“இலக்கியவெளி” நடத்தும் “சாந்தன் எழுதிய 'சித்தன் சரிதம்' நாவல் குறித்த திறனாய்வுக் கூட்டம்” - தகவல்: அகில் -



இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் சிறுகதை, கவிதை, கட்டுரை, திறனாய்வு, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு மற்றும் ஊடகத்துறை எனப் பன்முகப்பங்களிப்பு நல்கிய எழுத்தாளர் அ.ந.கந்தாமியின் கிடைக்கபெறும் ஒரேயொரு நாவல்: 'மனக்கண்; 1967இல் தினகரன் (இலங்கை) பத்திரிகையில் தொடராக வெளிவந்து மிகுந்த ஆதரவைப்பெற்ற நவீனம். பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வானொலி நாடகமாக எழுத்தாளர் சில்லையூர் செலவராசனால் ஒலிபரப்பப்பட்டது.


வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழியே!
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!........
மகாகவி பாரதியின் தமிழ் வாழ்த்து திருமதி சரண்யா மனோசங்கரின் குரலில் தேன் மதுரமாய் அந்த மண்டபத்தை நிரப்புகிறது! இது மகாகவியின் நினைவு நூற்றாண்டு என்பதை நினைவுபடுத்துகிறது.
இம் மாதம் 19 ஆம் திகதி ஞாயிறு மாலை சரியாக நான்கு மணி. மெல்பனில் பேர்விக் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் அந்தக்குரல் ஒலிக்கிறது. மண்டபத்தில் திரண்டிருந்து மக்கள் எழுந்து நின்று சிரம் தாழ்த்தி அமைதியாக செவிமடுக்கின்றனர்.
நான் எனது கண்களை மெதுவாக நிமிர்த்திப் பார்க்கிறேன்.
மேடையின் வலது பக்கத்தில் முறுக்கிய மீசைக்கூடாக மந்திரப் புன்னகையுடன் என்னை நோக்குகிறது மகாகவி பாரதியின் நேர்கொண்ட அந்தப் பார்வை.
எமது கனடா கவிஞர் கழகமானது ஒவ்வொரு மாதத்தின் கடைசிக் கிழமையிலும் தமிழறிஞர்கள், படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை அழைத்து மெய்நிகர் வழியாகச் சிறப்புரைகளையும், கலந்துரையாடல் களையும் நடத்தி வருகின்றது. அதன்படி, சென்ற செப்ரெம்பர் மாதம் இருபத்தைந்தாம் திகதி சனிக்கிழமை எமது கழகத்தின் இணைய வழிக் கலந்துரையாடல் காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரபல எழுத்தாளரும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவருமான குரு அரவிந்தன் அவர்களின் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்ற பயிற்சிப்பட்டறை இடம் பெற்றது. முதலில் கழகத்தின் தலைவர் திரு. கந்த ஸ்ரீ பஞ்சநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து பொருளாளர் திரு. குமரகுரு. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுத்தாளர் குரு அரவிந்தனை அறிமுகம் செய்து வைத்தார்.
அடுத்து ‘கவிஞர்களும் எழுத்தாளராகலாம்’ என்ற தலைப்பில் குரு அரவிந்தன் சிறுகதை எழுவது எப்படி என்பது பற்றியும், ஏன் அதிக மக்களால் சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன என்பது பற்றியும் விளக்கங்களைத் தந்தார். சிறுகதையின் தொடக்கம், அதன் வளர்ச்சி, இன்றைய நவீன சிறுகதைகள் பற்றி உதாரணங்களையும் இலகு நடையில் எடுத்துச் சொன்னார். மேலும் அவர் தனது உரையில் சிறுகதைகள் எவ்வாறு எழுதப்படவேண்டும் எனவும், அவை எவ்வாறு வாசகர் உள்ளங்களைச் சென்றடையும் என்னும் பொருளிலும் பின்வரும் வழி முறைகளை எடுத்துச் சொன்னார்.
- ''பதிவுகள்' இதழின் நிகழ்வுகள் பகுதிக்குத் தகவல்கள் அனுப்புபவர்கள் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னராவது அனுப்புங்கள். கடைசி நேரத்தில் வரும் தகவல்களை உரிய நேரத்தில் வெளியிடாமல் போகும் சந்தர்ப்பங்களுண்டு. இத்தகவலும் இறுதி நேரத்தில் வந்த தகவல். ஒரு பதிவுக்காகப் பிரசுரிக்கின்றோம். - பதிவுகள் -
விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், அந்தனி டி சிமித் [ANTHONY D SMITH] லண்டன் ஸ்கூல் ஒவ் இக்கொனமிக்ஸ் [LSE] என்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் பேராசிரியராக இருந்தவர். 1982 - 2000 காலத்தில் இவர் தேசியவாதம் குறித்த மிக முக்கியமான கோட்பாட்டாளர்களில் ஒருவராக அறிவுலகின் கவனத்தைப் பெற்றார்.
1980 களில் தேசியவாதம் பற்றிய மூன்று கோட்பாடுகள் முதன்மையிடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தன. அவையாவன:
i. ஆதிமுதல்வாதம் [PRIMORDIALISM]
ii. நிரந்தரவாதம் [PERENNIALISM]
iii. நவீனத்துவவாதம் [MODERNISM]
இக்கோட்பாடுகளோடு 1990 களில் அந்தனி டி சிமித் அவர்களின் இனக்குழும குறியீட்டுவாதம் இன்னொரு முக்கியமான கோட்பாடு என்ற தகுதியயைப் பெற்றது.
விதை குழுமத்தின் அறிதலும் பகிர்தலும் டிசம்பர் 2021 நிகழ்வில் அந்தனி டி சிமித் அவர்களின் இனக்குழும குறியீட்டுவாதம் பற்றி விரிவாக ஆராயப்படும். அந்தனி டி சிமித் ஆதிமுதல்வாதம், நிரந்தரவாதம், நவீனத்துவவாதம் என்னும் கோட்பாடுகளின் குறை நிறைகளை விமர்சனநோக்கில் மதிப்பீடு செய்வதோடு, இக்கோட்பாடுகளின் சிறப்பான கூறுகளை ஏற்றுக் கொண்டு தேசியவாதங்கள் பற்றிய புதிய விளக்கத்தை முன்வைக்கின்றார்.

இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால் இலக்கிய உலகிற்கு 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான முருகபூபதியின் 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியாகும் கதைத் தொகுப்பின் கதை ( சிறுகதை ) நடந்தாய் வாழி களனி கங்கை ( கட்டுரை ) பாட்டி சொன்ன கதைகள் ( சிறுவர் இலக்கியம் ) நூல்களின் வெளியீட்டு அரங்கு இம்மாதம் 19 ஆம் திதி ( 19-12-2021 ) ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணிக்கு அவுஸ்திரேலியா மெல்பனில் Berwick senior citizens hall (112 High Street, Berwick VIC 3806) மண்டபத்தில் நடைபெறும். மெல்பன் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி சாந்தி சிவக்குமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு, திருமதி மேகானந்தா சிவராசாவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும். திருமதி சரண்யா மனோசங்கர் தமிழ்வாழ்த்து பாடுவார்.

இலங்கை அரச இலக்கிய விருது விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 03.12.2021 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் இலக்கியம் ஆகிய இரண்டு பிரிவுகளில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப்புக்கு இரண்டு சாகித்ய விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மிக நீண்ட நாட்களின் பின் கனடா மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் ‘கலேஸ்நைட்’ இரவு விருந்துபசாரம் நவெம்பர் மாதம் 14 ஆம் திகதி 2021, மாடி கிறாஸ் பாங்குவிட் மண்டபத்தில் நடந்தேறியது. இந்த விருந்துபசாரத்தில் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.

