வாஷிங்டன் போஸ்ட்: சிறீலங்கா இராணுவத்தின் கொடுமைகள் போரினால் ஏற்பட்ட புண்ணில் வேலை நுழைப்பதாகத் தமிழ்ப் பெண்கள் சொல்கிறார்கள்
- தமிழர்களுக்குச் சொந்தமான நாட்டில் சிங்கள இராணுவ ஆட்சி நீக்கமற நிறைந்துள்ளதாகத் தெரிவிக்கும் வோஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் சைமன் டெனியர் (Simon Denyer of Washington Post, July 06, 2012) யாழ்ப்பாணத்தில் இருந்து அண்மையில் அனுப்பி வைத்த செய்தியில் "நாட்டின் வடபகுதியில் தோட்டம் மற்றும் காய்கறி விற்பனை, 'ஹொட்டல்'களை நடத்தல், உணவகங்களை நடத்தல், ஏன் முடிதிருத்தும் கடைகளை நடத்துதல் போன்ற பொருளியல் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்" என்கிறார். அவர் அனுப்பிய செய்தியின் முழு வடிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. -
சிறீலங்காவின் உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கும் போது பல்லாயிரம் பொதுமக்கள் இருபக்கச் சூட்டில் அகப்பட்டு பயப்பீதியில் உறைந்து போனார்கள். "பசி காரணமாகக் குழந்தைகள் அழுதன. அப்ப யாரோ தேங்காய்ப்பால் கஞ்சி கொடுப்பதாகச் சொன்னார்கள். உடனே பதுங்கு குழியில் ஒளித்திருந்த நாம் வெளியே வந்தோம்" என வட மாவட்டம் துணுக்காயைச் சேர்ந்த 35 அகவை பெண் ஒருவர் நினைவு கூர்ந்தார். "அப்போது இராணுவம் அந்த இடத்தில் குண்டு போட்டது. எனது குழந்தை உட்படப் பெரும்பாலான குழந்தைகள் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்."

தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ்மக்கள் மீது சிறீலங்கா அரசு தொடுத்திருக்கும் இனவழிப்பை நிறுத்துமாறும் தமிழர் நில அபகரிப்பை எதிர்த்தும் தாயக மக்களின் போராட்டத்துக்கு வலுவூட்டும் வகையிலும் நேற்று செவ்வாய்க் கிழமை 36 எக்லின்டன் மேற்கு வீதியில் அமைந்திருக்கும் சிறீலங்கா துணைத் தூதுவராலயத்தின் முன் நூற்றுக் கணக்கான தமிழ் மக்கள் கைகளில் முழக்க அட்டைகளைப் பிடித்த வண்ணம் கொளுத்தும் வெய்யிலிலும் கூடி நின்று தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். பாதுகாப்புக்காக சிறீலங்கா துணைத் தூதுவராலயம் அமைந்திருக்கும் கட்டிடத்தின் முன் பெருமளவிலான ஓன்ரேறியோ காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். "தயவுசெய்து இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அவர்கள் பிறந்த நாட்டில் இடம்பெறும் நிலப்பறிப்பையும் பண்பாட்டுப் படுகொலையையும் தடுத்து நிறுத்தங்கள்" (Please Help to Prevent Land Grab and Cultural Genocide of Sri Lankan Thamils in their own Country of Birth) என்று எழுதப்பட்ட பெரிய பதாதைகள் ஆர்ப்பாட்டத்தில் காணப்பட்டன.
