பதிவுகள் முகப்பு

நீலகிரி படகர்கள் எனும் ஆயர்கள்! - முனைவர்.கோ.சுனில்ஜோகி -

விவரங்கள்
- முனைவர்.கோ.சுனில்ஜோகி -
ஆய்வு
04 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: முனைவர்.கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.


மானுட சமூகத்தின் இயங்கியல் வழக்காறுகளில் உறைகிறது எனலாம். வாழ்வியல் ஒழுகலாறுகளை அடியொற்றிய தகவமைப்பு, பண்பாடு மற்றும் மரபுநிலை போன்ற கூறுகளாலான வழக்காறுகள் மரபறிவின் திரட்சியாகும். ஒருவகையில், வழக்காறுகள் வரலாறுகளுக்கு அடிப்படையாகத் திகழ்வதையும், வரலாற்றைவிட மேலோங்கி நிற்பதையும் மறுப்பதற்கில்லை. நாட்டுப்புறவியல், மானுடவியல் போன்ற அனைத்து நிலையிலான ஆய்வுகளுக்கும், குறிப்பாக, மானுடவியல் ஆய்வுகளுக்கு அடிச்சரடாகத் திகழும் இவை பண்பாட்டின் தொகைநிலையெனலாம். அவ்வகையில், ஆயர்வாழ்வியலின் களஞ்சியமாகத் திகழும் திருப்பாவையில் இன்றும் வழக்கிலுள்ள சில ஆயர் வழக்காறுகளை இக்கட்டுரை ஆய்கிறது.

திருப்பாவையின் களம் ஆயர்பாடியாகும். அதில் ஆயர்களின் பல்வேறு வழக்காறுகள் செறிந்துள்ளன. ஆயர்ச் சமூகத்தைக் கூர்ந்த கள ஆய்வின் விளைவாக எழுந்த இலக்கியமாக இதைத் துணியலாம். அதோடு, இதில் இடம்பெறும் சில ஆயர் வழக்காறுகள் சங்கம்தொட்டு வழக்கிலிருப்பவை. அதனைச் சங்க, ஆயர்ச் சமூகத்தின் தொடர்ச்சியாகவும் அச்சமூகத்தின் நெடிய பண்பாட்டினை, மரபினை வெளிப்படுத்தும் நிலைக்களன்களாகவும் கொள்ளலாம். அவ்வகையில், ஆய்வின் எல்லைகருதி, திருப்பாவையில் இடம்பெறும் ‘சிறுவீடு’, ‘காசும் பிறப்பும்’ ஆகிய தொன்மையான ஆயர் வழக்காறுகளை நீலகிரியில் வாழ்கின்ற ஆயர்களான ‘படகர்’ இனமக்களின் வழக்காறுகளுடன் இணைத்து இக்கட்டுரை ஆய்கிறது.

படகர்கள் எனும் ஆயர்கள்

நீலகிரியில் வாழ்கின்ற படகர்கள் ஆயர்கள் என்பதை அவர்களின் ‘படகா’ எனும் பெயரே சான்றுபகர்கின்றது. ஆயர் என்பதும் ஆயர்பாடி என்பது எவ்வாறு ஆநிரை வாழ்வினைச் சுட்டுகின்றதோ அதேபோல, ‘பண்டுகா’ எனும் சொல்லிலிருந்து உருவான ‘படகா’ எனும் சொல்லும் ஆயர் வாழ்வியலை உணர்த்துகின்றது. படகர்களின் மொழியான ‘படுகு’ மொழியில் ‘பண்டா’ எனும் சொல் மந்தைகளை, குறிப்பாக எருமை மந்தைகளைக் குறிக்கிறது. எருமை மந்தைகளைப் பேணுபவர்கள், எருமை மந்தைகளை உடையவர்கள் எனும் அடிப்படையில் இவர்களின் வாழ்வியலை இப்பெயர் குறித்து நிற்கின்றது. அதற்கேற்பவே, அவர்களின் வாழ்வியலிலும் எண்ணற்ற எருமைகள் சார்ந்த வழக்காறுகள் விரவியுள்ளன. சான்றாக அவர்களின் வாழ்வியலை வரையறுக்கும் “பண்டா பதுக்கு” எனும் இணைச்சொல்லினைக் கருதலாம். இதில் ‘பதுக்கு’ எனும் சொல்லிற்கு வாழ்வு என்றும் ‘பண்டா’ என்பதற்கு ஏற்கனவே கண்டதுபோல எருமை மந்தையென்றும் பொருள். அதாவது, எருமை மந்தைகளே வாழ்வு என்பதை இது சுட்டுகின்றது.

மேலும் படிக்க ...

அரங்க முகாமைத்துவம் : நாடக தயாரிப்பு திட்டங்கள் அடிப்படையில் மாணவரை நிர்வகித்தல்! - பா.பிரதாரிணி -

விவரங்கள்
- பா.பிரதாரிணி -
ஆய்வு
03 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்



அறிமுகம்

மலையக தமிழ் சமூகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடானது சில பாடசாலைகளில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. இந்நிலையில் மாணவர்களிடம் நாடக தயாரிப்பு நெறிமுறைகளும் முகாமைத்துவ நடவடிக்கைகளும் மிகக் குறைவாகவே உள்ளது. நாடகத்தில் தயாப்பு முகாமைத்துவ விடயங்களை உட்புகுத்தி காத்திரமான நாடகத்தினூடாக சிறந்த அரங்க நிர்வாகிகளை வெளிக்கொணர முடியும்.

அதாவது, நாடகமானது மனித நேயத்தைப் போல மிக பழைமையானது. நீண்ட கால கலாச்சார மரபு மற்றும் அணுகுமுறைகளால் பாதிக்கப்பட்ட அன்றாட நடவடிக்கைகளிலிருந்து அனைத்து நாடக நடவடிக்கைகளும் உருவாகின. கலாச்சாரத்தின் மறுநிகழ்வு கலை என்பதை நாடகம் உணர்த்துகின்றது. அரங்கானது மனித வாழ்வியலை கற்பிக்கும் ஒரு பாடமாகும். அரங்கானது சமூக சிந்தனைக்கும் சமூக ஒருங்கு சேரலுக்கு அமையவும் வளர்ச்சியடைகின்றது. சமூக பண்பாட்டில் இன்றியமையாத நிறுவனங்களில் ஒன்று நடிப்பும் பார்வையும் என்று நோக்கி வந்த முறைமைக்கு மாறாக நாடகம் இன்று புதிய அர்த்தங்களை வேண்டி நிற்கின்றது. நாடகம் மனிதனை, மனித உணர்வுகளை, முரண்பாடுகளை, சிக்கல்களை, போராட்டங்களை விளங்கிக் கொள்வதற்கான ஒரு முகாமைத்துவ வகையாகவும் விளங்குகின்றது.

மேலும் படிக்க ...

எழுத்தாளர் தாமரைச்செல்வியின் படைப்புலகம் பற்றிய எனது பார்வை! - பவானி சற்குணசெல்வம் ( நெதர்லாந்து) -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் ( நெதர்லாந்து) -
இலக்கியம்
03 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                           [ எழுத்தாளர் தாமரைச்செல்வி]

ஈழத்து வன்னிப் பிரதேச எழுத்தாளர்களுள் தனித்துவமான படைப்பாளுமையாகத் திகழ்பவர் தாமரைச்செல்வி. சிறுகதை, நாவல் ஆகிய இரு இலக்கிய வடிவங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள அவர், ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றில் அழியாத தடம் பதித்தவராக விளங்குகிறார். அவரது படைப்புகள் வெறும் கற்பனைச் சித்திரங்களாக அல்லாது, காலத்தின் சமூகச் சுவடுகளையும் மக்களின் வாழ்வியலையும் பதிவு செய்த ஆவணங்களாக அமைந்துள்ளன.

