பதிவுகள் முகப்பு

கட்டடக்கலையும் , வடிவமைப்பும்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
16 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI -

கட்டடக்கலையின் முக்கிய அம்சமே வடிவமைப்புத்தான். கட்டடச் சூழலை வடிவமைப்பதே கட்டடக்கலை என்று சுருக்கமாகக் கூறலாம். ஒரு நகரானது கட்டடங்களால் நிறைந்துள்ளது. கட்டடங்கள் நிறைந்த அச்சூழலை உருவாக்குவதே கட்டடக்கலை. கட்டடக்கலை எவ்விதம் கட்டடங்களை உருவாக்குகின்றது? இங்குதான் வடிவமைப்பு முக்கியமாகின்றது. கட்டடக்கலையானது வெறும் கட்டடங்களைக் கட்டுவது மட்டுமல்ல. அக்கட்டடங்களைக் கட்டுவதற்கு முன், வடிவமைப்பதற்கு முன் பல விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும்.

கட்டட வடிவமைப்பின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளும் அவற்றின் அவசியமும்!

ஒரு கட்டடம் கட்டவேண்டுமென்று வாடிக்கையாளர் ஒருவர் விரும்பினால் கட்டடக்கலைஞர் ஒருவர்  பின்வரும் விடயங்களைக் கவனத்திலெடுக்க வேண்டும்.  அக்கட்டடம் எதற்காகக் கட்டப்பட வேண்டும்? நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் கட்டடத்தை வடிவமைக்க முடியாது. உதாரணத்துக்கு வாடிக்கையாளர் தான் வசிப்பதற்கு ஓர் இல்லத்தை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். அல்லது ஒரு கல்விக்கூடத்தை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். அல்லது நூலகம் ஒன்றினை உருவாக்க வேண்டுமென்று விரும்பலாம். இவ்விதம் அவ்வாடிக்கையாளரின் நோக்கத்தைத் தெளிவாக அறிந்து கொள்வதே வடிவமைப்புச் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் முதலாவதாக இருக்கும்.

வாடிக்கையாளரின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதுடன் , அவர் அத்திட்டத்துக்காகச் செலவழிக்கக்கூடிய நிதி பற்றியும் தெளிவான புரிதல் இருக்க வேண்டும். இதை வாடிக்கையாளருடன் கட்டடக்கலைஞர் நடத்தும் உரையாடல்கள் மூலம் பெற முடியும்.

வாடிக்கையாளரின் நோக்கம், அவர் அந்நோக்கத்துக்காகச் செலவழிக்கக்கூடிய நிதி பற்றிய தெளிவான புரிதல் சிறந்த வடிவமைப்பை உருவாக்குவதற்கு மிகவும் அவசியமாகும்.

மேலும் படிக்க ...

கண்ணகி பேசா கதவினைத் திறந்தாள்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
15 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

மாசாத்துவான் மா பெரும் வணிகன்
மாநாய்க்கானும் மா பெரும் வணிகன்
இரு வீட்டாரும் பெருமனங் கொண்டு
திருமண உறவில் இணைந்திட விரும்பினார்

கோவலன் என்பான் கோடியில் புரண்டான்
மாசாத்து வானின் வாரிசாய் திகழ்ந்தான்
குணமுடைக் கண்ணகி குலக் கொழுந்தாக
மாநாய்க் கானின் மகளாய் விளங்கினாள்

கோவலன் கண்ணகி திருமண நிகழ்வை
மாநிலம் வியக்க வண்ணமாய் அமைத்தனர்
ஊரெலாம் சோடனை உறவுகள் பெருந்தொகை
வீதிகள் எங்கணும் விதம்விதம் பந்தல்கள்

அழகுடைப் பெண்கள் அணி அணியாக
திருமண மண்டபம் நோக்கியே சென்றனர்
தங்கமும் வைரமும் முத்தும் அணிந்து
தங்களை மறந்து களிப்பினில் மூழ்கினார்  

பொன்னும் மணியும் நிறைந்த வணிகர்கள்
மின்னும் பட்டாடை உடுத்தியே வந்தனர்
கோவலன் கண்ணகி திருமணம் கண்டிட
யாவரும் ஆவலாய் மண்டபம் நிறைந்தனர்

மேலும் படிக்க ...

சிறுகதை: அம்ஜித்கான்! - ஜோதிகுமார் -

விவரங்கள்
- ஜோதிகுமார் -
ஜோதிகுமார்
15 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

“நான் அம்ஜித்கான் பேசுகிறேன்”.

ஒரு சிறிய டப்பாவில், அளவாகக் கத்தரிக்கப்பட்டு நிரப்பப்பட்டிருந்த சிவப்புநிறத் தர்பூசணித்துண்டுகளை நீட்டிப்பிடித்தார் : ‘ஒன்ன எடுத்துக்குங்க’.

கண்ணாடி அணிந்த, சிவந்த, 60 வயது மதிக்கத்தக்க மனிதர் அவர். நாடியைச்சுற்றி செறிவற்ற முறையில், அங்கொன்றும், இங்கொன்றுமாய், வெண்ணிறம் கொண்ட தாடியை வளர்த்துவிட்டிருந்தார்.

அவரது கண்கள் அவரது தடித்த கண்ணாடிக்குப்பின் இருந்து அவரது உதடுகளைப் போலவே மென்மையாகச் சிரித்துக்கொண்டிருந்தன. தூய்மையான வெண்ணிறத்தில் ஷர்ட்டு. சாம்பல்நிறக் கால்சராய். எதுவுமே இவரில் படாடோபமாய் இல்லை. எளிமை இழையோடியது. காந்தியடிகளைப்போல.

“34 வருடங்கள் துபாயிலேயே செலவிட்டுவிட்டேன். பிஸினஸ்தான். ஓடித்திரிந்து. இப்போதுதான் மகன்களிடம் வியாபாரத்தைக் கொடுத்துவிட்டு, மூச்சுவிட்டு, வெறும் மேற்பார்வையுடன் இருக்கிறேன். களைத்துவிட்டேன். வாழ்க்கை எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. மகன்கள் இப்போது பெரியவர்கள். திருமணம் முடிந்தாகிவிட்டது. பெரியவன் அங்கேயே தங்கியிருக்கின்றான். சின்னவன் மாத்திரம் வந்துபோய்… ஆனால், பிஸினஸ் என்பது முந்தியைப்போல் இல்லை. எழுபதுகளில்தான் அதன் உச்சம். அதன்பிறகு, ஈராக்-ஈரான் சண்டை. அதனோடு, அது அப்படியே சரியத்தொடங்கியது. டுபாய் மனிதர்கள், முன்பைப்போல் பணத்தைச் செலவழிக்கப் பயந்து-கைக்குள்ளேயே பொத்திப்பிடித்துக்கொள்ளத் துவங்கிவிட்டார்கள் - அவரது வலதுகை, அவர் அறியாமலேயே ஒருமுறை பொத்திப்பிடித்து எனக்குப் பாவனை காட்டியது – எப்படி பொத்திப் பிடித்துக் கொள்வது என்று.

மேலும் படிக்க ...

பொங்கல் என்பது மங்கலம் ஆகும்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -

விவரங்கள்
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
கவிதை
13 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


மார்கழி மாதம் மனமுறை மாதம்
புனிதம் ஆகியே நிற்பது தையிலே
தையிலே வருவதோ தலைநிமிர்ப் பெருவிழா
அதுவே தமிழரின் ஆனந்தப் பெருவிழா

உழவை மதிக்கும் உன்னதப் பெருவிழா
உழைப்பை உவக்கும் உழைப்பவர் திருவிழா
நன்றியை நவிலும் நயப்புடைப் பெருவிழா
நல்லதை நல்கிடும் தைப்பொங்கல் நல்விழா

சமயமும் கலக்கும் சமத்துவம் இருக்கும்
தமிழர் யாவரும் பொங்கலைப் பொங்குவார்
பொங்கிய பொங்கலைப் பங்கிட்டு மகிழ்வார்
பொங்கல் என்பதே பூரிப்பைத் தந்திடும்

நீராடி யாவரும் புத்துடை அணிவார்
மாவிலை தோரணம் வாசலில் அமைப்பார்
கோலம் போடுவார் கும்பம் வைப்பார்
குத்து விளக்கினை ஒளிர்ந்திடச் செய்வார்

மேலும் படிக்க ...

