்

ஏழாலையைச் சேர்ந்த தனபாக்கியம் குணபாலசிங்கம் தமிழகத்தில் தொல்லியலை சிறப்புத்துறையாகப் பயின்று, வடமொழியில் பி.ஏ சிறப்புப் பட்டத்தையும், தொல்லியல் முதுகலைமானிப் பட்டத்தையும் பெற்று, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறையில் விரிவுரையாளராளராகப் பணியாற்றியவராவார். ஈழத்தின் தொல்லியல் வரலாறு பற்றி குறிப்பிடத்தக்க பல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
   
‘பழையகால மனிதன் வாழ்ந்திருந்த களங்களுக்கு நேரடியாகச் சென்று அவர்கள் விட்டுச் சென்ற தடயங்களை ஆராய்ந்து உண்மைகளைத் துணைகொண்டு வரலாற்றுக்கு முற்பட்டகால மனித வரலாறுகளை மீளவும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபடுபவர்களே தொல்லியலாளர்கள்’ என்று கூறும் தனபாக்கியம் குணபாலசிங்கம் ஈழத்தில் கிடைக்கப்பெற்ற ஈமத்தாழிகளுக்கும், தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற ஈமத்தாழிகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளை ஆராய்ந்து எழுதிய ‘ இலங்கையில் தொல்லியல் ஆய்வுகளும் திராவிட கலாச்சாரமும்’ என்னும் நூல் மிக முக்கிய வரலாற்று ஆய்வு நூலாகும். 
   
இதனைத் தொடர்ந்து அவர் எழுதிய ‘தமிழகப் பூர்வீக வரலாறும் அரிய செய்திகளும்’ என்ற நூலில் கடற்கோள்களினால்; மூழ்கிப்போன தமிழக வரலாறுகளை தொல்லியல் அகழாய்வுகள், பழந்தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றின் துணை கொண்டு தமிழகத்தின் ப10ர்வீக வரலாற்றினை வெளிக்கொண்டு வந்துள்ளார்.  இதனையடுத்து ‘மட்டக்களப்பு மான்மியம் ஓர் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட நூல் மட்டக்களப்பு தமிழர்களின் வரலாற்றை பொதுமக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது.
  
அடுத்ததாக இவர் எழுதி வெளியிட்ட  ‘வங்க இளவரசர் விஜயன் வரலாறும், இலங்கையில் சிங்கள் இன, மொழி, எழுத்துத்தோற்ற, வளர்ச்சி நிலைகளும்’ என்ற நூல் ‘இப்பண்கடுவ’ என்னும் இடத்தில் அகழ்வு செய்யப்பட்ட பெருங்கற்பண்பாட்டுத் தொல்லியல் களங்களிலிருந்து கிடைத்த தடையங்களை அடிப்படையாகக் கொண்ட குறிப்பிடத்தக்க சிறந்த ஆய்வு நூலாகும்.
   
சைவசமய வரலாறுகளையும், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளையும் எளிமைப்படுத்திய வகையில் இவர் எழுதிய ‘சைவ சித்தாந்தமும் விஞ்ஞான உலகமும்’ என்ற நூலும் ‘பின்பற்றப்பட வேண்டிய சைவ தத்துவங்கள்’ என்ற நூலும் ஈழத்து சைவ சித்தாந்த வரலாற்றைத் தொகுக்கும் சிறந்த முயற்சிகளாகும்
   
அடுத்ததாக ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய இனங்களின் ‘மானிட வரலாறு’ என்ற நூல் தனித்துவமானது. இந்த நூல்; இரண்டு தொகுதிகளாக அமைந்து மூன்று கண்டங்களின் மனிதகுல வரலாற்றை எடுத்து விளக்குகிறது. ‘குமரிக்கண்டம் முதல் சுமேரியாவரை தமிழர் வரலாறு’ என்ற அவரது மற்றுமொரு நூல் விவிலிய வேதத்தோடு தமிழர்களைத் தொடர்புபடுத்தி ஆராயும் நூலாக முகிழ்த்;துள்ளது. இதைவிட தமிழரின் சமயத் தத்துவக் கோட்பாடுகளை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் ‘பிராணிகள் கூறும் அறிவியல் கதைகள்’ என்னும் நூலும் ‘The stories of Moral Teachings’  என்ற நூலும் முக்கிய நூல்களாகும்.
 
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்

மட்டக்களப்பில் கோளாவில் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் யாழ்ப்பாணத்தில் தாதிப்படிப்பை மேற்கொண்டிருந்தபோது உடற்கூற்றியல் விரிவுரையாளராக இருந்த எழுத்தாளர் நந்தியின் மீதுள்ள அபிமானத்தால் ‘எழில் நந்தி’ என்ற புனைபெயரில் ஆரம்பத்தில் எழுதிக்கொண்டிருந்தார். செ.யோகநாதன் நடத்திய ‘வசந்தம'  என்ற பத்திரிகையில் வெளியான ‘சித்திரத்தில் பெண் எழுதி’ என்ற இவரது சிறுகதை முற்போக்கு வட்டாரத்தில் பாராட்டுப் பெற்ற கதையாகும் .
   
1970 ஆம் ஆண்டு லண்டனுக்குக் குடிபெயர்ந்த ராஜேஸ்பாலாவின் எழுத்துலகப் பயணம் நீண்டதாகும். அலை வெளியீடாக வந்த ‘ஒரு கோடை விடுமுறை’ என்ற நாவல் அது வெளியான காலத்தில் அரசியல் கவனத்தை ஈர்த்த நாவலாகும். அதன்பின் தேம்ஸ் நதிக்கரையில், தில்லை ஆற்றங்கரை, உலகமெல்லாம் வியாபாரிகள், அவனும் சில வருடங்களும், பனி பெய்யும் இரவுகள், வசந்தம் வந்து போய்விட்டது, நாளைய மனிதர்கள் ஆகிய எட்டு நாவல்களைப் படைத்ததின் மூலம் லண்டனில் மிகப் பெரும் நாவல் ஆசிரியராக அவர் பரிணமித்துள்ளார்.
    
மட்டக்களப்பு மக்களின் வாழ்க்கை முறை, லண்டன் மத்தியதர வாழ்க்கை முறையிலும், பிரித்தானிய வாழ்க்கை முறையிலும் தோய்ந்து எழுந்த கதா பாத்திரங்கள் இவரது நாவல்களுக்கு மெருகூட்டுகிறார்கள். லண்டனில் வெளியான லண்டன் முரசு பத்திரிகை இவரது நாவலுக்கு விரிவான களம் அமைத்துக் கொடுத்தது.
   
