ரஷ்ய ,உக்ரைன் யுத்தச் சிந்தனைகள்! - ஜோதிகுமார் -

பகுதி ஒன்று!
அமெரிக்காவின் பட்டறைகல்லுக்கும், ரஷ்யாவின் கொடூர சம்மட்டி அடிகளுக்கும் இடையே அகப்பட்டு, நசுங்கி போன ஒரு தவளையின் கதையைப் போல இருக்கின்றது உக்ரைனின் இன்றைய நிலைமை என உலக விமர்சகர்கள், உக்ரைனின் நிலைமையை விசனத்துடன் வர்ணித்துள்ளார்கள்.
இவர்களின் விசனம் இருவகைப்பட்டது. ஒன்று அமெரிக்கா சார்பை அடிப்படையாகக் கொண்டது. மற்றது, அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்ய சார்பை அடிப்படையாக கொண்டது.
அமெரிக்காவின் கிழக்கு நோக்கிய விஸ்;தரிப்பானது, கட்டுக்கடங்காமல் சென்று, தனது வாசற்படிக்கே வந்து விட்டது என குமுறும் ரஷ்யாவும், இல்லையில்லை – நானொரு முதலாளித்துவவாதி – எனவே, பொருளியல் அம்சங்களுக்கான போட்டியில் ஈடுபடுவது அல்லது இறங்கி விடுவது சகஜமானது என வாதிடும் பைடனும், ஒருவருக்கொருவர், இன்று கச்சைக்கட்டிய நிலையில் உள்ளனர்.
அதாவது, நீதி–நியாயம் என்பன இரண்டாம் பட்சம். இதனை ஒரு பக்கமாய் கிடத்தி விடுங்கள். போட்டி ஒன்றே வாழ்வும் அதன் அர்த்தப்பாடும் ஆகும். எனவே, சமயத்திற்கு ஏற்ற வகையில், அத்தனை ஆயுத பிரயோகங்களும் நியாயமானதுதான் என்ற ரீதியில் அவர் அமெரிக்க காங்கிரஸில் ஆற்றிய, அண்மித்த, உக்ரையின் தொடர்பிலான உரை அவதானத்துக்குரியதே.
காரணம், “போட்டி சகஜமானது” என்றும் “நானொரு முதலாளித்துவவாதி” என்றும் அவர் வாதிடும் போது, இக்கூற்றானது, ஆயிரம் உள் அர்த்தங்களையும் ஆழமான பரிமாணங்களையும் கொண்டதாகி விடுகின்றது. மறுபுறத்தில், ரஷ்யா அடுக்கும் காரணங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவே உள்ளது.




- நாவல்: 1098 : மலைப்பூக்கள் - சுப்ரபாரதிமணியன். தமிழில்: 'ஷீரோ பப்ளிசர்ஸ்'. ஆங்கிலத்தில்: 'ஆதர்ஸ் பிரெஸ், நியூ டெல்கி' -


‘ரஸ்யாவால் உக்ரைனின் சில நகரங்களைக் கைப்பற்ற முடியுமே தவிர முழுநாட்டையும் கைப்பற்ற முடியாது’ என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார். பேச்சு வார்த்தை மூலம் இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு துருக்கி நாடு இரண்டு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. ரஸ்யா - உக்ரையின் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் துருக்கி நாட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் வெளிவிவகார அமைச்சரான டெம்ரோ குலீபாவும், ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவும் துருக்கிக்கு வருகை தந்திருந்தனர். ஏற்கனவே பெலாரஸில் இரண்டு தடவைகள் இரண்டு தரப்பினருக்கும் பேச்சு வார்த்தைகள் நடந்தாலும், எந்த முடிவையும் எட்டவில்லை. அதே போலத்தான் இம்முறையும் எந்த முடிவுக்கும் இருதரப்பினரும் வரவில்லை. 'பட்டால்தான் தெரியும்' என்பதுபோல, இரண்டு தரப்பினரும் பட்டுத் தெளிவதற்காகக் காத்திருப்பது போலத் தெரிகின்றது.
இலங்கையில் நீடித்திருந்த உள்நாட்டுப்போர் கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் நடுப்பகுதியில் முடிவுக்கு வந்திருந்தாலும், அதன் பாதிப்புகள் தொடர்பான விவாதங்கள், விசாரணைகள், ஆய்வுகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.




ஓதிமம் நடையே என்றார்
வாகனத்தின் வானொலியை இயக்கினான் . ' குட்டிக்கதை ' ஒன்றை ஒலிப்பொருப்பாளர் பவானி கூறிக் கொண்டிருக்கிறார் . இதில் இடம் பெறுகிறது ' மனம் ' என்ற இத்தூணித்துண்டு . அது தலையிலே , நெஞ்சிலே எங்கையாச்சும் இருந்துட்டு போகட்டும் . " ஒரு ராஜா .... " ஏன் அவரை இழுக்கிறார்கள் . பிரபலங்கள் வர வேண்டும் போல இருக்கிறது . அவர் ஒவ்வொரு நாளும் சந்தனக் கட்டைகள் விற்கிற கடைக்கு முன்னால் நடந்து போகிறார் . என்ன , நடை பயில்கிறாரா ? . எளிமையாகப் போகிராராம் . ஊரிலே தெரு , கிருவெல்லாம் நடக்கிறார் போல இருக்கிறார் . நாட்டார்க்கதைகள் லொஜிக் மீறல்களுடன் தான் ஆரம்பிக்கிறது , நடக்கிறது , முடிகிறது . ஏன் ? . அழுத்தம் கொடுக்க ...மனதிலே ஒருவர் தோன்றுகிறார் . அவரின் அடுத்த நகர்வு என்ன ? , தெரியாது . எனவே எளிமையாக தொடர்வது . அதுவும் ஒருவிதத்திலே ...சரி போலவே தோன்றுகிறது . இன்று லொஜிக் மீறலையே கதைக்கருவாக எடுத்து , கற்பனைக் குதிரைகளை பறக்க வைத்து ஃபான்டாசிக் கதையாக ...கதிரையின் நுனியில் இருக்க வைத்து விடுகிறார்கள் . தொழினுற்பம் கதை சொல்லி . சிலநேரம் அதற்கு விஞ்ஞானக் கதை என்ற தலைப்பும் இடப்படுகிறது .


உரத்த குரலால் உலகை முத்தமிட்டு

இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள நூல் ஒருமையைத் தேடி. திரு. மூஸா ராஜா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல் IN SEARCH OF ONENESS. இதன் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூல் . மத நல்லிணக்கம், மனிதநேயம் மானுட மேம்பாட்டிற்கு மிக முக்கியம். இதை திரு.மூஸா ராஜாவின் இந்த நூல் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அனுபவ ரீதியாக அவர் கண்டவற்றின் அடிப்படையில், அவருடைய ஆழ்ந்த வாசிப்பை ஆதாரமாகக் கொண்டு சக மனிதர்கள் பால் மிகுந்த அன்பும் அக்கறையுமாக எழுதப்பட்ட நூல் இது. இந்த நூலை வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ள: புதுப்புனல் பதிப்பகம்



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









