கம்பன் கழகம் (பிரான்ஸ்): மரபுக் கவிதை எழுதும் பயிற்சிப் பட்டறை



'மகாகவி' மார்ச் 2011 இதழ் படியுங்கள். கருத்தை பதிவு செய்யுங்கள். படைப்பை மின்னஞ்சலில் அனுப்புங்கள்.
http://issuu.com/vathilaipraba/docs/pdf_feb-mar_11
கவிஞர். வதிலைபிரபா
தலைவர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்
ஆசிரியர், மகாகவி மாத இதழ்
ஒற்றைதெரு, வத்தலகுண்டு - 624 202.
தமிழ்நாடு, இந்தியா.
phone: 04543 -26 26 86
cell: 96 2 96 52 6 52, 88 70 70 99 63
email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.,
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
blog: vathilaipraba.blogspot.com
19-03-2011
தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 14வது பௌர்ணமி இரவு. சனிக்கிழமை, 19-03-2011 இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும். இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்) தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)
http://thamizhstudio.com/thodarbukku.php இந்த மாதம் திரையிடப்படும் படங்கள். இந்த மாதம் சேகர் தத்தாத்ரே இயக்கிய "புலிகளின் ரகசியங்கள்" ஆவணப்படமும், ஆண்டோ இயக்கிய "புலி யாருக்கு" ஆவணப்படமும், அஜய் இயக்கிய பினாயக் சென் பற்றிய ஆவணப்படமும் திரையிடப்படும். (குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)
[
மே15, 2011 - மே 22, 2011 வரை] நிழல்-பதியம் இணைந்து நடத்தும் 21 வது குறும்படப் பயிற்சி பட்டறை சென்னையில் மே 15 முதல் 22 வரை எட்டு நாட்கள் நடக்க இருக்கின்றன.. கல்லூரிகளில் மட்டுமே கற்றுத்தரப்படும் திரைப்படக்கல்வியை கிராமப்புற மாணவர்கள் பெறவேண்டும் என்கிற குறிக்கோளோடு கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு, முதலியவை கற்றுத் தரப்படுகிறது. ஆசிரியர்கள், வழக்குரைஞ்கர்கள் ,பொறியாளர்கள், டாக்டர்கள் முதலியோர் இந்த கோடைகால பயிலரங்கத்தில் கலந்து கொள்ளலாம்.இறுதிநாள் மாணவர்களே குறும்படம் எடுக்கலாம். உணவு, உறைவிடம், பயிற்சி கருவிகளுக்கு கட்டணம் உண்டு. பட்டறையில் 50 குறும்பட / ஆவணப்படங்களும்,உலகப் புகழ் பெற்ற 7 திரைப்படங்களும் திரையிடப்படும்.பயிற்சி பெற விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்..
தொடர்புக்கு:ப.திருநாவுக்கரசு,
block12 /28 ராணி அண்ணா நகர்,கே.கே
நகர்,சென்னை-78.
பேசி:9444484868 /9842210538 .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
['நிகழ்வுகள்' பகுதிக்காக வந்த சில தகவல்கள் தவறுதலாக விடுபட்டு விட்டன. அவ்விதம் விடுபட்டவைகளில் இத்தகவலுமொன்று. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். தவறுக்கு வருந்துகின்றோம் - பதிவுகள்] நாள்: சனிக்கிழமை (12-03-2011). இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)
['நிகழ்வுகள்' பகுதிக்காக வந்த சில தகவல்கள் தவறுதலாக விடுபட்டு விட்டன. அவ்விதம் விடுபட்டவைகளில் இத்தகவலுமொன்று. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம். தவறுக்கு வருந்துகின்றோம் - பதிவுகள்] 'சென்ற ஆண்டு பங்குனி சித்திரை மாசங்களில் வரலாறு காணாத வெப்பம் எம்மை வாட்டி வதைத்தது. பின்னர் 62 வருடங்களுக்குப் பின்னர் சென்ற மாதம் கொழும்பில் வெப்ப நிலை 18 பாகையாகக் குறைந்து கடும் குளிரில் துன்பப்பட்டோம். இப்பொழுது வடக்கு கிழக்கு வடமத்திய மாகணங்களில் கடும் மழை, வெள்ளம் என அனர்த்தங்கள் தொடர்கின்றன. மலையகத்தில் மண்சரிவுகளால் பலர் மாள்கிறார்கள். பூகோளம் வெப்படைதலால் ஏற்பட்டு வருகின்ற அனர்த்தங்களை இவற்றின் ஊடாக நாம் அனுபவத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. துன்பத்தில் ஆழவும் வைக்கிறது. ஆனால் இவை பற்றியெல்லாம் முன்னோக்கிப் பார்த்து, கடந்த 2009ம் ஆண்டு ஐப்பசி மாதம் பேராசிரியர் எஸ்.அன்ரனி நோர்பேட் உரையாற்றி இருக்கிறார்.