அவுஸ்திரேலியா மெல்பனில் 1998 ஆம் ஆண்டு மறைந்த பிரபல ஓவியர் கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை அவர்களின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் காணொளி வெளியீடு எதிர்வரும் 05 ஆம் திகதி ( 05-12-2021 ) ஞாயிற்றுக்கிழமை மெய்நிகரில் சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்படவிருக்கிறது. அவுஸ்திரேலியா கன்பராவில் இயங்கும் தமிழ்க்களஞ்சியம் ( Tamil Trove ) அமைப்பினால் காலமும் கணங்களும் தொடரின் முதல் அங்கமாக இந்த ஆவணக்காணொளி வெளியீடு அமைகின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பெருமதிப்பிற்குரியீர் வணக்கம். கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தின் அங்கமாக விளங்கும் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் முனைவர் பட்டம் மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
தமிழியல் சார்ந்த உயராய்வு மற்றும் பன்னாட்டளவிலான தமிழ் ஆய்வு மையங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாக திகழ்ந்துவரும் நா.மகாலிங்கம் தமிழாய்வு மையத்துடன் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து செயலாற்றுவது பெருமைக்குரிய ஒன்றாகும்.
கோவை குமரகுரு கல்வி நிறுவன வளாகத்துள் அமைந்துள்ள இந்தத் தமிழ் உயராய்வு மையம் ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்கள் அடங்கிய, ஆய்வு நோக்கில் வகைமைப்படுத்தப்பட்ட ஆய்வு நூலகத்தையும் தன்னகத்துள் கொண்டுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும். இது தமிழாய்வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் துணைநல்கும் என்பதில் ஐயமில்லை. மேலும், இம்மையத்தில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கும் தகுதியுடைய ஆய்வு மாணவர்களுக்கு (முழுநேரம்) ஊக்கத்தொகையும் தரத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறந்த, நவீன கட்டமைப்புடனும் ஆய்வு மேற்கொள்வதற்குரிய அனைத்துவிதமான வசதி வாய்ப்புகளுடனும் இம்மையம் அமைந்துள்ளது. எனவே தாங்கள் அறிந்தவரையில், தமிழாய்வில் ஆர்வங்கொண்ட, முனைவர் பட்டம் மேற்கொள்ள விரும்பும் சிறந்த ஆய்வாளர்கள் இருந்தால் அவர்களுக்கு நம் மையத்தையும், துறையினையும் அறிமுகம் செய்து வைக்கும்படியும், வழிகாட்டும் படியும் கேட்டுக்கொள்கிறோம். தமிழாய்விற்குத் துணைநல்கும் இத்தகவலைத் தங்களுக்குப் பகிர்வதில் பெரிதும் மகிழ்கிறோம்.
விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், இனக்குழும மோதல்கள் பற்றி ஆய்வு செய்யும் துறைசார் அறிஞர்கள் இனக்குழும பன்மைத்துவம் [ETHNIC DIVERSITY] காணப்படும் பகுதிகளில், இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாத புதிர் [PUZZLE] தன்மையுடைய அனுபவ யதார்த்தத்தைக் கண்டனர். சில பிராந்தியங்கள் [REGIONS], தேசங்கள் [NATIONS], சில நகரங்கள், சில கிராமங்கள் ஆகிய பகுதிகளில் ஒரு கால எல்லைக்கு முன் இனக்குழுக்களிடையே அமைதி பேணப்பட்டு வந்ததையும், வாழ்க்கை அமைதியாக ஓடிக்கொண்டிருந்ததையும் அவதானித்தனர். இப்பகுதிகளில் பின்னர் இடைவிடாது நம்பவே முடியாத வகையில் வியப்பையும் அதிர்ச்சியையும் தரும் வகையிலான இன வன்முறை, சூறைக் காற்று போல் வீசியடித்து கோர தாண்டவம் ஆடிவிட்டுப் போவதையும் கண்டனர். இதனை இனத்துவமும் தேசியவாதமும் [ETHNICITY AND NATIONALISM] பற்றிய தீர்வுகாணப்படாத புதிர் [UNRESOLVED PUZZLE] என்று குறிப்பிடுவதோடு 'காலமும் இடமும் [TIME AND SPACE] சார்ந்த வேறுபாடுகளை புரிந்து கொள்வது எப்படி?' என்னும் வினாவை வார்ஷ்னே [VARSNEY] என்ற ஆய்வாளர் தமது நூல் ஒன்றில் முன்வைக்கிறார். [பேராசிரியர் உயன்கொடவின் 2010 இல் வெளியான நூலின் பக்-22 இல் தரப்பட்ட மேற்கோள்].
மேலே குறிப்பிட்டது போன்ற விடுவிக்கமுடியாத புதிர்கள் பல உள்ளன. இப்புதிர்களை விடுவிப்பதற்குத் தேசியவாதம் பற்றிய கோட்பாடுகள் [THEORIES OF NATIONALISM] உதவ முடியுமா? என்ற வினாவை முன்வைத்து 'அறிதலும் பகிர்தலும்' அரங்கில் 9 ஆவது உரையாடல் நிகழ்வு இடம்பெற உள்ளது. ஆதிமுதல்வாதம் [PRIMORDIALISM], நவீனத்துவ வாதம் [MORDENISM], இனக்குழும குறியீட்டுவாதம் [ETHNO-SYMBOLISM], கருவிவாதம் [INSTRUMENTALISM] போன்ற தேசியவாதம் பற்றிய கோட்பாடுகள் பற்றிய விளக்கங்களையும் எரிக் ஹொப்ஸ்பாம், பெனடிக்ட் அன்டர்சன், அந்தனி டி.சிமித் போன்ற கோட்பாட்டாளர்களின் கருத்துக்களையும் முன்வைத்து சமூக விஞ்ஞான ஆய்வறிஞர் கந்தையா சண்முகலிங்கம் இவ்வுரையாடலை நிகழ்த்துவார். நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க இருப்பவர் திரு. சத்தியதேவன்.

