நேர்காணல் பகுதி மூன்று: ஓவியர் வீரப்பன் சதானந்தனுடன் ஓர் உரையாடல்! - நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் ஜோதிகுமார் -
கேள்வி: சென்றமுறை உங்களை கவர்ந்த உலக ஓவியர்களின் வரிசையில் பலரையும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதில் முதலாவதாக இடம் பிடித்திருந்தவர் ஜோன் கொன்ஸ்டபில். அவரைப் பற்றி வாதிப்பதற்கு முன் இரண்டு கேள்விகள் உண்டு. முதலாவதாக, நீங்கள் குறிப்பிட்ட, ஓவியர்களின் பெரும்பாலான ஓவியங்கள் ரவிவர்மா காலத்து ஓவியங்களில் இருந்து வித்தியாசப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, வான்கோவின் ஓவியம் மிக மிக வித்தியாசப்பட்டு காணப்படுகின்றது. இவற்றை ரசிப்பதற்கு அல்லது இவற்றின் உள்ளார்ந்த மதிப்பை சரியாக போற்றுவதற்கு தனியான ஒரு கற்கை – அல்லது பயிற்சி, தேவையானது என்று கருதுகின்றீர்களா?
பதில்: இல்லை. ஆனால், சித்திரமும் கைப்பழக்கம் என்பது போல சிறந்த ஓவியங்களைப் பார்த்து, பார்த்து பரீட்சயம் அடைய அடைய அவற்றால் நீங்கள் பாதிக்கப்படுவது நிச்சயமானதாகின்றது. பொதுவில் சாதாரண புகைப்படங்கள் போன்றே, ஓவியங்களையும் காண பழக்கப்பட்டுவிட்ட நாங்கள் இவற்றை மேலும் ஆழமாக பார்க்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. மேலைத்தேய ஓவிய காட்சி கூடங்களில் எல்லாம் ஒவ்வொரு ஓவியத்திலிருந்தும் கிட்டத்தட்ட ஒரு முப்பது அடி தள்ளி இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்கள் இவ்இருக்கைகளில் அமர்ந்து குறித்த ஓவியங்களை ஓர் அரைமணி நேரம் செலவழித்து பார்க்கின்றார்கள். அவ்வோவியத்தின் மரங்கள், பூமி, புற்றரை, ஆறுகள், மலர்கள் இவை அனைத்துமே பார்வையாளர்களோடு பேசுகின்றன. ஏதேதோ கூறுகின்றன.
இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. உதாரணமாக, பகல் வேளைகளில் ஒரு மலையை அல்லது ஒரு மரத்தை நீங்கள் காணுகின்றீர்கள். மலை தெளிவாக தெரிகின்றது. ஆனால் அதே மலையை அல்லது மரத்தை, மாலையின், இருட்டும் வேளையில் ஒரு கருக்கலில் காணுகின்றீர்கள். அதன் ஓரங்கள் தெளிவுற அமைவதில்லை. இருந்தும், ஒரு கவிதையை போன்ற ஒரு உணர்வு அங்கே தோற்றம் கொடுக்க முற்படுகின்றது. அதனை பார்க்கும் பார்வையாளனின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் எல்லாம் ஊற்றெடுக்கின்றன. அக்கருக்கல் கூறும் கவிதை என்ன? இதைத்தான் வான்கோ போன்ற ஓவியர்கள் தத்தமது ஓவியங்களில் முன்னிறுத்த முனைந்தனர். தனது ஓவியங்களை அவர்கள் பேச வைத்தார்கள். பாட வைத்தார்கள் - கவிதைகளாய் உருவாக்க முயற்சித்தனர். அதில் வெற்றியும் பெற்றனர்.