தாமரைச்செல்வியின் படைப்புலகின் மையத்தில் மனிதனே நிற்கிறான். குறிப்பாக, தன்னுடன் வாழ்ந்தவர்கள், தன் கண்முன் துன்பங்களைச் சுமந்தவர்கள், போராலும் இடம்பெயர்வாலும் வாழ்வியல் சிக்கல்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் வாழ்க்கை அனுபவங்களே அவரது எழுத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ளன. இதனால் அவரது கதைகள் வாசகர்களுக்கு மிக நெருக்கமானதாகவும் இயல்பானதாகவும் தோன்றுகின்றன. அவர் காட்டும் உலகிற்குள் வாசகன் எளிதில் நுழைந்து, கதாபாத்திரங்களோடு பயணித்து, அவர்களின் துயரங்களையும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்கிறான்.
அவரது கதைகளை வாசித்து முடிக்கும் போது மனம் கனக்காமல் இருப்பது அரிது. கண்ணீரை வரவழைக்கும் வலிமை அவரது எழுத்தின் தனிச்சிறப்பாகும். ஆனால் அந்தக் கண்ணீர் வெறும் துயரத்தின் வெளிப்பாடு அல்ல; அது மனித நேயத்தின் சாட்சியும் கூட. இது அவரது படைப்பாற்றலின் முக்கியமான அடையாளமும் ஆகும்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இலக்கியப் பணியில் ஈடுபட்டு வரும் தாமரைச்செல்வி, தொடக்கக் காலத்தில் காணப்பட்ட அதே உற்சாகத்துடனும் படைப்புத் திறனுடனும் இன்றும் இயங்கி வருகிறார். காலம் மாறினாலும் அவரது எழுத்தின் இளமை மாறவில்லை. வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை உணர்ந்து அவற்றை இலக்கிய வடிவமாக்கும் ஆற்றல் இன்னும் அவரிடம் உயிர்ப்புடன் உள்ளது.

மேலும் படிக்க ...

டிஜிட்டல் காலனியத்துவமும் 'தரவுமயமாக்கலுக்கு' எதிரான உடலும்: மஹ்மூத் தர்வீஷின் கவிதை வெளிவழியே ஓர் அல்காரித எதிர்ப்பு மெய்யியல் ஆய்வு! - ஏ.எச்.எம் நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம் நவாஷ் (ஈழக்கவி) -
ஆய்வு
02 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சுருக்கம் (Abstract)

இக்கட்டுரை, மஹ்மூத் தர்வீஷின் ‘அடையாள அட்டை’ (1964) கவிதையை, சமகால டிஜிட்டல் காலனியத்துவம் மற்றும் தரவு ஏகாதிபத்தியக் (Data Imperialism) கோட்பாடுகளின் வழி ஒரு தீர்க்கதரிசனப் பிரதியாக (Prophetic Text) மறுவாசிப்பு செய்கிறது. நவீன ஆக்கிரமிப்பு அரசுகள், ஒடுக்கப்பட்ட குடிகளை வெறும் புள்ளிவிவரங்களாகவும், பயோ-மெட்ரிக் தரவுகளாகவும் சுருக்கி ஆளும் 'அல்காரிதக் கண்காணிப்பை' (Algorithmic Surveillance) இக்கவிதை எவ்வாறு அறுபது ஆண்டுகளுக்கு முன்பே மொழிரீதியாக எதிர்கொண்டது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது. ஷோஷனா ஜூபோஃப்பின் ‘கண்காணிப்பு முதலாளித்துவம்’ (Surveillance Capitalism), அகிலெ எம்பெம்பேயின் ‘மரண அரசியல்’ (Necropolitics), மற்றும் ஜார்ஜியோ அகம்பனின் ‘வெற்று உயிர்’ (Bare Life) ஆகிய கோட்பாடுகளின் துணையோடு, தர்வீஷின் ‘அடையாள அட்டை எண் ஐம்பதாயிரம்’ என்ற வரிகள், மனித உடலைத் தரவுமயமாக்கலுக்கு (Datafication) உட்படுத்தும் நவீனத் தொழில்நுட்ப வன்முறைக்கு எதிரான ஓர் இருத்தலியல் தற்காப்புப் பிரகடனம் என்பது இங்கு நிறுவப்படுகிறது.

மஹ்மூத் தர்வீஷின் கவிதைகள் பற்றி உலகளாவிய கல்வித்துறையில் இதுவரை விரிவாக ஆராயப்படாத, தமிழ் மற்றும் சர்வதேசச் சூழலுக்கு முற்றிலும் புதிய நான்கு அதிநவீனக் கருத்தியல் கோட்பாடுகளை (Emerging Research Paradigms) இங்கு முன்வைக்கிறேன்.

இவை தர்வீஷின் பிரதிகளுக்கு முற்றிலும் புதிய தத்துவார்த்த ஒளியை வழங்கும்:

I. நரம்பியல்-அழகியலும் அதிர்ச்சி நினைவகமும் (Neuro-Aesthetics and Trauma Memory)

இதுவரை தர்வீஷின் கவிதைகள் அரசியல் அல்லது சமூகவியல் நோக்கில் மட்டுமே பார்க்கப்பட்டன. ஆனால், ‘அதிர்ச்சி சார் ஆய்வுகள்’ (Trauma Studies) மற்றும் மூளை-அழகியல் (Neuro-Aesthetics) வழி இதனை அணுகலாம்.

மேலும் படிக்க ...

பெண்ணுரிமைப் புரட்சி: பாரதியாரும் பாரதிதாசனும்! - முனைவர் அ. கார்வண்ணன்

விவரங்கள்
- முனைவர் அ. கார்வண்ணன் -
ஆய்வு
02 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்:  முனைவர் அ. கார்வண்ணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, சென்னை – 600061. 


முன்னுரை

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் சமூகம் அடைந்த மறுமலர்ச்சியில் பெண்ணுரிமையும் சமூக விடுதலையும் பிரிக்க முடியாத இரு பெரும் கூறுகளாக விளங்கின. காலங்காலமாக ஆணாதிக்கச் சமூக அமைப்பிலும் வைதிகச் சடங்குகளிலும் கட்டுண்டு கிடந்த பெண்ணினத்தை விடுவிப்பதில், மகாகவி சுப்பிரமணிய பாரதியும் அவரது வழியைப் பின்பற்றிப் புரட்சிகரக் கருத்துகளை படைத்த பாவேந்தர் பாரதிதாசனும் ஆற்றிய பங்களிப்பு ஒப்பற்றது. பாரதி தேசிய மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளின் பின்னணியில் பெண்ணுரிமையைப் பாடினார். அவரைத் தொடர்ந்து, பாரதிதாசன் தந்தை பெரியாரின் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு இயக்கத்தின் பின்னணியில் ஜாதி ஒழிப்பையும் பெண்ணுரிமையையும் இணைத்துப் புரட்சிக் கருத்துகளை முன்வைத்தார். எனவே, இவ்விரு ஆளுமைகளின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் மற்றும் சமூக விடுதலைப் பங்களிப்புகள் குறித்தும் அவற்றுள் நிலவிய கோட்பாட்டு முரண்பாடுகள் குறித்தும் ஆரய்வது இக்கட்டுரையின் நோக்கமாகிறது. பாரதி கண்ட புதுமைப் பெண்

சமூக, அரசியல், பொருளாதார விடுதலைகளுக்கு இணையாகப் பெண் விடுதலைக்கும் பாரதியார் முதன்மை இடமளித்தார். பெண்களை வெறும் இல்லறப் பொருளாக மட்டுமே பார்த்த சமூகப் பார்வையை மாற்றி, அவர்களைச் 'சக்தி' வடிவமாகவும், தேசத்தின் உன்னதமான மனிதர்களாகவும் நிலைநிறுத்துவதற்கான முயற்சியை அவர் தனது படைப்புக்களின் வழி வெளிப்படுத்தினார்.