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் இணைய வழிக் கலந்துரையாடல்: “வேற்றுக்கிரக மனிதர்கள்” (அறிவியல் தொடர் - 4)
நாள்: 19 நவம்பர் வெள்ளிக்கிழமை 2021
நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ)
பேசுபவர்: திருமதி உமை பற்குணரஞ்சன்

அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கிய முயற்சிகளை மதிப்பீடு செய்யும்போது அவற்றுக்கான ஊற்றுக்கண் திறந்து மூன்று தசாப்தங்களுக்கு மேலாகியிருப்பதையும் அவதானிக்கமுடிகிறது. தமது தாயகத்தில் கலை, இலக்கிய, ஊடகத்துறைகளில் ஈடுபட்டவர்கள் புகலிடம் நாடி இங்கு வந்த பின்னரும் உள்ளார்ந்த ஆற்றல்கள் வற்றிப்போகாமல் இயங்கியமையால் தமிழ் கலை , இலக்கிய படைப்புலகத்தில் அவுஸ்திரேலியாவின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்ததாக விளங்குகிறது.
அவுஸ்திரேலியாவில் தமிழ் கலை, இலக்கியம், இதழியல், வானொலி , தொலைக்காட்சி முதலானவற்றை மதிப்பீட்டிற்குட்படுத்தும்போதுதான் புலம்பெயர் இலக்கியம் இங்கும் உலகளவிலும் எவ்வாறு பேசுபொருளானது என்பதையும் அறியமுடியும். இந்தியாவிலிருந்து ஒரு காலத்தில் இலங்கைக்கும் ஃபிஜி மற்றும் ஆபிரிக்காவிற்கும் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றிருந்தாலும், இலங்கையிலிருந்து தொழில் நிமித்தமும் கல்வியின் பொருட்டும் ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தாலும், 1983 இல் இலங்கையில் இனவாத வன்செயல் வெடித்ததன் காரணமாக தமிழர்களில் நிகழ்ந்த பாரிய புலப்பெயர்வின் பின்னர்தான் அவர்கள் மத்தியிலிருந்த கலை, இலக்கிய வாதிகளின் இயக்கத்தினால் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் பேசுபொருளானது.

நாள்: ஞாயிற்றுக்கிழமை 07-11-2021
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 8.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30
வழி: ZOOM, Facebook
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09
Facebook live:
https://www.facebook.com/ilakkiyavelicom/
மேலதிக விபரங்களுக்கு: - அகில் - 001416-822-6316
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.