ஈழத்து ஏடுகளிலும் புலம்பெயர்ந்த சஞ்சிகைகளிலும் நிறையவே எழுதியுள்ள ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் சிறுகதைகள்;  இலையுதிர் காலத்தின் ஒரு மாலை நேரம், அரைகுறையடிமைகள், ஏக்கம், நாளைக்கு இன்னொருத்தன், அம்மா என்றொரு பெண் ஆகிய  சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
   
லண்டனில் தொழில்ரீதியான தாதியாக சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்ட ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் திரைப்படத் துறையிலும் பி. ஏ சிறப்புப் பட்டத்தைப் பெற்றிருந்தார்.  ‘Escape of Genocide’ (இன அழிப்பிலிருந்து தப்பி) என்ற இலங்கை இன வன்முறை பற்றிய இவரது விவரணப் திரைப்படம்; குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆனால் திரைப்படத்துறையில் துரதிஷ்டவசமாக காலூன்ற முடியாது போய்விட்டது என்கிறார் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்.
   
இதைவிட மருத்துவ மானிடவியல் துறையில் எம்.ஏ பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார். லண்டனில் நீண்டகாலமாக குழந்தைகள் நல அதிகாரியாக பணிபுரிந்த ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்  ‘உங்கள் உடல் உள பாலியல் நலம்’, ‘தாயும் சேயும்’ என்ற இரு மருத்துவ நூல்களைச் சிறப்பாக எழுதி வெளியிட்டுள்ளார். தமிழில் வெளிவந்த மருத்துவ நூல்களில் இந்த நூல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இதனைவிட ‘தமிழ்க் கடவுள் முருகன் வரலாறும் தத்துவமும்’ என்ற இவரது ஆய்வு நூலும் தமிழகத்தில் பாராட்டைப் பெற்ற நூலாகும்.
     
‘சாதிக் கொடுமைகளை எதிர்த்து எழுதுகிறேன், இறக்கும்வரை எழுதுவேன், சுயநலத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த பிராமணியத்தின் தத்துவங்களை உடைத்து எறியாதவரை எந்த சமூகமும் முன்னேறாது’ என்று துணிச்சலோடு கூறுபவர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம். அரசியல் அபிப்பிராய பேதங்களால் நடக்கும் உயிர்ப் பலிகள் அநியாயமானவை. இவைகளைக் கண்டிப்பது மனித உரிமைக்காகப் போராடும் பலரின் கடமையாகும் என்று துணிவோடு செயற்படும் எழுத்தாளராக ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் திகழ்கிறார். 

திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம்

திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம்

திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம் ஈழத்தில் புங்குடுதீவைச் சேர்ந்தவர். ‘சாலினி’ என்ற பெயரில் சிறுவயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் தனது பதினைந்தாவது வயதில் ‘திருவாசகத்தில் பெண்கள்’ என்ற தலைப்பில் எழுதிய ஆய்வுக்கட்டுரை ஈழத்து அறிஞர்களால் அன்று பாராட்டப்பட்டது. உலகநாடுகளில் வெளிவரும் இதழ்களில் பல புனைபெயர்களில் எழுதிவரும் தமிழரசி சங்கத்தமிழ், ஈழவரலாறு, சமயம், இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம் பற்றிய நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தாயகப் பற்றும், மொழிப்பற்றுமிக்க தமிழ்ப்பண்டிதையான இவர் 2007 இல் ‘திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி’ என்ற நூலை எழுதி வெளியிட்டவர். கவிதைகள், எழுச்சிப் பாடல்கள், பக்திப்பாடல்கள், நாட்டிய நாடகங்களையும் இயற்றியுள்ளார்.

சந்திரா இரவீந்திரன்

சந்திரா இரவீந்திரன்

இலங்கையின் வடமராட்சி – பருத்தித்துறையில் மேலைப்புலோலியூர், ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்திரா இரவீந்திரன் 1991இல் பித்தானியாவிற்கு இடம்பெயர்ந்து இலண்டனில் வசித்து வருகின்றார். ‘ஒரு கல் விக்கிரகமாகிறது’ 1981இல் வெளியான இவரது முதற் சிறுகதையாகும். 1988இல் பருத்தித்துறை –யதார்த்த இலக்கிய வட்டத்தினால் ‘நிழல்கள்’ என்ற முதல் சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட்டது. 2011 இல் ‘நிலவுக்குத் தெரியும்’ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதி வெயிட்டவர். இலண்டனில் 2007 ஆம் ஆண்டுவரை ஏழு வருடங்கள் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் குறிப்பிடத்தக்க இலக்கிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வந்தவர்.

மாதவி சிவலீலன்

மாதவி சிவலீலன்

யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் பழைய மாணவியான மாதவி சிவலீலன் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக்கலை பயின்று, முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றவர். ‘பொன்னாலைக் கிருஷ்ணப்பிள்ளையின் பாடல்கள் - ஓர் ஆய்வு’ என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். முதுகலைமாணிப் பட்டதிற்காகக் ‘கம்பராமாயணக் கதையமைப்பும் கட்டமைப்பும்’ என்னும் ஆய்வேட்டை  யாழ் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்திருக்கின்றார்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த பிரபல நாட்டுக்கூத்துக் கலைஞரான பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளை அவரது காலத்து அரசியல் பொருளாதாரம் சமூகம், சமயம் போன்ற அனைத்து விடயங்களையும் கொண்டப hடல்களை ஆக்கியவர். இவர் கூறும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள் இன்றைய சமூகத்திற்கும் பொருந்துவதாக உள்ளதே அவரது பாடல்களின் சிறப்பு எனக் கூறும் மாதவி சிவலீலன் ஈழத்தில் பல எழுத்தாளர்களும், கலைஞர்களும் இலக்கிய ஆர்வலர்களால் வெளிக்கொணரப்படாது மறைந்திருக்கின்றனர் என்று கூறுகின்றார். அந்நாட்களில்; கிராமங்களில்; இடம்பெறும் நாடக இடைவேளைகளின் போது சமூகச்சுற்றாடலின் பனை போன்ற இயற்கை வளங்களின் நன்மைகள் குறித்தும், சமூகத்திற்குத் தேவையான பல நல்ல கருத்துக்களையும் வெளிப்படுத்தி சமூகத்தை சிந்திக்க வைத்து நெறிப்படுத்தியவர்களில் முக்கியமாத் திகழ்ந்தவர் பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளை அவர்கள்;. இத்தகைய சமூக அக்கறையோடு; சிறந்த நாடகக் கலைஞராகவும் செயற்பட்டவரை வெளிக்கொண்டுவரும் நோக்கில்தான் அத்தகைய ஒரு ஆய்வு நூலை மேற்கொண்டதாகக் கூறுகின்றார் மாதவி;. 

