தொடர்நாவல்: ஒரு கல் கரைந்தபோது! (4) - ஶ்ரீராம் விக்னேஷ் (நெல்லை,, வீரவநல்லூர்) -
அத்தியாயம் நான்கு!
ஆஸ்பத்திரியிலிருந்து “டிஸ்சார்ஜ்” ஆகி, வீட்டுக்குப் புறப்படும்போது, எனக்குப் பக்கத் துணையாக ஒருஜோடி ஊன்றுகோல் தரப்பட்டது.
இரண்டு கக்கத்திலும் வைத்துக்கொண்டு உன்னி உன்னி நடப்பதுகூட எனக்குப் புது அனுபவமாகவே பட்டது.
எங்கள் வீட்டுத் தோட்டம் பூராவும் “சிட்டுக்குருவி”யாகச் சிறகடித்துப் பறந்த நான், இப்போது மாடிவீட்டு ஏழை ஆகிவிட்டேன்.
அக்காளின் ஆதிக்கம் அலை மோதியது. அம்மா நோயாளி. அத்தானோ வாயில்லாப் பூச்சி. சமையல்காரப் பையனோ மூன்றாவது மனிதனாக ஆக்கப்பட்டு விட்டான். முன்பு அவனுக்கிருந்த சுதந்திரங்களில் பல பறிக்கப்பட்டிருந்தன.
அக்காளின் மகனுக்கும், தாயின் குணம் அப்படியேயிருந்தது. பக்கத்துவீட்டுப் பையன்களுடன் விளையாடும்போது, “எங்க சித்தி இப்பிடித்தான் நடப்பாங்க….” ன்னு என்னைக் கேலி செய்து நடந்து காட்டுவது, அவனுக்கு அன்றாட பிழைப்பாக ஆகிவிட்டது.
“என் வீட்டில் எல்லாம் உண்டு…. ஆனால், எனக்கென்று எதுவும் இல்லை….” என்னும் வாசகம் எனக்கென்றே ஆக்கப்பட்டது போலாகியது.
அடிக்கடி அக்காளால் இம்சைப்படுத்தப்பட்டு, ஸ்டோர் ரூமில் அடைக்கப்படுகின்ற நிலைமைகூட , யாருக்குமே தெரியாமல் என் கவலைகளையெல்லாம் கொட்டித்தீர்த்து, கதறிக் கண்ணீர்சிந்தவும், அதனால் ஆறுதல் பெறவும் நல்லதோர் களமானது.
சாப்பாட்டைக்கூட சமையல்காரப் பையன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போவான். மற்றும், அடிப்படை வசதியெல்லாம் மாடியிலே இருப்பதை காரணம் காட்டி, கீழே வரக்கூடாது என்பதும், மேலே படியேறி மொட்டைமாடிக்குப் போகக்கூடாது என்பதும் அக்காளின் கண்டிப்பான உத்தரவு.

யன்னல் காட்சிகள் ரசிப்பதற்கு மிகவும் அழகானவை என்பதை எங்க புதிய வீட்டு யன்னலை முதல் நாள் திறந்து பார்த்த போதுதான் எனக்குத் தெரிந்தது. வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இயற்கையை தினமும் ரசிக்க வேண்டும் என்றால், யன்னல்கள் காட்சிகள் அற்புதமானவை. வெளி உலகைப் பார்ப்பதற்கு எப்பொழுதும், முக்கியமாக எங்களைப் போன்ற பெண்களுக்கு உதவியாக இந்த யன்னல்கள்தான் இருந்திருக்கின்றன.

ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலியில் இருந்து கொரனா வைரஸ் தொற்றுத் தொடர்பாகவும் தடுப்பு முறைகள் தொடர்பாகவும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்குமாறு அழைப்பு வந்தது. ஐரோப்பா வாழ் தமிழர்களிடையே கொரனா வைரஸ் விழிப்புணர்வை உருவாக்குவது உயிர்களைக் காக்கும் என நம்பி நானும் கலந்து கொண்டு நிரூபிக்கப் பட்ட விஞ்ஞான மருத்துவத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். சில வாரங்களின் பின்னர் தமிழகத்தில் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் மாரடைப்பினால் காலமானார். தடுப்பூசியை முதல் நாள் போட்டுக் கொண்டதால் விவேக் காலமானார் என சமூக வலை ஊடகங்களில் "இணையவெளி டாக்டர்கள்" நோய் நிர்ணயம் செய்ய ஆரம்பித்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் நானும் அதே ஐரோப்பிய வானொலியை செவி மடுத்த போது கோவிட் தடுப்பூசிகள் பற்றி விஞ்ஞான, மருத்துவத் தரவுகளுக்கு மாறான கற்பனைகளை ஒலி பரப்பிக் கொண்டிருந்தார்கள். இப்படியான ஒரு "சிறு பிள்ளை வேளாண்மை" நிகழ்ச்சியில் என் பெயரை இணைத்துக் கொண்டமைக்காக என்னை நானே நொந்து கொண்டு இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என யோசித்த படி இதை எழுதுகிறேன்.
உலகிலே பிறக்கின்ற மனிதரெலாம் உயர்வு நிலையினை அடைந்து விடுவதுமில்லை. இலட்சியம் பற்றிச் சிந்திக்கும் நிலை பலரிடம் காணப்படுவதும் இல்லை. பிறந்தோம் வாழுகிறோம் என்னும் பாங்கில் இருப்பவர்கள்தான் பல பேர்களாக இருக்கிறார்கள். வாழும் காலத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமல் பிரச்சினைகள் வழியில் சென்று அதனுடன் ஒத்துப்போய் இருப்பவர்களும் இருக்கிறார்கள். அதேவேளை நமக்கு ஏன் இந்தப் போராட்டம். வருகின்ற பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டு விட்டு தானாக ஒதுங்கி நமக்கேன் இந்தச் சிக்கல் ? ஒதுங்குவதுதான் மேலென எண்ணி இருப்பவர்களும் இருக்கிறார்கள். என்னதான் பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அவற்றுக்குத் தீர்வு கண்டு அந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு முற்போக்காளர்களாக சமூகச் சிந்தனையாளர்களாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
மல்லிகை இதழ் ஊடாக அதன் ஆசிரியர் டொமினிக்ஜீவா இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய தென்னிலங்கை ‘திக்குவல்லை’ யை ஒரு கணம் நினைத்தவுடன் அடுத்தடுத்து பல படைப்பாளிகளின் பெயர்கள்தான் எமது நினைவுக்கு வரும். இவர்களில் முதன்மையானவர் எம். எச். எம். ஷம்ஸ். மல்லிகை எனக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் திக்குவல்லை கமால், எனக்கு அறிமுகப்படுத்தியவர்தான் ஷம்ஸ். எனது இலக்கியப் பிரவேசத்தையடுத்து, திக்குவல்லையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரின் ‘பூ’ என்ற புதுக்கவிதைத் தொகுதியை அச்சிடுவதற்காக கமால், நீர்கொழும்புக்கு வந்தார். அவருடன் வந்தவர் ஷம்ஸ். இது நிகழ்ந்து நான்கு தசாப்தங்கள் கடந்திருக்கலாம். அப்பொழுது எனது அக்கா, பிரசவத்திற்காக வீட்டுக்கு வந்திருந்தார். பிள்ளை இன்றோ – நாளையோ பிறக்கவிருக்கும் பரபரப்பான சூழ்நிலை வீட்டிலே. கமாலையும் ஷம்ஸையும் எமது மாமா மயில்வாகனன் அவர்களின் சாந்தி அச்சகத்தில் இரவு தங்க வைத்தேன். நானும் அவர்களுடன் தரையில் பாய் விரித்து உறங்கினேன். இந்த அச்சகத்திலிருந்து 1966 ஆம் ஆண்டில் அண்ணி என்ற இலக்கிய இதழும் வெளியானது. எனது முதல் கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள், எழுத்தாளர் ஐ. சாந்தனின் ஒரே ஒரு ஊரிலே கதைத்தொகுதி மற்றும் புத்தளம் கவிஞர் தில்லையடிச்செல்வனின் விடிவெள்ளி , கவிஞர் ஈழவாணனின் அக்னி இதழ் என்பனவும் வெளியாகியிருக்கின்றன. அன்று இரவு நாம் எங்கே உறங்கினோம்? விடிவிடிய இலக்கியச் சமாதான். ஷம்ஸ் பலதரப்பட்ட இலக்கியப் புதினங்களையும் மிகுந்த நகைச்சுவை உணர்வோடு சொல்லிச் சொல்லி எங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார்.

