வழக்கிழந்த நீதிகள் முதுமொழிக்காஞ்சியை முன் வைத்து…. - முனைவா் நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,(தன்னாட்சி), சிவகாசி. -
முன்னுரை
அறம் என்ற ஒற்றைச் சொல்லால், மனித வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் செயல்படுத்திய, பண்டைத் தமிழரின் அறவோர் வாழ்க்கை நெறி இன்று தனது பழம் வடிவத்தை இழந்து நிற்கிறது. கொடை, நீதி, இன்பம், தலைமை, பொது நலம் என்ற சொற்கள் இன்றைய சமூகத்தில் இளைய தலைமுறைகளால் புதிய வடிவாக்கம் பெறுகின்றன. கொடை என்பது இன்று புகழ் தரக்கூடிய விளம்பரச்சூழ்ச்சி; நீதி என்பது தனது மனதின் எண்ணத்திற்கு ஏற்ப வளைத்துக்கொள்ளும் தலையாட்டி பொம்மை; இன்பம் என்ற பெயரில் தீய அறிவின் வழியே புலன்களை மயக்கம் காட்டிச் செல்வது அழியா இன்பம்; தலைமை என்பது தனக்கென மட்டுமே வாழும் கொள்கை; பொதுநலம் தனது அகராதியின் பொருள் இழந்து காட்சி அளிக்கின்றது. அவ்வகையில் வழக்கிழந்த நீதிகளின் நிலைமைகளை முதுமொழிக் காஞ்சியின் வழி எடுத்துரைப்பதோடு, சமூகத்தில் அறம் தகவு பெற்று, புத்துயிர் பெற வழி காட்டுவதே இவ் ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
முதுமொழிக்காஞ்சி வரலாறு
முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சித்திணையின் துறைகளில் ஒன்று. காஞ்சித்திணை குறி்த்து தொல்காப்பியா்,
“காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பிற் பின்னெறியானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே ”
(தொல்காப்பியம் - புறத்திணையியல்,18)
என்று வரையறுக்கிறார். இதில், ‘வீடு, பேறு அடைவதற்குத் தடைகளாகத் திகழும் பல்வேறு நிலையாமைக் கருத்துக்களைச் சான்றோர் எடுத்துரைப்பதே காஞ்சி’ என்ற இலக்கணம் புலப்படுகிறது. அறக்கருத்துக்களை எடுத்துரைக்கும் முதுமொழிக்காஞ்சி என்ற நூலின் ஆசிரியா் மதுரைக் கூடலூர் கிழார். இவரை புலத்துறை முற்றிய கூடலூா் கிழார் என்றும் அழைப்பா். ‘மூத்தோர் சொற்கள் பலவற்றை தொகுத்துரைக்கும் நூலே முதுமொழிக்காஞ்சி’ என்றும், அறவுரைக்கோவை, ஆத்திச்சூடியின் முன்னோடி என்றும் வழங்குவா். இந்நூல் தோன்றிய காலம் சங்கம் மருவிய காலமான ஐந்தாம் நூற்றாண்டு ஆகும். பத்துப்பாடல்களைக் கொண்ட பதிகம் பத்து கொண்டு இந்நூலில் 100 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இன்றைய நவீன அறிவியல் உலகில் மாந்தா் துன்பமின்றி வாழ, மனித வாழ்வியலுக்கு தேவையான அறக்கருத்துக்கள் இந்நூலில் நிறைந்துள்ளன.. ஆனால் காலத்தின் காரணமாக வழக்கு இழந்த நீதிகளை முதுமொழிக்காஞ்சி என்ற நூலினை முன் வைத்து பின் வரும் பகுதியில் ஆராயப்பட்டுள்ளன.


இதற்கு மேலே செல்கிறார்கள் . புளொமின்டன் " லுக் அவுட் " , என்கிற அதிகமான மலையின் உயரப் புள்ளி வருகிறது . அதிலிருந்து கீழ் நோக்கி அதிகளவு சரிவைப் பார்க்கலாம் . கண் கொள்ளாக் காட்சிகள் கண்களை நிறைக்கின்றன . அதிலிருந்து பார்த்தால் கஸ்பி நிலங்களையும் பார்க்கலாம் என்றால் இன்னொரு புறத்தில் இவர்கள் இருக்கிற வீடும் இருக்க வேண்டும் . சற்று செல்ல சிவப்பு மண் சுவருடன் பள்ளத்தில் இறங்கிற கடற்கரை . ஓரிரு மரங்களின் வேர்கள் சிறிது வெளியில் தெறிய முக்கால்வாசி வேருடன் சுவர் மண்ணுடன் நிற்கிற மரங்கள் . மண்ணை அரித்தாலும் சரிந்து விழாது உறுதியாகக் கிடக்கிற மண்ணாகக் கிடக்க வேண்டும் . நம்மூரில் என்றால் மரம் சரிந்து விழுந்திருக்கும் . மண்ணும் தான் . அப்படி கரை தோறும் அங்காங்கே கடற்கரைகள் இருக்கின்றன .