1957 ஆம் ஆண்டு பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெறும் 12 ஆம் திருவிழா பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளையின் குடும்பத்தினரால் பரம்பரையாக இடம்பெறும் திருவிழா. அன்றைய தினம் ‘கிருஷ்ண லீலா’ நாடகத்தை மேடையேற்றினா.;; இவரது மகன் சகடாசுரனாக நடித்தபோது இறக்கும் காட்சியில் உண்மையாகவே இறந்துபோய்விட்டார். இந்த துன்பகரமான நிகழ்வின் பின்னர் கோயில்களில் அந்த நாடகத்தை அரங்கேற்றுவதை நிறுத்தினார் என்று அவரது மருமகனான சங்கீத பூஷணம் சு.கணபதிப்பிள்ளை கூறியதாக அந்த நூலில் குறிப்பிடுகிறார் மாதவி சிவலீலன்.

தற்போது லண்டன் தமிழ் நிலையத்தில்; தமிழ் ஆசிரியராகப் பணியாற்றும் இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் என்பவற்றிலும் ஆர்வமுடையவர்.

அங்கயற்கண்ணி

காங்கேசன்துறையைச் சேர்ந்த அங்கயற்கண்ணி தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட பெண்மணியாகத் திகழ்ந்தவர். தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகளில் நன்கு அறியப்பட்ட  அங்கையற்கண்ணி தமிழகத்தில் புலம்பெயர்ந்தபோது எழுதிய கவிதைகள் தொகுப்பாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. கலைஞர் மு.கருணாநிதியின் முன்னுரையுடன் வெளியான கவிதைத் தொகுப்பு ஈழத்தின் விடுதலைப் போராட்ட கவிதைகளாக மலர்ந்திருந்தன. லண்டன் கவியரங்குகளில் அடிக்கடி பங்குகொள்ளும் அங்கயற்கண்ணி சமூக சேவகியாகச் செயற்பட்டு வந்துள்ளார். 

திருமதி றீற்றா பற்றிமாகரன்   

எழுத்தாளராகவும், ஆசிரியையாகவும், நூலாசிரியராகவும், ஊடகவியலாளராகவும் பணியாற்றிவரும் திருமதி றீற்றா பற்றிமாகரன் 1984 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கைச் சாகித்திய மண்டல இளம் எழுத்தாளருக்கான கட்டுரைப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டவர்.
   
இளங்கலைமாணி(B.A)பட்டத்தைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், இள விஞ்ஞானமாணி பட்டத்தை (BSC> PC Dip (social policy), PG Dip (Housing) பட்டங்களை  ஒக்ஸ்வேர்ட் புரூக்ஸ் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர்.
   
சன்றைஸ் வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக திகழ்ந்த றீற்றா பற்றிமாகரன் வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்து வருகின்றார். ‘நவீன காதல்’ (2011)இ ‘நாடொன்று மீளப்பிறந்தது’ (2012)  போன்ற சிறுகதைகள்  தமிழகத்தின் தினமணியில் வெளியாகின.
 
   1. புதியமுறையில் தமிழ் எழுதுதல் (1992)
   2. சிறுவர்க்கான தமிழ் மழலையர் பாடல்கள் கதைகள் ஒலிநாடா (1996).
   3. பம்பி சிறுவர் வாசிப்பு நூல் (1996)
   4. தமிழ் செய்முறைப் பயிற்சி (1998)
   5. தமிழ் பயிற்சி நூல்  (1999)
   6. இலங்கைத் தமிழர்கள் வரலாறு கலாச்சாரம் பாரம்பரியம்(2005)
   7. இலக்கணத் தொகுப்பு (2008)
   8. சங்ககாலத் தமிழர் வாழ்வும் கலைகளும் (2011)

   போன்ற நூல்களை எழுதி வெளியிட்டவர்.

2009இல் இடம்பெற்ற முதலாவது பன்னாட்டுச் செவ்வியல் மொழி மாநாட்டில் ‘தமிழைச் செம்மொழியாக்கலில் தொல்காப்பியத்தின் பங்களிப்பின் சிறப்பு’ பற்றிய ஆய்வு, 2010 இல் இடம்பெற்ற உலகச் செம்மொழி மாநாட்டில் ‘தேச உருவாக்கத்தில் சங்ககாலப் பெண்களின் பங்களிப்பு’ என்ற ஆய்வுக்கட்டுரை, 2011இல் செம்மொழி மத்திய ஆய்வு இந்தியத் திணைக்கள சங்கமகளிர் பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் ‘சங்க காலச் சமூகத்தில் பெண் மாந்தர்கள் நிலை: தலைவி தோழி செவிலித்தாய்  நற்றாய் பரத்தையர்’ என்ற ஆய்வுக்கட்டுரை, 2012இல் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் ‘சங்க இலக்கியங்களில் நேரம் மற்றம் மனஅழுத்த மேலாண்மைக் கோட்பாடுகள் என்ற’ கருத்தரங்கில் ‘சங்க இலக்கியத்தில் மனஅழுத்த முகாமைத்துவம்’ என்னும் ஆய்வுக்கட்டுரை, சிதம்பரத்தில் இடம்பெற்ற 12 ஆவது உலக சைவ மகாநாட்டில் ‘திருமந்திரத்தில் பதிபசுபாசம்’ என்ற ஆய்வுக் கட்டுரை, 2011 இல் 13வது இலண்டன் சைவ மாநாட்டில் ‘பெண்கள் விளையாட்டுக்களில் சைவநெறியும் உலக அமைதியும்’ என்ற ஆய்வும், 2012 இல் பிரித்தானிய திருக்கோயில்கள் ஒன்றிய 14வது மகாநாட்டில் ‘தமிழ் படிப்பித்தலில் சைவஅறிவின் அவசியம்’  போன்ற ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்.
    
யாழ் திருக்குடும்பக் கன்னியர் மடத்தின் பழைய மாணவியான றீற்றா பற்றிமாகரன் விளையாட்டு, நாடகக்கலை, சிறுவர் நிகழ்ச்சித் தயாரிப்புகளில் ஆர்வம் உள்ளவர். மாட்டின் டி பொரஸ் ஹொரணை, சென் யோசப் கல்லூரி கொழும்பு போன்றவற்றில் ஆசிரியராகப் பணியாற்றிய றீற்றா பற்றிமாகரன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் அனைத்துலகத் தமிழ் உயர்தரத் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பாளராகப் பணியாற்றிய  அனுபவம் கொண்டவர்;.