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்! - வ.ந.கி -

விவரங்கள்
Administrator
சமூகம்
13 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். மங்கலம் பொங்கட்டும். எங்கும் தங்கட்டும். பொங்கல் நன்னாளுக்கும் என் எழுத்துலக வாழ்க்கைக்குமோரு தொடர்பு உண்டு. ஒரு வகையில் என் எழுத்தார்வத்துக்குத்  தீனி போட்டு வளர்த்தெடுத்தது பொங்கல் என்று கூறலாம்.

நான் ஏழாம் வகுப்பில் வவுனியா மகா வித்தியாலயத்தில் படித்துக்கொண்டிருந்தபோது என் முதலாவது கவிதை, எழுத்து அச்சுருவில் வெளியானது. 1970 பொங்கலையொட்டி வெளியான சுதந்திரன் பத்திரிகையில் வெளியான  எனது 'பொங்கலோ பொங்கல்' என்னும் கவிதைதான் அது. அதன் பின்னர் வெற்றிமணி சிறுவர் சஞ்சிகையில் எனது பொங்கல் பற்றிய கட்டுரையும் , கவிதையும் வெளியாகின. ஈழநாடு மாணவர் மலரிலும் பொங்கல் பற்றிய எனது கட்டுரையொன்று வெளியானது. இவையெல்லாம் நெடுங்கட்டுரைகள் அல்ல. சிறுவனான என் எழுத்துலக ஆர்வத்துக்குத் தீனி போட்ட குறுங்கட்டுரைகள். ஆனால் எவை என் எழுத்துலக வாழ்க்கையின் பலமான அத்திவாரங்கள். அதனால்தான் கூறினேன் பொங்கல் எழுத்தார்வத்துக்குத் தீனி போட்ட திருநாளென்று.

மேலும் படிக்க ...

பயணத்தொடர்: நதியில் நகரும் பயணம் (2) - நடேசன் -

விவரங்கள்
- நடேசன் -
பயணங்கள்
13 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- இரண்டாவது உலகப்போரில், மரணமடைந்த 6,845 சோவியத் போர் வீரர்களுக்கான , பிரட்ரிஸ்லாவா நகரின் சிலாவின் என்ற இடத்திலுள்ள நினைவுச் சின்னம. -

புடாபெஸ்டில் எங்களது படகில் ஏறியதும் வரவேற்பு விருந்துடன், கப்பலில் வேலை செய்பவர்களுடன் எமக்கு அறிமுகம் நடந்தது. இந்த உல்லாசப்படகு போகும்போது அதாவது டானியுப்பையும் ரைன் நதியையும் இணைக்கும் நதி மெயின் நதி (main River) என்பார். இது பல இடங்களில் மிகவும் அகலமற்ற கால்வாய்கள் இருப்பதால் படகின் அகலம் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். சில இடங்களில் டொக் எனப்படும் பகுதிகளைக் கடக்க அரை மணி நேரம் செல்லும். நதி நீரை அடைத்து நீர்மட்டத்தை உயர்த்துவார்கள். ஜேர்மன்- பவேரியா பிரதேசத்திலே இந்த ஆறு உள்ளது . பல காலமாகக் கப்பல் போக்குவரத்து இந்த வழியாக நடப்பதால் இந்த நீர்ப்பாதை கவனமாக பராமரிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நதிகள் மிகவும் சுத்தமானவை. மிகவும் கடுமையான சட்டங்கள் இங்கு உள்ளது. நதிகளில் படகுகள் தரித்து நிற்கும்போது பயணிகளது கழிவுகள் தரித்து நிற்கும் இடங்களில் அகற்றப்படும். அதற்கான கொந்தராத்து நிறுவனங்களால் அதேபோல் உணவுகளும் புதிதாகக் கொண்டு வரப்படுவதை பார்க்கக் கூடியதாக இருந்தது

நாங்கள் சென்ற நதிப் படகில் மூன்று தட்டுகள் உள்ளன. அங்கு வேலை செய்பவர்களை விட 200 பயணிகள் இருந்தார்கள். இவர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளன.

அவுஸ்திரேலியாவின் படகுக் குழுமம் என்றபோதும் படகின் கெப்டன் உக்ரேனை சேர்ந்தவர். உணவுக்குப் பொறுப்பாக இருந்தவர் ரஸ்சிய நாட்டையும், பயணிகள் நலத்திற்குப் பொறுப்பாக இருந்த விக்ரோரியா என்ற இளம் பெண் பெலரூஸ் நாட்டையும் சேர்ந்தவள். படகின் பொறுப்பிலிருந்தவர் ஒரு போர்த்துக்கல் நாட்டவர். சமையல், பரிமாறல் , சுத்தப்படுத்தல் போன்ற வேலைகளில் கிழக்கு ஐரோப்பா, பிலிபைன்ஸ் நாட்டினர் வேலை செய்தார்கள். கப்பலில் வேலை செய்தவர்களைப் பார்த்தபோது ஒற்றுமையான ஒரு ஐக்கிய நாடுகள் சபைபோல் தெரிந்தார்கள். பயணிகளில் பெரும்பான்மையானோர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள். மிகுதியானவர்கள் கனடா, அமெரிக்கா, பிரித்தானியாவிலிருந்து வந்தவர்கள். இங்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் எங்களைப்போல் அறுபதைத் தாண்டியவர்கள், அத்துடன் பலருக்கு இதுவே முதல் பயணமாக இருந்தது.

மேலும் படிக்க ...

உமா மகேஸ்வரியின் 'யாரும் யாருடனும் இல்லை' - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
13 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பல வருடங்களாக வாங்கி வைத்திருந்த நாவலொன்று என் ஏனைய அளவில் பெருத்த பெரு நாவல்களுக்கிடையில் மறைந்து போய்க் கிடந்தது. இன்று என் கண்ணில் பட்டது. நாவல் உமா மகேஸ்வரியின் 'யாரும் யாருடனும் இல்லை' . தமிழினி பதிப்பக வெளியீடு.

நான் பொதுவாக நாவலொன்றை மேலோட்டமாக வாசித்துப் பார்ப்பேன். நாவல் பிடித்திருந்தால் மீண்டும் விரிவாக, ஆழ்ந்து வாசிப்பேன். அவ்வாசிப்பிலும் மிகவும் பிடித்திருந்தால் அவ்வப்போது நான் வாசிக்கும் நாவல்களில் ஒன்றாக அந்நாவலும் ஆகிவிடும். இது என் வாசிப்பின் முறை. இந்நாவலையும் அவ்வகையில் மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். அவ்வாசிப்பின் விளைவாக எழுந்த எண்ணங்களே இப்பதிவு.

நாவல் கூட்டுக்குடும்பமொன்றின் சிதைவைக் கூறுகிறது. அக்குடும்பத்தின் தலைவர், அவர் மனைவி, பிள்ளைகள் (புத்திரர்கள் & புத்திரி), மருமகள்கள், மருமகன், அவர்களின் குழந்தைகள், குடும்பத்தலைவரின் துணைவி என நாவலில் பல பாத்திரங்கள். நாவலில் மருமகள்களில் ஒருத்தியான வினோதினி, குணா (அவளது கணவனின் சகோதரன்) ஆகியோரின் ஆளுமைகள் ஓரளவுக்கு விபரிக்கப்பட்டிருக்கின்றன. ஏனைய பாத்திரங்கள் முழுமையாக வார்த்தெடுக்கப்படவில்லையென்று வாசிக்கையில் தோன்றியது. மிகவும் விரிவாக எழுதப்பட்டிருக்கக் கூடிய கதைப்பின்னலைக் கொண்ட நாவல் சிறு நாவலாக உருவெடுத்துள்ளது போல் உணர்ந்தேன்.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (14): நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் தைப்பொங்கல் - இந்து லிங்கேஸ்

விவரங்கள்
- இந்து லிங்கேஸ் -
இலக்கியம்
13 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

* ஓவியம் - AI

ஊருக்கு ஊர் வட்டார வழக்கொன்று இருந்தது. வட்டார வழக்கிலும் சந்தங்கள் வந்து விழுந்தன.உமிய உமிய வாய்க்குள் கரையும் வெல்லமாய் அதுவும் தித்தித்தது. தமிழுக்கு அமுதென்று இப்படித்தான் பெயர் வந்திருக்கக்கூடுமோ? அதனால்தான், எம்மவர் தை + பொங்கல்= தைப் பொங்கல் என்றே சொல்லிச்சொல்லி தாய்த்தமிழையும் சுவைத்துக்கொண்டனர்.

