பயனுள்ள மீள்பிரசுரம்: 'நடு' இணைய இதழ் - எழுத்தாளர் வி.ரி.இளங்கோவனுடனானதொரு நேர்காணல்! - கோமகன் -

எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'நடு' இணைய இதழில் எழுத்தாளர் வி.ரி.இளங்கோவனுடனான நீண்டதொரு ,காத்திரமான நேர்காணல் வெளியாகியிருந்தது. அதனைக்ப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
எழுத்தாளர் ஒருவருடனான இவ்விதமான நேர்காணல்களை, மற்றும் அவர்தம் எழுத்துலக அனுபவங்களை விபரிக்கும் வாழ்க்கைச் சரித்திரங்களை, சுயசரிதைகள் முக்கியமானவை. இலக்கியச் சிறப்பு மிக்கவை.
இந்நீண்ட நேர்காணலில் இளங்கோவன் அவர்கள் தன் எழுத்துலக அனுபவங்களை, அதற்குத் தன் குடும்பச்சூழல் எவ்விதம் உதவியது, மார்க்சியம் பற்றி, இலங்கை முற்போக்கு இலக்கியம் பற்றி, இலங்கையில் வெளியான சிற்றிதழ்கள் பற்றி, எழுத்தாளர்கள் எஸ்.பொ. கே.டானியல், அகஸ்தியர் பற்றி, தமிழர்கள் மத்தியில் தொடரும் தீண்டாமை பற்றி, இதற்குப் புகலிடத் தமிழர்கள் சிலர் எவ்விதம் தொடர்வதற்கு உதவுகின்றார்கள் என்பது பற்றி, தலித் என்னும் சொல்லாடல் பற்றி , வர்க்கப்புரட்சியின் அவசியம் பற்றி எனப் பல்வேறு விடயங்களைப்பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்திருக்கின்றார்.
நல்லதொரு நேர்காணல். இதற்குப் பின் 'நடு'ஆசிரியர் கோமகனின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் தெரிகின்றன. அவர் இல்லையென்பது துயர் தருவது. ஆனால் அவர் தன் படைப்புகள் மூலம், 'நடு' இணைய இதழ் மூலம் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்பார்.
நேர்காணல்-வி. ரி. இளங்கோவன்-கோமகன்
உங்களை நான் எப்படியாக தெரிந்து கொள்ள முடியும்?
நான் ஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற தீவகப்பகுதியில் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவன். எமது குடும்பத்தில் உள்ள அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் இலக்கியத்துறையுடனும் ஊடகத்துறையுடனும் தொடர்புடையவர்கள் தான். எனது மூத்த சகோதரர் காலஞ்சென்ற திருநாவுக்கரசு – நாவேந்தன் புகழ்பெற்ற பேச்சாளர். அரசியல் துறையிலும் எழுத்துத் துறையிலும் தனக்கென்று ஓர் தனிமுத்திரை பதித்தவர். இலங்கை சாகித்திய மண்டலத்தின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருதைப் (1964) பெற்றவர். அடுத்த சகோதரர் துரைசிங்கம் சாகித்திய மண்டலத்தின் சிறுவர் இலக்கியத்திற்கான விருதை நான்கு முறை பெற்றவர். எமது வீட்டில் உடன்பிறப்புகள் எல்லோருமே இலங்கையிலிருந்து வெளியாகிய அனைத்து பத்திரிகைகளுக்கும் செய்தியாளர்களாக இருந்திருக்கின்றோம். அதனால் அனைத்துப் பத்திரிகைகளின் ஒவ்வொரு பிரதியும் இலவசமாகவே எங்கள் வீடுநாடி வரும். அத்துடன் எனது சகோதரர்களது இலக்கியச் செயற்பாடுகளினால் வீட்டில் ஓர் பாரிய நூலகம் போன்று புத்தகங்கள் நிறைந்து கிடக்கும்.