நிர்மலா ராஜசிங்கம் 

நிர்மலா ராஜசிங்கம்

அமெரிக்காவின் 'பொஸ்ரன் வீட்டன்' கல்லூரியில் அரசியலை சிறப்புக் கற்கை நெறியாகப் பயின்று கலைமானிப்பட்டத்தைப் பெற்ற இவர் யாழ் பல்கலைக கழகத்தில்  ஆங்கில போதனாசிரியராகவும் பின்னர் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகவும் பணியாற்றியவராவார். யாழ்ப்பாணத்திலிந்து வெளியான Saturday Review என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார்.ராஜசிங்கம் Tennessee Williams எழுதிய The Glass  Menagerie என்ற நாடகத்தை ‘கண்ணாடி வார்ப்புகள்’ என்ற பெயரிலும், ரஷ்ய நாடக ஆசிரியர் Aleksei Arbuzov எழுதிய  Old World என்ற நாடகத்தை ‘பழைய உலகம் புதிய இருவர்’ என்ற தலைப்பிலும், Federico Garcia Lorca எழுதிய The House of Bernarda Alba என்ற நாடகத்தை ‘ஒரு பாலை வீடு’ என்ற பெயரிலும்,Bertolt Brecht எழுதிய The  Exception and the Rule  என்ற நாடகத்தை ‘யுகதர்மம்’  என்ற பெயரிலும் சிறந்த மொழிபெயர்ப்புக்களைச் செய்தவராவார்.
    
சிறந்த நடிகையாகவும் திகழ்ந்த இவர் மேற்கத்தைய இசையிலும் தேர்ச்சி மிக்கவர் ஆவார். தமிழகத்திலிருந்து வெங்கட்சாமிநாதன் எழுதிய ஹிட்லரும் றிச்சேட் வாக்னரும் (Hitler Richard  Wagner) என்ற கட்டுரைக்கு எதிராக மேற்கத்தைய இசை குறித்து மிக விரிவாக இவர் எழுதிய விமர்சனக் கட்டுரை தமிழில் மேற்கத்தைய இசை குறித்து வெளிவந்த ஆழமான கட்டுரையாகும்.
   
மறைந்த சிவரமணியின் கவிதைகளை ஆங்கிலத்தில் அழகான மொழிபெயர்ப்புக்களையும் செய்திருக்கின்றார். மனித உரிமை மீறல்களுக்கெதிரான அரசியல் கட்டுரைகளை இங்கிலாந்துப் பத்திரிகைகளில் ஆங்கிலத்தில் எழுதி வருகின்றார்.

அடேல் பாலசிங்கம்

அடேல் பாலசிங்கம்

அடேல் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்த பெண்மணியாவார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அடேல் பாலசிங்கம் லண்டனில் வாழ்ந்து பின்னர் தமிழகத்திலும், ஈழத்திலும் வாழ்ந்து தமிழ் சமூகம் குறித்த சிந்தனை கொண்டவராவார். ‘விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள்’ (women fighters of liberation Tigers) என்ற தலைப்பில் அவர் எழுதிய நூல் பெண் போராளிகளின் போராட்ட வரலாற்றை தொகுத்துத் தரும் சிறந்த நூலாகும். ‘சுதந்திர வேட்கை’ ( The Will to Freedom) என்ற இவரது நூல் சுயசரிதை விவரணமாகவும், வரலாற்று நோக்குடனும் எழுதப்பட்ட நூலாகும். இருபது ஆண்டுகால தமிழீழ சுதந்திரப் போராட்டத்தின் படிநிலை வளாச்சியில் நிகழ்ந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகளையும், திருப்பங்களையும் இந்த நூல் துல்லியமாக எடுத்துக் கூறுகின்றது. மிகவும் கொந்தளிப்பான கால கட்டங்களையும் அக்கால கட்டங்களில் கட்விழ்ந்த அவலமான நிகழ்வுகளையும் சுதந்திரம் வேண்டி நிற்கும் போராளிகளினதும், பொதுமக்களினதும் ஆழமான உணர்வலைகளையும் உறுதிப்பாட்டினையும் இந்த நூல் வெளிப்படுத்துகின்றது.
     
யாழ்ப்பாணத்து சீதண முறைமை பண்டைய தாய்வழிச் சொத்துடமை உறவு முறையுடன் தொடர்பு உடையது என்பதை நிறுவும் ஆய்வாக இவரது ‘உடையாத விலங்குகள்’ (Unbroken Chain) என்ற நூல் திகழ்கின்றது. ஆங்கிலத்தில் இவர் எழுதிய இந்த மூன்று நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மிகச் சிறந்த வரவற்பைப் பெற்றன.

உதயகுமாரி பரமலிங்கம்

உதயகுமாரி பரமலிங்கம்

லண்டன் மிடில்செக்ஸ் பல்கழகத்தின் இளநிலைப்  பொறியியல் பட்டதாரியான உதயகுமாரி பரமலிங்கம், அரியாலையூர் அம்புயம், நிலா போன்ற புனைபெயர்களில் கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றைப் படைத்து வருகின்றார்.
       1. ‘எந்தையும் யானும்’  (நிலாவினதும் அவரது தந்தை சிவம் பரமலிங்கத்தினதும் கவிதைகள்)         
       2.  ‘எழுத எழுத’  (சக்கர நாற்காலியில் தன் வாழ்வை நகர்த்தும் நிலாவின் சுயசரிதம்)
       3. ‘நிலாவின் இந்திய உலா’ 2003,2009 களில் இந்தியா சென்ற நிலாவின் அனுபவங்களின் கோர்ப்பு.  2010 இல் வெளிவந்த சிறந்த பயணக்கட்டுரைக்கான தமிழியல் விருதினை 2011இல் பெற்றது.
       4. ‘உறைக்கும் உண்மைகள்’ ஐரோப்பிய வாழ்வியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட குறுநாவல். அக்டோபர் 2010 திருநெல்வேலி, தமிழகம்.
        5. ‘அம்மா வாழ்க!’ பலவிதமான ஆக்கங்களின் தொகுப்பு. ஜனவரி 2012, லண்டன்.
நாடகங்கள்  பதினைந்திற்கும் மேற்பட்டவை (யாழ்ப்பாணம்)
இலண்டனில் மூன்று நாடகங்கள்.

திருமதி சீதாதேவி மகாதேவா

லண்டன் ஹரோவில் வசித்து வரும் சீதாதேவி 1998இல் இளைப்பாறிய ஒரு மூத்த ஆங்கில வைத்தியை. குழந்தை வைத்தியம், மனநோய் சிகிச்சை முறை, வெப்பவலய நோய்கள், குடும்பக் கட்டுப்பாடு, குடிசார் வைத்தியச் சேவை போன்ற துறைகளில் பயிற்சி  பெற்று பிரித்தானிய தேசிய சுகாதாரச் சேவையில் 27 ஆண்டுகளும், இலங்கையில் 12 ஆண்டுகளும் சேவையாற்றியவர்.
பெண்ணுரிமை, இலட்சிய உள்ளம், இலட்சியத் திருமணம், வைத்திய விஞ்ஞான அபிவிருத்தி, நாளாந்த சுகாதாரம், பிரித்தானியா, காந்தி-கியூரி – கண்ணதாசன் - பாரதி போன்ற பல்துறை முன்னோடிப் பெரியார்கள், சைவம், தமிழர் கலாச்சாரம், வாழ்க்கை அனுபவங்கள், தனது குடும்பத்தார், அண்மையும் பெண்மையும் போன்ற கருப்பொருட்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட்டுள்ளார். பூந்துணர் -2007, பூந்துணர் - 2010, பூந்துணர் - 2012 தொகுப்பு நூல்களிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.  
       
