அஞ்சலிக்குறிப்பு : அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அயராமல் எழுதிய ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் மறைந்தார்! - முருகபூபதி -

இன்று ( 12 ஆம் திகதி ) முற்பகல் நடைப்பயிற்சிக்கு சென்றுகொண்டிருந்தபோது, கனடாவில் வதியும் எழுத்தாளர், இலக்கிய நண்பர் ஜெகதீசனிடமிருந்து, எமது மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் நேற்று நள்ளிரவு வவுனியாவில் மறைந்து விட்டார் என்ற துயரமான செய்தி எனது மின்னஞ்சலுக்கு வந்தது. அதனைப்படித்ததும் அதிர்ச்சியில் மனம் நிலைகுத்தியது. தாமதிக்காமல் “ என்ன நடந்தது..? “ எனக்கேட்டு எழுதினேன். சில நிமிடங்களில் பின்வரும் குறிப்பு வந்தது:
ஊடகவியலாளர் பாரதி ராஜநாயகத்தின் முகநூல் பதிவு 'நீண்ட காலமாக காலனுடன் போராடிக்கொண்டிருந்தவா். அவரது மனத்துணிவுதான் அவரை இயக்கிக்கொண்டிருந்தது. மருத்துவமனையில் இருக்கும் போதும் மடிக்கணினியில் வேலை செய்துகொண்டுதான் இருப்பாா். மூன்று தினங்களுக்கு முன்னா் - ஞாயிற்றுக்கிழமை அவரைப் பாா்ப்பதற்காக ராமும் நானும் சென்றிருந்தோம். அவரால் பேச முடியவில்லை. ஆனால், நாம் புறப்படும் போது "இருங்கோ இருங்கோ கதைப்பம்" என்றாா். அவரது உடல்நிலை மோசமாக இருப்பது தெரிந்தது. ஆனால், இவ்வளவு விரைவாக விடைபெறுவாா் என்பது எதிா்பாா்க்காதது. தன்னுடைய வாழ்நாள் சாதனையாக பல நுால்களையும் எழுதியிருக்கின்றாா். இன்னும் ஒரு நுால் தயாரிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனையும் முடித்து வெளியிட வேண்டும் என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. கொஞ்சம் சுகமாக இருந்தாலும் கணினியைக் கொண்டுவரச் சொல்லி வேலையைத் தொடங்கிவிடுவாா் என்று அவரது மனைவி சொன்னா். வேலை மீதிருந்த பேராா்வமும் மனத்துணிவும்தான் அவரை இயக்கிக்கொண்டிருந்தது.'
நண்பர் இராஜநாயகம் பாரதியின் மேற்கண்ட பதிவுடன் எனது நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். வீரகேசரியில் நான் பணியாற்றிய காலத்தில் மாணிக்கவாசகம், வவுனியா பிரதேச நிருபராக இருந்தார். அவரது கையெழுத்துக்களை, முதலில் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்தபோதும், அதன்பின்னர் 1984 தொடக்கம் 1987 தொடக்கம் வரையிலும் ஆசிரிய பீடத்திலிருந்தும் பார்த்து வந்திருக்கின்றேன்.
நான் ஆசிரிய பீடத்திலிருந்த சுமார் மூன்று ஆண்டுகள் எனது கடமை நாட்களில் தினம் தினம் தொலைபேசியில் பேசும் ஒருவராகவும் நண்பர் மாணிக்கவாசகம் திகழ்ந்தார்.


இன்று, ஏப்ரில் 10, சர்வதேச சகோதரர் நாள் ஆகும். எங்களுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சகோதரர்கள்தான் பங்கிட்டுக் கொள்கிறார்கள். நண்பர்களையோ, வேறெந்த உறவுகளையோ அறிவதற்கு முன் பெற்றோருக்கு அடுத்ததாக நாங்கள் பழகும் உறவும் அதுதான். எங்களின் ஆரம்பகால வருடங்களின் பெரும்நேரத்தைக் குடும்பமாக அவர்களுடன்தான் செலவிடுகிறோம். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் வளர்கிறோம். அந்தவகையில் சகோதரங்களுடான உறவு ஆரோக்கியமானதாக அமையவேண்டியது அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றெனலாம்.