கனடா ஸ்காபரோ நகரில், 'மக்கள் எழுத்தாளர்' கே. டானியலின் 'சாநிழல்' குறுநாவல் வெளியீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை மாலை (30 - 09 - 2023) மிகச் சிறப்பாக நடைபெற்றது. மூத்த தோழர் சூ. மார்க்கு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கே. பி. லிங்கம், செகா சிவா, தர்சன் சிவகுருநாதன் ஆகியோர் டானியல் பணிகள் குறித்தும் சாநிழல் நாவலின் சிறப்புக் குறித்தும் உரையாற்றினர்.
அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பதே கம்பராமாயணப் பாவிகம் என்றாலும், அதையும் கடந்து வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல கருத்துக்களையும் கம்பராமாயணத்தால் அறிந்து கொள்ளமுடிகிறது. கம்பராமாயணம் முழுமையும் பார்க்கும்பொழுது நல்வாழ்க்கை வாழத் தேவையான நற்பண்புகளையும், வாழ்வியல் நெறிகளையும் எடுத்தியம்புகிறது. கம்பர் தம் இராமாயணத்தில் நேரடியாகவோ,, கதை மாந்தர்கள் மூலமாகவோ வாழ்வியல் நெறிகளைக் கூறிச் சென்றுள்ளார். உலகில் இன்பமும், துன்பமும் இயற்கை என்பதைச் சான்றோர்கள் நன்கு அறிவர். கம்பராமாயணத்தில் சில வாழ்வியல் சிந்தனைகள் குறித்து ஆராய்வோம்.
சென்ற சனிக்கிழமை 23-9-2023 அன்று கனடா, ரொறன்ரோவில் உள்ள தொல்காப்பிய மன்றத்தினர் நடத்திய 8வது தொல்காப்பிய ஆண்டுவிழா – 2023 தமிழிசைக் கலாமன்றத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஆடைகளின் ஏற்றுமதி எப்படித் திருப்பூரை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருந்தீர்கள். அரசியல், மக்களின் இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம் வேகமாக வளரும் ஊரில் அந்த ஊரின் கடைநிலை மனிதர்கள் இடம் மாறவேண்டிய கட்டாயம், மாட்டுக்கறிக்கென இருக்கும் கூட்டம் என்று பலவற்றையும் தொட்டிருக்கிறது இந்த நாவல். பள்ளிகளில் சமசீர் கல்விக்கான புத்தகங்கள் இல்லை என்பதுகூட விடப்படவில்லை. எனக்கு எப்படி இத்தனை விஷயங்களை ஒரே புத்தகத்தில் கோர்த்தீர்கள் என்பது அதிசயமாக இருந்தது.
அண்மைகாலத்து இலங்கையில், பல்வேறு சம்பவங்கள், அடுத்தடுத்து இடம் பெற்று, இலங்கை அரசியல் சூழலை அல்லது அச்சூழலை வசப்படுத்த முயலும் சிந்தனைகளை, அடியோடு சிதறடிக்கும் தொடர் கோர்வையாக, அரங்கேறத் தொடங்கியுள்ளன.
திருப்பூர் வாசகர் சிந்தனை பேரவையின் ஏற்பாட்டில் 1/10/23 அன்று மொழிபெயர்ப்பு தினம் திருப்பூரில் கொண்டாடப்பட்டது .அதை ஒட்டி சுப்ரபாதி மணியனின் 'நைரா' நாவல் மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. மற்றும் தூரிகை சின்னராஜ் அவர்கள் மொழி பெயர்ப்பு நூல்கள் தரும் புதிய வாசல்கள் பற்றி விரிவாக பேசினார்.
ஐம்பது தசாப்தங்களுக்கும் மேல் எழுத்துலகில் தடம்பதித்துள்ள எழுத்தாளர் முருகபூபதியின் முப்பதாவது நூல் "சினிமா: பார்த்ததும் கேட்டதும்". ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ள 128 பக்கங்கள் கொண்டிருக்கும் இந்த நூல், இலங்கை, இந்திய மற்றும் உலக சினிமாக்களை விமர்சிப்பதுடன் மட்டுமல்லாமல், சினிமா உலகில் எம்மை மகிழ்வித்த, மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களையும் அவர்களில் சிலருக்கும் தனக்கும் நிகழ்ந்த சந்திப்புகளையும் உரையாடல்களையும் சுவாரசியமாக முருகபூபதி விபரிக்கிறார்.



'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதாகள்' எனும் நூலை முன்வைத்து தான்யா எழுதிய குறிப்பு தொடர்பாக சில முரணனான கருத்துக்களை தெளிவுபடுத்தும் விதமாகவும் தான்யா அவர்கள் சில விடயங்களை தெளிவாக்கிவிட்டு வெகுஜன ஊடகங்களுக்கு எழுதியனுப்பும் ஆக்கங்கள் தொடர்பாக கவனமெடுக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டிக் இக்குறிப்பை வரைகின்றேன். தான்யாவின் முரண்பாடான பிழையான கருத்துக்களில் முதலாவதாக அமைவது 'பெண்' சஞ்சிகை என்பது தனிப்பட்ட ஒரு நபரான சித்ரலேகா மெளனகுருவினது என்பது. அத்தகைய எடுகோளின் அடிப்படையில் தான் சில மேற்கோள் காட்டுதலுக்காக தான் 'பெண்' போன்ற பதங்களை பிரயோகித்து எழுதப்பட்டுள்ளது தான்யாவின் குறிப்பு. இது தவறானது.
பதிவுகள், மார்கழி 2005 இதழ் 72 
விஜியின் மனம் மட்டுமன்றி வீடும் விசாலமானதாகவே இருந்தது. காலையில் சுப்ரபாதம் கேட்டுக்கொண்டு ருசிமிக்க மசாலா தேநீர் பருகுவதும்,பின்னர் விஜி பரிமாறும் விதம்விதமான சாப்பாட்டை வயிறாராச் சாப்பிடுவதும், அதன்பின்னர் ஊர் சுற்றிவிட்டு வெளியில் சாப்பிடுவதுமாகப் பொழுது ரம்மியமாகப் போனது.

கொடை வள்ளல் கர்ணனிற்கு, கொடுப்பது மட்டுமல்ல குணம். கொடுக்கையிலும் மற்றவர் நிலையுணர்ந்து கொடுக்கும் குணம் கொண்டவன் கர்ணன். நாம் நண்பர்களுக்கோ, அறிந்தவர்களுக்கோ, உதவி புரிதல் மட்டும் முக்கியமல்ல. ஒருவரிற்கு உதவி தேவைப்படுவதை உணர்ந்த போது , அவரதனை நம்மிடம் கேளாமல் இருக்கையிலேயே, அவரின் நிலையுணர்ந்து, அவரிற்கு எம்மால் முடிந்த வகையில் உதவுதலே உண்மை நட்பாகவும். அதுவே வள்ளுவரின் குறளான உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.(குறள் 788) என்ற குறளுக்கு முன்னுதாரணமாகும்.


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









