அண்டனூர் சுராவின் 'தீவாந்தரம்' - வ.ந.கிரிதரன் -
- அண்மையில் வெளியான எழுத்தாளர் அண்டனூர் சுராவின் 'தீவாந்தரம்' நாவல் பற்றிய எனது விமர்சனம் ஜூலை மாதக் கணையாழி இதழில் வெளியாகியுள்ளது. கணையாழி சஞ்சிகை தற்போது மின்னிதழாக மட்டும் வெளியாகின்றது. மிகக்குறைந்த கட்டணத்தில் கணையாழிக்கான ஆண்டுச் சந்தாவைச் செலுத்த முடியும். அதற்கான இணையத்தள முகவரிகள்: 1. கணையாழி - https://kanaiyazhi.com & 2. மக்ஸெச்டர் - https://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Celebrity/All-Issues -

தமிழில் வரலாற்றுப் புனைவுகள் என்றதும் எமக்கு நினைவுக்கு வருபவர்கள் கல்கி, சாண்டில்யன்,ஜெகசிற்பியன் , அகிலன் , நா.பார்த்தசாரதி மற்றும் இவர்களையொட்டிக் கற்பனாவாதப் புனைவுகளாக வரலாற்றுப் புனைவுகளை எழுதியவர்கள். இவை பூரணமான வரலாற்றுப் புனைவுகள் அல்ல. வரலாற்றுச் சம்பவங்களை, ஆளுமைகளை உள்வாங்கிப் பின்னப்பட்ட, வெகுசன வாசகர்களின் உள்ளங்களைக் கவர்ந்திடப் பின்னப்பட்ட கற்பனாவாதப்புனைவுகள். இவற்றிலிருந்து சிறிது வேறுபட்டது பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்', 'மானுடம் வெல்லும்' போன்ற நாவல்கள். மிக அதிக அளவில் கிடைக்கப்பெற்ற வரலாற்றுத்தகவல்களின் அடிப்படையில் ஒரு காலகட்டத் சேர்ந்த சாதாரண மானுடர்களின் வாழ்வை வைத்துப் பின்னப்பட்ட புனைவுகள் அவை. இவ்வகையில் ஆட்சியாளர்கள், அவர்கள் வரலாறுகளைத் தவிர்த்துச் சாதாரண மானுடர்களின் வாழ்வை விபரிக்கும் மிகச்சிறந்த வரலாற்று நாவலொன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டுள்ளது. அதுதான் இளங்கோவடிகளின் 'சிலப்பதிகாரம்' அக்காலத்திலிருந்த நாவலையொத்த வடிவமாகக் காப்பியத்தைக் கூறலாம். எனவே காப்பியமாகச் சிலப்பதிகாரம் உருவாக்கப்பட்டது. அக்காப்பியம் அக்கால மாந்தர் வரலாற்றை, நிலவிய சமூக அமைப்பை, இருந்த நகர அமைப்பை, இருந்த ஆட்சி அமைப்பை, நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகளை, தொழிற்பிரிவுகளை எனப் பலவற்றைப்பற்றிய தகவல்களைத் தருகின்றது. சிலப்பதிகாரத்தையொட்டி சங்ககால மானுடர் வாழ்வை மையமாக வைத்து எழுத்தாளர் நா.பார்த்தசாரதி வெகுசன வாசகர்களுக்காகச் சிறந்தொரு கற்பனாவாத வரலாற்றுப் படைப்பாக 'மணிபல்லவம்'என்னுமொரு நாவலைத் தந்துள்ளார். நான் வாசித்த வரலாற்று நாவல்கள் பற்றிய நினைவுகளெல்லாம் சிந்தையிலோடி மறைந்தன எழுத்தாளர் அண்டனூர் சுராவின் அண்மைக்கால நாவலான , 'சந்தியாப்' பதிப்பக வெளியீடாக வெளியான 'தீவாந்தரம்'நாவலை வாசித்தபோது.
எழுத்தாளர் அண்டனூர் சுரா அண்மைக்கால எழுத்தாளர்களில் தன் படைப்புகள் மூலம் , அவற்றுக்குக் கிடைத்த விருதுகள் மூலம் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவராக இருப்பவர். கதை, கட்டுரை, நாவல் என்று இவரது இலக்கியப்பங்களிப்பு பரந்து பட்டது. மேலோட்டமாக எழுதிக்குவிப்பவர்களிலொருவரல்லர். ஆழ்ந்து சிந்தித்து, ஆழமாகத் தகவல்களைத்திரட்டி எழுதுபவர்களிலொருவர். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இவரைபற்றி இவரது முத்தன் பள்ளம் நாவலுக்கான அணிந்துரையில் "அழகிய பெரியவன், எம்.கோபாலகிருஷ்ணன், கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், கீரனூர் ஜாகிர்ராஜா, வா.மு.கோமு, செல்லமுத்து குப்புசாமி எனும் நீளும் தீவிர நாவலாசிரியர் வரிசையில் மற்றுமோர் படைப்பாளி என்று." என்று குறிப்பிட்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. 'தீவாந்தரம்' நாவலை வாசித்தபோது இச்சிந்தனை மேலும் உறுதிப்பட்டது.



