பயனுள்ள மீள்பிரசுரம் (முகநூற் குறிப்புகள்) : இ.பா.வுக்கு சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப்! (மாபெரும் அகில இந்திய அங்கீகாரம்!) - - திருப்பூர் கிருஷ்ணன் -
- எழுத்தாளரும், 'அமுதசுரபி' சஞ்சிகையின் ஆசிரியருமான திருப்பூர் கிருஷ்ணன் தனது முகநூற் பக்கத்தில் அண்மையில் இந்திய மத்திய அரசின் சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப்! விருது பெற்ற எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பற்றி எழுதிய கட்டுரையிது. இதன் பயன் கருதி இதனை நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்.காம் -
பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப் என்ற அகில இந்திய அளவிலான உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மார்ச் 29 அன்று அதற்கான விழா சென்னையில் நடைபெற்றது. சிற்பி பாலசுப்பிரமணியம், ம. ராஜேந்திரன், மாலன் போன்றோரோடு நானும் அந்த விழாவில் கலந்துகொண்டு இந்திரா பார்த்தசாரதியின் எழுத்துகள் குறித்துப் பேசினேன். விருதைப் பெற்றுக்கொண்டு விழா நிறைவடையும் வரையில் (மாலை 6 முதல் இரவு 8 மணி வரை) இ.பா. மேடையில் வீற்றிருந்தது குறிப்பிடத் தக்கது. (வயது 91.) இ.பா.வின் மிக முக்கியமான கருத்துச் செறிவு நிறைந்த ஏற்புரையை அவரது மாப்பிள்ளை ராமநாதன் தங்குதடையற்ற குரலில் பிசிறில்லாமல் வாசித்தார். விழாவுக்கு இ.பா.வின் புதல்வி திருமதி பத்மாவும் வந்திருந்தார். அரங்கம் சென்னையின் முக்கியப் பிரமுகர்களால் நிறைந்திருந்தது.
இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளை ஆய்வு செய்துதான் நான் முனைவர் பட்டம் பெற்றேன். அதன்பொருட்டு அவர் நாடகங்களையும் நாவல்களையும் சிறுகதைகளையும் பலமுறை மீண்டும் மீண்டும் படித்தேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதிது புதிதான அனுபவங்களை அந்தப் படைப்புகள் கொடுத்ததுதான் ஆச்சரியம். இ.பா.வின் நாடகங்கள் மேடையேறும்போது பலமுறை பார்த்திருக்கிறேன். கே.ஏ. குணசேகரன், ராஜு, அ.ராமசாமி உள்ளிட்ட பலர் அவரது நாடகங்களை இயக்கியிருக்கிறார்கள். வசனம் இ.பா.வின் அதே வசனம்தான். ஆனால் இயக்குநரின் கண்ணோட்டத்தில் அதே வசனங்களால் ஆன அதே நாடகம் வேறு வேறு பரிமாணங்களைப் பெறுவதுதான் வியப்பு. நந்தன் கதையில் கோபாலகிருஷ்ண பாரதியார் பெரியபுராணத்தில் இல்லாத வேதியர் பாத்திரத்தைப் புகுத்தினார். அதுபோலவே நந்தன் கதையில் இ.பா. புகுத்திய புதிய பாத்திரம் அபிராமி என்ற நடனமணி. இ.பா.வின் நந்தன் கதை மேடையேறும்போது அதில் நடிக்க நடனம் தெரிந்த ஒரு நாடக நடிகை தேவைப்படுவார். ஒருமுறை நந்தன் கதை நாடகத்தில் அபிராமி பாத்திரமேற்று நடித்தவர் நடனமும் அறிந்தவரும் எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினத்தின் புதல்வியும் குமுதம் ப்ரியா கல்யாணராமனின் மனைவியுமான சகோதரி ராஜசியாமளா.





'அறிஞர் அ.ந.கந்தசாமி' என்று அவரது புலமையின் காரணமாக அழைக்கப்பட்டவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி. கலாநிதி க.கைலாசபதி அவர்களே தனது 'ஒப்பியல் இலக்கியம்'நூலை இவருக்குச் சமர்ப்பித்திருக்கின்றார். அச்சமர்ப்பணத்தின் பின்வருமாறு கூறியிருப்பார்:

ரஷ்யா-உக்ரைன் போரை ஒரு சமாதான நிலைக்கு கொண்டு வருவதில் பிரான்சின் மெக்ரோன் முதல் அமெரிக்க பைடன் வரை முயற்சி எடுத்ததாய் கூறப்பட்டாலும் அம்முயற்சிகளின் மொத்த பெறுபேறு அல்லது மொத்த உள்நோக்கம் எவ்வகைப்பட்டது - இது போரை மேலும் தூண்டிவிட திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளா அல்லது உண்மை சமாதான விருப்பம் கொண்ட பேச்சு வார்த்தைகளா என்பதெல்லாம் கேள்வி குறிகளாகின்றன. இருந்தும் இப்பின்னணியில் துருக்கியும் இஸ்ரேலும் மேற்கொண்ட முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனலாம். காரணம், மேற்படி இரு நாடுகளின் நிலைமைகளும், இப்போரால் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைக்கு தள்ளப்பட்டு, சற்றே சங்கடத்துக்குள் அமிழ்த்தப்பட்டவைதான் என்பதில் சந்தேகமில்லை.

நீண்ட நெடுநாளாக சங்க இலக்கியங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்து வந்தது. அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் வழியாக எனக்கு ஓர் அரும்பெரும் வாய்ப்பு கிட்டியது. ஆம் பாரதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் நிகழ்த்திய ஞானபாரதி விருதுக்கான நான்கு கட்ட பேச்சுப் போட்டி நடைபெற்றது. அதில் அரையிறுதிச் சுற்றில் சங்க இலக்கியங்களுள் ஒன்றான பட்டினப்பாலையையும் , நெடுநல்வாடையையும் அறியும் வாய்ப்பு கிடைத்தற்கரிய வரமாக கிடைத்தது.தமிழை வாழ்த்துவதற்கும் , வளர்ப்பதற்கும் கடின உழைப்பை உரமாக இட்டு தமிழ்த்தொண்டு ஆற்றி வரும் அமரிக்காவின் ஹூஸ்டன் பாரதி கலை மன்றத்திற்கு நிச்சயம் தமிழ் கூறும் நல்லுலகம் சார்பாக கோடி நன்றிகள்.

கையில்லா பலருள்ளார் காலில்லா பலருள்ளார்
என் முன்னைய பதிவொன்றில் க.சச்சிதானந்தன் அவர்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் எழுத்தாளர் க.சச்சிதானந்தன் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றிய முகநூல் நண்பர் கு.சரவணன் அவர்கள் " சச்சிதானந்தனை தாங்கள் எழுத்தாளர் என்று சுட்டுவது பொருத்தமற்று உள்ளது. பண்டிதர் அல்லது மதுரைபண்டிதர் என்று சுட்டுவதே சிறப்பாக அமைகின்றது" என்று கூறியிருந்தார்.




யார் இந்த சினைப்பர் வாலி? என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான ‘ஸ்னைப்பர் வாலி’ என்ற புனைப் பெயரைக் கொண்ட இவர் கனடாவின் 22வது படைப்பிரிவில் 12 வருடங்கள் கடமையாற்றியவர். உக்ரைனின் அழைப்பை ஏற்று 40 வயதான கணனி மென்பொறியியலாளரான இவர் அங்கு சென்று சுயவிருப்பத்தின் பெயரில் படையில் இணைந்திருக்கின்றார். ஸ்னைப்பர் மூலம் யாரையும் குறிபார்த்து வீழ்த்துவதில் வல்லவர். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் சேவையாற்றிபோது, ஸ்னைப்பர் தாக்குதலுக்குப் புகழ் பெற்றவர். ஒரு நாளில் சாதாரணமாக ஒரு ஸ்னைப்பர் வீரனால் ஐந்து அல்லது ஆறு பேரைத்தான் சுட்டு வீழ்த்த முடியும். ஆனால் இவர் ஒரே நாளில் 40 பேரைச்சுட்டு வீழ்த்தக்கூடிய வல்லமை படைத்தவர் என்ற புகழாரம் சூட்டப்பட்டவர். இப்போது உக்ரைனுக்கு உதவும் நோக்கத்தோடு, ரஸ்ய படையினருக்காகத் தலைநகரான கீவ்வில் தனது .338 ஸ்னைப்பர் ரைபிளுடன் வீதியில் காத்திருக்கின்றார். இவரைப் போலவே, பிரபல டென்னிஸ் வீரரான சேர்ஜி ஸ்ராகேவஸ்கியும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருக்கின்றார்.

இலங்கை வடபுலத்தில் யாழ்ப்பாணம், நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி சண்முகம் – பர்வதலக்ஷ்மி தம்பதியரின் மூத்த புதல்வனாகப் பிறந்த சபேசன், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி ஆஸ்திரேலியா மெல்பனில் மறைந்தார்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