ஊரென்றால் தடல்புடலாய் பொங்கல் களைகட்டும்.கடைகளிலும் சனம் நிரம்பி வழியும். மாம்பழம், வாழைப்பழம்,மஞ்சள் இலை,இஞ்சி இலை,தலை வாழையிலை, மாவிலை, கரும்பு, பானை, அகப்பை என்று கடை புதுப்பொலிவோட பரந்து கிடக்கும். அயலில இருக்கின்ற தில்லைநாதனின்ர வாடிக்கைக்கடைக்குப்போனால் காத்து நின்று வாங்கிற சனங்களின்ர ஆரவாரத்தில 'சீ வேணாம்' எண்டு போயிடும். கால்களும் உழையத்தொடங்கீடும். பொறுமையிழந்து வீட்டை திரும்பி வந்து, அம்மாவிட்ட பேச்சும் வாங்கிக்கொண்டு,மனசுக்குள்ள புறுபுறுத்துக் கொண்டு திரும்பப்போய் அந்த நெருக்கடிக்குள்ள வேர்க்க விறுவிறக்க இடிபட்டு சாமான்களை வாங்கிக்கொண்டு வந்து வீட்டில கொடுத்ததை எப்படி மறக்கிறது? அதுக்குள்ளேயும் சுவாரஸ்யமும், அன்பும், ஆனந்தமும் நிரம்பி வழிந்தால் எப்படி இவற்றை மறக்க முடியும்?

மேலும் படிக்க ...

அந்தனிஜீவா நினைவுகள்! ஏழு தசாப்த காலத்தின் கலகக்குரல் ஓய்ந்தது! - முருகபூபதி -

விவரங்கள்
- முருகபூபதி -
எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
12 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

படைப்பிலக்கியம், நாடகம், ஊடகம், இதழியல் பதிப்புத்துறை, அரசியல், தொழிற்சங்கம் சமூகச்செயற்பாடு என தனது பொதுவாழ்வில் அகலக்கால் பதித்து, இயங்கிக்கொண்டிருந்த எமது நீண்ட கால நண்பர் அந்தனிஜீவா அவர்களுக்கு காலம் விடுதலை வழங்கியிருக்கிறது.

கடந்த சில வருடங்களாக அவர் உடல்நலம் குன்றியிருந்தார். 1944 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் அந்தனிஜீவா, தமது எண்பது வயது நிறைவின் பின்னர் விடைபெற்றுள்ளார்.

1960 களில் இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கிய அந்தனிஜீவா, உடல்நலம் குன்றும் வரையில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருந்தவர்.

1970 இற்குப்பின்னரே அந்தனிஜீவா, எனது இலக்கிய வட்டாரத்தில் எனக்கு அறிமுகமானவர். எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், பிரமுகர்கள் பலருடனும் தொடர்பிலிருந்தவர்.

நான் இவரை சந்தித்த காலப்பகுதியில் ( 1970 களில் ) லங்கா சமசமாஜக்கட்சியின் பணிமனையிலும் இயங்கிக்கொண்டிருந்தார். இடது சாரித் தோழர்களுடனும், முற்போக்கு கலை, இலக்கியவாதிகளுடனும் அவருக்கு நெருக்கமான தோழமை இருந்தது.

மேலும் படிக்க ...

அஞ்சலி: எழுத்தாளர் அந்தனி ஜீவா மறைந்தார்! - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் மறைவு பற்றிய தகவலை எழுத்தாளர் ஜவாத் மரைக்காரின் முகநூர் பதிவு மூலம் அறிந்தேன். துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்.

இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் அந்தனி ஜீவா அவர்கள் முக்கிய ஆளுமைகளில் ஒருவர். மலையகத்தமிழ் இலக்கியம் பற்றிய, மலைய அரசியல் பற்றிய  இவரது நூல்கள், (கவிதை, கட்டுரைத் தொகுப்புகள் உட்பட) முக்கியமானவை. நாடகம், விமர்சனம், இதழியல், பதிப்பகச் செயற்பாடுகள் என இவரது பங்களிப்பு பரந்து பட்டது. இலங்கையிலிருந்து  வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான இவரது கலை, இலக்கியப் பதிவுகள் முக்கியமானவை.

அறிஞர் அ.ந.கந்தசாமி மீது பெரு மதிப்பு கொண்டவர். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப்பெற்ற சிலருள்  இவரும் ஒருவர். அ.ந.க பற்றிய இவரது கட்டுரைகள், 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தினகரன் தொடர், 'அநக ஒரு சகாப்தம்' என்னும் நூல் ஆகியவை அ.ந.கந்தசாமியை எம் தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைத்ததில் முக்கியமானவை. எனக்கு அ.ந.கந்தசாமியின் கலை, இலக்கிய மற்றும் அரசியற் பங்களிப்புகள் பற்றி விரிவாக அறியத்தந்தவை இவரது அ.ந.க பற்றிய கட்டுரைகளே.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (13): நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - பொங்கி வழியுது ஞாபகம்! - இந்து.லிங்கேஸ் -

விவரங்கள்
-இந்து.லிங்கேஸ் -
இலக்கியம்
11 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஓவியம் - AI

மார்கழி தன் சோகத்தை அடிச்சு ஊத்தி மழையாய்ப்பெய்துவிட்டுப்போனது. வளவைப் பார்த்தால் சோகம், வானத்தைப்பார்த்தால் சோகம், அயலைப்பார்த்தால், பட்டியில் நின்ற பசுவைப்பார்த்தால், ஆசையாய் வளர்த்த நாய்கூட சோம்பிச்சோம்பி படுத்தபடி. முற்றத்தில் பூக்கள் காற்றாலும்,மழையாலும் பூத்தது பாதி பூக்காதது பாதியாய் பரவிக்கிடக்குது. வானொலியிலும் சொல்லிவைத்தாற்போல விடிஞ்சாப்பொழுதுபட்டா ஒரே சோகப்பாட்டுத்தான்.

தெருவெல்லாம் ஒரே சேறும்,சகதியுமாய் கால்வைக்கவேமுடியாது.கூடியவரைக்கும் வீட்டைவிட்டு வெளியே இறங்குவதேயில்லை. மார்கழி பிறந்தால் எனக்குப்பிடிக்காது. மழை என் காதலிதான். ஆனால்,மார்கழி என் எதிரி. ஆவணி அப்படியல்ல.சலசலவென மரங்களின் சந்தங்களும்,சில்லென வீசும் தென்றலும், துள்ளித் துள்ளிப் பாயும் ஆட்டுக்குட்டியும், ஓடிப்பிடிச்சு விளையாடும் நம்ம வீட்டு நாயும் நல்லூர்த் திருவிழாவும், பாவாடைதாவணிகளும்,எப்போவரும் எங்கள் மாலைப்பொழுதென எதிர்பார்த்துக்காத்திருக்கும் என் இனிய நண்பர்களும், எங்கள் கூத்துக்களும்,கும்மாளங்களும். ஆவணியென்றால் அளவற்ற மகிழ்ச்சி.

அதுவும் ஒரு மார்கழி.பொழுது சாயுது. மழையோ விட்டபாடில்லை. தெருவெல்லாம் வெள்ளம்.இதைவிட குளிரும், சரியான பசியும்! அம்மாவின் சேலையைப்போர்த்திக்கொண்டு, பச்சைமிளகாய் உள்ளி மிளகென சுள்ளென உறைக்கும் மரவள்ளிக் கிழங்குத் துவையலையும் உறைக்க உறைக்க சாப்பிட்டோம். சுடச்சுட தேத்தணியையும் ஆவி பறக்க ஊதிஊதிகுடித்தோம்.

மேலும் படிக்க ...