மேலும் படிக்க ...

நான் உன்னிமேனனின் குரலுக்கு அடிமை! - ஊர்க்குருவி -

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
02 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நான் உன்னிமேனனின் குரலுக்கு அடிமை என்று கூறிக்கொள்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் எனக்கு இல்லை. 

இதயத்தை வருடிச் செல்லும் அவரது குரல் கேட்பவர்  மனத்தைச் சாந்தப்படுத்தும், இதமாக்கும் சக்தி மிக்கது.

'வருசமெல்லாம் வசந்தம்' என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடலை ஒரு தடவை கண்களை மூடிக்கொண்டு கேட்டுப்பாருங்கள்.  நான்  கூறுவதன் அர்த்தம் புரியும்.

நடிகர் மனோஜ்ஜின் ஒரேயொரு ஹிட் திரைப்படம் 'வருசமெல்லாம் வசந்தம்'.  அவர் இன்னும் நீண்ட  காலம் இருந்திருக்கலாம் என்று இப்பாடலைக் கேட்கும் சமயங்களில் எண்ணுவதுண்டு. அவரது அமைதியான நடிப்பும், அப்பாவித்தனமான சிரிப்பும் என்னைக் கவர்ந்தவை.

இசை - சிர்பி. பாடல் வரிகள் - ஆர்.ரவிசங்கர்.  பாடலாசிரியரும் அமரராகி விட்டார்.

மேலும் படிக்க ...

சிங்கத்தின் கண்கள்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
01 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சிங்கங்கள் தொடர்பான பல்வேறு வர்ணனைகள் உண்டு. ஆபிரிக்க காட்டு சிங்கங்கள் கருத்தை கவருவன. அவற்றின் கண்கள், போத்தல்களின் கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டவை போன்றவை. பாவமற்றவை. சிங்கங்களை எதிர்கொள்ள நேர்ந்தால், அவற்றின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட வேண்டும் என்ற அறிவுரையும் காணப்படுகின்றது. ஆனால், மிருகங்களில் கண்களை கொண்டே, மனிதன், அவற்றின் அடுத்த கட்ட நகர்வுகளைக் கணிக்க சாபம் கொண்டுள்ளான். எனவேதான், சிங்கங்களின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்ப்பது என்பது முடியாத காரியமாகிறது.

இதுபோலவே, என் வாழ்நாளில், நான் சந்தித்த ஒருவன் உள்ளான் எனலாம். ஆம். அவனது கண்களும் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டவை போன்று பாவமற்றுக் கிடப்பன. இக் கண்களின் பின்னால் யாது நடக்கின்றது? இவனது சிந்தனை எப்படிப்பட்டது? எதுவுமே தெரியாது. ஆனால், இறுதிக் கணிப்பில் தனக்கேற்ற சரியான இரையை இவன் கவ்வி, தேர்ந்து கொள்ளுகின்றார்னே என்பது முடிந்த முடிபாகின்றது. விட்டுத் தராதவர்கள் இவனைப் போன்றவர்கள். தமது இரையின் சரியான பெறுமானத்தை மிக சரியாக கணித்து கொள்கின்றார்கள். இதற்காக இவர்கள், மயிர் கூச்செறியும் வகையில் போராடச் செய்கின்றார்கள். இவை அனைத்தும் இந்தச் சிங்க கண்களின் ஒரு பக்கம்.

மற்ற பக்கம் விரிகின்றது. இப்படிப்பட்ட சிங்கங்களை பாதுகாப்பது எமது கடமையில்லையா? கடமைத்தான். ஆனால், இந்த கடமையும் ஒரு வரையரைக்கு உட்பட்டதுதான். வானத்தை அண்ணாந்து பார்வையிடும் சிங்கங்களின் சிந்தனையில், எந்த தருணத்தில் பாயலாம் - யாரின் குரல்வளையை நெறித்து, பற்களால் குதறி ரத்தத்தை உறிஞ்சலாம் போன்ற சிந்தனைகள் அடங்கக் கூடும். கணநேரத்தில், இவர்களின் சாது தோற்றங்களின் நடந்தேறும் இந்த ரசாயன மாற்றம், பிரமிக்கத்தக்கதே.

மேலும் படிக்க ...

கனடாவில் ஊடகவியலாளர் நந்தன வீரரத்னவின் 'கறுப்பு ஜூலை' நூல் வெளியீடு! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் =
வ.ந.கிரிதரன் பக்கம்
01 ஜூலை 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                       [ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன]

அண்மையில் ஸ்கார்பரோ,கனடாவில் ஊடகவியலாளர் நந்தன வீரரத்னவின் 'கறுப்பு ஜூலை' என்னும் சிங்கள நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு (சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், அரசியல் ஆய்வாளருமான செல்லையா மனோரஞ்சனால் செய்யப்பட்டது) பற்றிய கலந்துரையாடல் 'கனேடிய இலங்கை மன்ற'த்திm ஏற்பாட்டில் நடைபெற்றது. சமூக, அரசியற் செயற்பாட்டாளர் லோ.மதியழகன் நெறிப்படுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் பேச்சாளர்களாக சமூக,ம் அரசியற் செயற்பாட்டாளர் சிவா முருகுப்பிள்ளை, ஊடகவியலாளர் வடிவேல் தேவராஜ், அரசியல் ஆய்வாளர் மனோரஞ்சன் செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்குச் செல்ல விரும்பியிருந்தேன். இறுதியில் தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்ல முடியவில்லை.ஆனால் அந்தக் குறையினைத் 'தடயத்தார்' கிருபா கந்தையா தீர்த்து வைத்தார். அந்நிகழ்வைக் காணொளியாகப் பதிவு செய்து, தனது 'தடயத்தார்' யு டியூப் சானலில் பகிருந்திருந்தார். அவருக்கு என் நன்றி. இவ்விதம் இங்கு நடைபெறும் சமூக,கலை, இலக்கிய & அரசியல் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி வரும் அவர்தம் பணி போற்றுதற்குரியது.

அந்நிகழ்வின் ஆரம்பத்தில் நூலாசிரியர் நந்தன வீரரத்ன மெய்நிகர் வழியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் உரையினைத் தமிழில் வழங்கினார் மனோரஞ்சன் செல்லையா. நந்தன வீரரத்தினவின் உரை பற்றிய எனது கருத்துகளே இப்பதிவு.

மேலும் படிக்க ...

பறத்தலை நிறுத்திய வானம்பாடி: கவிஞர் புவியரசு மறைந்தார்!

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
இலக்கியம்
30 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வானம்பாடி கவிதை இயக்கத்தின் பிதாமகன் என அழைக்கப்படுபவரும், கவிஞரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான கவிஞர் புவியரசு அவர்கள் தனது தொண்ணூற்றாறாவது வயதில் மறைந்த செய்தியினை அறிந்தேன். மூப்பின் காரணமாக மறைந்த மார்க்சியவாதியான கவிஞர் புவியரசுவின் மறைவு  தவிர்க்க முடியாதது என்றாலும் பேரிழப்பே. அவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

அவர் நினைவாக , முகநூலில் கலை,இலக்கிய விமர்சகரும், கவிஞருமான இந்திரன் அவர்கள் பகிர்ந்திருந்த கவியரசர் புவியரசு பற்றிய ஆவணத்திரைப்படத்துக்கான இணைய இணைப்பை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன் - https://youtu.be/voUc3CTs4lI

அத்துடன்  கவிஞரின் மொழிபெயர்ப்பில் வெளியான கரமசோவ் சகோதரர்கள் பற்றி நான் முன்பு எழுதியிருந்த குறிப்பினையும். அவர் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பினையும்  பகிர்ந்து கொள்கின்றோம். 

மேலும் படிக்க ...