ஒட்டாவா, ஜூ ன் 29, 2012 —கனடாவின் குடிவரவு அமைப்பை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் உதவும் சட்டம் நிறைவேற்றப்பட்டு அரச இசைவு பெற்றதை குடியுரிமை, குடிவரவு மற்றும் பல்கலாச்சார துறை மந்திரி ஜேசன் கென்னீ இன்று வரவேற்றுள்ளார்: “இந்த சட்டமானது வெளிநாட்டு குற்றவாளிகள், ஆள் கடத்தல்காரர்கள் மற்றும் கண்டுபிடிக்கப்படாத அகதி கோரல்களுடையவர்கள் ஆகியோர் கனடாவின் தாராளத்தன்மையுடைய குடிவரவு அமைப்பை துர்பிரயோகம் செய்வதையும் வரி செலுத்துவோரால் நிதிபெறும் ஆரோக்கியம் மற்றும் சமுதாய நன்மைகள் பெறுவதையும் தடுத்து நிறுத்தும்” என்று மந்திரி கென்னீ குறிப்பிட்டார். “கனடாவின் குடிவரவு மற்றும் அகதி அமைப்பு என்பது உலகத்திலேயே மிக நேர்மையான மற்றும் தாராளத்தன்மையுடைய அமைப்புகளில் ஒன்றாகும், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அமைப்பிலும் அது அப்படியே தொடரும்.”
On June 20, 1868, a proclamation signed by the Governor General, Lord Monck, called upon all Her Majesty's loving subjects throughout Canada to join in the celebration of the anniversary of the formation of the union of the British North America provinces in a federation under the name of Canada on July 1st. The July 1 holiday was established by statute in 1879, under the name Dominion Day. There is no record of organized ceremonies after this first anniversary, except for the 50th anniversary of Confederation in 1917, at which time the new Centre Block of the Parliament Buildings, under construction, was dedicated as a memorial to the Fathers of Confederation and to the valour of Canadians fighting in the First World War in Europe. The next celebration was held in 1927 to mark the Diamond Jubilee of Confederation. It was highlighted by the laying of the cornerstone by the Governor General of the Confederation Building on Wellington Street and the inauguration of the Carillon in the Peace Tower. Since 1958, the government has arranged for an annual observance of Canada's national day with the Secretary of State of Canada in charge of the coordination. The format provided for a Trooping the Colours ceremony on the lawn of Parliament Hill in the afternoon, a sunset ceremony in the evening followed by a mass band concert and fireworks display.
June 21, 2012, Ottawa, Ontario- Prime Minister Stephen Harper today issued the following statement to mark National Aboriginal Day: “Today we celebrate the rich and diverse culture of our country’s Aboriginal peoples and reflect upon the important role they have played and continue to play in shaping modern-day Canada. “Aboriginal peoples have made immense contributions to our nation. First Nations fought as allies in the War of 1812 and in every major conflict since, and their cultures and traditions continue to be an integral part of Canadian identity. The enduring relationship between the Government of Canada and First Nations is one based on mutual respect, friendship and support, and we are committed to working towards deepening this bond. “Our Government has made strengthening this relationship a priority. For instance, in 2008 we issued an historic apology to former students of Indian Residential Schools, and in 2010, we endorsed the United Nations Declaration on the Rights of Indigenous peoples. In January of this year, we also participated alongside First Nations in the historic Crown-First Nations Gathering to set the context for renewed collaboration.
On June 21st, Canadians from all walks of life are invited to participate in the many National Aboriginal Day events that will be taking place from coast to coast to coast. June 21st kick starts the 11 days of Celebrate Canada! which includes National Aboriginal Day (June 21), Saint-Jean-Baptiste Day (June 24), Canadian Multiculturalism Day (June 27) and concludes with Canada Day (July 1)! On June 13, 1996, the Governor General of Canada proclaimed June 21st to be National Aboriginal Day, offering Aboriginal peoples an excellent opportunity to share their rich, diverse cultures with family members, neighbours, friends and visitors. First Nations, Métis and Inuit people will gather to celebrate and share with spectacular dance, song and theatrical performances both contemporary and traditional that will bring you to your feet! National Aboriginal Day is a fun-filled day for the whole family to enjoy together. National Aboriginal Day is an opportunity to learn more about Aboriginal people and their contributions to Canada. Share in the Celebration