ஹோரேஸ் ஹேமன் வில்சன் ஒரு ஆங்கில 'ஓரியண்டலிஸ்ட்' ஆவார். அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தின் முதல் போடன் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் (St Thomas’ Hospital) மருத்துவம் பயின்றார். மேலும் 1808 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வங்காள ஸ்தாபனத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக இந்தியா சென்றார். பொது அறிவுறுத்தல் குழுவின் செயலாளராக பல ஆண்டுகள் செயல்பட்டு கல்கத்தாவில் உள்ள சமஸ்கிருத கல்லூரியின் படிப்பை மேற்பார்வையிட்டார்.



மாணவர்கள் மத்தியிலும் மரவள்ளி விதைபின் தேவையை விதைக்கிறோம். இன்றைய தினம் கிளிநொச்சி மலையாளபுர கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் ஒரு தொகுதி மாணவர்களுக்கு எமது வன்னி தமிழ் மக்கள் ஒன்றிய அமைப்பின் ஊடாக மரவள்ளி தடிகள் வழங்கி வைக்கப்பட்டன.இந்த செயல்பாட்டை நடைமுறைப்படுத்திய சமூக செயல்பாட்டாளர் சகோதரர் துளிர் தீபன் அவர்களுக்கும் ஏனைய சகோதரர்களுக்கும் எமது அமைப்பின் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறிய சிறிய முயற்சிகளை விழிப்புணர்வாக விதைத்து வருகிறோம் நீங்களும் உங்களுக்குத் தோன்றும் வழிமுறையில் விதைத்து வாருங்கள்.
கிளிம்மின் வாழ்வில், (இம்மூன்றாம் தொகுதியின் படி), குறுக்கிடக்கூடிய மூன்றாவது முக்கிய நபர் மரீனா எனும் பெண்மணியாவாள். இவளை சந்திக்கும் போது கிளிம்மின் மனநிலை அமைதி அற்றதாயும், உள் பிளவுகளின் கோரத்தாண்டவங்களால் துன்புறுவதாயும் வெறுமையின் பலிகடாவாகவும் இருக்கின்றது. ஓரு சூனியம் போன்ற தகிக்கும் வெறுமையின் வெளியில் இருந்து துன்புற்று வெளிவர முயற்சித்துக் கொண்டிருக்கின்றது அவன் மனம். அதேப்போன்று, சிந்தனைத் தளத்தில் அவன் தனக்குரிய தத்துவத்தை தேடிப் பற்றிக் கொள்ள அல்லது, உருவாக்கி கொள்ள அவன் பிராயத்தனம் செய்து கொண்டிருந்த தருணத்திலேயே மேற்படி மரீனாவுடனான சந்திப்பும் நடந்தேறுகிறது. மரீனா, பொதுவில், ஓரு மிகப் பெரிய – சரியாக சொன்னால் ஓரு பிரமாண்டமான ஆளுமைமிக்கவளாகத் திகழ்கின்றாள். தத்துவங்கள், அரசியல் இதைவிட முக்கியமாகத் தீவிர இலக்கிய பரீட்சயம் கொண்டவளாயும், இலக்கிய உலகின் தொடர்ச்சியான, ஆழ்ந்த அவதானிப்பு கொண்டவளாயும் இருப்பதை கிளிம் கண்டு கொள்கின்றான். ‘தேடல் கொண்டவர்களும், ஆன்ம விடுதலை அல்லது தூய ஆவியின் நிலை குறித்த விசாரிப்பு உள்ளவர்களும் என் கரிசனைக்கு உரிய மனிதர்களாவர்’ என்று அவள் தன்னை கிளிம்மிடம் வரையறுக்கின்றாள். கிளிம் ஆன்ம விடுதலை குறித்து சாடைமாடையாய் கேள்வியை எழுப்பியதுமே அவள் கூறுவாள்: “ஆன்மீகவாதிகள் இரண்டு வகைப்படுகின்றனர். ஒரு வகையினர் ர்நுனுழுNஐளுவுளு. அதாவது உச்சத்தைத் தொட்டு உள்ளம் கிளர்ச்சியுற்று, அந்த கிளர்ச்சியின் ஒரு கணத்துக்காய் வாழ்பவர்கள். (ஜெயமோகன் போன்றோர்களின் சித்தரிப்பில், விமானம் ஓடுவதை போல் ஓடுவதாகவும், பின் மேலெழுந்து – உச்சத்தை தொடுவது –ளுருடீடுஐஆநு– என்பது போல). மற்ற வகையினர் காந்தியைப் போல. ளுயுஊசுஐகுஐஊஐயுடு ஐ நோக்கி முன்னே ஓடுபவர்கள் - நீ எந்த வகை குறித்து கேட்கின்றாய் என்பது போல அவள் கிளிம்மை நோக்குவாள் அவள்.


