தாயகத்தில் ஆங்கிலக் கல்வியின் அவசியமும் ஸ்டெம் கல்வியின் பங்கும் - கலா ஸ்ரீரஞ்சன் -UK -
STEM-Kalvi அறக்கட்டளையால் இலவசமாக நடாத்தப்படும் பாடசாலைக்கல்வியை விலகியோருக்கான இணையவழி ஆங்கில வகுப்பு பகுதி-II இன் வெற்றிகரமான இறுதி வாரம் இது. ஆங்கிலக் கல்வி வகுப்பு பகுதி-I, பகுதி-II என்ற இரண்டு கட்டங்களையும் தொடர்ச்சியாக, இணைய வழியில் கற்பித்ததன் மூலம் நான் பெற்றுக் கொண்ட அனுபவத்தைப் பகிர்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
வழமையாக இங்கு பாடசாலைகளில் ஆசிரியர்களும் தொடர்ச்சியான கற்றலை மேற்கொள்வதால், ஆசிரியர்களின் அனுபவங்களை சக ஆசிரியர்களோடு பகிர்ந்து கொண்டு, இன்னும் தமது கற்பிக்கும் திறமைகளை மேம்படுத்துவது சாதாரணமான ஒரு பணி சார்ந்த விடயமே. இதனை கற்றலும் கற்பித்தலுக்குமான வாராந்த பயிற்சிக்குள்ளும் ( Weekly Teaching and Learning Training) தொடர்ச்சியான பணி சார்ந்த நிபுணத்துவத்திற்கான பயிற்சியாகவும் (Continuous Professional Development ) ஆசிரியர்கள் உள்வாங்கிக் கொள்ளுகின்றனர்.
இங்கு பிரித்தானியாவில் இருந்தவாறே நானும், அவுஸ்திரேலியாவில் இருந்தவாறே இயங்கி வரும் ஸ்டெம் கல்வியும் இந்த வகையில் பாடசாலையிலிருந்து விலகியோருக்கான ஆங்கிலக் கல்வியை, மாணவர்களுக்கு ஏற்ற முறையில், இலங்கை கல்வி அமைச்சின் பாடத்திட்டங்களுக்கு ஏற்ப தயாரித்து வழங்கி வந்தோம். நான் ஆங்கிலத்தை முதன் மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே இங்கு கற்பித்து வருவதால், ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்ட இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு கற்பித்ததன் மூலம் பல விடயங்களை அறிந்து கொள்ளவும், அதற்கேற்ப கற்பித்தலை சரிபடுத்திக் கொள்ளவும் என்னால் ( adapt) முடிந்தது. இது மாணவர்களுக்கும் எனக்கும் இடையேயான இடைவெளியைக் குறைத்தது. அவர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்து, கற்பித்தலை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தது. நேரம், முயற்சி, தனிப்பட்ட கடமைகள், வேலை எனப் பல சிக்கல்களுக்கு நான் முகம் கொடுத்தாலும் கூட, ஒரு பயன் தரக்கூடிய செயற்திட்டத்திற்கு மெருகூட்டுகிறேன் என்பது சுவாரசியமாகவே இருந்தது.



கனடாவிலிருந்து இயங்கிவரும் வசந்தம் தமிழ் உளவளத்துணை நிலையம் மெய்நிகர் வழியாக நடத்திவரும் தொடர் கருத்தரங்கில், கனடாவில் குடும்ப வன்முறை பற்றிய ஒரு நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவேளையில்தான், பிரான்ஸில் வதியும் எழுத்தாளர் நாடகக் கலைஞர் அருந்ததி எழுதிய ஆண்பால் உலகு நாவலையும் படித்து முடித்திருந்தேன். மெய்நிகர் கருத்தரங்கும், இந்த நாவலும் குடும்ப வன்முறை பற்றியே பேசியிருந்தமையால், அதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன? என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. குடும்ப வன்முறையினால் (Domestic Violence) பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். அதற்கு ஆணாதிக்கம் மாத்திரம் காரணமில்லை. பெண்களின் அறியாமையும் மிக முக்கிய காரணம்.


சென்ற ஞாயிற்றுக் கிழமை 5-11-2023 கனடா எத்தோபிக்கோ நகரத்தில் இயங்கும் ‘கிராமத்துவதனம் ஒன்ராறியோ தமிழ் பெண்கள் பண்பாட்டு மையம்’ என்ற தமிழ் குடும்ப அமைப்பினரால் அல்பியன் வீதியில் உள்ள திஸ்ரில் நகர மண்டபத்தில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்து இப்பகுதியில் வசிக்கும் தமிழ் பெற்றோர்களும், கனடாவில் பிறந்து வளர்ந்த அவர்களின் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் ஒன்று சேர்ந்து இந்த விழாவில் மிகவும் ஆர்வத்தோடு பங்கு பற்றியிருந்தார்கள்.