- எழுத்தாளர் – ஊடகவியலாளர் - சமூகச்செயற்பாட்டாளர் முருகபூபதிக்கு ஜுலை 13 இல் அகவை எழுபது! அதனையொட்டி வெளியாகும் கட்டுரையிது. முருகபூபதி அவர்களுக்குப் பதிவுகள் இணைய இதழும், வாசகர்களும் தம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள். பதிவுகள் இணைய இதழுக்குத் தொடர்ச்சியாகப் பல்லாண்டுகளாகப் பங்களித்து வரும் அவருக்கு இத்தருணத்தில் நன்றியினையும் பதிவுகள் தெரிவித்துக்கொள்கின்றது. - பதிவுகள்.காம் -
சமீபத்தில் நடேசன் அவர்களின் அந்தரங்கம் சிறுகதை தொகுப்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடேசன் அவர்களை எனக்கு எப்படி தெரியும் என்று எண்ணி பார்க்கிறேன். படித்ததில் பிடித்தது என்ற ஓர் நிகழ்ச்சி, அதில் கவிஞர் சல்மா அவர்கள் வாழும் சுவடுகள் என்ற புத்தகத்தை அறிமுகம் செய்து அதை எழுதியவர் Melbourne இல் வசிப்பதாக சொன்னார். பிறகு முருகபூபதி அய்யா மூலமாக அறிமுகம் கிடைத்து நடேசன் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஓரிரு முறை பேசியுள்ளேன். ‘நைல் நதிக்கரையோரம்’ என்ற அவரது புத்தகத்தை வாசித்துள்ளேன். அந்தரங்கம் வாசித்த பிறகு அவருடைய அனைத்து எழுத்துகளையும் வாசிக்க வேண்டும் என்று எண்ணியுள்ளேன். இந்த புத்தகத்தை பற்றிய என் வாசிப்பனுபவம் அனைத்தும் முழுக்க அவரின் படைப்பின் மூலமாக நான் அடைந்ததே தவிர அவரை தெரியும் என்பதால் எழுதும் புகழுரை அல்ல.
சொகுசுக்காரில் வந்திறங்கியவள் நக்கலாய்ப் பார்த்தாள்.

முல்லைத்திணையைப் பாடுவதிலும் புனைவதிலும் வல்லமை பெற்றவர் பேயனார். முல்லை நிலம் காடும் காடுசார்ந்த பகுதிகளையுமுடையது. காடு சார்ந்தது முல்லை நிலமாதலால், இங்குப் பல்வகை மரம், செடி, கொடி ஆகிய தாவரங்கள் பசுமையோடும், செழிப்போடும் காணப்படும். இம்முல்லை நிலத்தின் வருணனைகளைப் படிக்கும்பொழுது, நிலத்தின் செழுமையும், வளமிக்க மலர்கள் மலர்ந்திருத்தலும் காட்சியளிக்கும். ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள இம்முல்லை நிலமானது மலர்களால் சூழப்பட்ட புறவாகக் காட்சிப்புனைவுகளுடன் அமைந்துள்ளது. பல்வேறு சொல்லாட்சிகளில் முல்லை நிலம் சார்ந்த வருணனைக்காட்சிகள் குறைந்த அளவே காணப்படுகின்றன. குறைவான அளவில் முல்லைபற்றிய காட்சிகள் இடம்பெற்றாலும், வருணனைகள் உரிப்பொருள் விளக்கத்திற்கு துணைநிற்கின்றன. எனவே, ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள முல்லை நிலம் பற்றிய வருணனைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
இயங்குதலே உயிரிகளின் அடிப்படை. மானுடசமூகத்தின் தொடர் இயக்கமே இன்று அதை பண்பட்ட சமூகமாக வளர்த்தெடுத்துள்ளது எனலாம். ஒரு சமூகத்தின் இயங்குநிலை பல்வேறு மரபுகளையும், பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளையும் உட்செறித்தது. அந்த இயங்குநிலைக்குத் தக்கச் சான்றாக சடங்குகள் விளங்கி வருகின்றன. ஒரு சமூகத்தின் மரபார்ந்த சடங்கின்வழி அதன் நெடிய இயக்கத்தினை அறிந்துக் கொள்ளவியலும். மேலும், சமூக இயக்கத்தின் நிலைச்சான்றாகவும் சடங்குகளைக் கொள்ளலாம். அவ்வகையில் நீலகிரியில் வாழும் பூர்வகுடி மக்களான படகர்களின் மரபார்ந்த சடங்குகளுள் ஒன்றான “உப்பு ஹட்டோது” (ஹட்டோது – ஊற்றுதல்) எனும் உப்புச் சடங்கினை இயக்கவியல் நோக்கில் ஆராய்வதை மையநோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.