இலங்கையில் தமிழ் மொழியிலான சினிமா பற்றிய உரையாடல்களை ஏற்படுத்துவதற்கான தளங்கள் விரிவாக்கப்பட வேண்டிய தேவை அதிகமாக உணரப்படுகின்றது. 
எழுத்தாளர் கே.எஸ்.சுதாகரை நினைத்ததும் எனக்கு அமரர் காவலூர் எஸ்.ஜெகநாதன் நினைவுக்கு வருவார். பத்து சிறுகதைப்போட்டிகளில் முதற் பரிசு பெற்றவர். நான்கு சிறுகதைப்போட்டிகளில் தங்கப்பதக்கங்களைப் பெற்றவர். அகில இலங்கைரீதியில் நடத்தப்பட்ட பதினாறு சிறுகதைப்போட்டிகளில் பங்குபற்றிப் பரிசில்களைப் பெற்றதால் 'பரிசு எழுத்தாளர்' என்று அழைக்கப்பட்டவர். கே.எஸ்.சுதாகரும் பல சிறுகதைப்போட்டிகளில் பங்கு பற்றி பரிசுகள் பெற்ற பரிசு எழுத்தாளர். ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டிகளில் பத்துத்தடவைகளும், ஏனைய ஊடகங்களில் பதினெட்டுத் தடவைகளும் பரிசுகள் பெற்றவரென்று கே.எஸ்.சுதாகரின் 'பால் வண்ணம்' நூலுக்கு எழுதிய தனது முன்னுரையில் ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியரான தி.ஞானசேகரன் குறிப்பிடுகின்றார்.
மானுடப் பிறவிகளுக்கு 


‘சீவன் போக முன்னம் பிள்ளையள் வந்து தாயின்ர கண்ணில் முழிக்குங்களென்டு நான் நம்பேல’
அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். என்னிடம் முகநூல் கணக்கு இல்லாதமையினால், உங்கள் முகநூல் குறிப்புகளை தங்கள் பதிவுகள் இணையத்தளம் ஊடாகத்தான் படிக்கின்றேன். அண்மையில் தங்கள் தந்தையார் பற்றிய நினைவுப்பதிவும் படித்தேன். உடனே எனது தந்தையாரும் நினைவுக்கு வந்தார். எமது குடும்பத்தில் என்னை ஒரு எழுத்தாளனாக முதல் முதலில் அங்கீகரித்து ஊக்கம் தந்தவர்தான் எனது தந்தையார். அதன்பிறகுதான் அம்மாவும் குடும்ப உறவுகளும் வருகிறார்கள். ( காரணம் எழுத்து சோறு போடாது என்பதுதான் அவர்களின் பொதுவான சிந்தனை. ஆனால், எனக்கு எழுத்துதான் சோறு போட்டது )
கேரளா அமைதி பள்ளத்தாக்கு - கொரோனா காலத்திற்கு பின்னால் நவம்பர் இறுதியில் இந்த முறை போயிருந்தபோது .அந்த மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அந்தப் பகுதியிலும் சூட்டின் தன்மை அதிகமாக வெப்பநிலை அதிகமாக மாறி இருப்பதைச் சொன்னார்கள். உலகம் முழுக்க வெப்பம் அதிகமாகிக் கொண்டிருப்பது. குளோபல் வார்மிங் என்பதற்கு அமைதி பள்ளத்தாக்கும். இலக்காயி இருக்கிறது அதன் காரணமாக ஒரு சதுர கிலோமீட்டரில் 2000க்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் வாழக்கூடிய அந்த பகுதியில் சில மாறுபாடுகள் தென்படுகின்றன.
சரளமான மொழிநடை என்பது ஒரு எழுத்தாளருக்கு வரமாக அமைவது. தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஊடகமாக எழுத்தைப் பயன்படுத்தும் வல்லமை பலரிடம் காணப்பட்டாலும், அகம் சார்ந்த உணர்வுகளை மென்மையுடனும், புறம் சார்ந்த தோற்றங்களை அழகியலுடனும், சமூகம் சார்ந்த அறங்களை ஓர்மத்துடனும் வெளிப்படுத்தும் திறன் சிலரிடம் அதீதமாகக் காணப்படும். அவர்களுள் ஒருவர் எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி.