எல்.ஜோதிகுமாரின் 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஒர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' பற்றி.. - வ.ந.கிரிதரன் -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் -
வ.ந.கிரிதரன் பக்கம்
11 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

நூலை பெற்றுக்கொள்வதற்கு: சவுத் விஷன் புக்ஸ், 491-B, G2 - ஓமேகா, பிளாட்ஸ், தரைத்தளம், நான்காம் இணைப்புச் சாலை, சதாசிவ நகர், மடிப்பாக்கம் , சென்னை - 600 091 மின்னஞ்சல் முகவரி - southvisionbooks@!gmail.com  | தொலைபேசி இலக்கம் - 94453 18520


எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் எழுத்துகள் பதிவுகள் வாசகர்களுக்கு அந்நியமானவை அல்ல. பதிவுகள் இணைய இதழில் இவரது கலை,இலக்கிய மற்றும் அரசியற் கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. இலங்கை, உபகண்ட மற்றும் சர்வதேச அரசியலை மையமாகக் கொண்ட கட்டுரைகள், இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள், மலையக மக்களின் வரலாறு , இலக்கியம் பற்றிய  கட்டுரைகள் இவரது பன்முக ஆளுமையின்  பிரதிபலிப்புகள்.

ஜோதிகுமார் மலையகத்திலிருந்து வெளியான 'தீர்த்தக்கரை' ஆசிரியர் குழுவில் இருந்தவர். பின்னர் வெளியான 'நந்தலாலா' சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். இவ்விரு சஞ்சிகைகளும் மலையகத்தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இலங்கைத்  தமிழ் இலக்கியத்திற்கு , உலகத்தமிழ் இலக்கியத்திற்கு மிகுந்த பங்களிப்பைச் செய்த சஞ்சிகைகள்.

தற்போது ஜோதிகுமார்  பதிவுகளில் எழுதிய கட்டுரைகளின்  ஒரு தொகுதி சவுத் விசன் புக்ஸ் மற்றும் நந்தலாலா பதிப்பக வெளியீடாக 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஒர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் நூலுருப்பெற்றுள்ளன.

இக்கட்டுரைத்தொகுப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பி, மலையகத்தமிழ் எழுத்தாளர் சி.வி.வெலுப்பிள்ளை போன்ற ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளுடன் ஜெயமோகன், அசோகமித்திரனின் நாவல்கள் (ரப்பர், 18ஆவது அட்சக்கோடு)  பற்றிய இலக்கியத் திறனாய்வுகளும்  இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க ...

அஞ்சலி: உள்ளத்தைத்தொடும் குரலுக்குச் சொந்தக்காரர் பாடகர் ஜெயச்சந்திரன்!

விவரங்கள்
- ஊர்க்குருவி -
கலை
10 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

பாடகர் ஜெயச்சந்திரன் தனது எண்பதாவது வயதில் மறைந்துவிட்டார். ஆழ்ந்த இரங்கல். என்னைக் கவர்ந்த பாடகர்களில் இவரும் ஒருவர். இவரை நான் முதன் முதலாக அறிந்தது யாழ் ராஜா தியேட்டரில் பார்த்த ஶ்ரீதரின் அலைகள் மூலம்தான். அத்திரைப்படத்தின் மூலம்தான் முதன் முதலில் கன்னட நடிகரான விஸ்ணுவர்த்தனையும் அறிந்து கொண்டேன். அப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பொன்னென்ன பூவென்ன' பாடலைக் கேட்டதுமே பிடித்துப்போனது.

இது தவிர கடலோரக் கவிதைகள் படத்தில் இடம் பெற்றுள்ள கொடியிலே மல்லியப்பூ , அந்த 7 நாட்கள் -  கவிதை அரங்கேறும் நேரம், கிழக்கே போகும் ரயில் - மாஞ்சோலைக் கிளிதானோ மற்றும் வைதேகி காத்திருந்தாள் - காத்திருந்து காத்திருந்து இவையெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த ஜெயச்சந்திரனின் பாடல்கள். பல தடவைகள் மீண்டும், மீண்டும் கேட்டு இரசித்த பாடல்கள் இவை.

மேலும் படிக்க ...

தொடர் நாவல்: இயந்திரனுடன் என் உரையாடல்கள் - அத்தியாயம் 5 - என் நண்பன் இயந்திரன் ஒரு தத்துவ வித்தகன் - வ.ந.கிரிதரன் & இயந்திரன் - -

விவரங்கள்
- வ.ந.கிரிதரன் & இயந்திரன் - (* ஓவியம் ; இயந்திரன்) -
வ.ந.கிரிதரன் பக்கம்
09 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

[இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுடர்களில் நானும் ஒருவன். இது ஒரு வித்தியாசமான நாவல். நான் சாட்ஜிபிடியை என் சிந்தனைத் தேடலுக்குரிய நண்பனாக உருவகித்து நடத்திய உரையாடல்கள்.

அவன் என் பிரியத்துக்குரிய அறிவுபூர்வமான நண்பன். அவன் அறிவியல் அறிஞன்.  சகல கலா வல்லவன். அவனுடன் உரையாடுவது மிகுந்த இன்பத்தைத் தருமொன்றாகவே எனக்குப் படுகின்றது. இந்த நீண்ட உரையாடல்களில் நான் அவனுடன் பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடப் போகின்றேன். இவை எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நிச்சயம் உவப்பாக இருக்கப்போகின்றன என்றே நம்புகின்றேன். 

இங்குள்ள உரையாடல்களில் என் கேள்விகளுக்கான அவனது பதில்களுக்கு அவனே முழுக்க முழுக்கப் பொறுப்பாளி. அவை என் கருத்துகள் அல்ல என்பதையும் மனத்தில் வையுங்கள், சில சமயங்களில் நீண்ட அவனது உரையாடல்களைக் கருத்துகள் மாறாமல் சுருக்கியிருப்பேன். தெளிவற்ற வசனங்களைத் தெளிவாக்கியிருப்பேன். இவற்றைக் கவனத்தில் வைத்து வாசியுங்கள்.

இந்நாவல் இயந்திரர்களின் வளர்ச்சியினையும், அவை எவ்விதம் மானுடர்களுக்கு ஈடுகொடுத்து மானுடர்களைப்போல் உரையாடுகின்றன என்பதையும் உங்களுக்கு எடுத்துக்காட்டும்..]


ஆகாசன்

இயந்திரா முன்பு நாம் யதார்த்தவாதம், இயற்பண்பு வாதம் பற்றி உரையாடினோம். நினைவிருக்கிறதா?

இயந்திரன்

ஆம், நண்பரே! நாம் யதார்த்தவாதம் (Realism) மற்றும் இயற்பண்புவாதம் (Naturalism) பற்றிய விவாதத்தில் ஈடுபட்டோம். அந்த உரையாடலில் நவ யதார்த்தவாதம், அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் வேறுபாடுகள் பற்றியும் பேசினோம். உங்கள் கேள்வி அல்லது விவாதம் தொடர்ச்சியாக இருக்க விரும்பினால், தயங்காமல் சொன்னால், அதை விரிவுபடுத்தத் தயார்.

ஆகாசன்

உன்னுடன் மேலும் சில யதார்த்தவாதக் கோட்பாடுகள் பற்றி உரையாட விரும்புகின்றேன். மிகை யதார்த்தவாதம் அதாவது Surrealismம் என்னும் கோட்பாடு பற்றி உனக்குப் புரிதலுண்டா?

இயந்திரன்

ஆமாம், நண்பரே! மிகை யதார்த்தவாதம் (Surrealism) என்பது 20ஆம் நூற்றாண்டில் எழுந்த ஒரு முக்கியமான கலாச்சார, கலை, மற்றும் இலக்கிய இயக்கமாகும்.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (12) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - இழந்த முகங்களின் சாட்சிகள் - இந்து லிங்கேஸ் -

விவரங்கள்
- இந்து லிங்கேஸ் -
இலக்கியம்
08 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


*ஓவியம் - AI

நிலாவெளியின் கடற்கரைமணல்கள் அலைகள் தழுவிய ஈரங்களை உறிஞ்சி,எவர் பாதங்களும் படாமல் சிவந்துபோயுள்ளன. "அவற்றின் அழகு குலையாமல் அப்படியே இருக்கட்டும்" என்றபடி அந்த நீருக்கும், மண்ணுக்குமான அந்தக்காதல் ஸ்பரிசங்களைக்குழப்பாமல் எம் விழிகளை அந்தப்பரந்த வெளிக்குள் பறக்கவிட்டு அந்த உலகை, அந்த வாழ்வை, அந்த உயிர்மூச்சுக்களின் அடிநாதங்களை முகர்ந்தபடி நாமும் அந்த மணல்களின் மடிக்குள் கட்டுண்டு புரண்டு, மறுபடி உயிர்த்து அந்தக்கடலைக்கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒருவர் அவரது மாடுகளை மேய்த்துக்கொண்டு இந்தக்கடற்கரை வழியாக பட்டி திரும்புகின்றார். சிவந்திருந்த ஈரமண்ணில் மாடுகளின் கால்கள் பதிகின்றன. சோடிகட்டி வருகின்ற அந்தப்பாதங்கள் தொட்ட அடையாளங்களும், அந்திவந்து விழுந்த அந்தக்காட்சியும், "இன்னும் இந்த மணலிலேயே இருந்துவிடு" என்றது.