'உயிர்ப்பு' நாடகப் பட்டறையின் 3வது நிகழ்வு. ஏப்ரல் மாதம் 9ந்திகதி மாலை 6:00 மணிக்கும், 10ந்திகதி மாலை 4:00 மணிக்கும் 1785 'பிஞ்ச் அவென்யு' மேற்கில் அமைந்துள்ள 'யோர்க் வூட் ' நூலக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் 'அணங்கு', 'காலப்பயணம்', 'போருழுத நிலம்' மற்றும் புலம் இழந்த போதும் பூச்சூடிக்கொள்வோம் (இசை நடனம்)' ஆகிய நாடகங்கள் நடைபெறவுள்ளன. விரிவான தகவல்களுக்கு .. இங்கே
தகவல்: கறுப்பி - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பெப்ரவரி மாதம் 15ம் திகதி செவ்வாய்க்கிழமை (15-02-2011) காலை 10.00 மணிக்கு தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி வளாகத்தில் கணனிக் கற்கைக்காக அமைக்கப்பட்ட விசேடமண்டபத்தின் திறப்புவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இக்கணனிக் கற்கை நிலையத்திற்குத் தேவையான தொகை ரூபா 25 இலட்சம் பெறுமதியான 30 கணனிகளையும் அதற்குரிய தளபாடத் தேவைகளையும் கனடா பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கியிருந்தது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மகாஜனா கல்வி அபிவிருத்தி நிறுவனம் முன்னின்று உழைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கனடா பழைய மாணவர் சங்கத் தலைவர் நாகமுத்து சாந்திநாதன் அவர்கள் கலந்து கொண்டு இந்நிலையத்தை திறந்து வைத்தார். மகாஜனக்கல்லூரி பழைய மாணவர்கள் கடல் கடந்து சென்றாலும் கல்லூரி மீது அவர்கள் வைத்திருக்கும் ஈடுபாட்டை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும், குறிப்பாக கனடா பழைய மாணவர் சங்கத்தினரின் காலத்திற்கேற்ற இந்த உதவியை நினைத்து தான் மிகவும் பெருமைப்படுவதோடு மட்டுமல்ல அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கல்லூரி அதிபர் தனது உரையில் குறிப்பிட்டார். நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கற்றுக் கொள்வதில் மகாஜனாக் கல்லூரி மாணவர்கள் என்றும் பின் நிற்கக்கூடாது என்ற கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஆதங்கத்தை நிறைவேற்றி வைப்பதில் தான் பெருமை அடைவதாகத் கனடா பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு. சாந்திநாதன் தனது பதில் உரையில் குறிப்பிட்டார். இப்படத்தில் இக்கல்லூரி அதிபர் சிவமலர் அனந்தசயனன், நாகமுத்து சாந்திநாதன் ஆகியோரைக் காண்கிறீர்கள்.
Kuru Aravinthan <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
23 . 2. 11 அன்று நண்பகல் 1.30 மணியளவில் துவங்கிய ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை நிகழ்வில் ஜெர்மனியைச் சேர்ந்த ந.சுசீந்திரன் அவர்கள் “ இடப்பெயர்வு இலக்கியம் “ என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்த்துறை மாணவியின் வரவேற்புரையைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் அவர்களின் தலைமை உரை இன்றைய பாடத் திட்ட மாறுதல்களும் அவற்றின் தேவைகளும் அதற்கு படைப்பாளிகளின் ஆதரவின் தேவை பற்றியும் உரையாற்றினார்.

பாரதி இலக்கிய சங்கத்தின் செயலர் திலகபாமா ந. சுசீந்திரன் அவர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அடுத்து நடந்தேறிய சுசீந்திரனின் உரையில், மிக முக்கிய இடப் பெயர்வுகள் பற்றியும் அவற்றின் தாக்கம் இலக்கியங்களின் பிரதிபலிப்பது பற்றியும் விரிவாக உரையாற்றினார். அவற்றில் புலம்பெயர்ந்த இலக்கியத்திற்கும் புகலிட இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடுகளையும், அதனால் வரைபடங்களை அழித்துக் கொண்டு ஒரு புது வெளி உருவானதின் நன்மைகளையும் , வெளிநாட்டு இலக்கியங்களை மூலமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் அரிய வாய்ப்புகள் கிடைத்திருப்பது பற்றியும், சமூக கலாசார மாற்றங்களை மக்கள் எதிர்கொண்டதை இலக்கியங்கள் பிரதிபலிக்கக் கூடியதாய் இருப்பதைப் பற்றியும் உதாரணங்களோடு பேசினார், அவரது உரையைத் தொடர்ந்து மாணவர்களது பல்வேறு கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்த கலந்துரையாடலோடு நிகழ்வு இனிதே முடிந்த்து
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

39வது இலக்கியச் சந்திப்பு கனடாவில் (ரொறொன்டோவில்) ஒக்டோபர் மாதம் 8ம், 9ம் திகதிகளில் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்அஞ்சல் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. தொலைபேசி எண் - 647 351-2213. மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடியான எஸ்.பொன்னுத்துரை ஆகிய எஸ்.பொவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி போன்றவர்களைத் தொடர்ந்து விருதுக்குரியவராக இவ்வருடம் தேர்வு செய்யப்பட்டிருக்கும் எஸ்.பொ, அறுபது வருடங்களுக்கு மேலாக தமிழ் இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்க் கலை இலக்கியச் சூழலில் தனகென்றோர் ஆளுமையினைப் பதித்து , பங்களிப்புச் செய்து வருபவர் வெ.சா. என்று அழைக்கப்படும் திரு. வெங்கட் சாமிநாதன். அவரது கலை, இலக்கியத்துறைப் பங்களிப்பினைச் சிறப்பிக்கும் முகமாக வெளிவரும் நூல் 'வெங்கட் சாமிநாதன்: வாதங்களும், விவாதங்களும்.'. பா.அகிலன், திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவரும் மேற்படி நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஏப்ரில் 30, 2011 அன்று சென்னை தேவனேய பாவாணர் நூலகத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.