அண்மையில் வெளிவந்த, பதிவாளர் நாயகத்தின், சுற்று நிரூபத்தின்படி இந்திய வம்சாவளி தமிழர்கள், இனி இலங்கை தமிழர்கள் என அழைக்கப்படலாம். சுற்று நிருபத்தின் தலைப்பே பின்வருமாறு கூறுவதாய் உளது: “இனத்தினை குறிப்பிடும் பொழுது இந்தியத்தமிழ்… என்பதனை இலங்கைத்தமிழ்… என பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள்…”
உல்லாசம் பொங்க உள்ளம் மகிழ்ந்திட 
அண்மையில் கனடாவில் வெளியான ஒலி, ஒளி ஊடகவியலாளர் பி.விக்னேஸ்வரனின் 'நினைவு நல்லது' நூல் வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன். நிகழ்வு வழமையான நூல் வெளியீடுகளைப் போலற்று அவரைப் பற்றி அறிந்தவர்களின் வாழ்த்துரைகளையே பிரதான அம்சமாகக் கொண்டு விளங்கியது. நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட 'நினைவு நூல்' பெரிய அளவில் 932 பக்கங்களைக் கொண்ட விரிந்த நூல்.

ஈராக்கில்

பண்டைய தமிழர் விலங்கியல், தாவரவியல் பற்றிய புலமை பெற்றிருந்தனர். ஓரறிவு முதலான உயிர்களைக் குறித்த செய்திகள் தொல்காப்பியம் தொடங்கி சங்ககாலம், சங்க மருவிய இலக்கியங்கள் ஆகியவற்றில் காணக்கிடக்கின்றன. அவை நேரடியாகவும் மறைமுகமாகவும் அடைமொழியாகவும், உவமைகள் வாயிலாகவும் கூறப்படுகின்றன. குறிப்பாக உயிரினங்களோடு இயைந்த தமிழர் தம் வாழ்வியல் தொடர்பையும் உயிரினங்கள் பற்றிய வாழ்வியல் பதிவுகளையும் சங்க இலக்கியம் விரிவாக விளக்கிக் காட்டியுள்ளது. அவற்றில் மரங்களின் வகைகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
இந்நூல், மக்சிம் கார்க்கி யின் அனைத்து நூல்களிலும் இருந்து வித்தியாசம் பெற்றது. இவ்வித்தியாச நூலை பின் வருமாறு வரையறுத்துக் கொள்கின்றார் கார்க்கி : ''இந்நூல் என் வாழ்நாள் சவால்... என் வாழ்நாள் சாதனை ”.



அண்மைக்காலமாக சமூக அரசியலாளர்களால் மட்டுமல்ல ஊடகத்துறையினர் உட்பட பல தரப்பினராலும் ‘பாசிசம்’ என்கிற சொல் பயன்படுத்தப் படுவதை நாம் அறிவோம். அதுவும் பி.ஜே.பி முன்னெடுக்கிற அரசியல் செயற்பாடுகளை அடையாளப்படுத்தவும் இனம் காட்டவும் பாசிசம் என்கிற சொல்லை பலர் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். உண்மையில் ‘பாசிசம்’ என்றால் என்ன?
அகவயமான வாசிப்பினை வேண்டுவதே இலக்கியம். எனினும் புற உலகின் மாற்றங்களுக்கு ஏற்ப அமைப்பாலும் உட்பொருளாலும் மாற்றம் காண்பது தவிர்க்க முடியாதது. மனிதகுலமே கூர்ப்பின் வழி இன்றிருக்கும் வடிவில் வந்திருக்கும் போது, இலக்கிய வடிவங்களும் அதன் இலக்கணங்களும் மாறக்கூடாது எனக் கூறமுடியுமா?


அன்பான தமிழ் உறவுகளே, உலக அளவில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச ஆண்கள் தினமான Nov 19, இந்த வருடம் எதிர்வரும் Nov 19, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று, மாலை 6 மணி தொடக்கம் 7 மணி வரை (இலங்கை நேரப்படி) – காலை 7.30 – 8.30 மணி வரை (கனடா நேரப்படி) சர்வதேச ஆண்கள் தினம் – இலங்கை (International Men’s Day – Sri Lanka) மற்றும் ஆண்களின் குரல் 360 அமைப்பும் இணைந்து முன்னெடுக்க இருக்கும் இணையவழி கலந்துரையாடலில் இணைந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

- சுப்ரபாரதிமணியனின் ' சிலுவை ' நாவல் 300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது. சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது. அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல். 'சிலுவை' நாவல் சுப்ரபாரதிமணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது. நியூ செஞ்சுரி புக்ஸ் ஹவுஸ் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. -

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