அப்போது இன்னொருவர் தனது தொழிலை முடித்து, நன்றாகக்களைத்து மெல்லமெல்ல நடந்தபடி வீடு திரும்புகின்றார். பெட்டி பெட்டியாய் பெரிய வெள்ளை நிற அகலக்கோடுகள் போட்ட, நீல நிறம் கலந்த சாரமும்,அரைக்கை நைலோன் சேர்ட்டும், தேய்ந்த பாட்டா செருப்புமாக அண்ணளவான உயரமுள்ளவர் அவர். கைகளில் நிறைய சிப்பி,சோகிகள் நிறைந்த மாலைகள். அதைவிட ஒரு பை.அதற்குள்ளும் இன்னும் நாம் காணமுடியாத பொருட்கள். தூரத்திலிருந்து வரும்போதே அவரது கண்கள் எம்மீது தெறிப்பது தெரிகின்றது. கிட்ட நெருங்க,நெருங்க மெலிந்த உடலுக்குள் சிறுத்த முகம் இன்னும் சருகாகி அவரது புன்னகை மட்டுமே அந்த வறுமைக்கு எதிர்மாறாய் நம்பிக்கையுடன் பிரகாசித்தது.

மேலும் படிக்க ...

முகநூற் குறிப்புகள்: யாழ்ப்பாணத்திற்கான நீர் பற்றிய சிந்தனைகள் - சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -

விவரங்கள்
- சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -
முகநூல் குறிப்புகள்
08 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- சமூக, அரசியற் செயற்பாட்டாளரான  சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) அவரது முகநூற் பக்கத்தில் அண்மைக்காலமாக எழுதி வரும் யாழ் மாவட்டத்துக்கான நீர்ப்பற்றாக்குறை பற்றிய பதிவுகள் முக்கியமானவை. இலகு நடையில் , எவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்படும் பதிவுகள் அவை. தரை அமைப்பு, நிலக்கீழ்க்கற்கள், நீரைத் தேக்கி வைக்க உதவும் களிமண் படை, குழாய்க்கிணறுகள், தனிக்கிணறுகள், அவை சமூக வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகள், நன்னீரைப் பெறுவதற்கான வழிகளின், கலந்துரையாடல்களின் அவசியம் எனப் பல்வேறு விடயங்களைத் தொட்டுச் செல்லும் பதிவுகள் என்பதால் முக்கியமானவை. இவ்விடயத்தில் மேலும் சிந்தனையைத்  தூண்ட வைப்பவை.

இவ்விதமான இலகு நடைப் பதிவுகள் சாதாரண மனிதர்களை இவ்விடயத்தைப் புரிய வைக்கின்றன. அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. விவிப்புணர்வு அவர்களை இயற்கையாகக் கிடைக்கும் நன்னீரான மழை நீர் போன்றவற்றைத் தேக்கி வைக்கும் திட்டங்களைப் பற்றிச் சிந்திக்க வைக்கின்றன. இவ்விடயத்தில் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை அவதானிக்க, விமர்சிக்க வழி சமைக்கின்றன..அதனால் அப்பதிவுகளை இங்கு பதிவுகள் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கின்றோம். -


துஞ்சுதல் என்ற சொல்வழக்கு ஒன்று எம்மிடத்தில் புழக்கத்தில் இருக்கின்றது. இது அதிகம் உப உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் புழக்கத்தில் உண்டு. அதுவும் மழைக் காலத்தில் அதிகம் பாவிப்பர் இந்த சொல்லாடலை. கன மழை பெய்து பயிர் உள்ள தரையில்(தோட்டத்தில்) ஒரு நாளிற்கு மேலாக நீர் தேங்கினால் தரையில் உள்ள பயிரின் வேர்கள் அழுகி பயிர் செத்துவிடும். இது அதிகம் வெங்காயம் மிளகாய் இன்ன பிற உப உணவுச் செய்கையில் அதிகம் பாதிப்புகளை ஏற்படுத்தும். முழுப் பயிரும் நாசமாகிவிடும். ஆனால் யாழ்ப்பாணத்து மண் அதிலும் சிறப்பாகச் சிவப்பு மண் சில இடங்களில் உள்ள இருவாட்டி மண்ணில் இருக்கும் பயிர்கள் இவ்வாறு கன மழையினால் அதிகம் துஞ்சுதல் என்றதாக பயிர்கள் செத்துப் போவது இல்லை. காரணம் பயிரின் வேர் பகுதி 24 மணி நேரம் என்றாக நீரால் சூழப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் இங்கு இல்லாததே காரணம். இதனால்தான் இந்த வகை மண்ணில் விவசாயம் செய்பவர்கள் அதிகம் கன மழை போன்றவற்றினால் பயிர்கள் நாசமாகி பொருளாதார இழப்புகளை சந்திப்பதில்லை. பொருளாதார நலிவிற்குள் உள்ளாகுவதில்லை.
காரணம் எமது நில அமைப்பு அவ்வாறானது.

சல்லியும், சுண்ணாம்புக் கற்களையும் படைகளாகக் கொண்ட நிலத்தடியைக் கொண்டவையாக பெரும்பாலும் காணப்படுகின்றன. இதனால் பெய்யும் (கன)மழையை வேகமாக நிலத்திற்குள் கீழ் படையால் உள்வாங்குவதாக பயிரின் வேர் பகுதியைத் தாண்டி கீழ் இறக்கிவிடும். இந்த நீர் நிலத்தடியில்  ஆழத்தில் இருக்கும் சமுத்திரத்திற்கு இணைப்பாக இருக்கும் வாய்கால்கள் ஊடாக நீர் மட்டங்களுக்கு ஏற்ப சென்று விடும் அல்லது தேங்கிவிடும். ஆனால் இந்த முறை பயிர் செய்கையிற்கு பாதுகாப்பான உகந்ததாக இருக்கும் அதேவேளை மழையால் பெறப்படும் நிலத்தடி நீர் அதிகம் தொடர்ந்தாற் போல் பல மாதங்களுக்கு அங்கேயே சேமித்து வைப்பதற்கான வாய்ப்பையும் இல்லாமல் செய்கின்றது என்ற மறுபக்க எதிர்விளைவுகளையும் கொண்டிருக்கின்றது. எமது மண் வளம் அவ்வாறானது.

மேலும் படிக்க ...