June 14, 2012, 6:29 pm- ‘President Rajapaksa is in a hell of a predicament also because as the Commander in Chief of the Military, he is alleged to have committed war crimes and crimes against humanity. With mounting evidence, he is trying to negotiate, perhaps barter justice with a political solution as he knows that the day he relinquishes his position as head of state, he is likely to be arrested just as Charles Taylor of Liberia or Milosevic of former Yugoslavia.’ While the LTTE was retreating rapidly on the Vanni east front, following a debilitating setback at Kilinochchi in the first week of January, 2009, the Tamil Diaspora groups emerged as its successor. The UK-based Global Tamil Forum (GTF) is now at the forefront of an internationally backed campaign to haul Sri Lankan leaders up before an international war crimes tribunal over accountability issues. The GTF displayed its power when President Mahinda Rajapaksa visited London at the invitation of the UK, to participate in the Queen’s Diamond Jubilee celebrations recently.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சம்பிக்க ரணவக்க, மேதானந்த எல்லாவல தேரர், தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாச அமரசேகர ஆகிய நால்வரும் நாட்டை நாசமாக்கி படுகுழியில் தள்ளுகிறார்கள். நாட்டின் தேசிய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களை சிறுமைப்படுத்துவதையே இவர்கள் நால்வரும் தமது நாளாந்த நடவடிக்கைகளாகக் கொண்டுள்ளார்கள். இந்த நாட்டில் இன்று நடக்கும், தமிழ்-முஸ்லிம் இனத்தவர்களுக்கும், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தவர்களுக்கும் எதிரான அனைத்து இனவாத, மதவாத நடவடிக்கைகளுக்கும் இந்த நால்வரும்தான் பொறுப்புக் கூற வேண்டும். இந்த நாட்டில் மத, இன நல்லிணக்கம் ஏற்படுத்தும் எண்ணம் இருக்குமானால் இந்த நால்வரையும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாடு மீளவே முடியாத படுபயங்கர அதள பாதாளத்தில் விழும் நாள் மிகத்தொலைவில் இல்லை. இந்தக் கருத்தை நமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
[June 8, 2012 } On the eve of the Presidents visit to the UK to attend the Queens Diamond Jubilee, Gotabaya in his usual finger wagging style told the BBC that the north cannot be recognised as a “Tamil” region. In the run up to the first Presidential election, Mahinda Rajapakse told his Sinhala Buddhist electorate that he is from the “south”. Was he not indicating that he was from the Deep South, which is hard line Sinhalese? By denying that the North is a Tamil region, the Rajapakse’s are denying to the Tamils, what the Sinhalese take for granted in their perceptions of the Deep South and elsewhere. The “Tamil” identity of the North is no different to the Kandyan identity of the central highlands or the Rohona identity of the South. It is folly to deny them, as they are deep-rooted identities, which are embedded in the psyche of the different communities that inhabit this island. It was the Kandyans who first wanted federalism. The response one could expect in denying the “Tamil” identity of the North is no different to the response the Rajapakse’s could expect, if they were to deny the “Kandyan” identity of the highlands.

Visiting Sri Lankan President having experienced a series of demonstrations and protests of thousands of Tamils, Human Rights activist throughout Wednesday at London’s key locations, the Sri Lankan President Mahinda Rajapaksha has left the UK with a sense of disgrace, disgust, disappointment and failure. Couches full of Tamils from Europe and all parts of the UK gathered outside the Mansion House at 8AM in the morning in the city of London where the Sri Lankan President Rajapaksha was scheduled to give a speech on Wednesday morning, 6 June 2012 at the London Mansion House in the Diamond Jubilee Commonwealth Economic Forum. However on Tuesday, 5 June 2012 the Commonwealth Business Council has given the following message in their website “After careful consideration the morning sessions of the Forum on Wednesday 6th of June have been cancelled and will not take place. The event will therefore commence with lunch at 1300hrs followed by the originally planned afternoon sessions beginning at 1400hrs”.