பாரதிராஜா! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
26 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாரதிராஜா என்று தமிழ் திரைப்பட உலகில் சாதனை படைத்தவன் மறைந்து விட்டான். கிட்டத்தட்ட 49 வருடங்களின் முன்னர், 1977இல் “16 வயதினிலே” என்ற படத்திற்கூடாக தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்த பாரதிராஜா தனது காலப் பகுதியில் சில பிரமாண்டங்களை தராமல் இருக்கவில்லை. இதற்கான ஒரு காரணம் அன்று இருந்திருக்கக்கூடிய காலச் சூழல் என்பதும் நீதியரசர் பகவதி கூட பொது நல வழக்கு (Public Interest Litigation) என்ற கருத்தாக்கத்தை இக்காலத்திலேயே அறிமுகம் செய்தார் என்பதும் குறிக்கத்தக்கது. ஆதலால் இது தற்செயல் அல்ல என புரிவது பொதுவில் சிறப்பானது.

“அலைகள் ஓய்வதில்லை” (1981) தனது முக்கிய படம் என பாரதிராஜா வரையறுப்பார். தேசிய விருது பெற்ற “முதல் மரியாதை''யைத் தாண்டி (1985) அவர் இப்படத்தை தேர்வது இவரது சிறப்பம்சம். “அலைகள் ஓய்வதில்லை” படத்தின் தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தபோது அவரை சந்திக்க வந்த முக்கிய அமைச்சர்களில் ஒருவர் இவர் மனக்கண்களில் வடித்து வைத்திருக்கும் முஸ்லீம் பெண் கதாப்பாத்திரத்தை மட்டும் எடுத்துவிடக்  கோருவார். “முஸ்லிம்- இந்து விவகாரத்தை நீங்கள் தொடாதீர்கள்… என்பது அவர் விடுத்த வேண்டுகோள்” எனக் கூறுவார் பாரதிராஜா.

தனது 16 வயதினிலேக்கு பிறகு தனது கால்களை ஓரளவு உறுதியாக தமிழ் திரைப்பட உலகில் பதித்துக் கொண்ட பாரதிராஜா “அலைகள் ஓய்வதில்லை” என்ற படத்தின் மூலமே புரையோடி போயிருந்த முஸ்லிம்-இந்து உறவுகளை சீர்படுத்தும் விதத்தில் செயல்படலானார். முஸ்லிம்-இந்து என்ற இரண்டு வெவ்வேறு மதங்களை சார்ந்த இரு பதின் வயது இளசுகளிடையே தோன்றும் காதல் குறித்தும் இறுதியில் இவ்விளசுகள் இருவருமே தத்தமது மத அடையாளங்களை தூக்கி எறியும் காட்சிகளையும் பிரதானமாக படம் பிடிக்க திட்டமிட்டு இருந்ததாகக் கூறுவார்:

“இறுதியில் அந்த முஸ்லிம் பெண் தனது பர்தாவை அப்படியே கழற்றி தூக்கி எறிவதாக நான் கற்பனை செய்து வைத்திருந்தேன். அதை கற்பனையிலேயே வடிவமைத்தும் இருந்தேன். ஆனால் அமைச்சரின் இந்த கோரிக்கைகயை என்னால் தட்டிக் கழிக்க முடியவில்லை… படம் வெளிவந்தாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்ததேன்…இறுதியில் இந்த முரணை ஒரு இந்து-கிறிஸ்தவ முரணாக மாற்றிக் கொண்டேன்…”

இது அவரது காலம் முழுவதும் தொடர்ந்த ஒரு கதையாகின்றது. அதாவது ஆதிக்க சக்திகள்  கலைஞன் ஒருவனை  வாங்குவதும் சிதைப்பதும்,  உருவகப்படுத்தி தமக்கேற்ற வகையில் உருவாக்குவதும் இச்சமூகம் கூறும் விடயமாகின்றது.

மேலும் படிக்க ...

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களும் கற்குவையும்! - முனைவர் ஆ. சந்திரன் -

விவரங்கள்
- முனைவர் ஆ. சந்திரன்-
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
26 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* கட்டுரையாளர்: முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் 


திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.சந்திரன் ஆய்வாளர் திரு. உதயமூர்த்தி களாய்வு மேற்கொண்டனர். அப்போது நெல்லிவாசல் நாட்டு வனப்பகுதியில் இரு நடுகற்கள் மற்றும் ஒரு கல்குவையை அரை கிலோமீட்டர் இடைவெளியில் அடையாளம் கண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை நெல்லிவாசல் நாட்டு வனப்பகுதியில் கிழக்குப் பார்த்தவாறு இரு நடுகற்கள் உள்ளன. அவை நெல்லிவாசல் நாட்டு வனப்பகுதி எல்லையில் இருந்து இரண்டு கிலோமிட்டர் தொலைவிலும் சிங்காரப்பேட்டையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளன. அவற்றில் இடப்பக்கம் உள்ள நடுகல்  மூன்றடி உயரமும் இரண்டே முக்கால் அடி அகலமும் கொண்டதாக உள்ளது. அந்த நடுகல்லில் ஒரு வீரன் நேராக நின்றவாறு இருக்கிறான். அவனது இடதுகால் முன்னோக்கி நிலத்தில் ஊன்றி நிற்கிறது. வலது கால் இடதுகாலை நோக்கியவாறு உள்ளது. வலது கையில் கூர்மையான வாளை வைத்துள்ளான். இடையில் இடைக்கச்சையும் கழுத்தில் அணிகளும் காணப்படுகின்றன. நடுகல்லின் மேல் மற்றும் இடது பகுதி உடைந்துள்ளதால் அவனது இடது கையில் என்ன வைத்திருந்தான் என்று தெரியவில்லை. அவ்வீரனுக்கு வலப்புறமாக ஒரு காட்டு மாட்டின் உருவம் ஒன்று சிறிய அளவில் உள்ளது. அது அவ்வீரனைத் தாக்குவதாக உள்ளது.   

மேலும் படிக்க ...

ஈழத்து எழுத்தாளர் முல்லை அமுதனின் வாழ்வும் பணிகளும்! - முனைவர் சு.சோமசுந்தரி, ஆய்வறிஞர் -

விவரங்கள்
- முனைவர் சு.சோமசுந்தரி -
ஆய்வு
26 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

                      [எழுத்தாளர் முல்லை அமுதன் ]

மகேந்திரன் இரத்தினசபாபதி என்ற முல்லை அமுதன் அவர்கள் இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். கவிதை, சிறுகதை, நாவல், இதழாளர் என பல துறைகளில் கால்பதித்துத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். தொடர்ந்து இலண்டனின் காற்றுவெளி இதழை வெளியிட்டு வருகின்றார். இவரது இலக்கியப்பயணம் உலகளாவிய நிலையில் பல படைப்பாளர்களையும் படைப்புகளையும் வெளிக்கொணர்ந்திருக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.

முல்லை அமுதன் பிறப்பு

இலங்கையின் யாழ்ப்பாணம் கல்லியங்காட்டில் 27.08.1954ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது தந்தை இரத்தினசபாபதி. தாய் வேதவல்லி. இவர் திருகோணமலை மெதடிஸ்ற் தமிழ் வித்தியாலயம், யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். மகேந்திரன் அவர்கள் எழுத ஆரம்பிக்கும்போது புனைபெயராக முல்லை அமுதன் என்ற பெயரை வைத்துக்கொண்டார். காலப்போக்கில் அப்பெயரே நிலைபெற்றுவிட்டது.