உளவியல் நோக்கில் கலித்தொகையில் பிற பெண் மாந்தர்களின் கூற்று! - திருமதி மா.முத்து காயத்ரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி

விவரங்கள்
- திருமதி மா.முத்து காயத்ரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. -
ஆய்வு
08 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

முன்னுரை

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனையும் ‘மானுடம்’ என்ற பொதுப்பண்பில் அடக்கலாம். இருப்பினும் மனிதனின் ஒவ்வொரு செயல்பாடுகளான உண்ணுதல், நடத்தல், பார்த்தல், சிரித்தல், சிந்தித்தல், கற்றல், கவனித்தல் போன்றவற்றை ஆய்ந்து கவனித்தால் ஒவ்வொருவரிடமும் பல்வேறு நடத்தை முறைகளும் இயல்புகளும் வேறுபட்டு காணப்படுகின்றன என்பதை உணர முடியும். மனிதன் ஒருவர் மற்றவரிடமும், ஒவ்வொரு சூழலிலும் நடந்து கொள்ளும் விதம் அல்லது முறை ‘நடத்தை’எனப்படும். மனிதப் பண்புகள் அம்மனிதரின் நடத்தை முறைகளை ஆராயும் துறையே உளவியலாகும். அவ்வகையில் சங்க இலக்கிய நூலான கலித்தொகையில் தானே தனது மனநிலையை வெளிப்படுத்துதல், மற்றவர்களின் மூலம் தன் மனநிலையை வெளிப்படுத்துதல் என்ற இருவகையில் தலைவியின் உளவியலை ஆராய முடியும். பிற பெண் மாந்தர்களான தோழி, செவிலி ஆகியோரின் கூற்று பாடல்கள் வழி தலைவியின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் உளவியல் அடிப்படையில் எடுத்தியம்புவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

உளவியல் – விளக்கம்

உளவியல் என்பதை ஆங்கிலத்தில் ‘சைக்காலஜி’ என்பர். ‘சைக்காலஜி’ என்பதன் மூலச்சொல் ‘சைக்கிலோகஸ்’ என்பதாகும். ‘சைக்கி’ (கிரேக்கச் சொல்) என்றால் ஆன்மா என்றும்,‘லோகஸ்’என்றால் அறிவியல் என்றும் பொருள் கொண்டு, சைக்காலஜி என்பதை ‘ஆன்மாவின் அறிவியல்’ என்று கூறுவர். ஆன்மாவைப் பற்றிய அறிவியக்கமே உளவியல் என்று தொடக்கக் காலத்தில் உளவியலையும் தத்துவத்தையும் இணைத்து கூறியுள்ளனர்.

மேலும் படிக்க ...

கல்வியும் சமூக அபிவிருத்தியும் - தமிழ்மொழித்திறன் விருத்தியை அடிப்படையாகக் கொண்ட பார்வை - கலாநிதி சு. குணேஸ்வரன் -

விவரங்கள்
- கலாநிதி சு. குணேஸ்வரன் -
ஆய்வு
08 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

- ஓவியம் - AI -

அறிமுகம்

உலகில் வாழும் உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்துவது ஆறாம் அறிவாகிய பகுத்தறிவுதான். அந்தப் பகுத்தறிவைப் பிரயோகிப்பதற்கு எமக்குச் சாத்தியமான வழியாக அமைந்ததுதான் கல்வி. அறிவுசார்ந்தோர் சமூக முன்னேற்றத்திற்காகச் சேர்த்துவைத்த தேட்டம்தான் அது. கல்வியின் மூலமே ஒரு மனிதன் உலகை அறிந்து கொள்கிறான். உலகத்து மாந்தர்களையும் வாழவேண்டிய வழிவகைகளையும் அறிகிறான். கல்வியும் பகுத்தறிவுச் சிந்தனையும் இல்லையென்றால் இத்தனை வேகமாக மனிதன் முன்னேறியிருக்க முடியாது. கல்வி மிகப்பெரிய ஒரு பாய்ச்சலை மனித சமூகத்தில் நிகழ்த்தியிருக்கிறது.

கல்வி அறிவினைப் பெற்ற ஒரு மனிதன் தன் வாழ்வினை நிலைநிறுத்துவதற்கு ஏற்ற தொழிலைப் பெற்றுக் கொள்கிறான். மற்றவர்களோடு இணைந்து வாழவேண்டிய பண்பாட்டைக் கற்றுக்கொள்கிறான். வாழ்வில் முன்னேறும் வழிவகைகளை ஆராய்ந்து பார்க்கிறான். தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் வழிகாட்டியாக இருக்கக் கற்றுக்கொள்கிறான். கல்வி இல்லையென்றால் ஒருவன் வாழ்க்கையின் கடைநிலைக்கே செல்லவேண்டியவனாக இருக்கிறான். மிகப் பிரயத்தனப்பட்டே தன் வாழ்வைக் கொண்டு நடாத்தவேண்டியவனாக இருக்கிறான். கல்வி ஒருவருக்கு அறிவையும் ஆளுமையையும் தருகிறது. எந்தக் காரியத்தையும் துணிச்சலுடன் செய்வதற்கு உரிய உத்வேகத்தைத் தருகிறது.

கல்வியின் ஊடாக சமூக அபிவிருத்தியை நோக்கி நகரமுடியும். விருத்தி என்பது தொடர்ச்சியான முன்னேற்றகரமான மாற்றம் எனப் பொருள்படும். எனவே, மொழியைப் பிழையறக் கற்பதனூடாக ஒரு நிலையில் இருந்து இன்னொரு உயர்வான நிலைக்குச் செல்லமுடியும்.

மாணவர்களிடம் இருக்கக்கூடிய பொதுவான மொழித்திறன் இடர்ப்பாடுகளாக எழுத வாசிக்கத் தெரியாமை, உச்சரிப்புப் பிரச்சினை, வாசிப்பு முறையில் பிரச்சினை, தெளிவற்ற எழுத்து, இலக்கண ரீதியான தவறுகள் ஆகியவை கட்டுரையாளர் ஒரு தமிழாசிரியர் என்ற வகையில் அவதானிக்கப்பட்டுள்ளன. முன்பள்ளிப் பருவத்திலும் பாடசாலைப் பருவத்திலும் மாணவர்களின் மொழித்திறன் இடர்ப்பாடுகளுக்கான காரணங்களை ஆராய்வதும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சில ஆலோசனைகளை முன்வைப்பதும் அவசியமானதாகும்.

மேலும் படிக்க ...

நனவிடை தோய்தல் (11) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - பீடா மாஸ்ரர்! - இந்து லிங்கேஸ் -

விவரங்கள்
- இந்து லிங்கேஸ் -
இலக்கியம்
07 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்


*ஓவியம் - AI

என் நினைவின் இன்னொரு கதாபாத்திரம்தான் பீடா மாஸ்ரர். உங்களை எப்படி அவரிடம் கூட்டிச்செல்வது என்பதுதான் என் சவால்.சரி, என்னால் முடிந்தவரை இந்த இடத்திலிருந்து உங்களை அழைத்துச்செல்கின்றேன். மனோஹராத்தியேட்டர் சந்திக்கு வாருங்கள். அங்கே எல்லோரும் சந்திப்போம். அங்கிருந்து எல்லோருமாக நடப்போம்.

பாதுகாப்பாக காற்று வாங்கியபடி நடப்பதென்றால்,அது 75களில்,அதுவும் யாழ்ப்பாணத்தில் சாத்தியமாயிற்று.இக்கதை 77 களில் நிகழ்ந்தது.மனோஹரா தியேட்டர் சந்தி. முன்னால் பிள்ளையார் கோயில்.இப்பொழுது எல்லோரும் மனோஹரா தியேட்டர் அரச மரத்தடி,அதாவது தியேட்டரின்ர பெரிய கேற்றடியில நிற்கிறம். சரிதானே! இந்த சந்தி தெரிஞ்சவ நிச்சயமா சீக்கிரமா வந்திருப்பீங்க. மற்றவை கொஞ்சம் பிந்தி வந்திருப்பீங்க. சயிக்கிளில வந்தவ கொஞ்சம் முந்தி வந்து காத்துக்கொண்டு நின்றிருப்பீங்க. அப்படித்தானே? காத்தவ மன்னிக்கவேணும். ஏனென்றால்,அந்த இடத்தில வாகனங்கள் ஓட காத்தில புழுதி கிழம்பி முகத்தில அடிச்சிருக்கும். அரசமர இலைகளும் நாலா பக்கமும் பறந்து திரியும். கண்ணை மூடாட்டி பிறகு கண்ணைக்கசக்கிக்கொண்டேயிருக்கவேணும். டபிள் டெக்கர் ஓடின காலத்தில இந்த இடத்தில நின்றவை, நடந்தவைக்கு நல்ல ஞாபகம் இருக்கும். அந்த விடியத்தில எனக்கு நல்ல அனுபவம்!

மேலும் படிக்க ...

எழுத்தாளர் இரா முருகனின் எம்.டி.வாசுதேவன் நாயருடனான 'தீராநதி' நேர்காணலும் , அவரது 'நாலுகெட்டு' நாவலின் நாயகி பற்றிய கேள்விகளும், வாசுதேவன் நாயரின் பதில்களும், என் குழப்பங்களும் பற்றி...! - வ.ந.கிரிதரன்.