அண்மையில் நான் வாசித்த புனைகதை 'தரணி'. இதுவொரு சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. சிங்கள இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்ஹ. புனைகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முகத்திறமை மிக்கவர் இவர். அத்துடன் ஊடகத்துறையிலும் தீவிரமாகச் செயற்படும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர். இலங்கையின் சமகால சமூக, அரசியற் பிரச்சினைகளில் மிகுந்த தெளிவு மிக்கவர். அவற்றை இன, மத, மொழி ரீதியாக அணுகாமல், மானுடப்பிரச்சினைகளாக அணுகுமொருவர். இதனை இவர் எழுதி அண்மையில் வெளிவந்த 'தரணி' நாவலிலும் காணலாம். இந்நாவல் இலங்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தோழர் குட்டி ‘தீப்பொறி’, ‘தமிழீழ மக்கள் கட்சி’, மற்றும் ‘மே 18 இயக்கம்’ போன்ற அமைப்புகளுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்பட்டவர். அமைப்பின் ஒவ்வொரு முன்னெடுப்புகளிலும் தீவிரமாக தன்னை வெளிப்படுத்தியவர். அமைப்பிற்காக லண்டனில் மாத்திரமன்றி, ஏனைய ஐரோப்பிய தலைநகரங்களிலும் பணியாற்றியவர்.
உள்ளத்துள்ளே நிறைவான மகிழ்ச்சிமழை பொழிந்ததனால், இரவு முழுவதும் வெளியே பொழிந்து ஓய்ந்த மழைகூட பெரிதாகத் தெரியவில்லை.
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -
கீரிமலைக் கடற்கரை சுனாமி வந்து போனது போல அமைதியாக இருந்தது. அலைகளின் ஆர்ப்பரிப்பைத்தவிர, அங்கே மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கவில்லை. எங்கிருந்தோ பறந்து வந்த மீன் கொத்திப் பறவை ஒன்று சட்டென்று தண்ணீரில் மூழ்கி எதையோ கொத்திச் சென்றது. சுதந்திரமாய்ச் சிறகடித்து வானத்தில் பறக்கும் கடற்கொக்குகளைக் கூட இன்று காணக் கிடைக்கவில்லை. அஸ்தி கரைப்பதற்காக கீரிமலைக் கடலில் தலை மூழ்கி எழுந்தபோது இதுவரை அடக்கிவைத்த எனது துயரம் தன்னிச்சையாகப் பீறிட்டு வெடித்தது. கிரிகைகள் செய்யும்போது துயரத்தை வெளிக்காட்டக் கூடாது என்பதால் கிரிகைகள் செய்த சமயாச்சாரியின் முன்னால் இதுவரை அடக்கி வைத்த துயரம் தண்ணீரில் ஒவ்வொரு முறையும் தலைமூழ்கி எழுந்தபோது என்னையறியாமலே வெடித்துச் சிதறியது. ஆற்றாமையின் வெளிப்பாடாய் இருக்கலாம், ஏனோ வடதிசையைப் பார்த்து ஓவென்று அழவேண்டும் போலவும் இருந்தது. என் கண்ணீரைப் பாக்குநீரணை தனதாக்கிக் கொண்டபோது, ஆர்ப்பரித்த ஓயாத அலைகளின் ஆரவாரத்தில் என் அழுகைச் சத்தமும் அதற்குள் அடங்கிப் போயிற்று.
வெளியே காற்று அனலாக வீசிக்கொண்டிருந்தது

மறு யுகம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'வாழ்வின் பின் நோக்கிய பயணமிது' நூலை வாசித்தேன். இந்நூல் எனக்குக் கிடைப்பதற்கு வழி செய்த நண்பரும், சமூக, அரசியற் செயற்பாட்டாளருமான எல்லாளனுக்கு நன்றி. சிவகாமி, யாழினி என்னும் இரண்டு முன்னாட் பெண் போராளிகளின் போராட்ட அனுபவங்களைக் கூறும் நூல். சிவகாமியின் போராட்ட அனுபவங்கள் படர்க்கையில் விபரிக்கப்பட்டுள்ளன. இவரது அனுபவங்களே 48 பக்கங்களைக் கொண்ட இச்சிறு நூலின் பிரதான பகுதியாக அமைகின்றது.




நான் இந்த சிறுகதை மீண்டும் கிடைக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் நூலகம் தளத்தின் உதவியால் மீண்டும் இச்சிறுகதையினைப் பெற முடிந்தது. அதற்காக நூலகத்துக்கு நன்றி.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