நடராசன் சேர் இவ்வுலகை நீத்துவிட்டார் என்ற செய்தியை அறிந்தபோது, தாங்கொணாத் துயர் என் தொண்டையை இறுக்கியது. அதிர்ச்சியில் இருந்து மீண்டெழும்போது, அவருடன் உறவாடிய நினைவுகள் ஒன்றையொன்று முந்திக்கொண்டு நெஞ்சில் அலை மோதத் தொடங்கின.
கடந்த இரண்டு வருடங்களாக எம்மை அச்சுறுத்தி வருகின்ற பெருந்தொற்றும் அதனூடாக எம்மீது திணிக்கப்பட்ட உள்ளிருப்பு வாழ்வும் எமது வாழ்வில் மட்டுமல்ல நாம் இயங்குகின்ற எமது சமூக, அரசியல், பண்பாட்டு தளங்களிலும் கூட பல்வேறுவிதமான மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தன. இப் பெருந்தொற்று காலகட்டத்தில் மாபெரும் வல்லரசுகள், அரசாங்கங்கள், மிகப் பணபலம் படைத்த பன்னாட்டு நிறுவனங்கள் கூட இயங்கமுடியாமல் முடக்கம் பெற்றிருந்த நிலையில் சமூக, பண்பாட்டு தளங்களில் இயங்கிய எமது சிறிய அமைப்புக்களும் முடங்கிப் போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. முக்கியமாக நேரடி நிகழ்வுகளாக நிகழ்த்தப்பட்ட இலக்கியக் கூடுகைகளும் பல்வேறு விதமான கலந்துரையாடல்களும் முடக்கம் பெற்று, அவை மெய்நிகர் நிகழ்வுகளாக காணொளி வாயிலாக நடைபெறும் நிகழ்வுகளாக மாற்றம் பெற்றன. இதனால் உள்ளூர் ஆளுமைகளைக் கொண்டே மட்டும் நிகழ்த்தப்படக் கூடிய நேரடி நிகழ்வுகள் ஆனது மெய்நிகர் நிகழ்வாக மாற்றம் பெற்ற போது அது உலகெங்குமுள்ள ஆளுமைகளை இலகுவாக ஒன்றிணைத்து மாபெரும் கூடுகைகளாக இடம்பெற்றன. இது இந்நிகழ்வுகள் குறித்த ஒரு முக்கியமான நேர்மறை அம்சமாகும். இது போன்ற பல்வேறு நேர்மறை அம்சங்களினாலும் மக்களிடையே பலத்த வரவேற்பினை பெற்றிருந்த இம்மெய்நிகர் நிகழ்வுகளானது காலப்போக்கில் கட்டுக்கடங்காமல் வரம்பு மீறிப் பல்கிப் பெருகியமையாலும், அனுபவங்கள் அற்ற, ஆளுமைகள் அற்ற பலரும் இதனை செய்ய தலைப்பட்டமையாலும் இந்நிகழ்வுகளில் காத்திரத் தன்மை மறைந்து, பெறுமதியற்ற நிகழ்வுகளாக மாறிப் போய் விட்டிருந்தது. அத்துடன் இந்நிகழ்வுகளில் பங்கேற்ற பலரது அசிரத்தையானதும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளும் கூட இந்நிகழ்வுகளை மிகவும் கேலிக் கூத்தாக மாற்றிப் போட்டு விட்டிருந்தது. இந்நிலையில் நேரடி நிகழ்வுகள் இனிமேலும் நடைபெறாதா என்ற எதிர்பார்ப்பினை பலரின் மத்தியிலும் ஏற்படுத்தியிருந்தன.

முன்னுரை

'

இலங்கை மக்கள் நன்கறிந்த இந்திய எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி கடந்த 13 -ம் திகதி திங்கட்கிழமை மாலை (13 - 06 - 2022) சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார. இலங்கைப் படைப்பாளிகளையும் வாசகர்களையும் மிகவும் கவர்ந்தவர் சின்னப்பபாரதி. தமிழ் வாசகர்களை மாத்திரமன்றி சிங்கள வாசகர்களையும் கவர்ந்தவர். எழுத்தாளர் - மொழிபெயர்ப்பாளர் காலஞ்சென்ற உபாலி லீலாரத்தினாவின் மொழிபெயர்ப்பில் சிங்கள மொழியில் சின்னப்பபாரதியின் நாவல்கள் சில சிங்கள வாசகர்களுக்கு அறிமுகமாகின. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுச் சாதனை படைத்தவை சின்னப்பாரதியின் நாவல்களாகும்.




பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