மீனாள் நித்தியானந்தன்

மீனாள் நித்தியானந்தன்

லண்டனில் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றி வாசித்த கட்டுரையின் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமான மீனாள் நித்தியானந்தன் அனுபவம் மிகுந்த மருத்துவத் தாதி ஆவார். அரபு நாடுகளில் வேலை செய்த அவரது அனுபவங்களைப்பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன. அரபுமொழி, மலையாளம் ஆகிய மொழிகளில் தேர்ச்சியும் கொண்ட அவர் லண்டன் விமர்சனக் கூட்டங்களில் நூல் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். ராஜேஸ்வரி பாலசுப்ரமணியத்தின் ‘தாயும் சேயும்’ மருத்துவ நூல் குறித்த நுட்பமான விமர்சனமொன்றினை இவர் முன்வைத்துள்ளமை விதந்துரைக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு லண்டன் ஏர்ல்ஸ் கோர்ட்;டில் நடைபெற்ற நூல் கண்காட்சியில் நேரில் பார்த்து, இந்திய ஆங்கில எழுத்தாளர்களைச் சந்தித்து இவர் எழுதிய ‘லண்டன் நூல் கண்காட்சி சில மனப்பதிவுகள்’ என்ற கட்டுரை மிகச் சிறந்த விவரணக் கட்டுரையாகும்.

புனிதம் பேரின்பராஜா

புனிதம் பேரின்பராஜா

இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான புனிதா பேரின்பராஜா இலங்கையில் ஆசிரியராகப் பத்தாண்டுகளுக்கு மேலாகக் கடமையாற்றியவர். புலம்பெயர்ந்து பிரித்தானியாவுக்கு வந்து லண்டன் பல்கலைக்கழகத்தில் ‘பல்கலாச்சார’த் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்ட புனிதா பேரின்பராஜா லண்டன் ஆங்கிலப் பாடசாலைகளில் மொழியியல் வல்லுநராகக் கடமையாற்றியதோடு, ஆங்கில ஆசிரியர்களுக்கு விரிவுரையாளராகவும், செயலாளராகவும் செயலாற்றியவர்.

1987 ஆம் ஆண்டு ஹரோவில் தமிழ் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க உதவிய புனிதா பேரின்பராஜா ‘பாடல் மூலம் தமிழ்’ என்ற நூலினை எழுதி வெளியிட்டவர். இதன் பாடற்தொகுப்பு தற்பொழுது இறுவெட்டாக வெளிவந்துள்ளது. நான்கு தசாப்தங்களுக்கு மேலாக லண்டனில் வாழ்ந்துவரும் புனிதா பேரின்பராஜாவின் பாடல்கள் 2004 ஆம் ஆண்டு பிரித்தானிய மகாராணியாரின் முன்னிலையில் மேடையேற்றம் கண்டது. இவரது சமூக சேவைகள் குறித்து 2004ஆம், 2012 ஆம் ஆண்டுகளில் மாநகர மேயரின் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு  தமிழ்சமூகத்திற்கு மிகுந்த பெருமையைத் தேடித்தந்தவர்.

திருமதி விஜயலட்சுமி ஆறுமுகசாமி 

38 வருட கால சங்கீத ஆசிரியத் தொழிலில் ஆனுபவம் கொண்ட ஸ்ரீமதி விஜயலட்சுமி ஆறுமுகசாமி கர்நாடக சங்கீத பரீட்சைக்குரிய பாடத்திட்டத்திற்கமைய வழிகாட்டி நூலை எழுதி 2011 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். இசைக் கலையை பயி;ல்வோர் மட்டுமன்றி சாதாரண மக்களும் வாசித்து அறிந்து உணர்ந்திடும் வகையில் எளிமையும் இனிமையும் நிறைத்து இதனை வெளியிட்டுள்ளார்.

சிவகாமி மகாலிங்கம்

1947 இல் கொழும்பில் பிறந்த சிவகாமி மகாலிங்கம் தனது கணவருடன் பிரித்தானியாவுக்கு வந்து பிரித்தானியாவின் வருமான மற்றும் சுங்க திணைக்களத்தில் முழுநேர ஊழியையாகப் பணியாற்றியவர். நமது நாளாந்த சமையல் கலை திறமைகள் புலம்பெயாந்து வாழும் நமது சந்ததியினருக்குத் தெரிய வேண்டும் என்னும் நோக்கில், மேற்கு நாடுகளின் நவீன வாழ்வுக்கேற்ப இசைவு படுத்தப்பட்ட இலங்கை மற்றும் ஆசிய நாட்டு பாரம்பரிய சமையல் என்னும் ஒரு புத்தகத்தை இவர் எழுதியுள்ளார். Rice and Curry (Kari) என்ற தலைப்பில் 400 உணவுகள் தயாரிக்கும் முறைகளின் விபரங்கள் அதில் அடங்கியுள்ளன. தொண்டு அடிப்படையில் சமையல் கலை விளக்கங்களை சொல்லிக் கொடுப்பதன் மூலமும் பல்வேறு தர்ம ஸ்தாபன நிகழ்வுகளுக்கு உதவி இருப்பதுடன் சுனாமி அனர்த்த நிதி சேகரிப்பு உட்பட பல்வேறு நிதி சேகரிப்பு நிகழ்வுகளுக்கும் இவர் உதவி புரிந்துள்ளார்.


ராஜேஸ்வரி ஈஸ்வரஞானம்
             
ஆண் ஆதிக்கத்திற்கு எதிரான தீர்க்கமான கருத்துக்கள் கொண்ட ராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் 1975 இல் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியின்; வர்த்தகவியல் ஆசிரியராகக் கடமை புரிந்தவர். நீண்ட காலமாக லண்டனில் வாழ்ந்துவரும் ராஜேஸ்வரி லண்டனில் விக்னேஸ்வராக் கல்லூரியின் பழைய மாணவர்சங்கத்தினை அமைத்து இன்றுவரை திறம்பட நடாத்திவருகின்றார். 1980 முதல் தமிழ் சமுதாயத்தில் அக்கறை கொண்டு பல சமூகவேலைகளை முன்னெடுத்து வருவதோடு அங்குள்ள பல மாணவர்களை தத்தெடுத்து சகல செலவீனங்களையும் தனியொருவராக நின்று செய்து வருகின்றார்.