இதுவே, இக்கட்டுரை தொடரில், சென்ற இருமுறையும் வாதிக்கப்பட்ட விடயங்களின் சாரமாகும். அதாவது, ஒருபுறம் மத்திய கிழக்கின் சவுதி முதல் சிரியா வரையிலான நாடுகள். மறுபுறம் ஆசியாவின் சீனா முதல் இந்தியா வரையிலான நாடுகள், மேலும் ஆப்ரிக்கா கண்டத்தின் அனேக நாடுகள், பின் பிறேசில் முதல் இந்தோனேசியா வரையிலான நாடுகள் - இவை அனைத்தினது முகங்களும் தீவிர மாறுகைக்கு உட்படும் போது, G-7 ன்ற அமைப்புக்கு நேரெதிராக, G-20 அல்லது ஒரு BRICS அல்லது SCO போன்ற அமைப்புக்கள் திரள்வதும், அவை ஓர் சவால் நிலையை கட்டவிழ்க்க நேர்வதும், தவிர்க்கமுடியாததாகின்றது. அதாவது G-7 என்ற நாடுகள்-உலகை வழி நடாத்திய காலம் முடிந்து, அது ஒரு கடந்த காலமாகி, அதற்குப் பதிலாக புதியதோர் ஒழுங்குமுறை கட்டவிழப் பார்க்கிறது.



சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடாவில் இயங்கிவரும் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடலும், இரவு விருந்துபசாரமும் இடம் பெற்றன. ரொறன்ரோ எக்லிங்டன் வீதியில் உள்ள ஈஸ்ட்ரவுன் விருந்தினர் மண்டபத்தில் மாலை 6:30 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மன்றத்தின் தலைவர் திரு அஜந்தன் மகேந்திரனும் அவரின் துணைவியாரும் மங்கள விளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து கனடா தேசிய கீதமும், தமிழ்தாய் வாழ்த்தும் இடம் பெற்றன. அதன்பின் சமீபத்தில் எம்மைவிட்டுப் பிரிந்தவர்களுக்காக ஒரு நிமிடம் அகவணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து பாமதி ராம்தாஸ் அவர்களின் வரவேற்புரை இடம் பெற்றது.

“ சொல்லுங்க சுமணாவதி……. சுகமா இருக்கியளா……” கம்பீரமாக்க் கேட்டேன்.
கலை, இலக்கிய விமர்சகர் மு.நித்தியானந்தன் தனது பவளவிழாவையும், பிறந்தநாளையும் நேற்று கொண்டாடினார். அவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். இத்தருணத்தில் அவரைப்பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்கின்றேன். அவரை நான் முதன் முதலாகச் சந்தித்தது யாழ் பல்கலைக்கழகத்தில். நண்பர் ஆனந்தகுமார் அப்போது அங்கு படித்துக்கொண்டிருந்தார். யாழ் இந்துக்கல்லூரியில் எனக்கு அவர் ஒரு வருடம் சீனியர். பால்ய காலத்திலிருந்து அறிமுகமான நட்பு. அப்பொழுது நான் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை கற்றுக்கொண்டிருந்தேன். 80/81 வருட மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையின் இதழாசிரியராகவிருந்தேன். 'நுட்பம்' சஞ்சிகைக்கு கலாநிதி கா.சிவத்தம்பி, கலாநிதி க.கைலாசபதி ஆகியோரிடமிருந்து ஆக்கங்கள் வேண்டி அங்கு நண்பருடன் சென்றிருந்தேன். அப்பொழுது ஆனந்தகுமார் மூலம் அறிமுகமானவர்தான் அப்போது அங்கு விரிவுரையாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த மு.நித்தியானந்தன் அவர்கள்.


இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினை தீவிரம் பெற்ற 1980களில் , இலங்கை தமிழ்ச் சூழலின் கல்வி, அரசியல், சமூகம், இலக்கியத் தளங்களில் முன்னணியில் இருந்த ஆளுமைகளிலொருவராக மு. நித்தியானந்தன் இருந்தார். அந்தப் பெயர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக அப்போது இருந்தது. அன்றைய சூழலில் இந்த பல்தளங்களில் நடந்த பல முக்கிய பணிகளுக்கு நேரடியாகவும் , பகுதியாகவும் அவரது பங்களிப்பும் உழைப்பும் தலையீடும் இருந்து வந்திருக்கின்றன. அன்றைய சமகாலத்து முக்கிய ஆளுமைகளுடனும் அரசியல், சமூக, கலை இலக்கியப் போக்குகளுடனும் உறவும் உரையாடலும் செயற்பாடும் அவருக்கு இருந்திருக்கிறது. இந்த பெரும் ஆளுமை உருவாக்கம் அறிவாலும், தொடர்ச்சியான வாசிப்பாலும் தேடலாலும் , செயற்பாடுகளாலுமே சாத்தியமாகியது. அத்தகைய முக்கிய இருப்பு , இப்போதைய அவரது எழுபத்தைந்தாவது அகவை வரையும் தொடர்வது எல்லோருக்கும் வாய்த்துவிடும் பெறு அல்ல.


நாவல் பல்வேறு தரப்பாராலும் விரும்பி வாசிக்கப்படும் ஒரு இலக்கிய வடிவமாகும். கதைகளிலும், வரலாறுகளிலும் விருப்பம் கொள்ளுகின்ற உணர்ச்சியுள்ள மனித மனமானது நாவல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல எனலாம். நாவல்கள் தனி மனிதச் சிக்கல்களையும், சமுதாயச் சிக்கல்களையும் எடுத்துக் காட்டும் கதைக்களங்களையும், கற்பனையான உரை நடைகளையும் கொண்டிருக்கும். நாவல்கள் முதலாம் நிலை அனுபவங்களாகவும், இரண்டாம், மூன்றாம்நிலை அனுபவங்களாகவும் அல்லது இவைகளுடன் கற்பனைகள் கலக்கப்பட்டதாகவும் காணப்படலாம். நாவலை சரியாக வரைவிலக்கணப்படுத்த முடியாது என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
இந்தியாவின் மிகச் சிறந்த ஆறுகளில் ஒன்று காவிரி. இந்துக்கள் இதைப் புண்ணிய நதியாகக் கருதி வழிபாடுகள் செய்கின்றனர்.காவிரி ஆறு பற்றி பட்டினப்பாலை, புறநானூறு, பொருநராற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம்,போன்ற பல நூல்களிலும் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன. கம்பர் காவிரி நாட்டினர். வளமான இயற்கையை எங்குக் கண்டாலும், பொன்னி ஆற்றையும், பொன்னான சோழநாட்டையும் ஒப்பிட்டு மகிழ்வார். கம்பர் காலத்திலும் காவிரிஆறு, கங்கை ஆற்றுக்கு ஒப்பானது என்று மக்கள் கருதி வந்தனர்.கம்பரும் கங்கையை நினைவு கூறும்போதெல்லாம் காவிரியையும் நினைவு கூருகின்றார். அவ்விடங்களில் சிலவற்றை ஆராய்வோம்.
இதுவரை இங்கு நீங்கள் வாசித்தவற்றிலிருந்து ஓரளவுக்கு என்னைப்பற்றி , என் ஆளுமையைப் பற்றி நீங்கள் அறிந்திருந்தால் அது ஓரளவுக்குப் போதுமானது. ஏனென்றால் நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் நவீன விக்கிரமாதித்தனாகிய இவனின் வாழ்க்கை அனுபவங்களை விபரிக்கக்கூடும். அப்போது இவனைப்பற்றி இன்னும் நன்கு புரிவதற்கு இதுவரை விபரித்த விபரிப்புகள் நிச்சயம் உதவுமென்றும் நிச்சயமாக நம்புகின்றேன்.
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