முல்லை அமுதன் அவர்களின் படைப்புகள்

முல்லை அமுதன் அவர்கள் நித்தியகல்யாணி, புதிய அடிமைகள், விடியத் துடிக்கும் ராத்திரிகள், விழுதுகள் மண்ணைத்தொடும், யுத்த காண்டம், இசைக்குள் அடங்காத பாடல்கள், இன்று என் வீடு அழகாய் இல்லை ஆகிய கவிதை நூல்களையும் விமோசனம் நாளை, பட்டங்கள் சுமக்கின்றான், ஆத்மா, சிநேகம், யாகம் ஆகிய நாவல்களையும் இலக்கியப்பூக்கள்  என்னும் இலங்கைத் தமிழ் இலக்கிய ஆளுமைகள் பற்றிய தொகுப்பு நூல்கள் இரண்டையும்,  எழுத்தாளர் விபரத்திரட்டு என்ற ஆவண நூலையும் தாமரைத்தீவானின் மொழிநூறு, சுதந்திரன் கவிதைகள் உள்ளிட்ட பிற நூல்களையும் வெளியிட்டுள்ளார். வாழு வாழவிடு, சந்தியில் நில்லாதே, சந்தி சிரிக்கிறது, நல்லமுடிவு, மலராத வாழ்வு ஆகிய நாடகங்களை எழுதியுள்ளார். ஆண்டுதோறும் இங்கிலாந்தில் ஈழத்து எழுத்தாளர்களுக்கான நூல் கண்காட்சியை நடத்துவதோடு, காற்றுவெளி  இதழையும் வெளியிட்டு வருகின்றார். ஈழத்து நூல்களை ஆவணப்படுத்தியும் வருகின்றார்.

மேலும் படிக்க ...

மியன்மார் நாட்டில் தமிழ் இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சி! - கார்த்திக் , மியன்மார் -

விவரங்கள்
- கார்த்திக் ஜெயபால் , மியன்மார் -
நிகழ்வுகள்
22 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[ பயிற்றுவிக்கும் தமிழ் உதவிப்பேராசிரியர் ஜெ.கார்த்திக்]

சுமார் 20 இலட்சம் தமிழர்கள் வாழும் மியன்மார் நாட்டில் தமிழ்மொழிப்பயன்பாடும் தமிழ்க்கல்வியும் இராணுவ ஆட்சியினால் நிச்சயமற்ற சூழலில் இருந்துவருகிறது. இந்நிலையில், அங்குள்ள பல்வேறு அமைப்புகளும், தன்னார்வலர்களும் இத்தகைய சூழலை மாற்ற பெரு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் மியன்மாரில் இலக்கியப்படைப்புகள் வெளிவருவது அருகியுள்ள சூழலில், மியன்மாரிலுள்ள யாங்கோன் பகுதியில் செயல்படும் தமிழர் அறநெறிக்கழகம், தமிழ் இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சியை மாணவர்களிடமும் தமிழாசிரியர்களிடமும் கொண்டுசெல்வதற்கு முனைந்துவருகிறது. குறிப்பாக, தமிழர் அறநெறிக்கழகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்டப் பள்ளி மாணவர்கள் 20பேருக்கு கடந்த ஜூன் மாதம் 6 முதல் 11ஆம் தேதிவரையிலான 6 நாட்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் உதவிப்பேராசிரியர் ஜெ.கார்த்திக் தமிழ்மொழி மற்றும் இலக்கியப்பயிற்சிகளை வழங்கினார்.

பயிற்சி முடித்த தமிழ் மாணவர்களின் முதல் இலக்கியப் படைப்புகள் ’என்மொழி’ என்னும் சிறப்பிதழில் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மியன்மார் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இலக்கணம் செவ்விலக்கியப் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் மியன்மார் நாட்டின் தமிழ்க்கல்விச்சூழல் குறித்த கருத்தரங்கமும் நிகழ்த்தப்பெற்றன.

மேலும் படிக்க ...

சூழலியல் சமநிலை நோக்கில் நீலகிரி படகர்களின் ‘கரு ஹரசோது’ சடங்கு! - முனைவர் கோ.சுனில்ஜோகி -

விவரங்கள்
- முனைவர் கோ.சுனில்ஜோகி -
ஆய்வு
22 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

    [படகர்களின் ‘கரு ஹரசோது’ சடங்கு]

* கட்டுரையாளர்: முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -


செயற்கை நுண்ணறிவின் ஆளுகையில் உலகம் உழலுகின்ற இன்றும் இயற்கைகென்று மாறாத இயல்புண்டு; தரமுண்டு. இதை உயிரிகளால், குறிப்பாக மனிதனால் ஆக்க முடியாது. ஆக்க முயற்சித்தாலும் அதன் தன்மை இயற்கையில் கிளைத்ததுபோல் இராது எனும் கோட்பாடு உயிர்த்திருக்கிறது. இக்கோட்டை நன்னூலாரின் “இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்” (நன். சொல். நூ. 404) எனும் சூத்திரத்தோடு ஒப்புநோக்கி மேலும் விளங்கிக்கொள்ளலாம். இயற்கைசார் பயன்பாட்டுநிலையார்ந்து மற்றெல்லா உயிரிகளுக்கு இயற்கையிலேயே விரவியிருந்த சூழலியல் சமநிலைப் பேணலிருந்து பகுத்தறியும் அறிவைக்கொண்ட மனிதன் பெரிதும் விலகியிருந்தான். அவனின் மனமானது விலங்குநிலை மனதிலிருந்து நனவிலிநிலை, நனவுநிலை என்று பரிணாம வளர்ச்சியுற்றது மானுட சமூகத்திற்கு ஏற்றம் தந்தாலும் சூழல்சார்ந்து பெருமளவில் சுயநலத்தையே விளைத்தது எனலாம். ஆனால், தன் வாழ்வியல் தகவமைப்பில் இயற்கையை நன்றாகப் புரிந்துகொண்ட இனக்குழு சமூகங்களிடையே இயற்கை எல்லோருக்குமானது எனும் சூழலியல் சமநிலைக் குறித்த தெளிவும், பிரஞ்ஞையும் மிகுந்திருந்தது. இயற்கையின் துணையின்றி வாழவியலாது எனும் தெளிவிருந்தது. அது அடுத்த தலைமுறைக்கும் செல்லவேண்டுமென்ற அக்கறையிருந்தது எனலாம்.

இயற்கையை உய்த்துணர்ந்து அதை வணங்கவும், வசப்படுத்தவும் இனக்குழு சமூகங்கள் உருவாக்கிய சடங்குகள் சூழல் பன்மியத்தையும், பேணலையுமே பெரிதும் வலியுறுத்துகின்றன. அதிலும், அச்சடங்கியல்சார்ந்த வாய்மொழி வழக்காறுகளின் தலைநோக்கமும் அதுவாகவே இருந்தது எனலாம். அவ்வகையில், நீலகிரியில் வாழ்கின்ற படகர் இனமக்களின் மரபார்ந்த சடங்கான “கரு ஹரசோது” எனும் இறப்புச் சடங்கும் சூழல் சமநிலையை அறிவுறுத்தலையும், பேணுதலையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சடங்குசார்ந்த புரிதலுக்குப் படகர்கள் குறித்த சிறு அறிமுகம் அடிப்படையானதாகும்.

மேலும் படிக்க ...

எழுத்தாளர்களும் EMPATHYயும்! - லதா ராமகிருஷ்ணன் (பொருளாளர், WELFARE FOUNDATION OF THE BLIND) -

விவரங்கள்
- லதா ராமகிருஷ்ணன் -
லதா ராமகிருஷ்ணன் பக்கம்
22 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மற்றவர்களை விட எழுத்தாளர்களிடம் சகமனிதநேயம் அதிகம் இருக்கும் என்று நம்புவதும், அதிகம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்கூட ‘அன்றாடத்தி லிருந்து அதீதம்’ தானோ – தெரியவில்லை. ஆனால், பாழாய்ப்போன மனது அப்படியே எதிர்பார்க்க, நம்ப பழகிவிட்டது. ஒவ்வொரு முறை அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பொய்க்கும்போதும் நிறையவே வலிக்கிறது.