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் தமிழர்கள் மோசமாக நடத்தப்பட்டதற்கான மேலதிகமான காணொலி மற்றும் ஒளிப்பட ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் "தி இன்டிபென்டன்ட்" நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
[Tuesday 5 June 20128:08 pm] A meeting in the City of London, due to have been addressed on Wednesday morning by the president of Sri Lanka, has been cancelled, owing to concerns over policing amid the threat of large demonstrations by Tamil rights groups. But Mahinda Rajapakse – whose presidency has been tainted by persistent allegations of war crimes committed by Sri Lankan armed forces – will still attend a lunch for the Queen, hosted by the Commonwealth secretary general at Marlborough House on Pall Mall. The president was first to have given the keynote speech at a special Diamond Jubilee meeting of the Commonwealth Economic Forum, at 10am. On its website, the event’s organisers, the Commonwealth Business Council, simply states that “After careful consideration, the morning sessions of the Forum… will not take place.” It had pre-sold tickets to the event at £795 +VAT each. Channel 4 News was unable to obtain a response from the CBC. A spokesman for Scotland Yard told Channel 4 News that while it had agreed to guarantee the president’s security, the CBC had “decided it was not in their interest to stage the event” due to excessive policing requirements and the likely disruption to business in the City of London.
முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் , உலகத் தமிழர் பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள் ஆகியோர் , இவ்விடயம் தொடர்பில் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர். ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் உலகத் தமிழர் பேரவையினதும் பிரதிநிதிகள் கடந்த 13, 14 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்க்கோ நகரில் ஒன்றுகூடி, பல விடயங்களை விரிவாக ஆராய்ந்ததோடு சில உடன்பாடுகளையும் எட்டியுள்ளனர் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(குறிப்பு: கௌதம சித்தார்த்தன், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்து தரச் சொல்லிக் கேட்டிருந்தார். பல பேருடைய கருத்துக்களும் திரட்டி தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கொண்டு வரப் போவதாகவும், ஆனால் அது என்ன காரணத்தினாலோ நூலாக வடிவம் பெறவில்லை எனது கட்டுரை இதோ) பட்டி வீரன் பட்டியில் வசிக்கும் 99 வயதான எனது பாட்டனாரான நா. தில்லைக் கோவிந்தன் 2005 இல் சந்தித்த போது மணல் திருட்டு ,மணல் கொள்ளை என மணல் பிரச்சனையாகத் தொடங்கிய காலகட்டம் அப்போது அவர் காமராஜர் காலகட்டத்தில் வைகை அணைகட்டிய போது நடந்த விசயங்களை நினைவு படுத்திப் பேசும் போது, இன்றைய நடைமுறைச் சிக்கல்களையும் இன்று தண்ணீர் மணல் , விவசாயம் என்று எல்லாவற்றிலும் பற்றாக்குறைகளும் எனக்கு உனக்கு என்று சண்டைகளும் வருவதைக் குறித்துச் சொல்லி “ ”அணையைக் கட்டினார்கள் அடிவயிற்றில் அடித்தார்கள்” என் தலைப்பிட்டு எழுதிய கட்டுரையை என்னிடம் தந்தார். அது அப்போது இணைய இதழ்களில் வெளி வந்தது. அதில் சொல்லிய ஒரு வரி இன்று என் நினைவுக்கு வருகின்றது.
மே 19, 2009 அன்று கொழும்பில் இருந்தேன். வீட்டிற்கு வெளியே ஒரே ஆரவாரமாக இருந்தது. போரின் முடிவையும் பிரபாகரனின் மரணத்தையும் சிங்கள மக்கள் அமோகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். போரின்போது தமிழ் மக்கள் பட்ட அவலங்கள் குறித்தோ பேரழிவு குறித்தோ அவர்களில் மிகப் பெரும்பாலானோர்க்கு எவ்விதமான அக்கறையும் இருக்கவில்லை. அன்று முழுவதும் வீட்டைவிட்டு வெளியேறவில்லை. நிச்சயமின்மையும் புது வகையான பீதியும் இலங்கையைச் சூழ்ந்துகொள்கிற புதிய காலகட்டம் ஒன்றுக்குள் நாங்கள் நுழைவதான உணர்வு எனக்கு ஏற்பட்டது. வழமையாக ராவய இதழுக்கு எழுதும் பத்திக்கென அன்று நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘மே, 19’ என்பதாகும். அந்தக் கட்டுரையில் மிகவும் தெளிவாக நான் குறிப்பிட்டிருந்ததை இந்தக் கணம் நினைவுகொள்வது மிகவும் பொருத்தமானது எனக் கருதுகிறேன். “போர் முடிந்துவிட்டிருக்கலாம்; ஆனால் தமிழ் மக்களின் போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை.” அந்தப் பத்தியின் இறுதிப் பகுதியில் மூன்று விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன்.
மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள் குறிப்பிட்ட அரசியல், கருத்தியல் களங்களிலேயே பிரயோகிக்கப்படுவதால் அந்தக் களங்கள் விமர் சனத்திற்குள்ளாக்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகள் பற்றிய உண்மைகளைக் கூறும் முழுமையான எடுத்துரைப்பு ஒன்று எட்டப்பட வேண்டும். இந்த வன்கொடுமைகள் பற்றிய எடுத்துரைப்புகளை நோக்கினால், எவ்வாறு உண்மைகள் நோக்கப்படுகின்றன என்பதையும், நீதி, புனரமைப்பு (justice and recovery) பற்றிய எதிர்பார்ப்புகள் எவ்வாறு அமைகின்றன என்பதையும் சித்தாந்தம்தான் முடிவுசெய்கிறது என்பதை இந்தக் கட்டுரை நிறுவ முற்படுகிறது. இந்தப் பணியைச் சந்தேகக் கண்ணோடு அணுகுவது அரசியல் சிந்தனையில் மிகச் சரியான எடுத்துரைப்பு வெளிப்படவும் நீதிக்கும் புனரமைப்புக்குமான விசாலமான முன்னெடுப்புகளை அடையாளங்காட்டவும் உதவும்.
ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எஸ்.சபாலிங்கத்துக்கு முக்கியமானதொரு பங்குண்டு. ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆரம்பத்தில் தன்னைப் பிணைத்துக்கொண்டவர் இவர். எழுபதுகளின் ஆரம்பத்தில் கட்டுபெத்தை பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவனாகவிருந்த சமயம் பொன்னுத்துரை சத்தியசீலன் போன்றவர்களுடன் இணைந்து தமிழ் மாணவர் பேரவை அமைப்பு உருவாகக் காரணமானவர்களிலொருவர். விடுதலைப் புலிகளின் அமைப்பு உருவான காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனுடன் நெருங்கிப் பழகியவர்களிலொருவர். இவற்றின் காரணமாக இலங்கைக் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைகளுக்குப் புகழ்பெற்று விளங்கிய இலங்கைப் புலனாய்வுத்துறையினரின் 4ஆம் மாடியில் வைத்து விசாரிக்கப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாகியவர். பின்னர் அரசியல் அகதியாகப் புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வந்த சமயத்திலும் பதிப்புத் துறை, இலக்கிய அமர்வுகளை நடாத்துவதிலும் தன் கவனத்தைத் திருப்பினார். தனது ஆசியான் பதிப்பகம் மூலம் ஈழத்துக் கவிஞர்களான வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன், அருந்ததி, செல்வம், சோலைக்கிளி ஆகியோரின் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். கோவிந்தனின் 'புதியதோர் உலகம்', 'யாழ்ப்பாண வைபவமாலை', 'புத்தளம் முஸ்லீம் மக்கள் வரலாறு', 'எமர்ஜென்சி 58' மற்றும் தராகியின் 'Eluding Peace' ஆகிய நூல்களை வெளியிட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நடைபெற்றுவரும் இலக்கியச் சந்திப்புக்களின் ஆரம்பகர்த்தாக்களிலொருவராகவும் இவர் கருதப்படுகின்றார்.