‘இயற்கையோடு இயைந்த வாழ்வு’ என்ற நூலை 2010 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட ராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் 2012 ஆம் ஆண்டில் ‘மூச்சுப் பயிற்சி’ என்ற இறுவெட்டொன்றை வெளியிட்டுள்ளார். ஆரோக்கியமாக மக்கள் வாழ்வதில் அக்கறை கொண்டு இத்தகைய நூல்களை எழுதி வரும் ராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் தற்பொழுது ‘பிரதிபலிப்பு முறை’ என்ற தலைப்பில் நோய்களைத் தடுக்கும் நூல் ஒன்றினை எழுதிக்கொண்டிருக்கிறார். 

சி.மாதுமை 

யாழ்ப்பாணத்தில் பிறந்து திருகோணமலையைப் புகலிடமாகக் கொண்டு தற்போது லண்டனில் வசித்து வருகின்றார். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ பொருளியல் முதலாம் தரப்பட்டதாரியான சி. மாதுமை பீ.எஸ்.பீ நிறுவனத்தில் திட்டமிடல் உதவியாளராகப் பணிபுரிந்தவர். தனது சிறுவயது முதல் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த மாதுமை பல பரிசில்களைப் பெற்று இளம் எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றிருந்தார். தனது இருபத்தாறாம் வயதில் ‘தூரத்துக் கோடை இடிகள்’ (2005) என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டவர்.

மாதுமையிடம் இலக்கிய நடையும்,யாழ்ப்பாணத்துப் பேச்சு நடையை லாவகமாகக் கொண்டு எழுதும்; பாங்கும் நிறையவே காணப்படுவது அவர் திறமைக்குச் சான்று என்று முதுபெரும் விமர்சகரும், எழுத்தாளருமாகிய கே.எஸ்.சிவகுமாரன் கூறுகின்றார்.  முதுமை, தனிமை, அனாதரவு, சூழல் இணக்கமாக அமையாமை, மத்தியதர மக்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள், இனவேறுபாடுகளுக்கு அப்பால் மனித உறவுகளின் அந்நியோன்யம், வெளிநாடுகளில் இலங்கைத்தமிழர் சிலரின் கேவலமான நடத்தைகள், ஏமாற்றுச் செயல்கள், திருகோணமலையில் குடியேறிய அகதிகளின் அந்தரங்கம், மாற்று இனப் பெண் வயோதிபருக்கும் , அனாதைப் பிள்ளைகளுக்கும் உதவ முன்வருதல், கணநேரக் காதலை வெளிப்படுத்த முடியாத அங்கலாய்ப்பு, பெற்றோரை அவமரியாதைக்குரியவர்களாக ஆக்கும் மகனின் உதாசீனம், குருவை உதாசீனம் செய்து கலையை விலையாக்கும் இளம் பாடகி, மணவாழ்வில் ஏமாற்றம், கணவன் துரோகம் கண்டு தற்கொலை செய்யும் மனைவி, தோல்விகளுக்கும் மத்தியில் நம்பிக்கையுடன் வளரும் இளைஞன் - இப்படிப் பலவிதமான நிகழ்;ச்சிகள் அவர் கதைகளின் அடிநாதமாக ஒலிப்பதை இனங்காணமுடிகிறது என்று சிவகுமாரன் கூறுகின்றார்.  

ஷாரிகா திராணகம  

மறைந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் உடற்கூற்றியல் பேராசிரியை டாக்டர் ரஜனி திராணகமவின் மகளான ஷாரிகா சமூக மானிடவியலில் கலாநிதிப்பட்டம் பெற்றவராவர். ‘ ‘In My Mother’s House – civil war in Srilanka’  என்று பென்சில்லேனியா பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்திருக்கும்  இவரது ஆராய்ச்சி நூல் இலங்கைக்குள்ளேயே அகதிகளாக இடம்பெயர்ந்த வடபுலத்துத் தமிழர்களதும். முஸ்லிம்களதும் சமூக ஊடாட்டங்களைப்பற்றிய மிக ஆழமான ஆய்வாகப் பரிணமித்திருக்கின்றது.
    
இலங்கையின் தலைசிறந்த சமூகவியல் அறிஞரான கணத் ஒபேசேகர யுத்தத்தின் நிழலில் சாதாரண மக்கள் எத்தகைய உறுதியோடு வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த நூல் நேர்த்தியாகச் சித்தரிக்கின்றது என்று கூறியிருக்கிறார். அமெரிக்காவின் ஸ்ரான்போஃர்ட் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகப் பணியாற்றும் சாரிகா ‘Traitors'  என்ற மற்றுமொரு ஆங்கில நூலின் இணை ஆசிரியராகத் திகழ்கின்றார்.

சுகதினி பானுகோபன்

யாழ். வலிகாமம் இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட சுகதினி பானுகோபன் தற்பொழுது பிரித்தானியாவில் வாழ்ந்து வருகின்றார். இணுவில் மத்திய கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி போன்ற கல்லூரிகளில் கல்வியைத் தொடர்ந்த சுகதினி பானுகோபன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது பி.ஏ பட்டப்படிப்பை மேற்கொண்டவர். கல்வி பயிலும் காலம் தொட்டே கவிதை எழுதுவதில் ஈடுபாடு கொண்ட சுகதினி ஐம்பதிற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார். இலங்கைப் பத்திரிகைகளில் அவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

மைத்ரேயி ராஜேஸ்குமார்

மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தையும், மேற்கத்தைய மெய்யியலையும் சிறப்புக் கற்கை நெறியாகப் பயின்றவர் மைத்ரேயி ராஜேஸ்குமார். பென் பவிங் என்ற டச்சுப் பாதிரியார் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராகவும் பின் புணர் வாழ்வு செயற்பாட்டாளராகவும், யுத்த காலப் பகுதியில் பணியாற்றிய காலத்தில் எழுதிய டயறிக் குறிப்புகளை அழகாகப் பதித்து வெளியிட்டிருக்கிறார்.
   
Of Tamils and Tigers : A Journey Through Sri Lnaka’s  War  Years  என்ற தலைப்பில் வெளியான இந்த நூல் மைத்ரேயின் ஆங்கிலப் பிரதியைச் செப்பனிடும் நுட்பமான ஆற்றலை வெளிப்படுத்தி நிற்கிறது. இந்த ஆவணத்தை  ஆழந்த ஈடுபாட்டுடனும் பெரும் கரிசனையுடனும் செம்மைப்படுத்தி தந்திருப்பதை பென் பவிங் நன்றியோடு நினைவு கூர்ந்ததை குறிப்பிடுவது பொருத்தமானதாகும். ஆங்கில நாடக மேடையேற்றங்கள் குறித்து இவர் எழுதிய விமர்சனங்கள் ஆங்கில ஏடுகளில் வெளியாகியுள்ளன.