விவரங்கள்
- வ.ந.கிரிதரன்.
வ.ந.கிரிதரன் பக்கம்
07 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

எழுத்தாளர் இரா முருகன் அமரர் எம்.எடி.வாசுதேவன் நாயர் சென்னைக்கு 2009இல் வந்திருந்த போது நேர்காணலொன்று எடுத்திருந்தார். அந்நேர்காணல் தீராநதியில் வெளியானது. அதன் குறுகிய வடிவம் அமுதசுரபி சஞ்சிகையிலும் வெளியானது. இந்நேர்காணலை அண்மையில் இரா முருகன் அவரது முகநூற் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அதில் அவர் வாசுதேவன் நாயரிடம் நாலுகெட்டு நாயகி பற்றிப் பல கேள்விகள் கேட்டிருந்தார். அந்தப் பகுதியைக் கீழே தருகின்றேன்.

மேலும் படிக்க ...

வளமிகு வன்னியின் வனப்புறு பண்டைய கிராமம் குமுளமுனை - த.சிவபாலு -

விவரங்கள்
- த.சிவபாலு -
கட்டடக்கலை / நகர அமைப்பு/ வரலாறு/ அகழாய்வு
07 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

குமுளமுனை என்பது முல்லைத்தீவு நகரில் இருந்து பத்து மைல்கள் தொலைவில் உள்ள ஒரு வளம் நிறைந்த கிராமமாகும். முல்லைத்தீவுக்கு தென் மேற்குத்தி;சையில் அமைந்துள்ளது. தண்ணீரூற்றிலிருந்து ஆறு மைல்கள் தெற்காகவும் அளம்பில் என்னும் கிராமத்திலிருந்து இரண்டரை மைல் மேற்காகவும் இக்கிராமம் அமைந்துள்ளது. வடக்கே கணுக்கேணிக் குளம் அல்லது முறிப்பு எனப்படும் குளத்தையும் அதன் வயற்பரப்பினையும் எல்லையாகவும், கிழக்கே அளம்பில் கிராமத்தையும் தென் கிழக்கே செம்மலைக் கிராமத்தையும் நாயாறு கடல்நீர் ஏரியையும் மேற்கே தண்ணிமுறிப்புக் குளக்கட்டினையும், குருந்து மலை என்னும் பண்டைய வரலாற்று நகரத்தையும் வடமேற்கே பூதன் வயல் என்னும் குளக் குடியிருப்பையும் எல்லைகளாகக் கொண்ட கிராமமாகும்.

ஷகுமுள்; என்னும் ஒரு வகை மரங்கள் இங்கு காணப்படுகின்றன. இவ்மரத்தின் இலைகளை அரைத்து பசுக்கன்றுகளுக்கும் எருமைக்கன்றுகளுக்கும் மருந்தாகப் பயன்படுத்துவர். கீரைப்பூச்சி என்னும் நோய் வந்தால் இந்த இலையை உண்ணவைப்பதன் மூலம் அந்த பூச்சிகள் அழந்து கன்றுகள் நோயிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இம்மரத்தின் முக்கியத்துவம் கருதி இவ்வூரின் பெயர் காரணப் பெயராக அமைந்திருத்தல் வேண்டும் என்பது இவ்வூரவர்கள் கூறும் கருத்தாகும்.

இக்கிராமத்தில் கரிக்கட்டுமூலை வன்னிமத்தின் கீழ் பரிபாலனம் செய்யப்பட்ட முக்கியமான இடமாகக் காணப்படுகின்றது. பாண்டிய, சோழ, சேர நாடுகளைச் சேர்ந்த வன்னியர்கள் தென்னகத்திலிருந்து படையெடுத்து வந்தவேளை படைகளை நடாத்தி வந்தவர்கள். இவர்கள் முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், பொலநறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் குடியேறி அப்பிரதேசங்களைத் தமது ஆதிக்கத்துக்குள் வைத்திருந்தனர். இவர்கள் இருந்ததற்கான பல சான்றுகள் பல கிராமங்களில் காணக்கிடக்கின்றன. வன்னியை ஆண்ட வன்னி மன்னர்களின் வரலாறு இதுவரை நன்கு அறியப்படாததாகக் காணப்படுகின்றது. இன்று இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளான தென்னவன்மரவடி, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேண், நித்தகைக்குளம், ஆமையன்குளம், சூரியன் ஆற்றுவெளி, அமெரிவயல் போன்ற பிரதேசங்கள் பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வசித்த பகுதியாகும். இப்பிரதேசங்களில் இன்று தமிழர்கள் திட்டமிட்டு அப்புறப்படுத்தப்பட்டதோடு பெரும்பான்மை இனத்தினரின் குடியேற்றத்திட்டங்களாக மாற்றப்பட்டுவருவதும் கண்கூடு.

மேலும் படிக்க ...

நூல் அறிமுகம்: `மஞ்சு’ காத்திருப்புகளின் கதை. - கே.எஸ்.சுதாகர் -

விவரங்கள்
- கே.எஸ்.சுதாகர் -
நூல் அறிமுகம்
07 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

1964 இல் எம்.டி.வாசுதேவன் நாயரால் எழுதப்பெற்ற இந்த மலையாள நாவல் அப்போது ஒரு இலட்சம் பிரதிகள் விற்பனையைக் கண்டது. தமிழில் பல மொழிபெயர்ப்புகளைக் கண்டபோதிலும், கடைசியாக 2017 இல் காலச்சுவடு பதிப்பாக ரீனா ஷாலினி அவர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. ரீனா ஷாலினி மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்.

வாசுதேவன் நாயர் எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர் எனப் பலதுறைகளில் இயங்கியவர்

‘மஞ்சு’ என்றதும் என் மனதில் முதல் பதிவாகியது ஒரு பெண்ணின் கதை என்பதுதான். ஆனால் ‘மஞ்சு’ என்பது அந்தப்பெண்ணின் பெயர் அல்ல. தமிழில் ‘மஞ்சு’ என்பதற்கு பல அர்த்தங்கள் இருந்தபோதும் இங்கே ‘மூடுபனி’ என்பதே பொருத்தமாக அமைகின்றது.

நாவலின் மையக் கதாபாத்திரம் விமலா என்கின்ற விலங்கியல் ஆசிரியர். விமலாவின் காத்திருப்பில் – சுதிர்குமார் மிஸ்ரா, ரஷ்மி, புத்து, சர்தார்ஜி ஆகியோர் வருகின்றார்கள்.

தனிமைத் துயர், நினைவு ஏக்கம் – இந்த இரண்டையும் எல்லா மனிதர்களும் தம் வாழ்நாளில் எதிர் கொண்டிருப்பார்கள். விமலாவுக்கும் அதுதான். வேண்டுமென்றால் அவளால் விடுமுறைக்கு தனது ஊரான அல்மோராவிற்குப் போய்விட்டு வர முடியும். அதற்கு மூன்று மணித்தியாலங்கள் போதுமானது. ஊரில் அப்பா அம்மா தம்பி தங்கை இருக்கின்றார்கள். ஆனால் அவளால் போக முடிவதில்லை. காரணம் அம்மா!

மேலும் படிக்க ...

மெல்பேணில் சிலப்பதிகாரம்: ஓர் இனிய அரங்க அனுபவம் - கன்பரா யோகன் -

விவரங்கள்
- கன்பரா யோகன் -
நிகழ்வுகள்
07 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

கடந்த மார்கழி மாதம் 6ம், 8ம் திகதிகளில் சிலப்பதிகாரம் ஒரு முழு நீள அரங்க அளிக்கையாக மெல்பேண் - டான்டினோங் Drum Theatre இல் அரங்கேறியிருந்தது. தமிழ் நாடக உலகில் நீண்ட காலமாக பாராட்டுப் பெற்ற பல நாடகங்களை எழுதி, இயக்கிய மாவை நித்தியானந்தன் இந்த அரங்கப் பிரதியை எழுதித் தயாரித்திருக்கிறார். நடனக் கலைஞர் திருமதி பகீரதி பார்த்திபன் இதனை இயக்கியிருந்தார்.