- மே 8, 2012 - தோழர், அமைச்சர் இராதாகிறிஷ்ணா (றோய்) படையாட்சி அவர்களின் மறைவை அறிந்து நாம் கடும் அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைந்துள்ளோம். அன்னார், மனித மேம்பாட்டுச் செயல்வீரனக விளங்கியதோடு வறியோருக்கும் மிக ஒடுக்கப்பட்டோருக்கும் உதவும் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அன்னாரின் மறைவானது அவரது குடும்பத்தினருக்கும் அவரது மக்களுக்கும் உலகளாவிய மட்டத்தில் அவரின் தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, கருணையுள்ளம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டோருக்கும் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும். குடியரசுத் தலைவர் சூமா அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தது போன்று, “படையாட்சி அளவிடமுடியாத அற்பணிப்பையும் ஆளுமையையும் பெற்ற ஒருவர். சிறப்புமிக்க ஆபிரிக்காவையும் உலகத்தையும் உருவாக்கும் தன் குறிக்கோளுக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் புறப்பட்ட பயணத்தில் அவர் தன் தலைவிதியையும் சாவினையும் சந்திக்க நேர்ந்தது மிகவும் கவலை அளிக்கின்றது.”
நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்?
மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும். தொழிலாளர் போராட்டம்18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை. பிரான்சில் தொழிலாளர் இயக்கம்1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைஇத்தும் தோல்வியில் முடிவடைந்தன.
தளரா நெஞ்சம். மருத்துவமனை கண்டிராத உடல். செருப்பணியாத கால்கள். திருமணமாகாத வாழ்க்கை. 1970 முதலாகக் காய்கறி உணவு. முகத்தை மூடும் வெள்ளை மீசையும் தாடியும். 88 வயதிலும் இரு மாடிகளுக்கும் படியேறி என் வீட்டுக்கு இன்று, புலர் காலை 0600 மணிக்கு வந்தவர், பெரியார் எசு. ஏ. தாவீது என நான் அழைக்க விரும்பும் எஸ். ஏ. டேவிட். 1970களில் வவுனியாவில் காந்தீயம் அமைப்புத் தொடங்கிய காலங்கள். மலைநாட்டில் துணை மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராசசுந்தரம், கொழும்பில் என்னிடம் வருவார். அவருடன் டேவிட் ஐயாவும் வருவார். கொழும்பு வைஎம்சீஏ விடுதியில் டேவிட் ஐயா தங்கியிருப்பார். அந்தக் கட்டட வரைபடத்தைத் தயாரித்துக் கொடுத்ததால், அதற்குக் கட்டணம் வாங்காததால், அவருக்கு எப்பொழுதும் அங்கே ஓர் அறை. 1972 இலங்கை அரசியலமைப்பு, அதைத் தொடர்ந்த தமிழர் நிலை, இவை எம்மை இணைக்கும் பாலம். மலைநாட்டுத் தமிழரை வன்னியில் குடியேற்றும் காந்தியத்தின் முயற்சி. இராசசுந்தரம், டேவிட் இருவரின் இடையறா ஈடுபாடு, இதில் என் சிறிய பங்களிப்பு. 1977 இனக் கலவரத்துடன் கொழும்பைவிட்டு வெளியேறினேன். யாழ்ப்பாணத்தில் 1978இல் தந்தை செல்வா நினைவுத் தூண் கட்டியெழுப்பும் குழுவின் செயலாளராக நான். திராவிடத் தூணாக 80அடி உயரத்தில் அமையும் வரைபடத்தைத் தந்தவர் வி. எஸ். துரைராசா. மொட்டையாக நிற்காமல் கூம்பாக்கிக் கலசத்தில் முடிக்குமாறு டேவிட் ஐயா கருத்துரைத்தால் 100 அடியாக அத் தூண் உயர்ந்தது. கட்டி முடிக்கும் வரை யாழ்ப்பாணத்தில் இருந்தேன்.
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிக தீவிரமாக உள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவின் தலைவியான சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் இலங்கை விஜயத்தின் இறுதியில் இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். அரசியல் தீர்வு விடயத்தில் நாம் மிக மிக தீவிரமாக இருக்கிறோம்' எனக் கூறிய அவர், அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இயன்றவரை விரைவாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறினார். வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், எனினும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான மக்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளதாக தெரிவித்தார். 'அம்மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பும்வரை எமது இலக்கு முடிவடையப்போவதில்லை' என அவர் கூறினார்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