ஈழத்தில் மருத்துவத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் கலை இலக்கியத்துறைகளில் ஈடுபடுவது குறைவு. தமிழ் இலக்கியத்துறையில் அவ்வாறு ஈடுபட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தவகையில் ஒருவர் மிகச் சிறப்பானவராக விளங்கினார். பாராட்டுகள் பெற்றார். புகழ்பெற்ற மருத்துவப் பேராசிரியராக விளங்கியதோடு, புகழ்பெற்ற, சிறந்த இலக்கியவாதியாக, நாடக, சினிமா நடிகராகத் திகழ்ந்தவர் டாக்டர் நந்தி என எல்லோராலும் அறியப்பட்ட செ. சிவஞானசுந்தரம் அவர்களாவார்.

நான் கல்வி கற்றது இளவாலைக் கொன்வன்ற். ஆசிரியராகப் பணியாற்றியது தலவாக்கெல்ல சென்ற் பற்றிக்ஸ் கல்லூரி. பண்டாரவளை பிந்துனுவௌ ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் எனது ஒரு வருட பயிற்சியை முடித்த பின்னர் மிகுதிக் காலப் பயிற்சியை நான் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மேற்கொண்டிருந்தேன். நாட்டு நிலை கொந்தளிப்பான நிலை. 1980களின் முற்பட்ட காலப்பகுதி அது. அவ்வேளை திரு.முல்லைமணி அவர்கள் எனது விரிவுரையாளராக இருந்தார்; என்பது பெருமை தருகின்ற விடயம். அவ்வேளையில் கவிஞர் இ.முருகையன், வேல் ஆனந்தன், வீரமணி ஐயர். புவனேஸ்வரி ராமகிருஷ்ணா, துரைராஜா, அடைக்கலமுத்து, சுவர்ணா நவரட்னம் போன்ற பலர் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றியவர்கள். அவர்களின் மாணவியாக இருந்தேன் என்பதும் பசுமையான நினைவுகளாகி வருகின்றன. அவ்வேளை திருமதி ஆனந்த குமாரசுவாமி அவர்கள்தான் அதிபராக இருந்தார்.
இது எந்த நாட்டில் நடந்தது என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எங்களுக்குப் புகலிடம் தந்து எங்களை அரவணைத்த கனடா நாட்டில்தான் நடந்திருக்கின்றது. புதைகுழிகள் என்றதும் எங்களுக்கு முதலில் ஞாபகம் வருவது தாயகத்தில் செம்மணிப் புதைகுழிதான். செம்மணியைத் தொடர்ந்து தாயகத்தில் ஏராளமான புதைகுழிகள் வரலாற்றில் பதியப்படாமல் மறைக்கப்பட்டுவிட்டன. யுத்த சூழலில் இன்னும் அனேகமான புதைகுழிகள் அடையாளம் காட்டப்படாமலே இருக்கின்றன. இரண்டு தலைமுறை போனால் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்ற நினைப்பில் எல்லாமே மூடிமறைக்கப் பட்டிருக்கின்றன. காலம்கடந்தாலும், மறைக்கப்பட்ட யுத்தகாலப் புதைகுழிகள் ஒருநாள் தோண்டப்படும் போது பல உண்மைகள் தெரிய வரலாம். ஆனால் இதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதற்குக் குற்றம் புரிந்தவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தினம் தினம் எதிர்கொள்ளும் வலியும், வேதனையும் யாருக்கும் சொல்லிப் புரியப்போவதில்லை. சொந்த மண்ணைப் பறிகொடுத்த, எங்களுக்கு ஏற்பட்ட அதே வலியைத்தான் இங்கே உள்ள முதற்குடி மக்களும் எதிர் கொள்கிறார்கள். ஆனால் இங்கு ஜனநாயக கோட்பாடுகள் பின்பற்றப்படுவதால், உண்மையை ஓரளவாவது கண்டறிய முடிகின்றது. 2008 ஆம் ஆண்டு கனடா பிரதமர் இப்படி நடந்தற்காக முதற்குடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். தற்போதய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கத்தோலிக்க திருச்சபை இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கனடிய மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் இழப்பு இழப்புத்தானே!


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