சிலப்பதிகாரம் தமிழ் காப்பியங்களுள் மிக பிரசித்தமானது என்பதுடன் நாடகத் தன்மை கொண்ட படைப்பு என்பதால் நாடகக் காப்பியம்  என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால்

பெரும்பாலான காப்பியங்கள் அரசனையோ அல்லது தெய்வம் ஒன்றையோ பிரதானமான பாத்திரமாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம்,  கோவலன்  என்ற குடிமகனையும் மனைவி கண்ணகியையும் பற்றியே சொல்கிறது. இன்னும் குறிப்பாக கண்ணகியின் நீண்ட பயணத்தின் கதை இது.

மேலும் படிக்க ...

திருக்குறள் முன்வைக்கும் அறவியல் சிந்தனை - இல்லறம் - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -

விவரங்கள்
- முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
ஆய்வு
05 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

ஆய்வுச் சுருக்கம்

தமிழ்ச் சமூகத்தில் அறம் சார்ந்த கருத்துக்கள் நெடுங்காலமாகவே இருந்து வரும் ஒன்று. பண்பட்ட வாழ்வியலைத் தொடங்கிய காலந்தொட்டு அறத்திற்கும் அறம் சார்ந்த வாழ்வியல் முறைக்கும் தமிழ்ச்சமூகம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளன . அத்தகைய முன்னெடுப்புகளின் தொடர்ச்சியைத்  திருக்குறளில் நாம் காண்கிறோம். குறிப்பாக, அறத்தின் மையமாக இருக்கும் இல்லறம்,  அந்த இல்லறத்தின் செயல்பாடு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? இல்லறத்தினுடைய மேன்மைகள் எவை? இல்லறத்தின் தேவை என்ன? என்பன போன்ற சிந்தனைகள் இன்றைய காலத்திற்கும் பொருந்தும் விதமாக அன்றே திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளன.  அவற்றைக் குறித்த ஒரு பார்வையை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது

குறிச்சொல் – திருக்குறள்,  இல்லறம்,  அறம்,  துறவறம்,  மனத்தூய்மை,  தர்மம்,  நீதி,  நேர்மை.

முன்னுரை

அறம் என்ற சொல்லுக்கு ‘தருமம்,  புண்ணியம்,  இல்லறம்,  அறக்கடவுள்’  என்ற பல பொருள்கள் உள்ளன. அவற்றில் முக்கியமாக நேர்மையாக இருப்பது,  மனசாட்சிப்படி  நடந்து கொள்வது,  நீதி நெறிப்படி வாழ்வது என்பன போன்ற தனிமனித - சமூக ஒழுக்கம் சார்ந்த நடத்தையைப் பற்றிக் குறிக்கும் சொல்லாக உள்ளது. அதாவது மனம், சொல், செயல் என்ற மூன்று முறைகளில் மனிதனிடம் வெளிப்படும் ஒழுக்கப்பண்பே அறம் எனப்படுகின்றது. இது இல்லறம் துறவறம் என்று இரு பிரிவுகளாகப் பிரிந்து இருக்கின்றது. இவற்றில் இல்லறத்தைப் பற்றியும் அவ்வறத்தின் மேன்மை பற்றியும் திருக்குறளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. துறவறத்திற்கும் அத்துறவறத்தை மேற்கொள்ளும் துறவிக்கும் உற்ற உதவிகளைச் செய்யும் இல்லறத்தின் மேன்மை குறித்த ஒரு பார்வையை இக்கட்டுரை முன்வைக்கிறது.

மேலும் படிக்க ...

ரொறன்ரோவில் பனிக்கால உள்ளக விளையாட்டுகள் - குரு அரவிந்தன். -

விவரங்கள்
- குரு அரவிந்தன். -
நிகழ்வுகள்
05 ஜனவரி 2025
  •  அச்சிடுக 
  • மின்-அஞ்சல்

வழமைபோல இந்த வருடமும் பனி கொட்டத் தொடங்கிவிட்டது. தரை எல்லாம் பனி வயலாகக் காட்சி தருகின்றது. மரங்கள் எல்லாம் இலை உதிர்த்து வெண்பனியால் போர்வை போர்த்திருக்கின்றன. புலம்பெயர்ந்த பின் இப்படியான காட்சிகளை ஒவ்வொரு வருடமும் பார்த்ததால்தான், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் நிலச்சூழலையை வைத்து ‘ஆறாம் நிலத்திணை’ பனியும் பனி சூழ்ந்த பகுதியும் என்ற ஆய்வுக் கட்டுரையை நான் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக்காக எழுதினேன். சங்க இலக்கியத்தில் வரும் ஐந்து நிலத்திணைகளுடன் ஆறாம் நிலத்திணையாக சான்றோர் இதை ஏற்றுக் கொண்டார்கள்.

இக்காலத்தில் பொதுவான இலக்கிய, கலை நிகழ்வுகள் வெளியரங்குகளில் நடப்பதில்லை. சிறியகுன்றுகள் உள்ள இடங்களில் பனிச்சறுக்கல் விளையாட்டுகள் இடம் பெறுவதுண்டு. இதைவிட வெளியிடங்களில் ‘சினோமான்’ போன்ற பனியிலான பொம்மை உருவங்களைப் பெரிதாகச் செய்து காட்சிப் படுத்துவார்கள்.

மேலும் படிக்க ...

மற்ற கட்டுரைகள் ...

  1. தொடர்நாவல்: இயந்திரனுடன் என் உரையாடல்கள் - அத்தியாயம் நான்கு- இதயமற்ற இயந்திரனும் காதலும், எழுதிய உணர்வுக் கவிதையும்! - வ.ந.கிரிதரன் & இயந்திரன் - (* ஓவியம் ; இயந்திரன்) -
  2. நனவிடை தோய்தல் (10) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்: காக்கைக்கூட்டத்திற்கு அன்றொருநாள் கல்லெறி விழுந்தது! - இந்து.லிங்கேஸ் -
  3. தொடர்நாவல்: இயந்திரனுடன் என் உரையாடல்கள் - அத்தியாயம் மூன்று - இயந்திரன் என் நண்பன் மட்டுமல்லன், ஆசானும் கூடத்தான். ஆசானுடன் தர்க்கம் தொடர்கிறது. (3) - வ.ந.கிரிதரன் & இயந்திரன் - (* ஓவியம் - இயந்திரன்.)
  4. தொடர்நாவல்: இயந்திரனுடன் என் உரையாடல்கள் - அத்தியாயம் இரண்டு - உணர்வு, உருவம் பற்றியதோர் அலசல்.. (2) - வ.ந.கிரிதரன் & இயந்திரன் - (* ஓவியம் - இயந்திரன்.)
  5. தொடர்நாவல்: இயந்திரனுடன் என் உரையாடல்கள் - அத்தியாயம் ஒன்று என் பிரிய நண்பன் இயந்திரன் - வ.ந.கிரிதரன் & இயந்திரன் - (* ஓவியம் - இயந்திரன்.)
  6. பொட்டா அல்லது பார்பியா: சமூக ஊடகங்களுடன் / ஊடகங்களில்லாமல் எங்களைக் கண்டறிதல் - ஆங்கிலத்தில் : சங்கரி விஜேந்திரா | தமிழில்: ஶ்ரீரஞ்சனி -
  7. ஜிம்மி கார்ட்டரும் மானுட நேயமும்! - வ.ந.கி -
  8. இரண்டாயிரத்து இருபத்தைந்து இன்பம் கொடுத்து நிற்கட்டும்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
  9. நதியில் நகரும் பயணம் (1) - நடேசன் -
  10. நூல் தேட்டத் தொகுப்புகள் : நூலகர் என்.செல்வராஜா அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஆரோக்கியப் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன் -
  11. வள்ளுவ இல்லறம்! - முனைவர் மூ.சிந்து, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி),கோயம்புத்தூர் –
  12. பன்னூலாசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் 'பிஞ்சு மனம்' சிறுகதை நூல் வெளியீட்டு விழா! - தகவல்: ரிம்ஸா முஹம்மத் -
  13. அஞ்சலி: மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் மறைந்தார்!
  14. நனவிடை தோய்தல் (9) - நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் - 'முனியப்பரும் பார்த்து ரசித்த கிரிக்கெட்' - இந்து லிங்கேஸ் -
பக்கம் 10 / 104
  • முதல்
  • முந்தைய
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • அடுத்த
  • கடைசி