மேகங்களின் குரல் – அன்றாடத்திலிருந்து அதீதம் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆனந்தவிகடனில் எழுத ஆரம்பித்திருக்கும் தொடரை இன்னொருவருக்கு வாராவாரம் படித்துக்காட்டிக்கொண்டிருக்கிறேன். இந்த வாரம் 10.06.2026 தேதியிட்ட விகடனில் தொடரின் 4வது அத்தியாயம் இடம்பெறுகிறது.

மருந்துகளை நம்பாமல் ‘ஹீலர்’ போன்றவர்களை நாடிச் செல்வது எத்தனை அபத்தம் எனத் தொடங்கி ‘டன்னிங்-க்ரூகர் விளைவு என்றால் என்ன என்று எடுத்துச்சொல்லி, ‘ஒன்றைப் பற்றி எந்த அளவுக்கு நமக்குக் குறைவாகத் தெரியுமோ அந்த அளவுக்கு அதைப் பற்றிய உறுதியான நம்பிக்கை நமக்கு உருவாகிறது’ என்று அடிக்கோடிட்டுச்சொல்லி, ‘மதம் உருவாக்கும் மூட நம்பிக்கைகள், அதேபோல் பகுத்தறிவாளர்களுக்கும் முற்போக்காளர்களுக் கும் அவர்களின் கொள்கைகள் சார்ந்தும் தலைவர்கள் சார்ந்தும் இதே அளவுக்கு மூர்க்கமான மூடநம்பிக்கை இருப்பதைக் காணலாம்’ என்று கூறும் வரை கட்டுரை தர்க்கபூர்வமானதாக, நேர்மறையாக இருக்கிறது. ஆனால், ‘எந்த அளவுக்கு ஒன்று தெரியாமலிருக்கிறதோ அந்த அளவுக்கு நம்பிக்கை உறுதியாக இருக்கிறது. அறியாமை அளிக்கும் தன்னம்பிக்கை என்று இதைச் சொல்லலாம்’ என்று கூறும் எழுத்தாளர் கட்டுரையின் இறுதிப்பகுதியில் பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் குறித்து எழுதியுள்ளவை கட்டுரையில் அதுவரை அவர் பிறரிடத்தில் உள்ள அறியாமை குறித்து அவர் சுட்டிக்காட்டியிருக் கும் குறைகள் அனைத்தையும் அவருக்கும் உரித்தாக்குகின்றன.

முதலில் கட உபநிடதத்திலிருந்து அவர் எடுத்துச்சொல்லியிருக்கும் பார்வைக் குறைபாடுடையவர்கள் குறித்த உவமையே தேவையற்றது. இந்துமதம் என்றில்லை – எல்லா மதங்களிலுமே , அவற்றின்பாற்பட்ட எல்லா சமூகங்களி லுமே உடற்குறைபாடு என்பது பாவ-புண்ணியங்களோடு தொடர்புடையதாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நாம் வெகுதூரம் வந்தாயிற்று. எத்தகைய புனிதப்பிரதியானாலும் சரி, நல்லதை எடுத்துக்கொண்டு வேண்டாததைக் கடந்து போவதுதான் விவேகம். கட உபநிடதத்திலிருந்து மேற்கோள் காட்டவேண்டிய தேவையென்ன?

மேலும் படிக்க ...

சிறுகதை இலக்கியம், சமூக நிஜங்கள் மற்றும் இளம் தலைமுறை - “காலத்தின் கண்ணாடி”! - பவானி சற்குணசெல்வம் -

விவரங்கள்
- பவானி சற்குணசெல்வம் -
இலக்கியம்
19 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மனித சமூகம் உருவான காலத்திலிருந்தே கதைகள் மனித வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து வருகின்றன. மனிதனின் அனுபவங்கள், உணர்ச்சிகள், போராட்டங்கள், ஆசைகள், அச்சங்கள் மற்றும் சமூக மாற்றங்கள் அனைத்தும் கதைகளின் மூலம் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கடத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல; அது ஒரு சமூக ஆவணமாகவும், சிந்தனையின் கருவியாகவும், மாற்றத்தின் ஊடகமாகவும் விளங்குகிறது.


இலக்கிய வடிவங்களில் சிறுகதை தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. குறுகிய பரப்பில் ஆழமான கருத்துக்களைத் தாக்கம் மிக்க வகையில் பதிவு செய்யும் திறன் சிறுகதைக்கு உண்டு. சமூகத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள், ஒடுக்கப்பட்ட மனிதர்களின் குரல்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாழ்வின் முரண்பாடுகள், குடும்ப உறவுகளின் சிதைவு, அரசியல் ஊழல், பாலியல் வன்முறை, போதைப் பழக்கம், தொழில்நுட்பத்தின் தாக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை சிறுகதை வெளிப்படுத்தி வருகிறது.

ஆனால் இதனுடன் ஒரு முக்கியமான கேள்வியும் எழுகிறது:  சமூகத்தின் இருண்ட பகுதிகளில் நடைபெறும் சம்பவங்களை எழுத்தாளர் கதையாக பதிவு செய்வது சமூகப் பொறுப்புள்ள செயலா? அல்லது அது இளம் தலைமுறையைத் தவறாக பாதிக்கும் அபாயமுள்ள செயலா? “இது சமூகத்தில் நடப்பதே; எனவே இது காலத்தின் கண்ணாடி” என்ற வாதம் எந்த அளவிற்கு நியாயமானது? இந்த ஆய்வுக் கட்டுரை, சிறுகதை இலக்கியத்தின் சமூகப் பங்கு, எழுத்துச் சுதந்திரம், சமூகப் பொறுப்பு, இளம் தலைமுறையின் மனநிலைகளில் இலக்கியத்தின் தாக்கம், மற்றும் “காலத்தின் கண்ணாடி” என்ற கருத்தின் உண்மைத் தன்மை ஆகியவற்றை விரிவாக ஆராய்கிறது.

மேலும் படிக்க ...

தமிழ்ச்சிற்றிதழ் வளர்ச்சியில் 'கனவு'! - முனைவர். ப. தமிழ்ப்பாவை -

விவரங்கள்
- முனைவர். ப. தமிழ்ப்பாவை -
ஆய்வு
19 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கட்டுரையாளர்: முனைவர். ப. தமிழ்ப்பாவை, துணைப்பேராசிரியர் - தமிழ்த்துறை  Retd , ஸ்ரீஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
உடுமலைப்பேட்டை -


125ம் இதழை கனவு ஏட்டி உள்ளது. பெரிய சாதனை. தமிழ் இதழியல் வரலாறு என்பது கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி இன்றுவரை நீடித்து வந்துள்ளது. இடைப்பட்ட காலங்களில் ஆயிரக்கணக்கான இதழ்கள் தோன்றிய வண்ணமும் மறைந்தவண்ணமுமாக உள்ளன. 1842 தொடங்கி இன்றுவரை 3000 க்கும் மேற்பட்ட இதழ்கள் தோன்றியுள்ளன. இவற்றுள் தமிழ் இதழ்கள் 2500 க்கும் மேற்பட்டன (தமிழ் இதழியல் வரலாறு(1842-1950), ரோஜா முத்தையா நூலகத்தரவுகள்). இவ்விதழ்கள், சிற்றிதழ், பேரிதழ் என்று இரண்டு வகைப்பாடுகளில் அடங்கும். தமிழ் இதழியலின் எண்ணிக்கையிலும், ஆழத்திலும் பரப்பிலும் சிற்றிதழ்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன." சிறுபத்திரிகைகள் குடிசைத் தொழில் போன்றவை” (குருசாமி,மா.பா. இதழியல் கலை,ப.1-2) என்று தி.ஜ.ரங்கநாதன் குறிப்பிட்டுள்ளார். சிற்றிதழ் என்றும் சீரிதழ் என்றும் சொல்லப்படும் இவ்விதழ் தீவிரமான உள்ளடக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட வாசகர்வட்டத்தைச் சென்றடையும் இதழ் ஆகும்.