பொன்னையா ஜெயஅழகி அருணகிரிநாதன்

பொன்னையா ஜெயஅழகி அருணகிரிநாதன்

கர்நாடக சங்கீதம் குறித்தும், சைவத் திருமுறைகள் குறித்தும் லண்டனில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஜெயஅழகி அருணகிரிநாதன் ‘The Tevaram Contribution to Saivism and Indian Music’ என்ற ஆராய்ச்சி நூலை எழுதி வெயிட்டவர். இலங்கையிலும், இந்தியாவிலும் சங்கீத ரத்தினம், சங்கீத வித்துவான் போன்ற பட்டங்களைப் பெற்ற ஜெயஅழகி அருணகிரிநாதன் லண்டன்  SOAS, University of London இல் சங்கீத இசையைக் கற்பித்துவருகின்றார். London Oriental Fine arts Academy  இன் வருடாந்த பரீட்சையின் பிரதம பரீட்சையாளராகவும் கடமைபுரிந்து வருகின்றார்.

பிறேமளாதேவி ரவீந்திரன்

யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறைப் பீடத்தில் கற்று ‘நாட்டியக் கலைமணி’ பட்டம் பெற்ற ஸ்ரீமதி பிறேமளாதேவி ரவீந்திரன் நாட்டியக் கலைஞராகவும், ஆசிரியராகவும், பரீட்சகராகவும் இலங்கை , லண்டன், ஐரோப்பிய நாடுகள் என்று பலவிடங்களிலும் பலகால அனுபவம் கொண்டவர். லண்டன் சங்கீத சபையில் பங்கேற்றுப் பணியாற்றிவரும் பிறேமளா இறைய தலைமுறையினருக்கு அறிவு நோக்கமாகவும், பரீட்சை நோக்கமாகவும் ‘பரதநாட்டியம்’ குறித்த நூல்களை இரண்டு பிரிவுகளாக்கி நூல் வடிவில் தந்துள்ளார்.நடனம் பற்றிய இவரது பல கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
    
நாட்டியம் மட்டுமன்றி கர்நாடக இசை வாய்ப்பாட்டிலும், வடமொழி, இந்துப்பண்பாடு போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்ற பிறேமளா ரவீந்திரன் தொடர்ந்தும் கலை முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.

சாரங்கா

எழுத்துலகில் சாரங்கா என எல்லோராலும் அறியப்பட்ட குணாளினி தயானந்தன் ஒரு ஆங்கிலப் பட்டதாரியாவார். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவியான சாரங்கா தற்போது லண்டனில் வசித்து வருகின்றார். 1992 ஆம் ஆண்டு ஈழநாதத்தில்  ‘ஓன்றரைக்கால்’ என்ற சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்த சாரங்கா யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த ‘ஸ்கிறிப்ட் நெற்’ திரைக்கதை எழுத்தாளர்  தெரிவில் இறுதிச் சுற்றுவரை தேறிச் சான்றிதழ் பெற்றவர்.

‘தரமான சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் படைத்து ஈழத்து இலக்கிய உலகிற்கு வளம் சேர்க்க வேண்டும். மேல் நாட்டு நல்லறிஞர் இலக்கியங்களை தமிழில் மீள் கூறவேண்டும்’ என்ற இலக்கிய வேட்கையோடு திகழும் சாரங்கா கவிதை, கட்டுரை, சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றி பல்வேறு பரிசில்களைத் தட்டிக்கொண்டவர்.

குரும்பசிட்டி சன்மார்க்க சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு, வலம்புரி நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு, கவிதைப் போட்டியில் முதற்பரிசு, பாரீசில் தமிழ் சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் தங்கப் பதக்கம். விபவி கவிதைப் போட்டியில் பரிசு. அமுது சிறுகதைப் பரிசு. திருமறைக் கலாமன்றம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு, ‘சுகவாழ்வு நிலையம்@ நடாத்திய சிறுகதைப்போட்டியில் பரிசு, சதாவதானி கதிரவேற்பிள்ளை கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு. ஞானம் நடாத்திய புதிய பரம்பரை எழுத்தாளர்களுக்கான சிறுகதைத் தொகுதிப் போட்டியில் அதி சிறந்த படைப்புக்கான ஞானம் விருது (2003)எ;று பல பரிசில்களைப் பெற்றவர்.

ஞானம் வெளியீடாக 2004 இல் வெளியான ‘ஏன் பெண்ணென்று...’ என்ற இவரது சிறுகதைத் தொகுதி 2003இல் ஞானம் விருது பெற்ற நூலாகத் தெரிவுசெய்யப்பட்டது.

‘நவீனத்துவ உள்ளியல்புகளை நேர்த்தியாக உள்வாங்கி, இயற் பண்பியலின் நல்ல அம்சங்களையும் மனதிலிருத்தித் தனக்கென ஒரு தனிப்பாணியை அமைத்த ஆக்க ஆளுமையுடைய படைப்பாளி.  அவரது படைப்புக்களில் நாம் வாழும் சமூகத்தின் எரியும் பிரச்சனைகள், சமகாலப் போர்ச்சூழலின் அவலங்கள், பெண்ணியம் ஆகியவற்றை அழகாகக் கையாண்டுள்ளார். விடுதலை வேண்டி நிற்கும் அமுக்கப்பட்ட குரலின் விழிப்பு ஓசை கேட்கிறது. அது இன விடுதலையிலிருந்து பெண் விடுதலை வேண்டி நிற்கும் பெரும் பரப்பில் எதிரொலிக்கின்றது. ஆக்க அமைதியுடன் படைக்கப்பட்ட இவரது ஆக்கங்கள் உருவச் செழுமையுடன் கலா நுட்பமும் கொண்டவையாக அமைந்துள்ளன. உணர்ச்சிகளின் மென்மையான வெளிப்பாடு இவரது கதைகளின் உயிர்நாடி. வாழ்க்கைக் கோலத்தின் முரண்பாடுகளை இவர் அணுகும் முறை அற்புதமானது. சொற்சிக்கனம் கவிதை நடையின் சாயல், குறியீடுகளின் பயன்பாடு, சொல்லாமல் சொல்லும் உத்தி, ஆகிய சிறப்புக்களுடன், சிறுகதைப் பிரக்ஞையுடன் சாரங்காவின் படைப்புக்கள் அமைந்துள்ளன’ என்று புலோலியூர் க. சதாசிவம் அவரது சிறுகதைகள் குறித்துக் கூறுகின்றார்.

தஷந்தி சங்கர்

தஷந்தி சங்கர்

கொழும்பு திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் தனது கல்வியை மேற்கொண்ட தஷந்தி சங்கர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டதாரி ஆவார். தமிழ்மொழியில் மிகுந்த பற்றும் தமிழ் படைப்புக்களை வியந்து ரசிக்கும் மனமும் கொண்ட தஷந்தி சங்கர் இளவயது முதல் கவிதை நிகழ்வுகளில் தன் திறனால் அங்கீகாரம் பெற்றவராவார். இலகு தமிழில் இனிய மொழி நடையில் பலவேறு பார்வைகளில் ஆழமான கருத்துக்களோடு ‘என் விரல்களின் தவம்’ என்னும் தனது முதலாவது கவிதைத் தொகுப்பை 2008இல் வெளியிட்டவர்.
  