இன்று மனிதர்களின் மனநிலைகளும் வாழ்வுத்துயரங்களும்,, நெருக்கடிகளும், சிக்கல்களும் அவர்களின் அகவாழ்வும் அது சார்ந்தவையுங்கூட அவர்களின் வாழ்க்கைத் தொழில் முதலான வாழ்வாதாரங்களோடு கண்ணுக்குப் புலனாகாத அளவு இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அகவயமான கவிதைகள், புறவயமான கவிதைகள் என்றெல்லாம் திட்டவட்டமான வரையறைகள் சாத்தியமா, அவை தேவையா என்ற கேள்விகள் தவிர்க்கமுடியாமல் எழுகின்றன. கவி என்பவர் எத்தனைக்கெத்தனை தனி மனிதரோ அத்தனைக்கத்தனை சமூக மனிதரும் கூட. இவ்வகையில் ஒரு கவி தன் கவிதையில் முன்வைக்கும் அகச்சூழலும் புறச்சூழலும் இரட்டிப்பு கவனம் கோருபவை.

இலங்கையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிலரை மாண்பு மிகு ஜனாதிபதி திரு. ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் விடுவித்திருப்பதற்கு நன்றியும், தெரிவித்து, ஏனைய தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கு அவர் ஆவனசெய்யவேண்டும் எனக்கோரும் கடிதம் ஒன்றை அவுஸ்திரேலியா வாழ் மூவீனத்தையும் சேர்ந்த இலங்கையர்கள், தங்கள் இலங்கை நண்பர்கள் கழகத்தின் ஊடாக அனுப்பிவைத்துள்ளனர்.
ஆதிப் பொதுவுடமை, ஆண்டான் அடிமை, நிலப்பிரவுத்துவம், முதலாளித்துவம், கம்யூனிசம் என்று மனித குல வரலாற்றை பொருளாதாரக் கட்டுமானங்களின் அடிப்படையில் பிரிந்து ஆராய்ந்து உருவாக்கிய நூலின் இறுதி வடிவமாக மூலதனம் என்று புத்தகத் திரட்டு பொருளாதாரம் பற்றி ஒரு முழுமையான ஆய்வை எமக்கு கொடுத்திருக்கின்றது. இதுவரை கால மானுட வர்க்கத்தின் சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப் போக்கினை அவதானிப்போமாயின், ஆதி காலத்து மானுடர் அறியாமையில் வாழ்ந்த காலகட்டத்தில், அவரது மனம் பூரணமாகத் தொழிற்பட ஆரம்பிக்காதவொரு காலகட்டத்தில் நிலவிய தாய்வழி மரபினையொட்டிய பொதுவுடமைச் சமுதாய அமைப்பாக இருந்தது. பின்னர் அது உற்பத்திக் கருவிகளின் பரிணாம வளர்ச்சிப் போக்கிற்கேற்ப மாறுதலடைந்து வந்த ஆண்டான், அடிமை, அதாவது அடிமை - உடைமை சமுதாய அமைப்பாக மாற்றம் பெற்றது. பின்பு நிலப்பிரபு - பண்ணையடிமை அல்லது நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு பெரும் நிலப'பரப்புகளை வழங்களை தமக்கானது என்று ஒரு சிறு பகுதியினர் ஆக்கிரமித்து வைத்திருந்து சமூக அமைப்பாக ஆட்சியதிகாரமாக மாற்றம் பெற்றது. இதன் வளர்ச்சியில் மூலதனத் திரட்சி ஓரிடத்தில் குவிந்ததாக உருவான முதலாளித்துவ சமுதாய அமைப்பு, நவீன முதலாளித்துவ சமுதாய அமைப்பு இதில் தான் பாட்டாளி வர்க்கம் என்ற உழைக்கும் வர்க்கமும் அவர்களின் உழைப்பைச் சுரண்டி பெரும் மூலதனத்திற்கு அதிபதியான முதலாளி வர்க்கமும் பகை வர்க்கங்களாக பரிணாமம் பெற்ற சமுதாய் அமைப்பு உருவானது. இப்படியான ஒரு காலகட்டத்தில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம்.
ஒக்டோபர் 8 இல், கிரைமியா பாலத்தை, தனது குண்டுவெடிப்பால் உக்ரைன் தகர்த்தெரிந்த முயற்சியுடன், ‘ரஷ்யா–உக்ரைன் போர்’ ஒரு புது பரிணமிப்பை எட்டிப்பிடித்தது எனலாம். இதே நாளில், ரஷ்யா, தனது போர் முனைக்கான, புதிய எளபதியையும் நியமித்தது–– Sergei Surovikin . Surovikin னின் நியமிப்புடன், ரஷ்யாவின் ‘யுத்த அணுகுமுறை’, புதிய மாற்றங்களை கண்டது. இதுவரை பாவித்திராத ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் ரஷ்யா பெருமளவில் பாவிக்க தொடங்கியது என்பது இரண்டாம் பட்சமே. முக்கியமானது, தன் யுத்த ‘அணுகுமுறையை’ ரஷ்யா மாற்றிக் கொண்டது என்பதே இங்கு குறிப்பிடத்தக்கது.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