இச்சிற்றிதழ்கள், கட்டுரை, கருத்துரை, விமர்சனங்கள், திறனாய்வு, துறை ஆய்வு, நேர்காணல்கள், விவாதம், கவிதை ஆகிய பலவகைப்பட்ட உள்ளடக்கங்களுடன் தொடங்கின. பொருளீட்டும் நோக்கம் இல்லாமல் வெளிவருகின்ற இச்சிற்றிதழ்கள் கருத்துச் சுதந்திரம் கொண்டவை. புனிதங்களைக் கட்டுடைப்பதிலும், அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதிலும் சிற்றிதழ் பெரும்பங்கு வகிக்கின்றது. "எதிர்காலத்தில் தமிழ்ச்சூழலில் ஒரு மாற்றம் ஏற்படவேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டும் நிகழும் என்பதை உறுதியாகக் கொள்ளலாம்" என்று சிற்றிதழ்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்றார் உலகச் சிற்றிதழ்களின் சங்கத்தலைவர் கவிஞர் விதிலை பிரபா (தமிழ்ச் சிற்றிதழ் - கருத்துருவாக்கத்தில் பங்கு, இணையம்).

மேலும் படிக்க ...

செயற்கைப் புலமையும், ஆழ்நிலை அரசின் மறைக்கரமும் அல்லது சகுனிகளும், செயற்கைப் புலமையும்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
19 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஈரானிய-அமெரிக்க உடன்பாடு வெள்ளியன்று சுவிஸர்லாந்தில் கைசாத்திடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது (15.6.2026).
ஆனால், ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் இப்பொழுது கையெழுத்திட்டானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது (16.06.2026). 

உடன்படிக்கைக்கு முன்னர், அமெரிக்கா ஈரானுக்கு தந்த நெருக்குதல்கள் பல.

தரைவழி தாக்குதலுக்காக தனது விமானங்கள் கப்பல்களில் இருந்து, ஆயிரக்கணக்கான துருப்புகளை இறக்குவது உட்பட ஈரானின் நாகரிகத்தைக் கற்காலத்துக்கு அனுப்பி வைக்கப் போகின்றேன் என சபதமிட்டு, தனது அணு ஆயுதப் பாவிப்பு முறைமை ஈறாக, அனைத்து மிரட்டல்களையும் சம்பிரதாய பூர்வமாக ட்ரம்ப் ஈரானுக்கு விடுக்காமல் இல்லை.

இருந்தும், ஈரான் இப்பயமுறுத்தல்களுக்கெல்லாம் மசிந்ததாக தெரியவில்லை. செறிவூட்டப்பட்ட அணு துகள்களை (யுரேனிய துகள்களை) ஈரான், அமெரிக்காவிடம் பவ்வியமாக ஒப்படைத்துவிட வேண்டும் அல்லது ஈரானுக்குள்ளேயே அவற்றை அழித்து விட வேண்டும் என்ற நிபந்தனையையும் அது நிராகரித்திருந்தது. மேலும், ஹோமூஸ் நீரிணையானது, எந்தவொரு ஈரானின் சுங்க கட்டுப்பாட்டு வரிகளுக்கும் ஆட்படாது, கப்பல்கள் சுதந்திரமாக நடமாட ஈரான் இடமளிக்க வேண்டும் என்றும், அமெரிக்காவால் முடக்கப்பட்ட ஈரானின் பில்லியன் டாலர் கணக்கான சொத்துக்களை, மீள கையளிப்பது தொடர்பில் அமெரிக்கா மேலும் ஆலோசனை நடத்த ஒன்றுமில்லை என்பது போன்ற அமெரிக்காவின் நிலைப்பாடுகள் ட்ரம்பால், ஈரானுக்கு அறிவிக்கப்பட்டே இருந்தன.

இச்சூழ்நிலையில்தான், ஆரம்பத்தில் பாகிஸ்தானும், பிந்திய ஒரு கட்டத்தில் கட்டாரும் ஈரானுடன் பேச்சுவார்த்தையில் இறங்கின. (அமெரிக்காவின் தூண்டுதலால்?)

இதனை தொடர்ந்தே, அமெரிக்காவின் விட்டுக்கொடுப்புகள் மெதுமெதுவாக இடம்பெற துவங்கின என்பதும், உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடுவது என்பது நடக்கக்கூடிய ஒரு விடயம்தான் என்பதும் வெளிப்பட ஆரம்பித்தன.

மேலும் படிக்க ...

கனேடிய இலங்கை மன்றம்: 'இலங்கையில் வன்முறை அரசின் 83 ஜூலைக் கலவரமும் , வெலிக்கடைச் சிறைப் படுகொலையும்' (நந்தன வீரரத்னவின் புலனாய்வு நூலைத் தழுவிய அரசியல்)! - தகவல்: கோணேஸ் -

விவரங்கள்
- தகவல்: கோணேஸ் -
நிகழ்வுகள்
17 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கந்தர்மடம் அ.அஜந்தனின் 'வெந்து தணிந்த காட்டிடை'- ரசனைக் குறிப்பு! - ரஞ்ஜனி சுப்ரமணியம்

விவரங்கள்
- ரஞ்ஜனி சுப்ரமணியம்
நூல் அறிமுகம்
16 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஒரு கவிதை தனக்குரிய இலக்கணங்களால் மட்டுமே பெறுமதியினைப் பெறுவதில்லை. மொழிச் செழுமை மிகுந்த சொல்லழகு ஓசை நயம் குறியீடு படிமம் எனும் அணிகலன்களை தனதாக்கி சமூகம் அரசியல் வாழ்வியல் என்ற தளங்களின் ஊடாக உண்மைகளைைக் குறிப்பால் உணர்த்தி, எளிமையும் ஆழமும் கொண்டியங்கும் கவிதைகளே இன்று ரசனைக்குரியனவாக விதந்துரைக்கப் படுகின்றன. 

கந்தர்மடம் அ. அஜந்தனின் 'வெந்து தணிந்த காட்டிடை' கவிதைத் தொகுப்பில் அவ்வாறான அதீத நயம் கொண்ட கவிதைகள் பலவுள்ளன. ஒவ்வொரு கவிதைத் தலைப்புமே சில கதைகளையும் களங்களையும் தன்னுள்ளே கொண்டு உயிரோட்டமாக நகர்கிறது.

புறப்பொருளும் அகப்பொருளுமாக  இவர் தொட்டுச் செல்லும் கவிவரிகள் எல்லைகளால் விரிந்தவை . சொல்லழகால் மட்டுமல்ல பொருள் அழகாலும் மனதினில் நிறைந்தவை.

கருகிய கனவுகளின் பின்னே, துளிர்விடும் எதிர்பார்ப்புகள் நிறைந்த வாழ்வினை நோக்கிக்,  கனவு காணும் கவிஞனின் சோகநெஞ்சினை நிதர்சனமாகக் கவிதைகளில் கொண்டு வருகிறார். பொழிவதற்குத் தயாரான நிறை மழைமேகத்தினை ஒத்ததோர் கனதி கவிதைகள் எங்கும் விரவிக் கிடக்கின்றது.

அவசியமான இடங்களில் கிண்டலும் கேலியும் மறைபொருளும் மிகுந்த கவிநடை பெரும் உவப்பிற்குரியது. பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் தனிமனித உரிமைகள் எல்லாம் கேள்விக் குறியானதொரு நாட்டில்,  'சொன்னாலும் குற்றமடா சொல்லவிட்டால் துக்கமடா...' என இயன்றளவில் உண்மைகளை வெளிப்படுத்திய எழுத்து நேர்மை பாராட்டுக்கு உரியது. எனினும் குறிப்பாலுணர்த்திய சில கவிதைகளின் ஆக்ரோஷமே மனதில் நெருப்பாகத் தகித்துக்கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க ...