கவிச்சுவை குன்றாமல் புதிய பரிமாணங்களைப் புகுத்தி, கவிதைகளில் புதுமை படைக்கும் முயற்சியில் இவர் தொடர்ந்தும் தனது தமிழ்ப் பணியை ஆற்றி வருகின்றார்.

ரோகினி சிவபாலன்  

தொலைக்காட்சி நாடகமான ‘சித்திரா’ என்ற தொடர் நாடகத்தின் மூலம் மக்களிடையே அறிமுகமான ரோகினி சிவபாலன் அந்நாடகத்தின் சிறந்த நடிகையாகப் பேசப்பட்டவர். சமய யாத்திரைகளை மேற்கொண்டு ‘கடவுளும் குருவும் என் கண்ணோட்டத்தில்’ , காஷ்மியரில் இருந்து கன்னியா குமரிவரை’ ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டவர். தொடர்ந்தும் சமய யாத்திரைகளை மேற்கொள்வதிலும், சமய நூல்களை எழுதுவதிலும் முனைப்பாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

பிறேமலதா பஞ்சாட்சரம்

லண்டனில் ஹரோவில் வாழ்ந்துவரும் பிறேமலதா பஞ்சாட்சரம் ஈழத்தின் யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பதியில் அமைந்த சப்பச்சிமாவடி சாவகச்சேரி என்னும் இடத்தைச் சேர்ந்தவர்.
  
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் மேற்படிப்பை மேற்கொண்ட பிறேமலதா லண்டனில் சட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். புதுக்கவிதைகளை எழுதுவதில் நிறைந்த ஆர்வம் கொண்ட பிறேமலதா ‘தாய்மேல் ஆணை’ என்னும் கவிதைத் தொகுப்பை 2004ம் ஆண்டில் வெளியிட்டவர்.

நிதர்சனா ஜெகநாதன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நிதர்சனா ஜெகநாதன் 2000ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வருகின்றார். ‘லண்டன் தமிழ் நிலையத்தின்’ மாணவியான நிதர்சனாவின் இளமனதில் தாய்நாட்டு நினைவுகளும் அன்றைய வாழ்வும் நெஞ்சில் உதிர்த்தபோது கவிதை மழையாகி நெஞ்சை நனைத்தது என்கின்றார். லண்டன் தமிழ் நிலையத்தின் அதிபராகச் செயற்பட்ட கலாநிதி நித்தியானந்தன் அவர்களால் ‘இளம் நினைவுகள்’ என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பு 2004 ல் வெளியிடப்பட்டது.

சமிஸ்ரா சிவக்குமார்

லண்டன் கிறீன்விச் பல்கலைக்கழகத்தின் Business  Administration  துறைப் பட்டதாரியான சமிஸ்ரா சிவக்குமார் ‘லண்டன் ஸ்ரீ மீனாட்சி நடனப் பள்ளியில்’ ஸ்ரீமதி சாந்தா அன்னபபூரணி அவர்களிடம் பரதநாட்டியக் கலையைப் பயின்று அரங்கேற்றம் கண்டுகொண்டவர். ஸ்ரீ பிரகாஷ் ஜலகுடி, சித்ரா விஸ்வேஸ்வரன் போன்ற பிரபல நாட்டிய ஆசிரியர்களிடம் மேலும் பயின்று நாட்டியத்தின் நுணுக்கங்களைப் புடம்போட்ட சமிஸ்ரா சிவக்குமார் மிருதங்க மேதை காரைக்குடி கிருஷ்ணமூர்த்தியிடம் நட்டுவாங்கத்தைக் கற்றுக்கொண்டவர். 2012 ஆம் ஆண்டில் ‘நாட்டிய அலங்காரம்’ என்ற நாட்டிய நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார். பந்த நல்லூர் பாணியில் தனது நாட்டிய வெளிப்பாடுகளை மேற்கொண்ட சமிஸ்ரா சிவக்குமார் லண்டன் மேடைகளில் தனது நாட்டியத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடவேண்டியதொன்றாகும்.

ஜெயந்தி யோகராஜா

ஜெயந்தி யோகராஜா

பரதநாட்டியக் கலையை இலங்கையில் புகழ்பெற்ற ஸ்ரீமதி லிலா நாராயணனிடமும், பின் கலாஷேத்திரா, அடையாறு லட்சுமணனிடமும் கற்றுத் தேறிய ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா 1982 ம் ஆண்டு அனைத்து இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட தனிநடனப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றவராவார். ‘பரத இலக்கணம்’ , ‘நாட்டிய விலாசம்’ ஆகிய இரு நாட்டிய நுணுக்கங்கள் பற்றிய நூல்களை  எழுதி வெளியிட்ட   இவர் ‘நாட்டியக் கிரியா’ இறுவெட்டையும் வெளியிட்டவர். தற்போது நெதர்லாந்து லண்டன் போன்ற நாடுகளில் நாட்டிய ஆசிரியையாகப் பணிபுரிந்துகொண்டிருக்கிறார். 

நவஜோதி ஜோகரட்னம்

நவஜோதி ஜோகரட்னம்

ஜோகினி, மாஜிதா ஆகிய புனைபெயர்களில் எழுதிவரும் நவஜோதி ஜோகரட்னம் யாழ்ப்பாணம் இளவாலைக் கொன்வென்டின் வார்ப்பு. ‘எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன்’ என்ற 2005ல் வெளிவந்த இவரது கவிதைத் தொகுப்பு லண்டனில் ஒரு ஈழத்துப் பெண்படைப்பாளி எழுதி வெளியிட்ட முதலாவது தமிழ் கவிதைத் தொகுப்பு எனப் பலரது பாராட்டைப் பெற்றது. லண்டனில் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலங்கையில் வெளிவரும் வீரகேசரி, தினகரன், தினக்குரல் போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் போன்றவற்றில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சர்வதேச சிறுகதைப் போட்டிகளில் நான்கு சிறுகதைகளுக்குப் பரிசில்கள் கிடைத்துள்ளன. CeeI TV  தரிசனம், ஜி.ரி.வி போன்ற தொலைக்காட்சிகளிலும், ETBC, Sunrise, Kishmath, Lonldon tamil Radio போன்ற வானொலிகளிலும் அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும் கடமை புரிந்த அனுபவம் கொண்டவர். தற்பொழுது குயு வுஎ (இணையத் தொலைக்காட்சியில்) தொடர்ந்தும் தனது பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கிறார். கலை, இலக்கியம், அரசியல்போன்ற பல துறைகளில் 275 இற்கும் மேற்பட்ட நேர்காணல்களைச் செய்துள்ளார். 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here