"சோற்றுக்கும் சர்க்கரை வியாதிக்கும் இடையில்! - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
நலந்தானா? நலந்தானா?
16 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, “எனது கலாச்சாரக் கூறுகளில் அரிசிச் சோற்றைத் தவிர மற்ற எதையும் நிராகரிக்க முடியும்” என்று சொன்னேன்.

சிறுவயதில் எங்கள் குடும்பத்தில் பாண் (ரொட்டி) சாப்பிடுவது இழிவாகக் கருதப்பட்டது. அரிசி வாங்கப் பணமில்லாதவர்கள்தான் பாண் சாப்பிடுவார்கள் என்ற கருத்து எங்கள் தீவுப் பகுதி மக்களிடையே பரவியிருந்தது. அதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு தவறு என்று இன்று விவாதிக்க முடியாது.

இதை இக்காலத் தமிழ் அரசியலுடன் ஒப்பிடலாம். சிலர் எமது அரசியலை “யாழ்ப்பாண மையவாதம்” என்று சொல்வதைப் போல, இதனை “தீவுப் பகுதி மையவாதம்” எனக் கொள்ளலாம்.

இந்த அரிசியியலில் பழகிப்போன எனக்கு அரிசிச் சோற்றை விட முடியாமல் போனது வியப்பில்லை. இரவில் ஒரு கோப்பை நிரம்பச் சோறு உண்ணுவதைப் பார்த்து, பலமுறை எனது மகள்,

“Dad, this is too much!” என்று எச்சரிப்பாள்.

எனக்கு அரிசிச் சோற்றை இன்னும் இலகுவாகச் சாப்பிடுவதற்கு ஒரு Single Malt Whisky கூட துணைபுரியும்.

மேலும் படிக்க ...

'நந்தலாலா' வழங்கும் பாரதி நூல் அறிமுகம்: எல்.ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி!'

விவரங்கள்
- தகவல்: ஜோதிகுமார் -
நிகழ்வுகள்
16 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

 பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி நூலுருப்பெற்ற , எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் அறிமுக நிகழ்வு , 'நந்தலாலா இலக்கிய வட்டத்தின்' ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் விநோதன் அரங்கில் நடைபெறவுள்ளது. அது பற்றிய அறிவித்தலிது. தகவல் தந்தவர் - எல்.ஜோதிகுமார்.


'கனவு' இதழின் 'இலங்கைச் சிறப்பிதழ்'! - வ.ந.கி -

விவரங்கள்
- வ.ந.கி -
நூல் அறிமுகம்
16 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வரும் இலக்கியச்  சிற்றிதழ் 'கனவு'. விளம்பரங்கள் அற்று வெளியாகும் இதழ் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'கனவு' இதழின் ஆகஸ்ட் 1991 இதழ் 'இலங்கைச் சிறப்பிதழ்' ஆக வெளியாகியுள்ளது. 

இதழ் சிறப்பாக வெளிவருவதற்கு எழுத்தாளர் மேமன்கவியின் பங்களிப்பு முக்கியமாக உதவியிருக்கின்றது என்பதை நூலின் உள்ளடக்கம் மூலம் அறிய முடிகின்றது. ஆங்கிலத்தில் எழுதி உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர் அருள் சுப்பிரமணியத்தின் 'கணிதவியலாளன்' சிறுகதை நூலின் முதலாவது ஆக்கமாக அமைந்திருக்கின்றது. எழுத்தாளர் ராஜ ஶ்ரீகாந்தனின் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. அவ்வப்போது  தமிழ் இலக்கியச் சூழலுக்கு எழுத்தாளர் அருள் சுப்பிரமணியத்தை நினைவூட்டி வருபவர் மேமன்கவி. நிச்சயம் இச்சிறுகதையையின் பிரசுரத்துக்கு அவர் காரணமாக இருந்திருப்பார் என்பதை ஊகிக்க முடிகின்றது. நல்லதொரு தேர்வு.

மேலும் படிக்க ...

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் - 'சினிமாவுக்குப் போன நாடகக்காரர்கள்: தமிழ் சினிமாவின் தொடக்கமும் நாடகமும்'

விவரங்கள்
தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -
நிகழ்வுகள்
16 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்  - 'சினிமாவுக்குப் போன நாடகக்காரர்கள்: தமிழ் சினிமாவின் தொடக்கமும் நாடகமும்'


உரை நிகழ்த்துபவர் :  முனைவர் கி.பார்த்திபராஜா

Join Zoom Meeting | Meeting ID: 847 7725 7162 | Passcode: 554268

மேலும் படிக்க ...

எலும்புகளின் நூலகம்! - ஏ.எச்.எம். நவாஷ் (ஈழக்கவி) -

விவரங்கள்
- ஏ.எச்.எம். நவாஷ் (ஈழக்கவி) -
கவிதை
16 ஜூன் 2026
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

உடலுக்குள்
ஒரு நூலகம் இருக்கிறது.
அதை
யாரும் திறக்கவில்லை.
ஆனால்
அது எப்போதும் திறந்திருக்கிறது.

அதன் புத்தகங்கள்
காகிதத்தால் ஆனவை அல்ல.
எலும்புகளால் ஆனவை.

ஒவ்வொரு எலும்பும்
ஒரு காலத்தைச் சுமக்கிறது.
ஒரு காயம்.
ஒரு சிரிப்பு.
ஒரு பெயர்.
ஒரு மறதி.

நான்
என் கைகளைப் பார்க்கிறேன்.
அவை
பக்கங்களைப் போலத் தோன்றுகின்றன.
படிக்க முடியாத எழுத்துகளுடன்.
ஆனால்
உணரக்கூடிய அர்த்தத்துடன்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. அறிமுகம்: மாக்சிம் கார்க்கியின் The Artamonov Business (மூன்று தலைமுறைகள்) நாவல்! - பா.பிரதாரிணி -
  2. முகநூற் பதிவுகள்: மனித குலத்தின் மனச்சாட்சி மௌனமானது! - ப.வி. ஶ்ரீரங்கன் -
  3. கனடா உதயன் விருது பெற்ற வவுனியூர் இரா. உதயணன்! - குரு அரவிந்தன் -
  4. குழந்தைகளை அடிப்பது குற்றம்; அடிப்பதைப் பரிந்துரை செய்வது ABETMENT TO THE CRIME! - லதா ராமகிருஷ்ணன் -
  5. பாரதி பார்வையில் பகவத் கீதை! -முனைவர் செல்லத்துரை சுதர்சன், (சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை) -
  6. ஸ்கார்பரோவில் எழுத்தாளர் கலாமோகனின் 'துவாரம்' நூல் வெளியீடும், கலந்துரையாடலும்!
  7. பயணத்தொடர் : கரிபியன் பயணம் (2) - போட்டரிகோ! - நடேசன் -
  8. கன்னிமாரா வாசகர் வட்டம் நூலேணி பதிப்பகம் நடத்தும் ஹைக்கூ நூல் பரிசுப் போட்டி 2025 பரிசளிப்பு விழா! -
  9. தோழர் வேலு சிந்தனையும் செயலும் – ஒரு பார்வை! அண்மையில் இலண்டனில் மறைந்த தோழர் வேலு ‘’ஒடுக்கப்பட்ட மக்களின் உறுதியான குரல்’’! - மாதவி சிவலீலன் -
  10. 'இமயம்' சாய்ந்தது: இயக்குநர் பாரதிராஜா மறைவு! - பதிவுகள்.காம் -
  11. நனவிடை தோய்தல்: பட்டம் விட்ட ஞாபகம்! - இந்து.லிங்கேஸ் -
  12. லண்டன் பாரதிய வித்ய பவனில் ‘சாஸ்வதம்' - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
  13. தமிழக முதல்வருக்கு ஓர் ஆலோசனை! - வ.ந.கி -
  14. கனடா – மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கலைவிழா! - சுலோச்சனா அருண் -
பக்கம் 2 / 130
  • முதல்
  • முந்தைய
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • அடுத்த
  • கடைசி